-
'அன்னை இல்லம்' 50-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தில், இயக்குனர், தயாரிப்பாளர் பெயர்களைவிட, 'திரையிசைத்திலகம்' கே.வி.மகாதேவன் அவர்களின் பெயரை பெரிதாக இடம்பெறச்செய்து சிவாஜி பிலிம்ஸ் அவருக்கு சிறப்புச் சேர்த்திருப்பது மனதுக்கு இதமளிக்கிறது.
'எண்னிரண்டு பதினாறு வயது' மங்கையை, 'நடையா இது நடையா' எனக்கொஞ்சி, 'மடிமீது தலைவைத்து விடியும் வரை' தூங்கும் வண்ணம், 'சிவப்பு விளக்கை எரிய'விட்ட அந்த இசைமேதைக்கு இந்த கௌரவம் அவசியமே.
-
திரு தேவ் ஆனந்த் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி.
http://i1226.photobucket.com/albums/...death-dead.jpg
ஹிந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகவும், 'ஸ்டைல் கிங்' ஆக ஹிந்தி திரையுலக ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவருமான திரு தேவ் ஆனந்த் அவர்கள் 6-12-2011 அன்று மாரடைப்பால் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 88. 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா', கைடு, ஜுவல் தீப், போன்ற காலங்களை வென்ற படங்களை நமக்களித்தவர். ஸ்டைல் சக்கரவர்த்தி. இவர் நடித்த 'ஜானி மேரா நாம்' சூப்பர் ஹிட் மூவி நம் அன்பு நடிகர் திலகத்தின் 'ராஜா'வாக ரீமேக் ஆகி மாபெரும் வெற்றி கண்டது. அவருக்கு நமது திரியின் சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்.
மறைந்து விட்ட திரு தேவ் ஆனந்த் அவர்களின் நினைவாக பிரசித்தி பெற்ற "கான்ச்சீ ரே...கான்ச்சீ ரே" என்ற பாடல் காட்சி 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' (1971) என்ற உலகப் புகழ் பெற்ற திரைப் படத்திலிருந்து வீடியோ வடிவில்.
http://www.youtube.com/watch?feature...&v=ptrl5WFwmTQ
துயரத்துடன்
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன் சார்
தேவ் ஆனந்த் அவர்களின் மறைவு நமது இந்திய நாட்டுத் திரையுலகிற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது தனி ஸ்டைலைத் தான் பல நடிகர்கள் பிற்காலத்தில் பின்பற்றினர்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.
அவர் நினைவாக மிக மிகப் பிரபலமான ஹிந்தித் திரையுலகம் இருக்கும் வரையிலும் அதற்கு மேலும் இருக்கக் கூடிய பாடல்கள்...
http://youtu.be/jtn4am42kW4
http://youtu.be/ItCHlI_qC44
http://youtu.be/lquTatrN_9Y
-
நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல், டேக்ஸி டிரைவர் திரைப்படத்தில் தேவ் ஆனந்த் - கல்பனா கார்த்திக் இணை நடித்த பாடல் - இந்தப் பாடல் வரிகள் இன்று அவர் மறைந்த பிறகு உயிர் பெற்றுள்ளன. பொருள் தெரிந்தால் நிச்சயம் கண்ணில் நீர் பெருகும்...
http://youtu.be/e74H54urf6M
-
-
-
நீண்ட நாட்களாகக் காத்திருந்த பாடல் காணொளியாக ... அஞ்சல் பெட்டி 520 திரைப்படத்திலிருந்து பத்துப் பதினாறு பாடல். இதைத் தரேவற்றிய அன்பருக்கும் Youtube இணைய தளத்திற்கும் நமது உளமார்ந்த நன்றி.
http://youtu.be/Bh12YRzxnO8
-
'நீதி' நினைவுகள்
ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.
1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).
இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.
வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.
நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).
கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.
பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.
முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).
அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.
காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.
படம் வெளியானது 1972 ஆச்சே.
-
Always a special place in my heart for Neethi.
Haven't seen the original, so I don't know how much performance credit goes to Rajesh Khanna. But NT just nailed it as frustrated lorry driver who rather spent time in jail than to be charitable to the family whose member he accidentally killed.
Unlike other K.Balaji remakes, where things happen suddenly and inexplicably, here the change of heart of the main characters are shown nicely. NT's patented Rage is well used here especially in the beginning when totally didn't get the reason behind the experimental judgement. Mappilaya pAthukkadi was total riot! His dance, his naughty leer, waking up middle of the night sleeping next to a prostitute. Gee which other hero of that era would do that? And nAlai muthal kudikkamAtten, nice extension of Kannadhasan's pledge :smile:.
Really, this is one of those not-so-great NT movies that I visit more often than I should.
-
அன்பு வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் இரு மாணிக்கங்களான 'நீதி', மற்றும் 'மனிதரில் மாணிக்கம்' படங்களின் ஸ்டில்களையும், நீதி பாடல் காட்சியையும் பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.
அன்பு ராகவேந்தர் சார்,
அஞ்சல் பெட்டி 520 படப்பாடல் காட்சியை இணைத்தமைக்கு மிக்க நன்றி. பலர் இப்பாடலை இப்போதுதான் முதன்முறையாகப் பார்ப்பார்கள் என்பது திண்ணம்.
நீங்கள் இருவரும் மறைந்த மாபெரும் நடிகர் தேவ் ஆனந்த் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலியில் நானும் பங்கேற்கிறேன். 'காஞ்சாரே... காஞ்சாரே' பாடல் காட்சி, முந்தைய நாட்களுக்கு இட்டுச்சென்று, அப்படம் சென்னையில் ஓடிய நாட்களையும், அப்போது சென்னை நகர் முழுக்க இப்பாடலும், 'தம் மேரே தம்' பாடலும் ஒலித்த அந்த நாட்களை நினைவுக்கொண்டு வந்தன.