மதுண்ணா! சின்னா! ஜி!
subject to change:)
எம்.ஜி.ஆர் அவர்களின் பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் அவரின் ஒரு சில அதிகம் புகழ் பெறாத பாடல்களும் உண்டு. இந்தப் பாடல்களும் கொஞ்சமும் சுவை குன்றாதவை. அந்த மாதிரி பாடல்களில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.
சுறுசுறுப்பாக எம்.ஜி.ஆரை அதிகம் அங்கும் இங்கும் ஓட விடாமல் அவரை கட்டிப்போட்ட கெட்டிப் பாடல். அடக்கியே வாசிக்க வைக்கப்பட்டிருப்பார். பல்லவிக்கும், சரணங்களுக்குமான இடையிசை ஓஹோ! மாமா கெட்டி.
மேடத்தின் 'முகராசி' ஓஹோ! கொள்ளை அழகு.
டி எம்.எஸ், சுசீலாவின் கிரேட் ஜாப்.
சுசீலா அமைதியாக விட்டுவிட்டு எடுக்கும் அந்த
'என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகு...மோ'
பல்லவி வரி பலே பலே ஜோர். திரும்ப திரும்ப காதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கும் பலம் வாய்ந்தது.
'ஹோ'!
மறுபடி மறுபடி கேட்டாலும் தாளாத இன்பங்கள் தொடர்ந்து உண்டாகுதே!
பாடலின் முடிவில்
'சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ'
என்று கண்கள் சொக்கி மெய்மறந்த நிலையில் மேடம் பாடும்போது ஜெயாவின் தோள்பட்டையில் கண்மூடி முகம் புதைத்திருக்கும் எம்.ஜி.ஆர் அது படப்பிடிப்பு என்பதையும் சற்றே மறந்து அந்தப் பாடலின் வரிகளை, அதற்கான இசையை தன்னையறியாமல் லயித்து, ரசித்து, தலையாட்டி
'கொண்டாடுமோ' வில்
'மோ' என்ற வார்த்தையை மனம் மயங்கி மேடத்துடனேயே சத்தமில்லாமல் உச்சரிப்பது கண்கூடாகத் தெரியும். நல்ல ரசனைக்காரர். நீங்களே பாருங்கள்.
https://youtu.be/QDvz7NXSVbQ