http://i60.tinypic.com/v3lkc3.jpg
Printable View
http://i58.tinypic.com/9amg3l.jpg
இன்று (07/12/2014) காலை 11 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.சதுக்கத்தில்
பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் (எழும்பூர் ) , ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ஆகிய அமைப்புகளைச் சார்ந்த
பக்தர்கள் மற்றும் அபிமானிகள் முன்னிலையில் "பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழா அறக்கட்டளை " தொடங்கப்படுவதாக முறைப்படி உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி. எஸ்.ராஜு அவர்களால் அறிவிக்கப்பட்டது .
அறக்கட்டளையின் தலைவராக திரு.எம்.ஜி.சி.பிரதீப் (புரட்சி தலைவரின் வழித்தோன்றல் ) , செயலாளராக திரு. இளங்கோவன் , பொருளாலராக திரு.பி.எஸ். ராஜு, மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக பேராசிரியர் திரு. செல்வகுமார் ,திரு. ஈ .பாஸ்கரன் , திரு. தேவசகாயம் , திரு. பாண்டியராஜன் , திரு.சேகர் (சைதை ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சில செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது . முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
சிலைக்கு மாலை அணிவித்தபின் , சமாதியில் வழிபாடுகள் நடத்தி பூஜை செய்யப்பட்டது .
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மணிமண்டபம், தியான மண்டபம் அமைக்க
செங்கல்பட்டுக்கும், விழுப்புரத்திற்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலையில்
இடம் பார்வையிட்டு , பூர்வாங்க வேலைகள் தொடங்கவும், ரசிகர்கள் /பக்தர்கள்/
அபிமானிகள் /நலம் விரும்பிகள் ஆகியோரிடம் இருந்து நன்கொடை பெறவும்
2017 ஜனவரியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்கும்
வகையில் பணிகள் நடைபெற உள்ளதாக திரு. பி.எஸ். ராஜு தெரிவித்தார்.
இதற்கு அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என பேசினார்.
கூட்டத்திற்கு வந்திருந்த பலர் தங்களால் இயன்ற அளவில் நன்கொடை அளித்து
தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.
அனைவரையும் வரவேற்று பேராசிரியர் திரு. செல்வகுமார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தியான மண்டபம் , மணிமண்டபம் அமைப்பதற்கு
அனைவரின் ஆதரவு, உதவி, உடல் உழைப்பு மட்டுமின்றி , ஒத்துழைப்பு நல்க
வேண்டும் எனவும் , எத்தனை இடர்பாடுகள், இன்னல்கள் வந்தாலும் அவற்றை
தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒன்று கூடி இந்த முயற்சிதனை வெற்றிபெற செய்து வருங்கால சந்ததியினரும் , புரட்சி தலைவர் புகழ்பாட வேண்டிய வழிவகைகள் செய்வது மிகவும் அவசியம் என்று உரைத்தார்.
பிற்பகல் 2 மணியளவில் கூட்டம் இனிதே முடிவுற்றது .
ஆர். லோகநாதன்.
படகோட்டி http://i58.tinypic.com/io0j2a.jpg