I stopped watching movies a few years back. The last movie I watched was about Mathematician Ramanujan, The Man Who Knew Infinity. :)
Printable View
லீலா பத்தி எஃப் பி ல விரிவா எழுதியிருந்தேனே :) படிக்கலையா
நண்பர்கள் எல்லாம் கம்பராமாயணம் எனத் தொடர்ந்து படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்க, நானும் வால்மீகி ராமாயணம் படித்துக் கொண்டு இருக்கும் போதில் நானும் அது சம்பந்தமாக ஏதாகிலும் எழுத வேண்டும் என மனதுக்குள் குறுகுறுத்தவண்ணம் இருக்குங்கால் சரி என முடிவெடுத்து- ராம் லீலா பார்த்துவிட்டேன்
நன்றாக இரண்டு கிலோ பாதாமை அரைத்து சர்க்கரையிட்டு காய்ச்சிக் கிளறி பெரிய வட்ட வடிவமான தட்டில்போட்டுப் பரத்தினால் இருக்கும் வெளிர்மஞ்சள் நிறத்தைப் போன்ற பளபள முதுகுடன் தீபிகா படுகோனே..கூட அதே பாதாம் கேக்கில் கொஞ்சம் குங்குமப் பூ சிற்சில கோடுகளாய்ப் போட்டாற்போல் பட்டுக் கயிறுகள்..இவை இப்படியென்றால் -- பார்க்கும் இளம்,கிழம் வயதினரை லோ லோ என்று அலையவைத்திடும் லோ நெக் ஜாக்கெட் என படம் நெடுகிலும் வருகிறார்.. நடிகையாவதற்கு முன் போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்த்தவரோ என்னவோ..அவ்வப்போது ரன்பீர் சிங்கிற்கு பச்சக் பச்சக் என முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் படம் நெடுகிலும்(கொடுத்து வைத்த பாவி- நற நற)..ரன்பீர் சிங்க் தாடியும் சிக்ஸ்பேக் உடற்கட்டுமாக ரொமான்ஸ், ஆட்டம் பாட்டம் என அவர் பங்கும் சரியாய்த் தான் இருக்கிறது..
பாடல்கள், காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டம் பிரம்மாண்டம்..கதை நடக்கும் காலம் என்றால் துப்பாக்கிகளும் இருக்கிறது செல்போனும் இருக்கிறது..குழப்பம்..
அதுவும் ஒரு பாடலில் சாம்பிராணிப் புகையோ வேறோஎன்னவோ ஒரு ஒன்றரை முழ நீள இடைப் பிரதேசத்துடன் கை உயர்த்தி தீபிகா தூபம் போட்டவண்ணம் பாடுகையில் பார்ப்பவர்கள் பற்றிக் கொள்கிறார்கள்..
ஹிந்தி எனக்கே கொஞ்சம் அரை குறைதான்..தெரிந்த என் வீ.காவும் கொஞ்சம் கடினம் தான் என்றார்..சப்டைட்டில்கள் வந்தால் மறுபடி ஒருமுறை பார்க்க வேண்டும்..
கதை..ம்ம் சொல்லிக் கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை..ராம் ஹீரோ பெயர்; ஹீரோயின் பெயர் லீலா குஜராத்தில் ரான் என்ற இடத்தில் நடப்பதாக- இருவரும் எதிர் எதிர் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்..பின் என்ன..உங்கள் கற்பனை சமையலறையிலிருந்து பெப்பர் சால்ட் போட்டுக் கதை பண்ணுங்கள்..ராம் லீலா ரெடி..
கடைசியில் க்ளைமேக்ஸ் மிகச் சிறப்பு என எழுதியிருந்தனர் அனைவரும்..பார்த்தால் ஹீரோ ஹீரோயின் இருவரும் சு.கொ. செ.போகிறார்கள்..ம்ம்
இருப்பினும் பிரம்மாண்டம், தீபிகா படுகோனே( கொஞ்சம் என் மனதில் இருக்கும் தேவிகாவை முட்டிப் பார்க்கிறார்), போனால் போகிறது ரன்பீர் சிங்,ஒருசில பாடல்கள் என்பதற்காகப் பார்க்கலாம்..
I am re-posting this song; the video as well as lyrics, along with chinnakkaNNan's
recent write up about it; in order for everyone to appreciate/enjoy it one more time! Here it goes...
http://www.youtube.com/watch?v=YzGJe9xg8oE
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
ஊகம் செய்தேன் இல்லை
மோகம் உன் மீதானேன்
கதைகள் கதைகள் கதைத்து
விட்டுப் போகாமல்
விதைகள் விதைகள் விதைத்து
விட்டுப் போவோமே
ரி...நி...க...ரி
திசை அறியா
ரி...ம...நி...ப...க...ரி
பறவைகளாய்
நி ரி ஸா...நீ...ரி...நான்...க
நீள்...ம...வான்...ப த நி ஸா
வெளியிலே மிதக்கிறோம்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
போகும் நம் தூரங்கள்
நீளம் தான் கூடாதோ
இணையும் முனையம்
இதயம் என்று ஆனாலே
பயணம் முடியும் பயமும்
விட்டுப் போகாதோ
த...நி...த...ம...க...ரி
முடிவு அறியா
ரி...ப...ம...நி...ப...க...ரி
அடி வானமாய்
ரி நி ஸா...ஏன்...ரி...ஏன்...க
நீ...ம...நான்...ப த நி ஸா
தினம் தினம் தொடர்கிறோம்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்யப் போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்யப் போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரைத் தேடும் மீனாய்...
வாவ்.. தாங்க்ஸ் ஆர்டி..ஆமா..ஜூலை மாதம் என்ன ராகம்.. கேட்டேன் பலமுறை கிடைக்கவில்லை.. :)
இதுவும் முன்பு எழுதியது..
*
காற்று தெரியும்.. பஞ்ச பூதங்களில் ஒன்று.. காற்று வாங்கப் போகையில் கவிதை வாங்கி வந்த பாடல் எல்லாம் உண்டு..
*
மென்மையான காற்று தென்றல்.. ஆக்ரோஷமான காற்று புயல்..
*
அது என்ன பூங்காற்று?
.*
இன்னும் மென்மையான காற்றா..?
*
ஒரு பாடலில் பூமேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா என வ்ருகிற்து..
*
இன்னொரு அழகிய பாடல வித் வொர்ஸ்ட் பிக்சரைசேஷன்.. மாந்தளிரே மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ.. ஜானகி என நினைக்கிறேன்..
*
பூந்தென்றலாய் காதுகளுக்குள் வருடும் அது..பூந்தென்றல் வேறு பூங்காற்று வேறா.?
.*
இல்லையாம்.. பூக்களின் மணம்கமழும் மெல்லிய காற்று.. மெல்லிய தென்றல்.. இதானாம்..
*
என்னவெல்லாம் பாடியிருக்கிறார்கள்..
*
ஏரிக்கரைப் பூங்காற்றே நீ போறவழி தென்கிழக்கோ
*
பூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா
*
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
*
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா.. நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா.
.*
இப்போதும் கொஞ்சம் நினைவுகளை மயக்கம் கொள வைக்கும்.. இளமை எனும் பூங்காற்று பாட்டு
*
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்..
*
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று..
*
சுடும் பூங்காற்றே சுட்டுப் போகாதே..
*
பூந்தென்றல் காற்றே வா
*
இன்னும் நிறைய இருக்கலாம்.. எனக்குத் தெரியவில்லை..
*
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பூங்காற்று என்ற வார்த்தை கலந்திருக்கும் பாடல்களும் அதைப் போலவே மென்மையாக மெலடியஸாக் இருக்கின்றன..
*
திரைப்பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்தால் பூங்காற்றை வைத்து குத்துப்பாட்டு எழுத முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்..அப்போது குத்துப்பாடல் அதன் தன்மை மறந்து மென்மையாகி விடுமோ..
*
கடைசியாக…
*
அதிஅதி காலையில் மலர்கள் மலர்ந்திருக்கும் பூஞ்சோலையில் இந்தக்காலத்திற்கு ஏற்றாற்போல முக்கால் பர்முடாஸூம் அடிடாஸ் டீஷர்ட்ட்டும், அழகான ரிபோக் ஷீவும்..காதுகளில் ஐபாட்டின் ஸ்பீக்கரும் பொருத்திய படியே வேக்மாக நடக்கும் போது நம் மீது மோதும் பூங்காற்று எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்..
*
சொர்க்கம் சார்..
*
.. :) ..
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன் :)
பூங்காற்றே தீண்டாதே.. என் நெஞ்சைத் தூண்டாதே
பூந்தென்றலே.. நல்ல நேரம் காலம் சேரும்
பூந்தென்றல் இசை பாட புகழ் பாணர் கவி பாட
இந்த பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னைப் பார்த்து
பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம்
தேன்மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே
இளஞ்சோலை பூத்ததா.. அட்டா.. ஒரு பூந்தென்றல் தாலாட்ட
இன்னும் பாடலில் இடையில் வரும் அருமையான வரிகளும் உண்டு..
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாள் என்று
சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு..
நானெல்லாம் பொன்னியின் செல்வன் பூங்குழலி ரகம்..
அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்... என்றும் இருப்போம்
இடி இடித்து எண் திசையும் வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலை வல்லவர் போல் நாட்டிய்ம்தான் ஆடுவதேன்..
அலைகடல் கொந்தளிக்கையிலே அகக்கடல்தான் களிப்பதுமேன்.. என்றும் இருப்போம் :noteeth: