Originally Posted by
mr_karthik
முந்தாநாள் உட்லண்ட்ஸ் அரங்கில் நண்பன் மாலைக்காட்சி திருவிளையாடல் பார்க்கச் சென்றபோது, தியேட்டருக்கு வெளிப்புறம் சுமார் ஐந்தாறு பேர் கூடி நின்ற சிறு கூட்டத்தில் ஆளுக்கட்சி நபர் ஒருவர் (அவர் கட்டியிருந்த கரைவேஷ்ட்டியை வைத்துக் கண்டுபிடித்ததாக நண்பன் குறிப்பிட்டிருந்தான்) அலம்பலாக பேசிக்கொண்டிருந்தாராம். "என்னென்னமோ நினைச்சி திட்டம்போட்டுக்கிட்டு இருந்தானுங்க. விட்ருவோமா?. போன படத்தின்போதுதான் இது எங்கே தேறப்போகுதுன்னு அசட்டையா விட்டுட்டோம். ஏமாந்துட்டோம். ஆனா ஒவ்வொரு தடவையும் விட முடியுமா, அதான் இப்போ உஷாராயிட்டோம். இப்பவும் தடுத்திருப்போம். ஆனா நிறைய செலவுபண்ணிட்டேன்னு கெஞ்சினான். அதான் சத்தமில்லாமல் ஓட்டி, போட்ட காசை எடுத்துக்கோன்னு மிரட்டி விட்டுட்டோம். இத்தோடு சரி, இனி அடுத்தவன் இன்னொரு படத்தைபத்தி நினைக்கமாட்டான். மீறி செஞ்சானுங்கண்ணா எங்க வேலையைக்காட்டுவோம். தமிழ்நாட்டுல 'பவர்' நம்ம கையிலே இருக்கும்போது இவனுங்க நினைச்ச மாதிரியெல்லாம் ஆட விட்ருவோமா?" என்று பேசிக்கொண்டிருந்தாராம்.