நன்றாய் நடந்தது
நன்றாய் நடக்கிறது
நன்றாய் நடக்கும்
நன்றுரைத்தது கீதை
Printable View
நன்றாய் நடந்தது
நன்றாய் நடக்கிறது
நன்றாய் நடக்கும்
நன்றுரைத்தது கீதை
கீதையைப் பத்தி அந்தப்
பிரபலமான உபன்யாசகர்
ஆரம்பிக்கறார் சார் 5.30க்கு
அப்புறம்
ஏழாவதுமனிதன்
கப்பலோட்டிய தமிழன்
கைகொடுத்த தெய்வம்னு
முழுக்க பாரதியார் பாட்டு..
வீரபாண்டிய கட்ட பொம்மன்
வேறசானல் போடறாங்களாம்
ராஜ பார்ட் ரங்கதுரை
கப்பலோட்டிய தமிழன்
காந்தி தமிழ் நு பேசியிருக்கேன்
இந்தக் கால இளைஞ இளைஞிகளின்
சுதந்தரம் பத்தி சாலமன் பாப்பையாவ
வச்சு ஒரு பட்டி மன்றம்
பரவாயில்லையா சார்:
யோவ் லூசு
வயசு என்ன ஆவுது உனக்கு
அதானே பார்த்தேன்..
இந்த கீதைலாம் வேண்டாம் தூக்கு
காலைல அந்த ப்ரபல நடிகை
அந்தக் காலத்தில
சுதந்திரப் பாடல்கள்னு
ஒரு வெஸ்டர்ன் சாங்க்ஸ் ஆல்பம்
பாடியிருக்காங்கள்ள..யா
மேட் இன் இண்டியா அதப் போடு
இப்போ ரெண்டு மூணு படத்துல
நல்ல குத்துப் பாட்டுல்லாம்
வந்திருக்குல்ல
அந்தப் படங்கள்ளயே போட்டுடலாம் பேசு
ஃபண்ட்ஸ் நோ ப்ராப்ளம்யா..
இந்தப் பட்டிமன்றம்
யூத் தோட ஃப்ரீடம் நல்ல டாபிக்
நடுவரா
அவங்க யாரு நாலுவாட்டி டைவர்ஸ் ஆன நடிகை
ஓ அவங்களையே நடுவரா போட்டுடு
நீ சொன்னமாதிரி போட்டா அட்ஸ்லாம்
கிடைக்காது..
நமக்கு சேலரி போனஸ்லாம்
வேண்டுமில்லையா
நான் சொன்னதைச் செய்டா செல்லம்
சரி என்று சொன்ன
டிவி நிகழ்ச்சிப் பொறுப்பாளர்
நொந்து கொண்டார் மனதுள்தன்
அடிமைத் தனத்தினை
அடிமைத் தனத்தினை அணைத்துக்கொள்
ஆசையாய் அதிவிரைவாய் அட்டையாய்
ஆதி அடையாளம் அனைத்தும் அழித்துவிடு
ஆடு ராமா ஆடு குரங்கு போல மாறிவிடு
மாறிவிடு என்றுசொன்னாய் மாற்றிவிட்டேன் நானும்
..மனமொப்பி வளர்த்திருந்த தலைமுடியை வெட்டி
வாரிவிட ஒன்றுமில்லா சிறுபையன் போலே
..வாகாக வளையாமல் நிற்கிறது தானே.
ஸாரிடியர் என்கின்றாய் உனக்கென்ன ராணி..
..சங்கடங்கள் அலுவலகம் செலும்போது தெரியும்
ஊறுகின்ற கொழுப்புடனே கேட்பார்கள் என்னை..
..உண்மையைச்சொல் தள்ளுபடி கிடைத்ததா என்றே..:)
கிடைத்ததா என்றே தெரியவில்லை
கள்ள விழியும் சொல்லவில்லை
கடித்த இதழும் இயம்பவில்லை
காதலுக்கு சம்மதம் அறிவதெப்படி
அறிவதெப்படி..
தாத்தாவின் அப்பா
பெயர் தெரியும்..
தாத்தாவின் தாத்தா பெயர்..
ம்ஹீம் தெரியாது
அப்பா சொல்லவில்லை
அம்மாவின் வழியும் அப்படியே..
யாராவது வயதான உறவுமுறை
உயிருடன் இருந்தால் தெரியலாம்..
முயன்றதில் ஒரு தொண்ணூறு
வயது உறவினரிடம்
பதில் கிடைத்தது….
அறிவதெப்படி..
என்ற கேள்வியே
காலம் காலமாக
தேடலுக்கு வழிவகுத்து
கண்டுபிடிப்புக்கும் வழி வகுத்திருக்கிறது..
பார்த்தாயா என்றேன் சகோதரியிடம்…..
போடா போ
வாழ்க்கையே ஒரு தேடல் தானே
கண்டு பிடிப்புக்கள் குறைவு
ஏமாற்றங்கள் அதிகம்
எனச் சொல்லி மென்சிரித்துச் செல்ல
நான் நின்றேன் உறைந்து..
உறைந்து கிடக்குது பனிக்கட்டி
உருகவில்லை கரையவில்லை
சூரிய ஒளியில் வெப்பமில்லை
வீரியத்தை ஏற்று ஆண்மகனே
ஆண்மக னென்று உன்னை
..அணங்குநான் எங்கு சொல்வேன்
ஊண்தனை மட்டு மல்ல
…உணர்வுகள் கொண்ட என்னை
தீண்டினாய் ராவ ணாவுன்
..திமிரினை என்ன சொல்வேன்
வீண்மக னென்று நீயும்
…விந்தையாய் ஆன தென்ன
கால்களை இறுக்க வைத்துக்
..கவலையில் உடலும் வாட
நீள்விழி உயர்த்தி சீதை
..நின்றவந் தரக்கன் மீது
வேல்களாய்க் கூர்மை யான
..வென்றிடும் சொற்கள் எய்ய
ஊழ்வினை பற்ற பின்னாள்
…உயிரினை விட்டா னன்றோ..
விட்டானன்றோ பற்றினை
பெற்றானன்றோ பேற்றினை
புத்தன் சொன்ன கூற்றினை
போற்றிட தீரும் தீவினை
தீவினை என்ன செய்யும்
…தினமுமே நல்ல எண்ணம்
மேவியே செயல்கள் செய்தால்
…மேதினி வசமும் ஆகும்
பூவிழிப் பார்வை தன்னை
..பூமகள் முழுதும் வைக்க
வாவியாய் மகிழ்ச்சி பொங்கி
…வளமுமே பெருகு மன்றோ..