-
சொந்த படமெடுத்து சோதனைகள் வந்தால் அதை எதிர் கொள்ள முடியாம*ல் திணறுபவர்கள் கமல்,ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை உண்டு.எம்.ஜி.ஆருக்கு தி.மு.க ஆட்சியில் கருணாநிதி கொடுத்த தொல்லைகளை தொடர்ந்து விவரித்து வந்தால் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அத்தனை பேரும் கோபாலபுரத்துக்கு படையெடுத்து விடுவார்கள். கருணாநிதியின் எம் ஜி ஆருக்கு எதிரான அட்டூழியங்கள் வெளிவந்தவை கொஞ்சம் தான். இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அத்தனையும் எம்.ஜி.ஆர் பொறுமையுடன்,தைரியமுடன் எதிர்கொண்டு சமாளித்தார்."பகைவனுக்கருள்வாய்" என்ற அவரது குணம்தான் அதற்கு காரணம்.
" உலகம் சுற்றும் வாலிபன்"படம் முடிந்து பின்னணி இசை சேர்ப்பு ஏவி.எம்.மில் நடந்த போது, செயற்கையான மின்வெட்டை அமுல் படுத்தி, அதன் வேலை நாட்களை அதிகப்படுத்தினார் கருணாநிதி.அதுமட்டுமா,படத்தொகுப்பு (எடிட்டிங்)வேலை நடந்த ஜெமினி ஸ்டியோவிலும் மின்வெட்டினை கொண்டு வந்தார் மு. க. இதனால் 24 மணி நேரமும் ஜெமினியில் எடிட்டர் உமாநாத் குழுவினர் தொடர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தனர்.அதில் இயக்குநர் பிம்சிங்கின் மகன் பி. லெனினும் இருந்தார்.படம் முடிந்து நெகடிவ் பிரதிக்கு பாதிப்பு வரக்கூடாதென்று,பாசிட்டிவ் பிரதிகளை மும்பை ராம்நாத் லாபில் தயார் செய்தனர்.படம் ரிலீஸ் நாள் வரையிலும் மு.க.வின் ஆட்சி தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தது.இது நேற்று இன்று நாளை, இதயக்கனி படங்கள் வரையிலும் தொடர்ந்தது. வேறு நடிகர்களாக இருந்தால் அரசியல் மட்டுமின்றி சினிமா வை விட்டே ஓடியிருப்பார்கள். ஆனால் மக்கள் ஆதரவுடன் எதிர்த்து நின்று சினிமாவிலும் அரசியலிலும் யாரும் செய்ய முடியாத சாதனைகள் புரட்சித் தலைவர் செய்தார். இன்றும் சரித்திரம் படைக்கிறார்.
http://i66.tinypic.com/zu2mph.jpg
நன்றி - சுந்தரபாண்டியன் துரை முகநூல்.
-
குமுதம் - வார இதழ் எப்போதுமே *மக்கள் திலகத்தின் *படங்கள் - செய்திகள் *பற்றி * நடு *நிலையோடு *எழுதியதில்லை .கிண்டலும் கேலியுமாக எழுதிதான் *பழக்கம் .
1973 உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் * இமாலய *வெற்றிக்கு பிறகு *முதல் முறையாக 1973 தீபாவளி அன்று *மக்கள் திலகத்தின் *அட்டைப்படத்துடன் *அவரது *பேட்டியும் *வந்து * குமுதம் விறபனையில் *சாதனை *புரிந்தது .*
கல்கி - ஆனந்த விகடன் - தினமணிக்கதிர் - குமுதம்*
பேசும்படம் -*
நவமணி - நவசக்தி - சுதேசமித்திரன்*
தினமணி - தினமலர் *- தினத்தந்தி *[1967-1972- *1977-1987நீங்கலாக ]
ஆங்கில பத்திரிகைகள் *அனைத்தும்*
மக்கள் திலகத்தின் *படங்களை *பற்றியும் ,எம்ஜியாரை *பற்றியும்*
அவரது ரசிகர்களை பற்றியும் சற்று *நெருடலாகவே *எழ்தினார்கள் .
ஆனாலும் *மக்கள் திலகம்*
தன்னுடைய *நடிப்பு திறமை*
தன்னுடைய *ரசிகர்கள்*
மக்கள் ரசனை*
மூன்றை மட்டும் நம்பி *படங்கள் தந்தார் .
மக்களும் - ரசிகர்களும் *- ரசித்தார்கள்*
எம்ஜியார் வெற்றி மேல் வெற்றி அடைந்தார் .
பத்திரிகை *பலம் *எல்லாவற்றையும் *மீறி *வெற்றி பெற்ற *மக்கள் திலகம் - ஒரு தனிப்பிறவிதான் .
http://i67.tinypic.com/2edw4yt.jpg
நன்றி - பாலசுப்பிர மணியன் முகநூல்.
-
-
-
-
-
-
-
சென்னை காமராஜர் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ...............
http://i64.tinypic.com/dm8h6o.jpg
-