Originally Posted by Murali Srinivas
வருக சாரதா வருக. உங்களின் வருகையும் பதிவுகளும் வழக்கம் போல் களை கட்டத் தொடங்கிவிட்டன. பாராட்டுகளுக்கு நன்றி.
இங்கே நீங்கள் செந்தில் போன்றவர்கள் எனக்கு விருதளிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இது இணைய தளங்களில் செயல்படும் ரசிகர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் விருதல்ல, மாறாக களப் பணி செய்யும் ரசிகர்களுக்கும், ஏதாவது தளத்தில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் செயல் புரிபவர்களுக்கும் அது வழங்கப்பட்டிருக்கிறது. இனியும் அப்படியே தொடரும். ஆகவே என்னை விட தகுதியானவர்கள் ஏராளம் ஏராளம் பேர் இருக்கின்றனர். ஆனால் நண்பர் சுவாமி நிச்சயமாக தகுதி படைத்தவர். காரணம் என்னவென்றால் நடிகர் திலகம் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் அவர் பெயரில் சில பேர் பத்திரிக்கை நடத்தியிருக்கிறார்கள், ஆனால் அவர் நம்மிடையே இருந்து மறைந்த பிறகு அவர் பெயரில் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டமான வேலை என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும். அந்த நிலைமையிலும் தான் கை காசை போட்டு நடத்திய சுவாமி பாராட்டுக்கு மட்டுமல்ல விருதுக்கும் மிக தகுதியானவர்.