மன்னிக்கணும் ராஜேஷ் சார் . நீங்கள் தேவாவின் முத்துகள் போடும் போது என் பதிவு தடங்கல் ஆயிடுச்சு
Printable View
மன்னிக்கணும் ராஜேஷ் சார் . நீங்கள் தேவாவின் முத்துகள் போடும் போது என் பதிவு தடங்கல் ஆயிடுச்சு
ராஜேஷ் சார்
தேவாவின் முத்துகள் நல்லா இருக்கு . தொடருங்கள்.
கிழக்கு கரை சின்ன தம்பிக்கு அடுத்து வந்த படம்னு நினைக்கிறன். அதே பிரபு,குஷ்பூ,இயக்குனர் வாசு combination இசை மட்டும் மாற்றம் இளையராஜாவிற்கு பதில் தேவா
செளந்தர்யன் என்று ஒரு இசையமைப்பாளர்
சேரன் பாண்டியன் மூலம் அறிமுகம் .. பின் பல அற்புத பாடல்களை தந்தார்.
அவரின் சில பாடல்கள் இதோ
சேரன் பாண்டியனில் எல்லா பாடல்களுமே சூப்பர்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ராஜ்குமார் ஸ்வர்ணலதா பாடிய காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
https://www.youtube.com/watch?v=_WXDL1c4ywE
ஈரமான ரோஜாவே சிவாவும் ஆம்னியும் நடித்த முதல் சீதனம் திரையில் அழகான பாடல்
https://www.youtube.com/watch?v=7k6Bz8PHmhY
எனக்கு மிகவும் பிடித்த அடுத்த பாடல் சிந்துநதிப்பூ என்ற திரைப்படத்தில் பாலுவும் ஸ்வர்ணலதாவும் பாடிய அழகான பாடல்
இது தான் ரஞ்சித் அறிமுகமான படம்
http://shakthi.fm/ta/player/play/sd89ecf8e
அதே படத்தில் அடியே அடி சின்னப்புள்ள மனோவும் ஜானகியும். அருமையான பாடல்
ராஜேஷ் சார்
நன்றி . சேரன் பாண்டியன் படமுமே நல்லா இருக்கும். சரத்குமார்,ஆனந்த பாபு,ஸ்ரீஜா (முன்னால் அமைச்சர் அரங்கநாயகம் மகனை கல்யாணம் கட்டிகிட்டார் ) விஜயகுமார்,மஞ்சுளா,நாகேஷ்,கௌண்டமணி,செந்தில்,அனுஜா, ஷர்மிலி,கே எஸ் ரவிகுமார்,நல்லெண்ணெய் சித்ரா அப்படின்னு ஒரு பெருங்கூட்டம் கொட்டம் . கொஞ்சம் அக்னி நட்சத்ரம் ஜாடையில் முத்த சம்சாரம்,இளைய சம்சாரம் குழந்தைகள் கதை . களம் வேறு . இப்ப அடிக்கடி ஆதித்யா ,சிரிப்பொலி தொலைகாட்சிகளில் நகைச்சுவை காட்சிகளை ஒலி பரப்புகிறார்கள்
ஆம் கிருஷ்ணா ஜி.. நல்ல படல். அப்படி இருந்த ரவிக்குமார் அப்புறம் சொங்கி மாதிரி படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாரே
சரி இதயம் நல்லெண்ணை சித்ரா என்ன ஆனாங்க அப்டின்னு கேட்கும் மக்களுக்கு இதோ
https://www.youtube.com/watch?v=Gidqkke2Ts4
அன்புள்ள வினோத் சார் - என்னுடைய இந்த பதிவு ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு மட்டுமே - எந்த பதிவையும் குறை சொல்வதற்காக அல்ல ...... ஒரு கால கட்டத்தில் ஆண்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் , அவர்களுக்கு எந்த ஆசா பாசமும் இருக்காது - தாயை தெய்வம் என போற்றும் மகனாகவும் , சமுதாயத்தை தனியாக நின்று எதிர்த்து போராடும் ஒரு வாலிபனாகவும் , தங்கையை காப்பாத்தும் நல்ல அண்ணனாகவும் , பல பேர்களை ஒருவனாகவே நின்று வீழ்த்தும் வீரனாகவும் என்று நினைக்கும் நிலைமை இருந்து வந்தது . பார்க்கும் பெண்கள் எல்லாம் தனக்கு இப்படி ஒரு உத்தம புருஷன் கிடைக்க மாட்டானா என்று கனவுகள் காண்பார்கள் - இப்படிப்பட்ட ஒரு கருவை மயமாக வைத்து பல படங்கள் கதாநாயகனை புகழின் உச்சிக்கே தூக்கி சென்றன - படம் பார்ப்பவர்கள் இதுதான் உண்மை, நிரந்தரம் என்று எண்ணும் அளவிற்கும் ஒரு மாயை உருவானது - அந்த கால கட்டத்தில் பெண்ணை மயமாக வைத்து , கதா நாயகனை ஒரு படி கிழே இறக்கி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கினர் - கால போக்கில் இதுவே ஒரு எழுதாத சட்டம் என்று ஆகி விட்டது - பெண்கள் என்றால் பல வீனம் உள்ளவர்கள் , அவர்களுக்கு வெறும் கனவு காணும் உரிமை மட்டுமே உள்ளது - அவர்கள் எந்த நிலைமையிலும் , எந்த வகையிலும் ஆண்களுக்கு சமமாக ஆகா மாட்டார்கள் - இப்படி பட்ட ஒரு எண்ணம் மெதுவாக ஆனால் முடிவாக எல்லோர் மனதிலும் குடி கொண்டு விட்டது . இதற்க்கு மீறியும் சில படங்கள் பெண்களுக்கு சம அந்தஸ்த்து கொடுத்து , கதாநாயகன் தான் எல்லாமே என்ற ஒரு மாயை உடைத்து எறிந்தன - சில உதாரணங்கள் :
1. பெண்ணின் பெருமை
2. இதய கமலம்
3. தேனும் பாலும்
4. இரு மலர்கள்
5. சூரியகாந்தி
6. அவள் ஒரு தொடர் கதை
இந்த வகையில் சேர்க்க வேண்டிய படம் " அவள் அப்படித்தான் ". படங்களில் காதலிகள் மட்டுமே கனவு காணும் போக்கை சில படங்கள் மாற்றி அமைத்தன - சில உதாரணங்கள் :
1. நெஞ்சிருக்கும் வரை
2. ராமன் எத்தனை ராமனடி
3. தீபம்
ஆசாபாசங்கள் இருவருக்கும் பொது தானே - அதில் ஏன் ஒரு genderக்கு அதிகம் என்று சுட்டி காட்ட வேண்டும் - சக்தி இல்லையேல் சிவம் இல்லை - இன்று எந்த துறையில் பெண்கள் முன்னுக்கு வரவில்லை - நம்முடைய daughters எதிலும் முதலாக வரவேண்டும் என்று தானே ஆசை படுகின்றோம் - ஆனால் இதுவே ஒரு பொது விவாதம் என்று வரும் பொழுது "அவள் அப்படிதான் " என்று கூசாமல் சொல்லிவிடுகின்றோம் - பாரதி கண்ட கனவுகள் பல - இன்னும் அவர் இருந்த வீட்டை விட்டே அந்த கனவுகள் வெளி வரவில்லை - பெண்களை எப்பொழுது சமாக எண்ணி அவர்களை மதிக்க கற்று கொள்கிறோமோ அன்று தான் இந்த நாடு உருப்படும் - "நான் அவனில்லை : என்று சொல்லிகொண்டிருக்கும் வரையில் - "அவள் அப்படித்தான் " என்று ஒரு கூட்டம் சொல்லிகொண்டே இருக்கும் .
நீங்கள் எதையுமே தவறாக சொல்லவில்லை - ஒரு விவாதத்திற்காக இந்த பதிவை அளித்தேன் - அதிகமாக எழுதி இருந்தால் மன்னிக்கவும் - வாசுவின் அலசலின் தாக்கம் குறைய பல நாட்கள் ஆகும்.:
smokesmile::smile2:
மலரும் கொடியும் பெண் என்பார் ----
என்ன அருமையான பாடல் - பெண் ஒரு ஊனம் உற்றவள் - தன் ஊனம் ஒரு பெரிய குறை என்று எண்ணி வாடுகின்றாள் - ஆண் - இது ஒரு ஊனமே அல்ல என்று அவளை தேற்றி பாடும் பாடல்
தன்னால் நடக்க இயலாது என்பதைத் தலைவி கூற, தலைவன் அதற்கேற்றவாறு பதிலுரைத்துப் பாடுகிறான். மலரும் கொடியும் நடப்பதில்லை! அவை மணம்தர என்றும் மறப்பதில்லை! கோவிற்சிலைகள் நடப்பதில்லை! அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை! தாமரை மலரும் நடப்பதில்லை! அதைத் தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை! முத்திரை பதிப்பதுபோல அமையும் இறுதி வரிகளைக் கவனியுங்கள்! நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்; நினைவினில் குறைகள் வருவதில்லை! கண்களில் ஒன்றாய்க் கலந்துவிட்டோம்; இனி காட்சிகள் வேறாய்த் தெரிவதில்லை. அருமையான பாடல்!!!
"அவள் அப்படித்தான்" என்று சொல்லி விட்டு கதாநாயகன் சென்று இருக்கலாம் - ஆனால் அவன் அவளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறான் -அவள் யாருக்கும் மட்டம் அல்ல என்று கூறி அவளுடைய உணர்ச்சிகளுக்கு ஒரு பாதுக்காப்பாக இருகின்றான் . இப்படி பட்ட ஆண்களும் இருப்பதினால்தான் உலகம் இன்னும் நிக்காமல் ஓடிகொண்டிருகின்றது
http://youtu.be/IaxGu--YQpQ
:):smokesmile:
முத்துக்களோ கண்கள் ---
கதாநாயகன் கனவு காணும் காட்சி - தான் விரும்பிய காதலி , தன்னை விரும்புகிறாள் என்ற ஒரு தப்பு கணக்கில் , உள்ளத்தில் உள்ள ஆசைகளை , பாடலாக வெளி படுத்துகின்றான் - ஆனால் அவளோ அவனுக்கு கனவில் மட்டுமே தான் சொந்தம் என்று சொல்லிவிட்டு , வேறு ஒருவனை விரும்ப தொடங்குகின்றாள் - " அவள் அப்படித்தான் " என்று கதாநாயகன் நினைக்காமல் அவளை அவள் விரும்பியவனிடமே , தன் உயிரை திருமண பரிசாக கொடுத்து அவர்களை ஒன்று சேர்க்கின்றான் - முத்துக்களான இந்த பாடல் , நம் கண்களாக இன்றும் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லையே
http://youtu.be/ED0bwUuSQMg
:smile2::smokesmile:
Mr. Rajesh,
Thanks for rendering suprb songs of Deva sir.
I think you are coming year-by-year from his beginning.
Deva sir composed very beautiful songs with melody, but everyone branded him as 'Gana Deva' which is a wrong phrase.
Your rendition breaks that talk and bringing his wonderful melodies.
I am waiting when you will come for 1996 songs particularly the one and only Kaadhal Kottai, in which all songs are superb and variety.
The composing of the title song of kaadhal kottai 'Kaalamellaam kaadhal vaazhga' will take me out of the world whenever I here the song.
thanks again
regards
stl