harish how are you
Printable View
harish how are you
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 1
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
சாந்தி தியேட்டரின் நுழைவாயிலை நோக்கி எனது கால்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது சரியாக மாலை நாலேகால் மணி. எதிரே மகானின் பக்தர்கள் - பெற்ற குழந்தையை சிரத்தையுடன் சுமந்து வரும் அன்னை போல் - தாங்கள் பெற்ற தந்தைக்கு அணிவிப்பதற்காக ராட்சத மலர் மாலையை தங்களது கைகளிலும், தோள்களிலும் இருபுறமும் சுமந்து கொண்டு, "சிவாஜி புகழ் வாழ்க!', "எங்கள் தெய்வத்தின் புகழ் வாழ்க!" என்கின்ற கோஷங்களுடன் அமைதியான முறையில் ஊர்வலமாக அரங்க நுழைவாயிலை நெருங்கினர். ராட்சத மலர் மாலைக்கான முழு பங்களிப்பும் பெங்களூர் பக்தர்களைச் சேர்ந்தது. அவர்கள் இந்த மாலையை ஒரு கன்டைனர் லாரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எடுத்து வந்தனர். ஊர்வலத்தில் சென்னை மற்றும் பெங்களூர் பக்தர்களுடன், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் புதுச்சேரியிலிருந்தும் வருகை புரிந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நுழைவாயிலில் ஊர்வலம் சில மணித்துளிகள் நின்றது. "அடி என்னடி ராக்கம்மா", "கேட்டுக்கோடி உருமி மேளம்", "வரதப்பா" பாடல்கள் பேண்ட் வாத்தியத்தில் முழங்க, ட்ரம்ஸ் ஒலிக்க, பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைக்க ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்!
தியேட்டரினுள்ளே 5000 வாலா(சரம்) சப்தம் ரீங்காரமிட, மாபெரும் மலர் மாலா(மாலை), கோமகன் சிவாஜி அளித்த கோயில் யானை போல், பக்தர்கள் புடை சூழ மிக அழகாக, நேர்த்தியாக, கம்பீரத்தோடு அரங்கிற்குள் நுழைந்தது. மிக உயரமான அந்த மலர் மாலையை 60 அடி உயர ராட்சத பதாகைக்கு(கட்-அவுட்) கீழே, அருகே வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்தனர். பின்னர் அதனை தூக்கி, ஏற்றி அண்ணலின் அன்பு சொட்டும் முகத்துக்கு சூட்டினர். கரவொலிகளும், குரலொலிகளும் விண்ணைப் பிளந்தன. வாலாக்கள் தொடர்ந்து வெடித்த வண்ணம் இருந்தன. ஊர்வலம், டான்ஸ், வாணவேடிக்கைகள், மாலை சாற்றுதல், பாலாபிஷேகம் முதலிய சுபகாரியங்கள் கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணி நேரம் நீடித்தது. சரியாக மாலை 5:45 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட இறைவனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இந்த சமயத்தில் மேட்னி ஷோ முடிந்து கூட்டம் உள்ளிருந்து வெளியே வர, கற்பூர ஆரத்தியைக் கண்டு அனைவருக்கும் மெய் சிலிர்த்தது. இதயதெய்வத்தின் புகழ் பாடும் கோஷங்கள் அரங்கத்தில் குழுமியிருந்த ஒவ்வொரு நல்லிதயத்திலிருந்தும் அவர்களது இரத்தநாளங்களிலிருந்தும் உணர்வுபூர்வமாகக் கிளம்பி விண்ணைப் பிளந்தன. மணவிழாவில் கூடும் உறவினர் போல், திருவிழாவில் கூடும் தோழர்கள் போல், இத்திரைவிழாவில் பக்தர்கள் ஆங்காங்கே ஒன்று கூடி நலம் விசாரித்துக் கொண்டதையும், தங்கள் இறைவனின் நடிப்பைப் பற்றியும், சாதனைகள் குறித்தும் அளவளாவிக் கொண்டதையும் காணக் கண்கோடி வேண்டும். எங்கு பார்த்தாலும் பக்தர் வெள்ளம். சரியாக ஆறு மணிக்கு "SHANTI HOUSEFULL" என்கின்ற போர்டு மாட்டப்பட விசில் சத்தம் விண்ணை வீழ்த்தின. சென்னை பக்தர்கள் 10000 வாலா சரவெடியை கொளுத்திப் போட, ஆடியிலே தீபாவளி. காலதேவன் 6:30 நோக்கி நெருங்க, கலைத்தேவனைக் காண அடியவர் கூட்டம் அரங்கினுள் ஆர்ப்பரித்தது. மன்னவனுக்கு சூட்டப்பட்ட மாபெரும் மாலை கண்டு, பொழுதான மாலை வெட்கி, நாணி, மங்கி இரவுக்குள் புகுந்தது.
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
பம்மலார் அவர்களின் வர்ணனை எந்த அளவிற்கு துல்லியமாக உள்ளது என்பதை இதோ இந்த காட்சியில் காணுங்கள். நன்றி யூட்யூப் மற்றும் நமது ஹப் நண்பர்களுக்கு.
http://www.youtube.com/watch?v=2uJNuEdLWvo
ராகவேந்திரன்
Review of Nadigar Thilagam website in a blog:
http://websitesreview-meens.blogspot.com/
Thank you, madam. Your words of praise enthuse me and at the same places more responsibility. Thank you once again. At this chance, I'd like to mention my thanks to hub friends, who are so encouraging.
Raghavendran
Chennai Mylapore Kapaleeswarar Temple : 21.7.2010 : Annadhaanam organised by Sivaji Peravai : Photo Feature
Chief Guest for the Function : Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Minister Honourable K.R.Periyakaruppan
http://pammalaar.webs.com/apps/photo...lbumid=9603898
Photos Courtesy : Sivaji Peravai President Mr.K.Chandrasekaran
Regards,
Pammalar.
Chennai Shanthi Cinemas : Pudhiya Paravai : 25.7.2010 Sunday Evening Gala : 10000 Wala Burst Video
http://www.youtube.com/watch?v=kBwYwkXfOp4
Happy Viewing,
Pammalar.
Murali sir, Raghavendra sir, groucho & Plum - thanks for your kind words.
Pammalar sir, clippings & videos are great !
From Dinamalar website
மீண்டும் சிவாஜிகணேசனின் புதிய பறவை!
--------------------------------------------------------------------------------
நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா நடிப்பில் 1964ம் ஆண்டு திரைக்கு வந்து சக்கை போடு போட்ட படம் புதிய பறவை. 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தை சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில், தாதா மிராஸ் இயக்கியிருந்தார். தற்போது சிவாஜி கணேசனின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சாந்தி தியேட்டரில் புத்தம் புது டிஜிட்டல் காப்பியாக திரையிடப்பட்டுள்ளது. புதிய படங்களுக்க இணையாக தியேட்டரை சுற்றிலும் சிவாஜி ரசிகர்கள் கட்-அவுட்களை *வைத்துள்ளனர். ரசிகர்கள் பலர் சிவாஜி கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
புதிய பறவை படம் 1964ம் ஆண்டு பாரகன் தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே நல்ல வசூலை வாரி குவித்த இந்த படம் இப்போதும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.
http://cinema.dinamalar.com/tamil-ne...ning-again.htm
மிக்க நன்றி மகேஷ் அவர்களே, அன்றைய மாலைக் காட்சியில் முரளி சார் அவர்களால் பங்கேற்க முடியாமல் போனது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தம் தான். இருந்தாலும் முடிந்த வரையில் நம்மால் இயன்ற வரையில் அன்றைய நிகழ்ச்சிகளை இங்கு பதிந்து கொள்வோம். தங்களுடைய அனுபவங்களையும் எண்ணங்களையும் அறிய மிகுந்த ஆவலாய் இருக்கிறோம்.
அன்று மாலை கட்அவுட்டுக்கு சாற்றுவதற்காக பெங்களூரு ரசிகர்கள் கொண்டு வந்திருந்த பிரம்மாண்ட மாலையை ஊர்வலமாய் எடுத்துச் சென்றதைக் கண்டோம். இதோ அம்மாலை மேலே தூக்கி ஏற்றப் படும் காட்சி.
http://www.youtube.com/watch?v=sNGCaYhob8I
அன்புடன்
ராகவேந்திரன்
Dear friends,
After print media, now it's the turn of e-media to cover the reception for Pudhiya Paravai. See what behindwoods would like to say:
http://www.behindwoods.com/tamil-mov...-27-07-10.html
Raghavendran