-
வணக்கம் கிருஷ்ணா சார்.
காலையில் மங்களமாக மங்கள வாத்தியமா? அருமையான நினைவூட்டல். நானும் பார்த்திருக்கிறேன். செம போர். தோற்காமல் என்ன பண்ணும்?
எதிர்பார்த்தபடி பாடல்கள் இல்லை. ஆனால் பரவாயில்லை.
பாலாவும்,வாணியும் ஒப்பேற்றும் ராஜாத்தி குங்குமம் கேட்டுப் பெற்று விட்டீர்கள்.:)
https://www.youtube.com/watch?featur...&v=xcmz03SywTo
-
Quote:
Originally Posted by
Gopal,S.
Brilliant Vinod.Thanks.
வினோத் சார்!
ஜாக்ரதோ ஜாக்ரதோ
-
வாசு சார்
இது சத்தியம் சத்தியமாக அருமை
கோபால் சார் கூட இந்த பாடலை பற்றி மிக உயர்வாக குறிப்பிட்ட திரி ஒன்று நினவு உண்டு
நீங்கள் வினோத் சார் எப்படி பதிவுக்கு நடுவில் விளம்பரம் அல்லது
பத்திரிகைகளின் தகவல்களை இணைக்கிறீர்கள் ?
உண்மையில் எனக்கு தெரியாது
கற்பிக்க முடியுமா . கற்று கொள்ள ஆசை
உதாரணமாக "இது சத்தியம் " விளம்பரம்
-
என்னை பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி .
இது சத்தியம் படத்தில் இடம் பெற்ற ''சரவண பொய்கையில் நீராடி '' பாடல் எனக்கு மிகவும் பிடித்தது சுசீலாவின் இனிய குரல் மனதை நெருடும் பாடல்களில் இந்த பாடல் மறக்க முடியாதது .
http://youtu.be/IZB52e07qEo
கிருஷ்ணா சார்
tiny picture மூலம் படத்தை இணைக்கலாம் .
-
ஜஸ்ட் ரிலாக்ஸ் (இயக்குனர்கள் வரிசை)
https://lh5.googleusercontent.com/-D...-reception.jpg
இயக்குனர்கள் வரிசையில் ஒரு பழ மாதுளைக்கு ஒரு முத்தே உதாரணம் என்பது போல கார்த்திக் சார் அழகாக இயக்குனர் சி.வி.ராஜேந்திரனை 'இரண்டில் ஒன்று' பார்த்து விட்டார்.
இளமையை பிழிந்த இயக்குனர்.
இவரது முதல் இயக்குனர் அனுபவம் புதுமை.
http://archives.deccanchronicle.com/.../Feb/1-(2).jpg
இப்பாடல் காட்சியை இவர் படமாக்கி இருந்த விதத்தைப் பார்த்துதான் நடிகர் திலகம் சி.வி.ஆருக்கு 'கலாட்டா கல்யாணம்' இயக்கம் வாய்ப்பை எவ்வித கலாட்டாவும் பண்ணாமல் கொடுத்தார். இயக்குனரும் வெற்றி தந்து பெயரைக் காப்பாற்றி என்றும் மறக்க முடியாத நகைச்சுவை பொக்கிஷத்தைத் தந்தார்.
குருவுக்கே குருவாகி ('மலர் எது....என் கண்கள்தான் என்று சொல்வேனடி' பாரதியின் இரண்டாவது நீச்சலுக்கு முன்னாலேயே!
கோபால்! 'மாயமோதிரத்'தை இங்கே அணிவிக்க வேண்டாம்.)
http://www.thehindu.com/multimedia/d...K_1828603e.jpg
படத்தில் ''நீச்சல் குளத்''தில் இவர் தந்த 'ஜில்லென்று காற்று வந்ததோ' பாடலை அப்பாடல் விதமான காட்சியை யார்தான் மறக்க முடியும். நீச்சல் குளத்தில் இப்பாடலைப் பார்க்கையில் மனம் உற்சாக நீச்சல் அடித்ததே. குருவும், சிஷ்யரும் பாரதியை நிரம்பப் பிடித்தவர்கள் ஆயிற்றே.
நடிகர் திலகம், கமல், ரஜினி, ஜெய் என்று எல்லோரையும் ஒருகை பார்த்தவர். இளமை பொங்கிய ஸ்ரீதரிடம் பணியாற்றி இன்னும் இளமையான படங்களை பாடல்களைத் தந்தார்.
இவர் பாடல்களில் அதிக உழைப்பைப் பார்க்கலாம். குரூப் பாடல் வைப்பதில் விருப்பம் உள்ளவர். இந்தி பிரம்மண்டங்களுக்கே சவால் விட்டவர்.
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்...ஒருதரம் ஒரே தரம் பொட்டு வைத்து ஏ புள்ளே சச்சாயி என்று மன்மதனை காட்டி ஆலயமாகும் மங்கைக்கு கல்யாணச் சந்தையில் மயக்கம் வரவழைத்த இளமை வித்தகர்.
இளைஞர்களை இன்றும் குதூகலிக்கச் செய்யும் ஜெர்மனியின் செந்தேன் மலரே, ஒரு ஊரில் ஒருமகராணி அவள் உல்லாசக் கலையில் கலைவாணி என்று குளுமைப் படம் பிடித்துக் காட்டியவர்.
http://storage19.tunefiles.com/files...original-1.jpg
ராஜஸ்ரீயையும், முத்துராமனையும் வைத்து இவர் காமேராமேனுடன் கைகோர்த்து புரிந்த மந்திரஜாலப் பாட்டு. மினியேச்சர் வித்தைகள் கலக்கல்கள். ஸ்லோமோஷன் ஸ்வீட்கள். (பாலச்சந்தரின் 'எதிர் நீச்ச' லில் தாமரைக் கன்னங்களுக்கு முன்னோடி) எம்.எஸ்.வி.என்ற அந்த மாமேதை பலவித இசைக்கருவிகளுடன் இணைந்து நமக்களித்த மறக்கவொண்ணாத பாட்டு.
சி.வி.ஆரை இந்தப் பாடலின் மூலம் பெருமைப்படுதுவதே பொருத்தம்.
https://www.youtube.com/watch?v=ag2ot4qsshE&feature=player_detailpage
-
ஒரு மரத்து பறவைகள் 1980
ஜெயவேல் productions தயாரிப்பில்
ரா சங்கரன் இயக்கத்தில்
(இந்த ரா சங்கரன் மௌன ராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக
mr சந்திரமௌலி ஆக நடித்தது எல்லோருக்கும் நினைவில் இருக்கும் )
ஸ்ரீகாந்த்,ஜெய்கணேஷ்,ஸ்ரீப்ரியா (இரட்டை வேடம்),அசோகன்,சுருளி
போன்றோர் நடித்து வெளி வந்த படம் .
இசை இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்
கருப்பு வெள்ளை
எல்லா படங்களிலும் பெண்கள் என்றால் பொங்கல் மாதிரி நினைக்கும் ஸ்ரீகாந்துக்கு இந்த படத்தில் பெண்களை கண்டால் கூச்சப்படும் கேரக்டர்
ஜெய்கணேஷ் ஸ்ரீப்ரியவை காதலித்து ஏமாற்றி விட்டு பிறகு சேர்வார்
அசோகனின் ஜெய்கணேஷ் இடம் "வாடா அம்பி " வசனம் அந்த கால கட்டத்தில் மிகவும் பிரசித்தம்
பாடல்கள் எல்லாம் அந்த கால கட்டத்தில் ஹிட் (வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகில் )
ஜானகி சோலோ "ராத்திரி நான் தூங்கமா தான் முழிச்சு இருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே"
இன்னொரு ஜானகி பாடல் கொஞ்சம் பாஸ்ட் பீட்
"கரும்பு முறிக்க போன பொண்ணை எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்சு பக்கத்திலே உன் மனசு இருந்துச்சாம்
பேக்கு ராமு பேக்கு பேக்கு ராமு (இந்த ராமு தான் ஸ்ரீகாந்த் )
சுருளி காமெடியில் பாலாவின் குரலில்
"கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ " ஒரு பாடல் உண்டு
திரு நங்கைகள் உடன் "எல்லாம் ஒண்ணா சேர்ந்து வாசிங்கடி " famous
மேலும் மனோரமா tk கலா குரல்களில் மகுடி
"மொட்டு மொட்டு மல்லி மொட்டு காஞ்சிவரம்
கட்டு குலையாதது பூ உடம்பு தொட்டு தழுவாதது
ஜின்சுனுக்க தள தள டண்டன்கா பள பள "
இதே படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு
"ஒரு விருக்ஷதண்டே பக்ஷிகள்" என்று வெளியானது .அதையும் காணும்
பாக்கியம் அடியேனுக்கு கம்பம் குமுளியில் இருந்து எருமேலி செல்லும் வழியில் முண்டகாயம் என்ற ஊரில் கிடைத்தது
http://www.inbaminge.com/t/o/Oru%20M...%20Paravaigal/
இந்த படத்திற்கு விடியோ லிங்க் எதாவது உண்டா சார்
-
அன்பு வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் பகுதியில் பதிவிட்ட 'மனம் கனிவான' (இது சத்தியம்) பாடலிலும் சரி, ஜஸ்ட் ரிலாக்ஸ் பகுதியில் பதிவிட்ட சி.வி.ஆர். பற்றிய குறிப்பும் பாடலும் சரி அருமையோ அருமை.
இது சத்தியம் படம் நின்றதே மெல்லிசை இரட்டையர்களின் பாடல்களால்தான் என்றால் மிகையில்லை. பாடல்கள் அத்தனையும் தேன் துளிகள்.
'சிங்கார தேருக்கு சேலைகட்டி' பாடலாகட்டும்
'சத்தியம் இது சத்தியம்' பாடலாகட்டும்
நீங்கள் எழுதிய 'மனம் கனிவான' பாடலாகட்டும்
வினோத் அவர்கள் தந்த 'சரவண பொய்கையில்' பாடலாகட்டும்
சுசீலாவின் 'காதலிலே பற்று வைத்தாள்' பாடலாகட்டும்
எல்லாமே இனிமையோ இனிமை.
இதுபோலவே தான் அசோகனுக்குக் கிடைத்த 'கார்த்திகை தீபம்' பாடல்களும்.
மனம் கனிவான பாடலுக்கு நீங்கள் தந்துள்ள விரிவான ஆய்வு மிகச்சிறப்பு.
-
டியர் வாசு சார்,
சி.வி.ஆரின் முதல் படைப்பான அனுபவம் புதுமை படத்தில் இடம்பெற்ற 'கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்' பாடலை பார்க்கும்போதெல்லாம் / கேட்கும்போதெல்லாம் மனம் உற்சாகத்துள்ளல் போடும். மனதில் இனம்புரியாத இன்பச்சலனம் உண்டாகும். அந்த அளவுக்கு மெல்லிசை மன்னர் மிக அற்புதமாக, மிக அட்வான்ஸாக இப்பாடலை உருவாக்கியிருப்பார். அதை மிக அற்புதமாக சி.வி.ஆர் படமாக்கியிருப்பார்.
வழக்கம்போல, நல்லவற்றை புறந்தள்ளுவதையும், குப்பைகளை தலையில் தூக்கிவைத்து ஆடுவதையும் வழக்கமாக கொண்ட தமிழ் ரசிகர்கள் இப்படத்தையும் புறந்தள்ளினார்கள்.
மெல்லிசை மன்னரின் இதுபோன்ற வைரங்களை வானொலிக்காரன்களும், தொலைக்காட்சிக்காரன்களும் இருட்டுக்குள் ஒளித்து வைத்து சதி பண்ணியதால்தானே தாரை, தப்பட்டைக்காரன்கலெல்லாம் பெரிய இசைக்கொம்பன்கள் என்று பேர் வாங்க முடிந்தது.
என்ன ஒரு கற்பனை நயம் மிக்க கம்போஸிங், நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்த வித்தியாசமான ஹம்மிங். இசையின் தரம் கொஞ்சமும் குறையாத நேர்த்தியான படப்பிடிப்பு. அப்பப்பா...
மெல்லிசை மன்னர் ஆள் பார்த்து இசையமைக்கிறார் என்று சொல்லும் என் அருமை நண்பர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய பாடல் இது. (பார்த்திருப்பார்கள். இருந்தாலும் செல்வமகளுக்கு சொன்னதுபோல, இதுவும் ராமமூர்த்தியுடன் சேர்ந்திருந்தபோது கம்போஸ் செய்து வைக்கப்பட்ட பாடல் என்று சொல்லலாமா என்று யோசிப்பார்கள்).
கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ கள்ளூறும் காவியம்
என்ன.. என்ன... இன்றானந்தம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
இப்பாடலைப்பற்றி விரிவாக யாரும் எழுத மாட்டார்களா என்று ஆவலுடன் இருந்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள். நமக்குள் இருக்கும் வைப்ரேஷன் அப்படி.
-
அப்போதே சொன்னேனே கேட்டியா 1979
சஷ்டி films
v .t அரசு இயக்கம்
சூலமங்கலம் சகோதரிகள் இசை இவங்க இயக்குனர் v .t அரசு வின்
சிஸ்டர் இன் லா என்று நினவு
ஜெய் கணேஷ்,சத்யப்ரிய நடித்தது
நாம் ஏற்கனவே இவருடைய தரிசனம் படம் பற்றி ஆய்வு செய்தோம்
அருமையான வீணை இசை interlude
யேசுதாஸ் வாணி குரல்களில் கண்ணதாசனின் மிக எளிதான வரிகள்
பா
பாப்பா
பாப்பா
எல்லாம் அவன் செய்தது
பசும் சோலை
இள மலர்கள்
இங்கு அவனாலே உருவானது
அந்த தெய்வம் நம் உறவானது
எல்லாம் அவன் செய்தது
பசும் சோலை
இள மலர்கள்
இங்கு அவனாலே உருவானது
அந்த தெய்வம் நம் உறவானது
பாப்பா
கண்ணே பாப்பா
தந்தையின் மனம் ஒன்று
அன்னையின் மனம் ஒன்று
இரண்டிலும் அவன் இன்று விளையாடுவான்
மழலைகள் சில தந்து
இரண்டுக்கும் துணை என்று
யாவையும் அவன்தானே உருவாக்குவான்
பூ வந்த கதையும்
நீ வந்த கதையும்
அவன் தந்த செல்வம் பாப்பா
அன்போடு காதல்
பண்பாடு பாசம்
அவன் போட்ட பின்னல் பாப்பா
உலகங்கள்
இறைவனின் பிருந்தாவனம்
நம் உள்ளங்கள் அன்பான பூங்காவனம்
பாப்பா
கண்ணே பாப்பா
பூமியின் நீர் உண்டு
நதி தரும் நீர் உண்டு
பூஞ்செடி வளர் காட்சி கண்டாய் முன்னே
தாய் தரும் பால் உண்டு
தமிழ் எனும் தேன் உண்டு
உலகத்தில் உயர்வென்று வளர்வாய் கண்ணே
ரோஜாக்கள் மலரும் ஆனந்த பவனம்
நமதில்லம் தானே பாப்பா
ராஜாவை போல மஹா ராணி போல
வருவீர்கள் நீங்கள் பாப்பா
சிரிப்புக்கு இதழ் தந்த தெய்வங்களே
சிறப்புடன் வரவேண்டும் செல்வங்களே
எல்லாம் அவன் செய்தது
பசும் சோலை
இள மலர்கள்
இங்கு அவனாலே உருவானது
அந்த தெய்வம் நம் உறவானது
பாப்பா
கண்ணே பாப்பா
கொஞ்சம் கர்ணனின் "இரவும் நிலவும் வளரட்டுமே " பாடல் நினைவிற்கு வரும்
ஆல் இஸ் well
http://www.inbaminge.com/t/a/Appothe...0Avan.eng.html
-
வாசு சார்
ஜஸ்ட் ரிலாக்ஸ் உண்மையில் பெரிதும் ரிலாக்ஸ்
ஸ்ரீதர்க்கு பிறகு இளமை இயக்குனர்களில் முதலானவர் CVR என்றால் அது மிகை ஆகாது
இந்த அனுபவம் புதுமை படமே ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்த படம் .நான் இதை rerelease இல் 1978 கால கட்டத்தில் CVR பற்றி நன்கு அறிந்த பிறகு பார்த்த படம் . நெல்லை பர்வதியில் rerelease இல் 2 வாரம் ஓடிய படம்
இந்த படத்தில் பாடகர் திலகம் கண்ணிய பாடகி குரல்களில் இன்னொரு பாடம் என் மனம் கவர்ந்த பாடல் slow மெலடி அருமையான காட்சி அமைப்பு
http://www.youtube.com/watch?v=VMNMJns2cYw