சார் நம் எல்லோருக்கும் அவர் பிறந்த தினம் தான் எல்லா மத பண்டிகை தினங்கள்
Printable View
நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள். என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.
என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். "நாடோடி மன்னன்'' படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை' சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார். நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நìலையம்) அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன. ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. "கலங்கரை விளக்கம்'' படத்தில், "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும்.
என்னுடைய "நலந்தானா'' நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன். "நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு'' என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர். ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
"இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்'' என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார். "அந்த ஜோக் அவசியம் வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்'' என்று கூறினார்.
courtesy malaimalar
உலகம் சுற்றும் வாலிபன்
http://i62.tinypic.com/es5aoi.jpg
http://i62.tinypic.com/1q0qw0.jpg
SS Rajini used similar wordings during the Audio release of "Annamalai" @ Chola Sheraton. One more similarity will follow soon re. "one rupee" advance - "Aayirathil Oruvan", SS Rajini also took "one rupee" as advance from AVM for Sivaji.
மிகவும் அருமையான பதிவு திரு செல்வகுமார் சார்
கிட்டத்தட்ட 55 அல்லது 56 வயது இருக்கும் நம் தலைவருக்கு பட்டிகாட்டுப்போன்னையா படம் நடிக்கும் போது என்ன ஒரு ஆச்சரியம் 25லிருந்து 30 வயது இலஞ்சனாக,அபாரம் சார் என்ன ஒரு ஸ்டைல் என்னமாதிரியான உடல் வாகு எந்த பெண்ணும் இந்த அழகை பெண் என்ன ஆணும் தான் காதல் செய்யாமல் இருக்கவே முடியாது
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
VENTHAR TV TELECAST THALAIVAR LIFE STORY NAME OF THADAM PATHITHAVARGAL
https://www.youtube.com/watch?v=Tx9z_-bZye4
"ஆயிரத்தில் ஒருவன் - முன்பணம் ஒரு ரூபாய்"
http://i57.tinypic.com/ny8xgg.jpg
SS Rajini also took Re.1/= only as advance from AVM for Sivaji, another similarity.
http://i58.tinypic.com/2m783sx.jpg
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான புகைப்படம்.
-------------------------------------------------------------------------------
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொத்து குவிப்பு
வழக்கில் இருந்து உச்ச நீதி மன்றத்தின் ஜாமீனில் விடுதலை
செய்தி வெளியான பின் , அனைத்திந்திய அண்ணா தி.மு.க.
தலைமை அலுவலகத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு , கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும்,
இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அப்போது ஒரு பெண் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு
முத்தம் தரும் காட்சி.
இந்த வார நக்கீரன் இதழில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/2nkj6sx.jpg
திருமதி கே. பி. சுந்தராம்பாள் அவர்கள் சற்று இளம் வயதில்
தோற்றம் அளிக்கும், காட்சி.
http://i60.tinypic.com/xkx314.jpg
முத்தான 100 பதிவுகள் கடந்த நமது திரியின் நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i58.tinypic.com/6rt5z7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்