Originally Posted by
vasudevan31355
டியர் பார்த்த சாரதி சார்,
தங்களின் 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாடலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை பசுமையாக நெஞ்சில் நிரந்தரமாகக் குடியேறி விட்டது. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த எல்.ஆர். ஈஸ்வரி அவர்களைப் பற்றி நீங்கள் புகழ்ந்துள்ள விதம் மனத்தைக் குதூகலிக்கச் செய்கிறது. அந்த அற்புதப் பாடலுக்கு அவர்களைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. நடிகர் திலகத்தின் அந்த சுழலும் மேடையின் எதிர் நடையையும் காலம் உள்ளவரை மறக்க முடியாது. சுற்றக்கூடிய தட்டிற்கு எதிர்ப்புறம் வேகத்துடனும், அதே சமயம் கம்பீர ஸ்டைலுடனும் நடக்க அவரை விட்டால் வேறு யார்?
மொத்தத்தில் பார்த்தசாரதி சாரால் 'பட்டத்துராணி' மேலும் மெருகேறி பளிங்குச் சிலை போல் மின்னுகிறாள்.
பாராட்டுக்களுடன்,
வாசுதேவன்.