The quiz has not been stopped Sir. It will continue. Pls refer the thread Kannukkulle ennai paaru
அடுத்து...
அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட ...
http://www.inbaminge.com/t/i/Iruvar%20Ullam/folder.jpg
இருவர் உள்ளம்- 1963
நடிகர்திலகத்தின் நடிப்பில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.
இருவர் உள்ளத்தின் கதை-
மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.
ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.
மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.
முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?
அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.
ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.
சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)
பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.
கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.
பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
தங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி வாசு சார். தங்களுடைய ஊக்கமும் ஆதவும் என்றைக்கும் தொடர வேண்டும் என வேண்டுகிறேன்.Quote:
பிரமாதம் ராகவேந்திரன் சார்.
ஆஹா!ஆஹா! அற்புதம் ராகவேந்திரன் சார். அதகளம் நடத்தியிருக்கிறீர்கள். 'அறிவாளி' படத்தின் அரிய விஷயங்கள் அதிலும் குறிப்பாக 'ஓ வாட் எ கேர்ள்' நாடகம் (அறிவாளிக்கு மூலம்) நாடகத்தை பற்றிய அரிய தகவல்களையும், மிக மிக அரிய புகைப்படங்களையும் தந்து இன்றைய நாளை மறக்க முடியாமல் செய்து விட்டீர்கள். நிஜமாகவே மிக மிக அரிய பொக்கிஷம் நீண்ட நாட்களுக்குப் பிறகு.
என் மனம் கவர்ந்த 'அறிவாளி'யைப் பற்றி அணுஅணுவாக ரசித்து எழுத ஆசை. அது எனக்கு இன்னோர் 'ஞான ஒளி' என்று சொன்னால் கூட மிகை இல்லை. 'தெனாலிராமன்' வரிசையில் சேர்ந்த படம் இல்லை இல்லை காவியம் இது.
தங்கள் உடல்நலம் குன்றியிருந்த போதிலும் சிரமம் பாராது இப்படிப்பட்ட அரிய அபூர்வ தகவல்களை அளிப்பதின் மூலம் தாங்கள் நடிகர் திலகத்தின் தலையாய ரசிகர்களில் முதல்வர் என்று மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
வாழ்க உங்கள் உங்கள் தொண்டு.
தலை சாய்க்கிறேன் தங்கள் அரிய சேவைக்கு.
நன்றி! நன்றி!
அன்புடன்
ராகவேந்திரன்
Sivaji Ganesan Filmography Series
86. iRUVAR uLLAAM இருவர் உள்ளம்
http://i872.photobucket.com/albums/a...psa052b6f7.jpg
தணிக்கை – 21.03.1963
வெளியீடு - 29.03.1963
தயாரிப்பு பிரசாத் மூவீஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர். ராமச்சந்திரன், எஸ்.ராமாராவ், ஏ.கருணாநிதி, வி.எஸ்.ராகவன், டி.பி.முத்துலட்சுமி, சந்தியா, பத்மினி பிரியதர்ஷிணி, ஜெயந்தி, லட்சுமி ராஜம், டி.ஈ. சூர்யா, மற்றும் பலர்
கௌரவ நடிகர் – கே.பாலாஜி
கதை லக்ஷ்மி அவர்களின் பெண் மனம் நாவல்
திரைக்கதை வசனம் – கலைஞர் மு. கருணாநிதி
மேக்கப் – ஹரிபாபு, வி.வெங்கடேஸ்வர ராவ், பீதாம்பரம், எம்.கஜபதி, ரங்கசாமி, திருச்சி முத்து
உடை – கே.அச்சுதராவ், பி.ராமகிருஷ்ணன் [சிவாஜி], ரெஹ்மான் [சரோஜா தேவி], உதவி எம்.சையத்
ஸ்டில்ஸ் – சிட்டிபாபு
நடன அமைப்பு – ஹீராலால்
விளம்பரம் மௌலிஸ்
விளம்பர டிசைன்ஸ் – பரணி, எஸ்.ஏ. நாயர்
செட் ப்ராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்
வெளிப்புறப் படப்பிடிப்பு சாதனங்கள் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி.லிட். சென்னை 17
ஆர்.சி.ஏ. சௌண்ட் சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
பிராசஸிங் விஜயா லேபரட்டரி, ரங்கநாதன்
பெயிண்டிங் – ஆர். ஜெயராம் ரெட்டி
செட்டிங்ஸ் – கே.சீனிவாசன், டி.நீலகண்டன்
மோல்டிங் – துரைசாமி
எலக்ட்ரீஷியன் – எம்.சங்கர நாராயணன்
ஸ்டுடீயோ புரோகிராம்ஸ் – சி.எஸ்.பிரகாஷ் ராவ், எம்.ஜி.ராமதாஸ், பி.சுந்தரம்
ஸ்டூடியோ – விஜயா-வாஹினி
புரொடக்ஷன் நிர்வாகம்- சி.வி.ராதா பாபு
உதவி டைரக்ஷன் – ஸ்ரீகாந்த் , ஆரணி ராமசாமி
கலை – தோட்டா
எடிட்டிங் – ஏ.சஞ்சீவி
பாடல்கள் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக்
ஒலிப்பதிவு வசனம் – கே.ஹரநாத் வாஹினி
ஒளிப்பதிவு டைரக்ஷன்- கே.எஸ்.பிரசாத்
ஒளிப்பதிவாளர்கள் – வி.மதன்மோகன், ஆர்.எஸ்.பதி
பாடல்கள் – கண்ணதாசன் உதவி பஞ்சு அருணாச்சலம்
இசை –
http://www.inbaminge.com/t/images/K%20V%20Mahadevan.jpg
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் உதவி புகழேந்தி
தயாரிப்பாளர் ஆனந்த்
இயக்கம் எல்.வி.பிரசாத்
http://www.lvprasad.org/image/sivaji.jpg
சிறப்புச் செய்திகள்
1. இப்படத்தில் நடிகர் திலகத்தின் தொப்பி டெக்ஸாஸ் கேலன் என்கிற வகையைச் சார்ந்த்து என்றும் நடிகர் திலகத்தின் உடையலங்காரம் பிரமிக்கத் தக்கதாகவும் அற்புதமாகவும் இருந்த்து என்றும் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் சமீபத்தில் மிகவும் லயித்து சொன்னது குறிப்பிடத் தக்கது. இது பற்றிய குறிப்பு ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் தினமலருக்காக எழுதிய நான் சுவாசிக்கும் சிவாஜி தொடரில் இடம் பெற்றுள்ளது.
2. சிறந்த திரைக்கதை அமைப்பிற்கான உதாரணமாய் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாய் வைக்கப் படும் படங்களில் ஒன்று.
3. Black and white வசந்த மாளிகை என்று காதல் காவியமாய் சிவாஜி ரசிகர்கள் கொண்டாடும் படம்.
4. Subtle Acting என்பதற்கு இலக்கணமாய் நடிகர் திலகம் வகுத்த படங்களில் ஒன்று.
சென்னையில் வெளியான திரையரங்குகள்
சாந்தி, பிராட்வே, சயானி
நூறு நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
கொழும்பு சென்ட்ரல் – 126 நாட்கள்
யாழ்ப்பாணம் ராஜா – 106 நாட்கள்
சென்னை சாந்தி – 105 நாட்கள்
மதுரை நியூசினிமா – 100 நாட்கள்
சேலம் பேலஸ் – 100 நாட்கள்
Image of the Texas Gallon hat
http://wiki.teamfortress.com/w/image...lon_141414.png
இருவர் உள்ளம் திரைப்படப் பாடல்களின் விவரங்கள்
பாடல்கள்
1. பறவைகள் பல விதம் – டி.எம்.சௌந்தர்ராஜன்
2. புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை – ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி
3. கண்ணெதிரே தோன்றினாள் – டி.எம்.சௌந்தர்ராஜன்
4. இதயவீணை தூங்கும் போது – பி.சுசீலா
5. நதி எங்கே போகிறது – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
6. அழகு சிரிக்கின்றது – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
7. ஏன் அழுதாய் ஏன் அழுதாய் – டி.எம்.சௌந்தர்ராஜன்
8. கண்ணே கண்ணே உறங்காதே – பி.சுசீலா
பேசும் படம் பத்திரிகையில் வெளிவந்த இருவர் உள்ளம் படக்காட்சிகள்.
ஆவணத்திலகம் பம்மலார் அவர்களின் பொக்கிஷத்திலிருந்து.
Quote:
http://i872.photobucket.com/albums/a...psdb850c2c.jpg
http://i872.photobucket.com/albums/a...psb1e44170.jpg
http://i872.photobucket.com/albums/a...psfc047b81.jpg
http://i872.photobucket.com/albums/a...ps399c1bc9.jpg
http://i872.photobucket.com/albums/a...ps7adcf6ad.jpg
http://i872.photobucket.com/albums/a...psb691f669.jpg
இருவர் உள்ளம் பாடல் காட்சிகள்
கண்ணே கண்ணே உறங்காதே –
http://youtu.be/Y3NCOgGNYZc
நதி எங்கே போகிறது
http://youtu.be/7guKJYxRwPc
கண்ணெதிரே தோன்றினாள்
http://youtu.be/KbGgniBSATY
இதய வீணை தூங்கும் போது
http://youtu.be/WlbCfTDv9Q8
அழகு சிரிக்கின்றது
http://youtu.be/BK6zanXsUmQ
ஏனழுதாய்
http://youtu.be/W5WitKgT44o
பறவைகள் பலவிதம்
http://youtu.be/ZF7FKLbVOpY