இனிய நண்பர் ரவி சார்
கதாநாயகன் கனவு காணும் பாடல் - பதிவுகள் அருமை .பணம் படைத்தவன் படத்தில் நம் மக்கள் திலகம் கனவு காணும் பாடல் மிகவும் இனிமையாக இருந்தது . உங்களுக்காக இந்த கனவு பாடல் .
http://youtu.be/oFLYvDYxGls
Printable View
இனிய நண்பர் ரவி சார்
கதாநாயகன் கனவு காணும் பாடல் - பதிவுகள் அருமை .பணம் படைத்தவன் படத்தில் நம் மக்கள் திலகம் கனவு காணும் பாடல் மிகவும் இனிமையாக இருந்தது . உங்களுக்காக இந்த கனவு பாடல் .
http://youtu.be/oFLYvDYxGls
அவள் அப்படிதான் தாக்கம் வெளியில் வர கொஞ்சம் நாள் ஆகும்
ருத்ரைய்யா, 2004 கால கட்டத்தில் ஆனந்தவிகடன் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியின் முழு வடிவம் எனக்கு கிடைக்கவில்லை .நினைவிலிருந்து எழுதுகிறேன்.
'சரியான கதை கிடைக்கவில்லை' என்று இப்போதைய தமிழ் இயக்குநர்கள் கூறுகிறார்களே?
'சிவகாசியில் இருந்து கொண்டு, தீப்பெட்டியை தேடுபவர்கள் இவர்கள்'
ரஜினி ஸ்ரிப்ரியாவிடம் ஒரு நாள் இரவு தவறாக நடக்க முயல ஸ்ரீப்ரியா ரஜினியின் கன்னத்தில் அறைய
(இப்ப இந்த மாதிரி காட்சி எடுக்க முடியுமா , எடுத்துட்டு திரையில் தான் காண்பிக்க முடியுமா)
மறு நாள் இருவரும் சந்திக்கும் போது ரஜினியின் வசனம்
"ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்."
வாசு
அவள் அப்படிதான் சின்ன வயசு ஸ்ரீப்ரியா நல்லெண்ணெய் சித்ரா தானே.ராஜ பார்வையிலும் கமலின் தங்கையாக வருவார் என்று நினைக்கிறன் .
சித்திரை மாதம் -------
ஒரு பெண் இங்கே , ஒரு சாப்பாட்டு ராமனை மனிதனாக்குகிறாள் - அவனிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளி கொண்டு வர , ஒரு முக்கிய கருவியாக இருக்கின்றாள் - தனக்காகவே பிறந்தவள் என்று அவளை நினைக்கின்றான் அவன் - ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவளை வேறு ஒருவனுக்கு மாலையிட வைக்கின்றது - தன்னை மனிதனாக மாற்றியதற்காக வாழ்நாள் முழுவதம் அவளுடைய மகளுக்காக தன்னை அர்பணித்து கொள்கிறான் - அவன் தனக்காக சேர்த்து வைத்தது தன் செல் அரித்த அவளை பற்றிய கனவுகள் மட்டுமே!! - இவனும் "அவள் அப்படித்தான் " என்று என்றுமே நினைத்ததில்லை ..
http://youtu.be/VxEeSZsVprI
:smile2::smokesmile:
வினோத் சார்
ஒரு உதாரனத்திற்க்கு மட்டுமே nt பட பாடல்களை போடும் படி ஆகி விட்டது - இன்னும் பல கதாநாயகர்கள் கனவு கண்டிருக்கலாம் - உடனே தேடி கண்டு பிடிக்க முடியவில்லை - நீங்கள் போட்ட பதிவு மிகவும் அருமை- இந்த பாடல் என் மனம் கவர்ந்த பாடல் - mt மிகவும் அழகாக இருப்பார் - பாடல் வரிகளும் மிகவும் பிரமாதம் - lre யின் ஹம்மிங் - கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா என்ற பாடலை நினைவு படுத்தும் - இந்த பாட்டை பற்றி விரிவாக எழுத உள்ளேன் - நன்றி பல
:smile2::smokesmile:
RAVI SIR
ராமன் தேடிய சீதை படத்தில் இடம் பெற்ற ஜெயாவின் கனவு பாடல் .அட்டகாசமான கண்ணதாசனின் பாடல் . பாடகர் திலகம் - இசை அரக்கியின் குரல்கள் .மெல்லிசை மன்னரின்
மயக்கும் இசை - படமாக்கப்பட்ட காஷ்மீர் வெளிப்புற காட்சிகள் - மக்கள் திலகம் - ஜெயா ஜோடி
http://youtu.be/V17xP-VOJSo
என்றென்றும் மனதை மயக்கும் பாடல் .
அதுவே கிருஷ்ணா சார். இதோ நல்லெண்ணெய்:) 'அவள் அப்படித்தான்' படத்தில்
http://i1087.photobucket.com/albums/...t%20-2/vcb.jpg
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ஹாய் கோபால் சார்.. உங்களுடைய non-linear writing, hats off, சுவையான பதிவு போன்ற பாராட்டுகளில் எப்படி மகிழ்ந்தேனோ அதே போல் உங்களுடைய இந்தப் பதிவிற்கும் பதிலளிக்க்க் கடமைப் பட்டுள்ளேன்..
//Chinna Kannan- I strongly detest your views on Evolved literature,evolved Movie movements, and serious writings. // எந்த வகை..எதைப்பற்றி எழுதினேன் – அவள் அப்படித்தான் பட த்தைப் பற்றித் தானே.... நல்லவேளை நான் பார்க்கவில்லை என எழுதியிருந்தேன்..யெஸ்.. மதுரை மினிப்ரியா என்ற நினைவு.. டிக்கட் கிடைக்கவில்லை..பின் அதுவே சாந்தியிலும் வந்து ஓடிச்சென்று விட பார்க்க முடியவில்லை.. பிற்காலத்தில் நண்பர்களின் சந்திப்பில் கேள்விப் பட்ட்து- அதுவா ஒரு போர் கதை..என..
//You have to reform yourself.// கண்டிப்பாகச் செய்கிறேன் சார்..
//Much as I like humour (Bagyam Ramaswamy,Devan,Gopu, Crazy Mohan Etc) ,if you consider it alone as the only thing in life, you are missing your search for betterment.//
ஸாரிங்க..எனக்கு சீரியஸாகவும் எழுதத் தெரியும்... நகைச்சுவையாகவும் எழுத கொஞ்சம் வரும் ( நீங்கள் தான் நகைச்சுவை குறைந்துவருகிறதுஎனக் குறிப்பிட்டிருந்த நினைவு) ஆனால் மாற்றங்கள் என்று வரும்போது மாறிக் கொண்டே இருப்பதும் எனக்கு ப் பிடிக்கும் எனினும் சொல்லவந்த விஷயங்களில் என்னுடைய ஸ்டைல் ஆஃப் ரைட்டிங்க் என்று ஒன்று இருந்தால் அதிலிருந்து விலகாமல் தான் நான் சொல்லமுடியும்..எனக்குச் சொல்லத் தெரியும்..
//There are many unexplored areas which never ceases to excite me. // எனக்கும் தான்..புதிய புதிய் நாவல்கள் படிப்பதில் மிக ஆர்வம் உண்டு..மாயா என்ற பெண்மணி எழுதிய கடாரம் என்ற நாவல், இணைய நண்பர் சுதாகர் கஸ்தூரி எழுதிய 6174 போன்றவை என் சமீபத்திய வாசிப்புகள்.. இது நாவல்கள் மட்டும்.. மற்ற விஷயங்களும் அப்படியே.. சந்தக் கவிதைஎழுத முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்..ஏனோ முரண்டு பிடிக்கிறது..எழுதிவிடுவேன்..
//With low level of intellect (like Quoting popular Poems or movie songs),you may play effectively to Galleries.// சுத்தமாப் புரியலைங்க..எனக்கு இண்டலக்டே இல்லியோ என்னவோ..ஆனால் எழுதுகிற இடுகை சுவாரஸ்யமாக இருக்கவேண்டும், யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும், எப்போது படித்தாலும் சுவாரஸ்யமாக இருக்கவேண்டும்(இது பேராசை தான்) என்று தான் எழுதுகிறேன்.. நான் எழுதும் – இந்த்த்திரியில் – எனது சொந்த க் கவிதைகளாக எழுத முயற்சித்தவையைத் தான் இடுகிறேன்..அது சுவாரஸ்யம் குறைவின் அப்போதே நீங்கள் சொல்லியிருக்கலாமே..திரைப்பாடல்கள் த்ரெட்டில் திரைப்பாட்டைப் பற்றிச் சொல்லாமல் எப்படி எழுதுவது.. அறிவில்லாமல் எழுதுகிறேன் என்றால் சரி. .இனி அறிவு கூட்டி எழுதப் பார்க்கிறேன்..
// But you seemed to be showing keenness in writing.// நன்றிங்க்ணா.. எனக்கு எழுதுவதில் எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதிப் பார்ப்பதில் மிக ஆர்வம் அதிகம்..முயற்சித்துக் கொண்டும் இருக்கின்றேன்.. நீங்கள் எழுதிய இந்த வரியிலேயே எவ்வளவு நாசூக்காக என்னைக் குத்துகிறீர்கள் என்று புரிகிறது..
// It wont do any good for you to improve. // உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது சார்..
//Pl.Grow up.// கண்டிப்பாக..உடல் மட்டும் தான் வளர்ந்துவிட்ட்து கோபால் ஜி.. அதுவும் எக்ஸர்ஸைஸ் செய்ய வேண்டுமாம் சர்க்கரையைக் குறைப்பதற்கு. தவிர எல்லாரையும் விட அடியவன் என்பதனால் தான் சின்னக் கண்ணன் என்று வைத்திருக்கிறேன்..இதை முன்பும் சொல்லியிருக்கிறேன்...அறிவு தான் வளர்வது கொஞ்சம் ஸ்லோ..
// Atleast stop having dig at Good works like Aval Appadithan.// அவள் அப்படித்தான் வாசுசார், க்ருஷ்ணாஜி ஸ்மோக் ரவி ஜி போன்றோரின் எதைக் குற்றம் கண்டேன்.. அவர்கள் கொஞ்ச்ம டூமச்சாகப் புகழ்வது போல் பட்ட்து.. தவிர பார்க்காத ஒன்றை ப் பற்றி நான் எங்ஙனம் சொல்ல இயலும்.. பாடல்கள் கேட்டிருக்கிறேன்..உறவுகள் தொடர்கதை எனக்குப் பிடிக்கும்.. மே பி ருத்ரய்யா ஹைட்டோ என்னவோ என்பது போல் எழுதியது உங்களைப் புண்படுத்தி விட்ட்தா.. நகைச்சுவையை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது நீங்கள் அறியாததல்ல.. அவர்களிடமே தான் ஓபனாக க் கேட்டு பதிலும் வாங்கியிருந்தேனே..
ஒரு அவள் அப்படித்தான் பட்த்திற்க்காக ரத்தமும் சதையும் கொண்டு இருக்கும் மனித மனத்தைப் / நண்பரை ( நண்பனா நான் –அதற்குத்தகுதி உண்டா என்பதையும் சொல்லிவிடுங்கள்)புண்படுத்துவது என்பது உம்மைப் பொறுத்தவரை நியாயமாக வைத்திருக்கிறீர் போலும்
இனிமேல் வாசு சார் எதிர்காலத்தில் எழுதப் போகும் “ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன” பட ரைட்டப்பும் அதற்கான மற்றவர்கள், என் எதிர்வினையும் கீழே கொடுக்கிறேன்.. அதன்படி செய்யமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்..
இ.ஸ்பெ ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.. மிக அருமையான படம் கதானாயகி ஆடு மேய்ப்பவள்..அவளை பக்கத்து வயலில் மாடு மேய்ப்பவன் ஒரு உணர்ச்சி மிக்க் கொண்ட மழை இடி மின்னல் தருணத்தில் ஆட்கொண்டு விடுகிறான்..அதே சமயத்தில் அவனும் மின்னல் தாக்கி இறந்து விடுகிறான்..ஒரே சமயத்தில் இன்பம் துன்பம்.;.அந்தப் பெண் தவிக்கத் தவிக்க திரையில் எழுகிறது இந்தப் பாடல்
ஆடாமல் ஆட்டி வைத்த விதியின் செயல் தான் அம்மா..
பாடாமல் படும்பாடு அவன்செயல் தான் அம்மா..
அந்த வரிகள் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொண்டு உணர்வினை மயக்கு மயக்கு என்று செய்து விடுகிறது..
//வீடியோ//
**
க்ருஷ்ணாஜி:
சூப்பர் வாசு சார்.. அதுவும் மிக அழகான படம்.. அழகான வரிகள்.. அதிலேயே க்ளைமாக்ஸில் அந்த ஆடு மேய்ப்பவள் நம்பிய மாட்டுப் பண்ணையாரையும் விபத்தில் பறி கொடுக்க இன்னொரு வயலினிசையுடன் கூடிய பாட்டைப் பற்றியும் எழுதுங்கள்..
மாவென்று கத்துகின்ற ஜென்மங்களெல்லாம்
பாவென்று கத்தவைத்த கந்தையா
எனை வாவென்று சொல்லிவிட்டு
போனகதை என்னையா..
ஆஹா நல்ல்வரிகள் (சுதேசமித்திரனில் இது பற்றி எழுதியிருப்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்..)
*
ஸ்மோக் ரவிஜி
//அந்த வரிகள் அப்படியே உள்ளத்தைக் கொள்ளை கொண்டு உணர்வினை மயக்கு மயக்கு என்று செய்து விடுகிறது..// சூப்பர் வாசு சார்.. எப்பொழுதுமே மனதிற்குள் ஒரு தாக்கம் ஏற்படுத்திய படம் இது..ஆடுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.. அதுவும் நீங்கள் எழுதியிருப்பது என் உணர்வலையின் மேல் மிதந்து சென்று உள்ளத்திற்குள் நுழைந்து உருக வைத்து விட்ட்து.. அந்தப் பாடலை மறுபடியும் கேட்டேன்..
*
சின்னக் கண்ணன்..: வாசு ஜி.. நான் படம் பார்த்த்தில்லை.. நீங்கள் போட்ட பாடலில் கொழுகொழு ஆடே என்ற வரி வருகிறது..அப்போது காண்பிக்கப் படும் ஆடு ஒல்லியாக இருப்பதைப் பார்த்தீர்களா..
*
// க்ருஷ்ணாஜி, வாசுசார், ரவிசார் மீதுள்ள நம்பிக்கையில் மேற்கண்ட ரைட் அப்..என்னைக் குறை சொல்ல மாட்டார்கள்.. //
*
நீங்கள் எழுதுவதாகச் சொன்ன தொடர், இப்போது எழுதப் போகும் அ.அ.தா அனுபவத்தை முடிந்த போதில் எழுதி இடுங்கள் கோபால் சார்.. ஆனால் எழுதட்டா எழுதட்டா என ஒவ்வொருமுறையும் கேட்பது கொஞ்சம் செயற்கைத் தனமாக எனக்குப் படுகிறது என்று நான் சொல்ல மாட்டேன்..அதைப் படித்தும் நான் கற்றுக் கொள்கிறேன்..
*
கடைசியாக மிக்க நன்றி கோபால் சார்.. நான் எதையுமே மனதிலோ உடலிலோ வைத்துக் கொள்வது இல்லை.. எனில் இந்தப் பதிவு..இதில் உம்மைப் புண்படுத்தியிருந்தால் என்னை உங்கள் யூஸ்வல் ஸ்டைலில் திட்டலாம்..தப்பில்லை.. நீங்கள் எல்லா வித்த்திலும் பெரியவர்..
கிரேட் சி கே .
தல அஜித் ஒரு படத்தில் (விக்ரமன் படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கார்த்திக்,ரமேஷ் கண்ணா,ரோஜா நடித்த படம் ) அடிக்'கடி' 'I லைக் இட் ' அப்படின்னு சொல்வார். ஆனால் நான் 'கடி'க்கவில்லை . உண்மையில் ரசிக்க வைக்கும் எதிர் வினை .
http://www.umsystem.edu/newscentral/...Warm-Fuzzy.jpg