பாய்ந்ததனால் தானே வயல் விளைந்தது
தொடாமல் கொடாமல் வம்சம் வளராது
இடம் கொடாமல் மாது தவிர்க்கும் போது
இனிக்கும் இல்லறம் பாலைவனமானது
Printable View
பாய்ந்ததனால் தானே வயல் விளைந்தது
தொடாமல் கொடாமல் வம்சம் வளராது
இடம் கொடாமல் மாது தவிர்க்கும் போது
இனிக்கும் இல்லறம் பாலைவனமானது
பாலைவனமானது வாழ்வு
என நினைத்த போது
நீரூற்றாய் நீ வந்தாய்..
சரி என சந்தோஷித்தால்
ஊருக்குப் போய் வருகிறேன் என்கிறாய்..
சீக்கிரம் வந்து சேர்..
இல்லையெனில் என் இடை குறையும்
உன் செல்லிடைப் பேசிக் கட்டணம்
கூடும்..
கூடும் உடலில் துன்பம்
வாதம் பித்தம் கபம்
வினை தவறான விகிதம்
நில் கவனி அது உசிதம்
உசிதம் என்பதை மட்டும்
அழுத்தி அடிக்கோடு போட்டுட்டியா
என்பார் தாத்தா
எல்லா கல்யாணங்களுக்கும்
பத்திரிகையுடன்
கடிதம் எழுதும்பொழுது..
நீங்கள் வந்து நடத்திக் கொடுத்தால்
என முன்வரியையும் அவரே சொல்வார்..
எல்லா உறவுகளும்
கண்டிப்பாய் வருகை தருவார்கள்
எல்லாக் கல்யாணங்களுக்கும்..
கடைசிக் காலத்தில்
பெரியப்பாவுக்கும் சித்தப்பாவிற்கும்
சண்டை வந்த போழ்தில்
திடீரென வந்த நெஞ்சு வலியில்
தாத்தா மரிக்க
வந்த உறவுகள் சொற்பமே..
என்னிடம்
மற்றவர்களுக்கு
உசிதமாயில்லை போலும்
என
அவர் சொல்வது போல பிரமை
பிரமை நிறைந்த கண்கள்
குழந்தைப் பருவ நாட்கள்
நடுவில் பல வருடங்கள்
தெளிவான உண்மைகள்
மறுபடியும் மயக்கங்கள்
அவை அந்திம காலங்கள்
காலங்கள் செய்கின்ற மாயம்தான் என்னே
..கடகடத்துச் சக்கரமாய் ஓடிவிடும் நாட்கள்
ஓலமிடும் உள்மனசு ஓடிவிட்ட வயதை
..உளத்தினிலே குழவியென இருந்தவற்றை எண்ணி
பாலமிடும் நினைவுகளோ இளவயதுக் காதல்
..பகிர்ந்தவளைச் சுமந்துவந்து கரைதனிலே கொட்டும்
தாளமிட்டுத் தாளமிட்டுக் கூவிஅழைத் தாலும்
..தயங்காமல் இனிவருமோ இளமையது தானே..
இளமையது தானே என்றும் இருக்கும்
தளர்ந்து மூன்று காலால் நடந்தாலும்
உலர்ந்து பல்லும் சொல்லும் போனாலும்
மனதால் வாழலாம் மார்க்கண்டேயனாய்
மார்க்கண் டேயனாய் இருக்க வேண்டாம்
..மாறா இளமை மயக்க வேண்டாம்
வேர்க்கும் படியே உழைத்தே என்றும்
..வியப்பாய் ஊரும் பார்த்தால் போதும்
கோர்க்கும் எண்ணம் சிந்தை யுள்ளே
..கோமகன் ராமனை எண்ணி எண்ணி
வார்த்தே இறுதிவரை நின்றால் போதும்
..வருடம் பலவாய் ஆக வேண்டா..
..
ஆக வேண்டா கேலிக்கூத்தாய்
அழகிய பாரம்பரிய பழக்கங்கள்
கண் முன் தொலைய வேண்டாம்
பீடுடை பரவச அடையாளங்கள்
அன்னியரெல்லாம் ரசித்து நாடும்
உடையும் கலையும் எழிலும்
தூக்கியெரியலாச்சே சோதனையே
பட்டுடுத்தி பூ சூடி அணிகலனுடன்
மணமேடை ஏறிய மங்கல மங்கை
தலைவிரி கோலத்தில் மேல்நாட்டு
பெண் போல நீள் கவுன் அணிந்து
புது விஷ விதை விதைத்தாளே
குலப்பெருமையை புதைத்தாளே
புதைத்தாளே கன்னியவள் காதலையே ஆழப்
…பூக்குழியாம் நெஞ்சகத்தில் மண்ணெடுத்துப் போட்டே
கதைகதையாய்ப் பரம்பரையின் பெயர்பற்றிச் சொல்லிக்
…கண்டித்தே மறுதலித்த தந்தையவர் சொல்லால்
பதைபதைத்துப் பாவையவள் காதலனின் உயிரை
…பாதுகாத்து வைத்திடவே உணர்ச்சியிலா வார்த்தை
வதைபட்டுச் சிதைந்தபடி அவனிடமே சொன்னாள்
…..வஞ்சியெனை மறந்திடுவீர் வாழ்ந்திடுவீர் நன்றாய்..