முதலில் பதிலடி தந்தது 'வல்லவன் ஒருவன்'
அடுத்து பதிலடி தந்தது 'வல்லவனுக்கு வல்லவன்'
சபாஷ். (இந்த நேரத்தில் 'கொல்கத்தா வாத்தியார்" வந்தால் எப்படி இருக்கும்?):)
Printable View
முதலில் பதிலடி தந்தது 'வல்லவன் ஒருவன்'
அடுத்து பதிலடி தந்தது 'வல்லவனுக்கு வல்லவன்'
சபாஷ். (இந்த நேரத்தில் 'கொல்கத்தா வாத்தியார்" வந்தால் எப்படி இருக்கும்?):)
டியர் கார்த்திக் சார்,
தங்கள் மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி!
இருவருக்கும் ஒரே டேஸ்ட் தலைவரிலிருந்து தர்ம அடி கொடுப்பது வரை:) என்று இன்னொரு முறை நிரூபணம் ஆயிற்று.
உங்களுக்கு பிடிக்கும் என்று நிச்சயம் தெரியும். ஆனால் இந்த அளவிற்கா என்பதை தங்கள் மனம் மகிழ்ந்த பதிவைக் கண்டபோது புரிந்தது.
இனிய நண்பர் வாசு சார்
வல்லவன் ஒருவன் - வல்லவனுக்கு வல்லவன் - இரண்டுமே நம் பேரழகன் ஜெய் நடித்த படமல்லவா ?
சபாஷ் தம்பி [ அந்நிய மண்ணில் இருப்பவர் ]
என் தம்பிக்கு துரியோதனன் ஒரு உதாவக்கரை என்று சொல்லும் அளவிற்கு தைரியம் தந்தது யார் ?
இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் -
அதை இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்து விட்டான்
இந்த பாடலை கேட்கவில்லை போலும் .
ஒரே படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டான படங்கள் பல உள்ளன.
அந்த வகைப் படங்களில் 'வெண்ணிற ஆடை'யை என்னால் மறக்க முடியாது.
1.நீ என்பதென்ன
http://i1.ytimg.com/vi/x9qdm0LktQs/hqdefault.jpg
2. ஒருவன் காதலன்
http://img.youtube.com/vi/nJzpqgUn668/mqdefault.jpg
3. சித்திரமே நில்லடி
http://i1.ytimg.com/vi/yPVW6uOeyD0/hqdefault.jpg
4. அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து
http://i1.ytimg.com/vi/MS8FdUA2aME/default.jpg
5. நீராடும் கண்கள் இங்கே (இந்த பாடல் படத்தில் இல்லாமல் போன கொடுமையை என்னவென்று சொல்ல!)
6. என்ன என்ன வார்த்தைகளோ
https://lh5.googleusercontent.com/pr...4w=w426-h320-n
7. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்.
http://i1.ytimg.com/vi/nMr9uh5NyzA/hqdefault.jpg
8. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல
http://i1.ytimg.com/vi/Nymih9WGhYY/hqdefault.jpg
அத்தனையும் முத்துக்கள். எட்டும் எட்டமுடியா உயரம் தொட்டவை.
'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் ("காதலிக்க நேரமில்லை" படத்தின் 'மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்' ஹிட் போல...அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத) ஜாலிப் பாடல் ஒன்று.
'வெண்ணிற ஆடை' மூர்த்தியும், சைலஸ்ரீயும் (படத்தின் டைட்டிலில் இவர் பெயர் ஆஷா. பின்னாளில் 'சைலஸ்ரீ' என்று பெயரை மாற்றி வைத்துக் கொண்டார்) இயற்கைசூழ் பகுதிகளில் ஆடிப்பாடும் 'அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து' பாடல் அட்டகாசமான ஒரு பாடல்.
ராட்சஸி பிச்சி உதறி இருப்பார். 'வெண்ணிற ஆடை' மூர்த்திக்கு ராஜு என்பவர் குரல் தந்திருப்பார். விஸ்வநாதன் ராமாமூர்த்தியின் மந்திர இசை.
சைலஸ்ரீயின் ஒவ்வொரு டான்ஸ் மூவ்ஸும் அட்டகாசம் போங்கள். இவரும் என்ன ஒரு அழகு! வட்ட முகம். கன்னட முகம். (பின்னாளின் 'இங்கேயும் ஒரு கங்கை' தாரா அப்படியே சைலஸ்ரீயின் முகத்தை ஒத்திருப்பார். இவரும் கன்னடக் கிளியே).
'வெண்ணிற ஆடை' மூர்த்தி அவர் ஸ்டைலில் காமெடி டான்ஸ் பண்ணியிருப்பார் கலக்கலாக.
உற்சாகமான பாட்டு. முக்கியமாக நடன அசைவுகள் மறக்க இயலாதவை நகைச்சுவைப் பாடல் என்றாலும்.
http://www.tamilmp3songslyrics.com/l...lipPandhal.GIF
https://www.youtube.com/watch?v=MS8F...Me24Xe_a1QtA4Q
கார்த்திக்,
இனிமேலும் நான் விவாதம் தொடர விரும்பவில்லை.மறக்க பட்ட மேதைகளுக்கு உரிய மரியாதை தந்த திருப்தி போதும் எனக்கு. அந்த நாட்களில் ,சில நடிகர்களின் படங்கள் இழு இழு என இழுக்கும். நீங்கள் சொல்லும் படி 66 மத்தியில் தொடங்கி தொடங்கி, 2 ,3 மாதங்களில் முடித்து வெளியிடுவது நடக்காது. அதே போல ஒரு படம் ரிலீஸ் ஆகி முடியும் வரை அடுத்த பட ஆரம்பத்தை தள்ளியும் வைக்க மாட்டார்கள்.இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள், நடிகர்கள் multi -projects சகஜம். 26 படங்கள் made -over ஆனதை விஸ்வநாதன் ஒப்பு கொண்டுள்ளார்.(நிறைய படங்கள்.எண்ணிக்கை ஞாபகமில்லை ,என்று),ஒன்றிறேண்டில் பிசகி இருக்கலாம். நான் இது நடந்த போது ஆறு வயது சிறுவன். ஒரு முக்கிய சம்பத்த பட்ட ஆறு ஏழு பேரிடம் நான் investigate செய்தது .
திரும்பி திரும்பி ,நிறைய படங்கள் போட்டார் என்ற பல்லவி. மனதை தொட்டு சொல்லுங்கள்.ஜல்லியடித்து குமாருடனும்,விஜய பாஸ் கருடனும்,சங்கர்-கணேஷுடனும் போட்டியிட்டும் அந்த தரத்தை கூட 70 இல் எட்ட முடியவில்லை.இளையராஜா கூட ,பழைய படங்கள் என்ற சகாப்தம் உயர்ந்த மனிதன்-சிவந்த மண்ணோடு முடிவு பெற்றது என்றார். ராமமூர்த்தியோடு நான் பேசி கொண்டிருந்த போது ,அவர் விஸ்வநாதனுக்கு 65 வரை கொடுத்த டியுன்கள் மூன்று மடங்கு( வந்த படங்களில் வந்த பாடல்களை விட ).விஸ்வநாதன் memory sharp .கற்பனை திறனும் உடையவர்.அதை வைத்து (கட்டி கொடுத்த சோறு)மூன்று வருடங்களாவது ஜல்லியடித்திருக்க முடியாதா?
அவருடைய உழைப்பு,அறிவு ,பணம் எல்லாம் உறிஞ்ச பட்டு சக்கையாய் துப்ப பட்டார். தயாரிப்பாளர்களுக்கோ இவரை தெரியாது.(வாசித்து காட்டுவது வேறொருவர்)இவரை நம்பி படம் கொடுத்தவர்களும் பட்ஜெட் விஷயத்தில் முறுக்க ,இவருடைய சகாக்கள் காற்று வீசும் (பண காற்று,இசை காற்றல்ல)திசையில் பறக்க,இசை கலைஞர்களை கூட வேலைக்கு வைக்க வசதியில்லாமல் ,ராமண்ணா ஒருவர் புண்ணியத்தில் எவ்வளவு நாள் ஓட்டுவது?
இவர் கொடுத்த லைப்ரரி tunes வேறொரு வசதியுள்ள முன்னாள் சகாவால் மூன்று நான்கு வருடங்கள் வசதியாக கோவர்தன்-வெங்கடேஷ்-ஹென்றி -ஜோசெப்-நோயல் -சங்கர்-கணேஷ் துணையோடு அரங்கேறி கொண்டிருக்க......
என்னதான் திறமை இருந்தாலும்,செல்வாக்கு,அரசியல்,பண பலம்,படை பலம் இதற்கு முன்பு தனியாளாக இருந்து தோற்றாலும் ,இன்றும் விஸ்வநாதனின் 1000 படங்களுக்கு அவரை தனியாக கவுரவிப்பதில்லையே,100 படங்களுக்கு பழைய சகாவோடு சேர்த்துதானே கவுரவிக்க படுகிறார்?(சத்யபாமா டாக்டர் பட்டம் உட்பட)
திட்டமிட்டு ,அத்தனை ட்ரூப் ஆட்களையும் வளைத்து போட்டு ,செல்வாக்கை காட்டி, பத்திரிகைகளில் திட்டமிட்டு தான்தான் இரட்டையரில் முதன்மை போல பிரச்சாரம் செய்து,ராமமூர்த்தி குடிகாரன் என்று புளுகி கொண்டு ச்சீ....(எந்த பூமி?)வேண்டாம் ,அசிங்கத்தை கிளற நான் விரும்பவில்லை. கூட்டுக்குள் வளர்த்த பறவை போல ,விஸ்வநாதனுடன் இருந்த போது ,தன் இசையில் மட்டுமே தோய்ந்திருந்த மேதை,வெற்றிக்கு இசையை தவிரவும் முன்னூறு காரணங்கள் இருந்ததை அறியாமல் காலத்தின் கோலத்தில் ,தேய்ந்து மறைந்ததை கொண்டாடவா சொல்கிறீர்கள்?வருத்தமேனும் வேண்டாமா?நாம் யாரை மதித்து போற்றினோம்?பாரதியின் மரணத்தில் 14 பேர் மட்டுமே.புதுமை பித்தன் சோத்துக்கு லாட்டரி ..
ராமமூர்த்தி ஜீவனத்திற்கே போராட விட்டு விட்டோம்.
நான் இருவருடனும் interract செய்துள்ளதால் ,இருவர் பலமும்,பலவீனமும் நன்கு அறிந்தவன்.
கடைசியாக டி.கே.ஆர் என்ற அந்த மறக்க பட்ட மேதையை காலில் விழுந்து வணங்கும் பாக்கியம் எனக்கு விஸ்வநாதன் பேரனின் கல்யாண வரவேற்பில் கிடைத்தது.சுசிலா தெய்வ பாடகியின் காலிலும் வணங்கினேன்.இசை என்பது எனக்கு உதிரம்.
வெண்ணிற ஆடையில் என் வரிசை.
என்ன என்ன வார்த்தைகளோ
ஒருவன் காதலன் ஒருத்தி காதலி
அம்மமா காற்று வந்து
நீ என்பதென்ன
நீராடும் கண்கள் இங்கே
அள்ளி பந்தல் கால்கள்
சித்திரமே சொல்லடி
கண்ணன் என்னும் மன்னன்
ஒருவன் காதலன் படத்தில் கட் அல்லவா?(நீராடும் இடம் பெற்றதா).நான் எழுபதுகளில் பார்த்த போது இரண்டும் துண்டிப்பு. முடிந்தால் இந்த இரண்டின் வீடியோ.