Quote:
வாணி ராணி -200
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ தொடர் 200 எபிசோடை எட்டியிருக்கிறது. விறுவிறுப்பான சம்பவங்களுடன் வீறுநடை போடும் இத்தொடரில், இப்போது மேலும் பல திருப்பு முனைகள் தொடரை எதிர்பார்க்க வைக்கின்றன.
ஊரே மெச்சும்படி ஒற்றுமையாக வாழ்ந்த வாணி–ராணியின் குடும்பம், பூமிநாதன் மற்றும் அங்கயற்கண்ணியின் சதியால் பிரிந்து விடுகிறது. தனியே பிரிந்து சென்ற சாமிநாதனின் குடும்பம் விதி என்ற சூறைக்காற்றில் சிக்கி சிதறிப்போகிறது. யாருக்கும் தீங்கு நினைக்காத ராணியின் நல்ல உள்ளத்தினால் பூமிநாதனின் சதித்திட்டம் எல்லோருக்கும் தெரிய வருகிறது. பிரிந்த சாமிநாதனின் குடும்பமும் ஒன்று சேருகிறது.
குடும்பத்தை காப்பாற்ற தன் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்த சாமிநாதன் சுக்கு காபி வியாபாரத்தை ஆரம்பித்து நேர்மையாக சம்பாதிக்க முயல, கல்லூரியில் முதல் மாணவனாக வலம் வரும் அவரின் மகன் சரவணனோ தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அடிதடி வழக்குகளில் இறங்கி, சட்டத்திற்கு புறம்பாக பணம் சம்பாதிக்க முயல்கிறான். இந்த உண்மை அவனின் குடும்பத்திற்கு தெரிய வருமா? அப்படி தெரிய வரும்போது ராணியின் குடும்பம் அதை எப்படி எதிர் கொள்ளப்போகிறது? ராணி எப்படி தாங்கப் போகிறாள்?
தன் மாமனின் துணையோடு எப்படியும் ராஜேசை கைப்பற்ற நினைக்கும் செண்பகத்திற்கு காளி ஜெயிலில் அடைக்கப்பட்டான் என்ற செய்தி பேரிடியாக அமைகிறது. எப்படியும் உயிரைக் கொடுத்தாவது, ராஜேசை அடைந்தே தீருவது என்ற தீவிர போராட்டத்தில் இறங்குகிறாள். அதைப்போன்றே தன் கணவனை தன் கைப்பிடியில் வைத்திருக்க செல்வியும் போராடுகிறாள். இறுதியில் வெற்றியடைய போவது யார்?
கேள்விகளுக்கான விடை கிடைப்பது அடுத்தடுத்த பரபரப்பான எபிசோடுகளில்..
நட்சத்திரங்கள்: ராதிகா சரத்குமார், வேணு அரவிந்த், பப்லு, ரவிக்குமார், சாந்தி வில்லியம்ஸ், மனோ, அருண், விக்கி, மானஸ், நிகிலா, மகாலட்சுமி, ஸ்ரீதேவி, நேஹா. ஒளிப்பதிவு: மீனாட்சிபட்டி காசிநாதன், திரைக்கதை: எஸ்.குமரேசன், வசனம்: பா.ராகவன், இயக்கம்: ஓ.என்.ரத்னம். ஆக்கத் தலைமை: ஆர்.ராதிகா சரத்குமார். தயாரிப்பு ராடன் மீடியா ஒர்க்ஸ்.