டியர் முரளி சார், சகோதரி சாரதா,
எழுத்துலக ஜாம்பவான்களான கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் எங்கே! அடியேன் எங்கே! தங்களது உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் முரளி சார், சகோதரி சாரதா,
எழுத்துலக ஜாம்பவான்களான கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் எங்கே! அடியேன் எங்கே! தங்களது உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
டியர் டாக், ஜேயார்,
பாராட்டுக்கு நன்றி!
டியர் மகேஷ் சார்,
பாராட்டுக்கு மிக்க நன்றி! தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் "புதிய பறவை" படம் சம்பந்தப்பட்ட பொன்னான லிங்க்குகளுக்கு பற்பல நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Rakesh,Quote:
Originally Posted by groucho070
Probably you are talking about the picture uploaded by NOV in the other thread, I believe. Very true and I had the same feeling when I snapped that moment at the theatre entrance and I should thank NOV for doing a job which looks simply great on the page.
Regarding your expectation [shall I say aadhangam], good news is round the corner. This may get fulfilled in 2011.
Welcome Gopal and as rightly pointed out by our hubbers, age doesn't matter when it comes to NT and his movies but yes we are over whelmed that such youngsters are able to appreciate NT. I wish you a happy stay here.
Talking about age reminds me of another info on the same line which was shared by Swami. One of Swami's friends had gone for the matinee show for Puthiya Paravai yesterday and he could spot a group of youngsters in his row with books and all. During the interval, he went up and checked with the youngsters and it transpired that one of the youth's father is a hard core fan of NT and basis the things his father told about the movie the young guy had brought his friends also. it seems that they were overwhelmed by the movie and they asked how would the movie would end. Our friend didn't disclose and asked them to watch it. Goes to show again that NT and his films would transcend all barriers.
சுவாமி,
எதுகை மோனையில் விளையாடுகிறீர்களே! பிரமாதம்.
Regards
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 4
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
மாந்திரீகத்தாலும் கட்டுப்படுத்த முடியாதவர்கள் மாப்பிள்ளையின் அணுகுமுறைக்கு சற்று கட்டுப்பட்டனர். பாதுகாப்பு கருதி மேடையில் சூடங்களை ஏற்ற வேண்டாம் என்கின்ற மாப்பிள்ளையின் வேண்டுகோளுக்கு பக்தர்கள் செவி சாய்த்தனர். மாப்பிள்ளையும், போலீஸும் விடை பெற, இக்காட்சிகளை கண்ட எனக்கு நமது முரளி சாரும், அவர் காட்டும் மேற்கோளும் நினைவுக்கு வந்துவிட்டது. ஆம், அவர் குறிப்பிடுவது போலவே, 'வழக்கம் போல் போலீஸ் வந்து விட்டது'. இத்தகைய கோலாகலங்களுடன் பாடலும் நிறைவடைந்தது. இப்பாடலைப் பற்றிய சில தகவல் துளிகள்:
- கருப்பு கோட்-சூட் காஸ்டியூமில் கலைக்குரிசிலைக் காண்பது கண்கொள்ளாக்காடசி. ஒய்ஜி ஒரு சிவாஜி விழாவில் கூறியது நினைவுக்கு வருகிறது. "அவர் மட்டும் தான் கோட்-சூட் அணிந்தால் எக்ஸிக்யூடிவ் போல இருப்பார். வேறு எவர் கோட்-சூட் அணிந்தாலும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சர்வர் போலத் தான் தெரிவார்."
- அபிநயசரஸ்வதி இப்பாடலில் அடிச்சுக்க முடியாத சரஸ்வதி. அழகிலாகட்டும், கவர்ச்சியிலாகட்டும், பாடி லேங்குவேஜிலாகட்டும், சிவப்பு சேலை காஸ்டியூமில் ஆகட்டும், சிவாஜிக்கு சற்றும் குறையாமல் இப்பாடலில் ஸ்கோர் செய்திருபார். அபிநயசரஸ்வதியை மிக மிக இளமையாகவும், மிகுந்த அழகாகவும் காட்டிய ஒரே தமிழ்க் கலர் படம் "புதிய பறவை"யாகத் தான் இருக்க முடியும். (நம்ம மோகனரங்கன் ஆமோதிப்பார் என எண்ணுகிறேன், என்ன ரங்கன் சார்!)
- பிரசாத்தின் கேமராவிற்கு என்ன கைம்மாறு? நமது பாராட்டுக்களும், நன்றிகளும் தான்! பிரசாத்தின் கேமரா ஒர்க் படம் முழுமையுமே பிரமாதம்!
சிருங்காரக் கப்பல் சிங்காரச் சென்னையில் கரை சேர, விலாசங்களைக் கொடுக்காமலேயே விடைபெற்றுக் கொள்கின்றனர் லதா-ராமதுரை மற்றும் கோபால். ஷிப்பிலிருந்து இறங்கும் கோபாலை பின்னாலே 'கப்'பென்று பிடிக்கப் போவதால், இப்போது 'கப்சிப்' என ஒரு கண்மட்டும் வைக்கிறார் ரங்கன்(நடிகவேள்). [இந்த ரங்கன் கலைக்குரிசிலைப் பிடிப்பதற்காக கண் வைக்கிறார். ஹப்பர் ரங்கன் கலைக்குரிசிலை பிடித்ததற்காக, கண்களில் மட்டுமல்ல, இதயத்திலும் வைத்திருக்கிறார். ](இந்த மேற்கோள் நம் எல்லோருக்குமே பொருந்தும்!)
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
:omg: :omg: :omg:Quote:
Originally Posted by Murali Srinivas
I can't wait!!!! :redjump: :bluejump:
The last time I saw PP on the big screen was in the early 80s. Can't wait!
[html:a165fb7b87]
http://farm5.static.flickr.com/4089/...e9f5034b_b.jpg
[/html:a165fb7b87]
தங்க்ளுக்கு அதிர்ச்சி என்றாலும், உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன்.Quote:
Originally Posted by Irene Hastings
தமிழகத்தில் எந்த நடிகருக்கு ரசிகர்கள் அதிகம்? என்ற நோக்கில் ஊடகங்களால் எடுக்கபட்ட கருத்துக் கணிப்புகள் இதனை உறுதி செய்தே வந்து உள்ளன.
1990ம் ஆண்டு குமுதம் வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு ( NT முதல் இடம் - 58.76 % -multiple choice for respondents allowed) தொடங்கி 2008ம் ஆண்டு Loyola college புள்ளியியல் துறை நடத்திய கருத்துக் கணிப்பு ( NT -18.9% 2nd place - multiple choice for respondents not allowed) வரை பல உதாரணங்களை சொல்லலாம்.
இந்த சர்வே எல்லாமே அறிவியல் முறைப்படி, demographic pattern பிரதிபலிக்கும்படி எடுக்கப்பட்டவை. நமது மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி -அதாவது 46 to 47 % - 25 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இளைஞர்களின் அபிமானமும் கணிசமான அளவு NT க்கு உள்ளது என்பது தெளிவு.
அது மட்டுமன்றி 1990ல் திரையுலகில் active நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் மட்டுமன்றி இப்போது மூன்றாம் தலைமுறை நடிகர்களின் காலத்தில் கூட ஆதரவு தொடர்கிறது என்பதற்க்கு இந்த சர்வேக்கள் மட்டுமன்றி அவரது பழைய படங்களுக்கு கிடைக்கும் ஆதரவும் சாட்சி.
சாந்தி திரையரங்க - புதிய பறவை நிகழ்வுகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய திரு. பம்மலார் மற்றும் திரு.ராகவேந்திரன் ஆகியோருக்கு நனறிகள் பல. யு-டியூப் மூலம் படக்காட்சிகளை வெளியிட்ட நடிகர்திலகம் டாட் காம் இனணய தளத்திற்கும் நன்றி.
Thank You Very Much Mr.NOV for excellently uploading Our NT Notice.
Regards,
Pammalar.
திரு பம்மல் சார்,
தியேட்டர் நிகழ்வுகள் வர்ணனை மிகவும் அருமை.சாரதா மேடம் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்.
முரளி சார்,
நான் படம் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தைவிட தாங்கள் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் மேலோங்குகிறது.இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை விடலாமா?
நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் சாரதா மேடமை வரவேற்கிறேன்
புதுவரவான இளைய தலைமுறை கோபால் அவர்களே வருக வருக.