-
கிருஷ்ணா ஜி..கவிதா படம்.. பறக்கும் பறவையும் நீயே..
இந்தப் பாட்டு ரொம்ப நாளாத்தேடி பின் ராகவேந்தர் சார் தான் எனக்கு இன்னொரு இழையில் கொடுத்தார்..
http://www.youtube.com/watch?v=IBUG2Am8mPo
//
சகோதர உறவுகள் எஸ்.என்.சுரேந்தர், ஷோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து பாடிய ஓர் அருமையான பாடல். (எஸ்.என் சுரேந்தர், இவர் அண்ணன் எஸ்.என் சுந்தர், ஷோபா இவர்கள் இணைந்து 1970- ல் 'லலிதாஞ்சலி' என்று அவர்களின் தாயாரின் நினைவாக ஒரு லைட் மியூசிக் ட்ரூப் ஒன்று தொடங்கி நடத்தினார்கள்) // எனக்குத்தெரியாத விஷயம் இது வாசு சார் நன்றி.. எஸ்.என் சுரேந்தர் தானே மோகனின் பின்குரல் தந்தவர்.. பாடல் ஈவ்னிங்க் கேட்கிறேன். நன்றி
-
கிருஷ்ணா
நம்பியார் நினைவு நாளில் அவரை நினைவாஞ்சலி செய்தது பாராட்டுக்குரியது. எனது நன்றியும் கூட.
-
வாசு
வழக்கம் போல் 1977-78 சிலோன் ரேடியோ ஹிட் பாடல் . சுரேந்தர்க்கு அந்நாட்களில் எஸ் எ சந்திர சேகர் படத்தில் ஒரு பாடல் நிச்சயம் உண்டு .
எஸ் எ சந்திரசேகர் இன் இயக்கத்தில் வெளி வந்த முதல் படம். (நிறைய பேர் சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்வார்கள்). நடிகர் திலகத்தின் எங்கள் தங்க ராஜா படத்திற்கு உதவி இயக்குனர். இந்த படத்தின் போஸ்டரில் அவர் பெயர் எஸ் எ சி சேகர் என்று தான் போட்ட நினைவு உண்டு.பிறகு தான் எஸ் எ சந்திர சேகர்.
இளையராஜாவின் ஆரம்ப கால மெலடி
மாலை இள மனதில்
ஆசை தனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம்
கவிதைகள் பாடியது மாலை
சுந்தர், சுரேந்தர், ஷோபா மூன்று பேரை குறிபிட்டீர்கள். ஷீலாவை விட்டு விட்டீர்களே :) (நடிகர் vikraanth(கற்க கசடற) அம்மா).நால்வரும் இணைந்து லலிதாஞ்சலி இன்னிசை குழு நடத்தினார்கள். படம் முதல் நாள் முதல் ஷோ நெல்லை பாபுலர் (பிறகு ராம் பாபுலர்- இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை . திரு கோபு சார் அவர்களிடம் கேட்க வேண்டும் ) .நாம் முதல் பாகத்தில் இவர்களை பற்றி டிஸ்கஸ் செய்து இருக்கிறோம் . ஷோபாவின் அப்பா திரு நீலகண்டன் வீ வீ creation (vijay and vidya) என்ற பெயரில் நிறைய திரைப்படங்கள் எஸ் எ சி இயக்கத்தில் தயாரித்து இருக்கிறார்
-
//ஷீலாவை விட்டு விட்டீர்களே//
நன்றாகவே தெரியும் கிருஷ்ணா. நம் நண்பர்களுக்கு அதிக பரிச்சயம் இல்லையென்றுதான் விட்டு விட்டேன். இப்போது நீங்கள் சொல்லி விட்டீர்கள்.
-
கிருஷ்ணா!
சுரேந்தர், ஷோபா சிறு வயதில் பாடிய திரைப்படப் பாடல்களை அவிழ்த்து விடுங்களேன். அப்புறம் பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே.
-
உங்களுக்கு தெரியாததா சுவா :)
"கொஞ்சும்'' காமெடி நல்லா கவனிங்க காமெடி தான் காம நெடி அல்ல :)
வாசு சார்
சுரேந்தர் ஷோபா உடன் இணைந்து பாடிய வேறு பாடல் நினைவில் இல்லை .சுரேந்தர் தனியாக,ஜானகியுடன் பாடிய பாடல்கள் நினைவில் உண்டு . 'தனிமையிலே ஒரு ராகம்' ,'தேவன் கோயில் கீதம் ஒன்று','பாரிஜாத பூவே','கண்மணி நில்லு காரணம் சொல்லு
-
கிருஷ்ணா கண்ணு!
சந்திரசேகரின் 'நீதிக்கு தண்டனை' படமே லலிதாஞ்சலி பின் ஆர்ட்ஸ் வழங்கியதுதான். தயாரிப்பும் நீங்க சொன்ன மாதிரி தயாரிப்பு எஸ்.எஸ்.நீலகண்டன், ஷோபா சந்திரசேகரன் என்று போடுவார்கள்.
கருணாநிதி கைவண்ணத்தில். ஆரம்பமே அந்த டிரேட் மார்க் வந்துவிடும்.
கொடி மங்கலம் என்ற ஊரின் பெயர் உள்ள போர்டில் கொடிக்குப் பக்கத்தில் 'ய' எழுத்தை சேர்த்து கொடி(ய)மங்கலம் என்று திருத்துவார்கள். என்னே தமிழ்! என்னே சிந்தனை! 'திரும்பிப் பார்' படத்தில் 'கருடன் பதிப்பகம்' என்ற வாசகத்தைத் திருத்தி 'திருடன் பதிப்பகம்' என்று மாற்றுவது போல. மாறாத டிரேட் மார்க்.:)
-
கிருஷ்ணா!
நாஞ் ஜொன்னது சின்ன வயசுல 'பாசப் பறவைங்க' பாடினது:) ..அதாவது கொயந்தையில.:) ஓ.கே? நன்றி கமல் சம்பந்தம்.:)
-
வாசு பன்னு :) https://encrypted-tbn2.gstatic.com/i...NmDPvrq0Q7Ve3Q
நீங்களே சூப்பர் ஆக எழுதிட்டேன்களே :)
அதுவும் 'விளையாட்டிலே இன்பம் அதுதான் வேண்டும்' என்று சொக்க வைப்பார்.( கிருஷ்ணா! அடிக்க வர வேண்டாம்) பாடல் முழுவதும் மென்மையான இசை அமர்க்களமாய் பவனி வருகிறது. திரும்பக் கேட்காமல் இருக்க முடியாத பாடல் வகையைச் சார்ந்தது'
-
ஷோபா குரல் தானே 'இரு மலர்கள்' படத்தில் அந்த 'யாரடி இங்கே மந்திரி குட்டி ராணி வந்தா நீ எந்திரி ஓடி பிடித்து விளையாட ' vaasu