கதைகள் சவ்வு மாதிரி இழுபடுவதால்
சீரியலை 'மிஸ்' பண்ணப்போகிறோம் என்ற கவலை இல்லை.
2. இப்படியான நாடகங்களுக்கு விரைவில் சமாதி ஏற்படலாம்.
இந்த trend விரவில் முடிவிற்கு வந்து விடும்
Printable View
கதைகள் சவ்வு மாதிரி இழுபடுவதால்
சீரியலை 'மிஸ்' பண்ணப்போகிறோம் என்ற கவலை இல்லை.
2. இப்படியான நாடகங்களுக்கு விரைவில் சமாதி ஏற்படலாம்.
இந்த trend விரவில் முடிவிற்கு வந்து விடும்
இன்றைய பகுதி குணவதியின் அழுகையுடன் ஆரம்பித்தது. பூபதி இறந்து விடுகிறான்.
அன்றைய காலகட்டத்தில் உள்ள வழக்கம்படி குணவதியின் மாமியார் அவளின் மாங்கல்ய
பலத்தை குறை கூறுகிறாள். தன்னுடன் குணவதி இருப்பதை இஷ்டப்படாமல், அவளை
தமையன் வீட்டிற்கு அனுப்பி விடுகிறாள். செல்லத் தங்கையின் பழைய குதூகலத்தையும்,
அலங்கார பொம்மையாய் அவள் வளைய வந்ததையும் நினைத்து வருந்தியபடி இருக்கிறான்
அவள் அண்ணன். எதிர்பார்த்தபடி அண்ணியும் தன் கோபத்தை, இயலாமையை, வெறுப்பை,
வண்டி வண்டியாய் சேமித்து குணவதியிடம் வெளிப்படுத்துகிறாள். அவளை ஒரே அறையில்
அடைந்து கிடக்கும்படி ஆணையிடுகிறாள் (அக்கால வழக்கம்ப்படி :? ) துளசி மாடத்திற்கு
நீர் விடும் குணவதியை, நிந்தித்து விரட்டுகிறாள். துளசிச்செடி மிகவும் பவித்ரமானதால்
கைமை அடைந்தவர்கள் நீர் விடுவது செடியை வாட்டி, பட்டுப்போக செய்து விடும் என்பது
கூற்றாம். துளசி வாடினால், செல்வச் செழிப்பும் மனையில் குறைந்து விடும் என்பது
நம்பிக்கை. அப்படி எதுவும் ஆகிவிடாது என்று மறுமொழி கூறுகிறாள் குணவதி. இருந்தும்,
அவளை வருத்துவதற்காக, ரகசியமாய் துளசிச்செடியில் கல்-உப்பை போட்டு பட்டுப்போவதற்கு
வழி செய்கிறாள். அண்ணிக்கு மனை செழிப்பு, நம்பிக்கை, எல்லாவற்றையும் தாண்டி, குணவதியை புண்படுத்துவதே முதல் நோக்கமாகிறது.
இடையே இவர்கள் மாட்டு வண்டியில் ஊர் திரும்பும் போது, சிவனடியார் ஒருவர் இவர்களை
பார்த்தபடி நின்று, இது 'திருவிளையாடல்' தொடர் என்பதை நினைவூட்டி புண்ணியம் கட்டிக்கொள்கிறார்.
பண்டைய கால தவறான வழக்கங்கள் பலவற்றைக் கேள்வி கேட்க வைக்கிறது இந்த அத்தியாயம்.
இன்றும் சில இடங்களில் இது நடந்து கொண்டு இருக்கிறது என்பது வருந்துதற்குறிய விஷயம்.
துளசிச் செடிக்கு நீர் விடக்கூடாது என்பதற்கும், கைமை அடைந்தவள் ஒரு அறைக்குள் அடைந்து
கிடப்பதற்கும் சொல்லவும் முடியாத சில காரணங்கள் உண்டு. எனினும், பொதுப்படையில் பார்க்கும் போது
இவை எல்லாம் பெண்ணிற்கு இழைத்த அநீதிகள் தான்.
சிவன் குழுவினர்க்கு 2 வாரமாக லீவ்! நமக்கு சலிப்பு தட்டும்முன், தரிசனம் தருவது நலம்.
பிரதோஷ நந்நாளை எதிர்ப்பார்த்து நட்சத்திரம் குறித்து காத்திருக்கிறார்கள் போலும்.
என்னதான் குணவதியும், மாமியாராக வரும் ஷாந்தி வில்லியம்ஸ் (சரிதானே?), மற்றும் அண்ணனாக வருபவரும் நன்கு நடித்திருந்தாலும், (அண்ணியின் நடிப்பு சுமார் தான்), இது பக்தித்தொடர்
என்பதால், வெறும் கதையுடன், அண்ணனும் தங்கையும், இறைவனிடம் கொண்ட பக்தியை முதன்மையாக
வைத்து சித்தரிக்க வேண்டும். இல்லையெனில், மாமியார்-மருமகள் சண்டை, மதனி-நாதினி வயிற்றெறிச்சல்
என்று அரைத்த மாவையே ஒரு மாறுதலுக்காக 'செந்தமிழில்' அரைத்து வழங்குவதாகிவிடும்.
இதனை கவனம் கொண்டால் இத்தொடரின் சுவாரஸ்யத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
(மீண்டும் அடுத்த திங்கள்)
நன்றிQuote:
Originally Posted by Shakthiprabha
நேற்றைய தொடரைப் பார்க்க முடியவில்லை.
இவ்விடம் - சிவன் கோவில் ( ஒரே ஒரு சைவக் கோயில் ) கொடியேறிய படியால் ,,,,,
( 2 கோவில்கள் உள்ளன.
1. குஜராத் (?)..வெள்ளைச் சிலை விஷ்ணு - சிவன் /முருகன்/பிள்ளையார் வீற்றிருக்கின்றார்கள்
2. இப்பொழுதுதான் 1 வருடம்- ஆரம்பித்த சிவன் கோவில்)
வேலை நாட்கள்.
ஆகவே இரவுத் திருவிழா மட்டுமே.
6.00 மணைக்கு ஆரம்பமாகி 10.30 /11.00 முடியும்
Quote:
Originally Posted by Shakthiprabha
முடிந்த அளவு பெயர்கள் இத் தொடரின் முதல் பக்கத்தில் இட்டு வருகின்றேன்.
ஷக்தி,
ஒரு முக்கிய விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா?.
பெண்ணின் மாங்கல்யக் குறையினால்தான் தன் மகன் இறந்தான் என்று எந்த மாமனாரும் சொன்னதில்லை, மாமியார்தான் சொல்லி வருகிறாள்.
துளசிச்செடிக்கு விதவை தண்ணீர் விடக்கூடாது என்று எந்த ஆணும் சொன்னதில்லை, இன்னொரு பெண்தான் சொல்கிறாள்.
மங்கல காரியங்களின்போது விதவைப்பெண்கள் வந்து நின்றால் அவர்களை எந்த ஆணும் குற்றம் குறைகளால் இடித்து விரட்டுவது கிடையாது. 'சுமங்கலி'பெண்கள்தான் விரட்டுவார்கள்.
ஆகவே இவைபோன்ற காரியங்கள் பெண்களுக்கு எதிராக "பெண்களாலேயே" ஏற்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் கொடுமைகள். எதிர்த்துக்கேட்கும் ஆணைப்பார்த்து' நீங்க சும்மா இருங்க உங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று விரட்டுவதும் நம் இனம்தான் என்பதில் நாம் பெருமை கொள்ள முடிகிறதா..??????.
உண்மைதான் சாரதா!
கசப்பான உண்மை!
நான் நம்பும் உண்மையும் கூட.
பெண்ணுக்கு பெண் தான் முதல் எதிரி பல சமயங்களில்.
இன்றைய காலகட்டத்தில், ஒரு பெண்ணை, அவள் திறமையை, அவள் அறிவை, ஏன் அவள் நடத்தையைக் கூட வம்பு பேசுவதில் இன்னொரு பெண்ணுக்கே பெரும் பங்கு உண்டு என்பது மறுக்க முடியாத விஷயம்.
பொறாமை எனும் தீ யாரை விட்டு வைக்கிறது! வருந்த வேண்டிய ஒன்று.
குணவதியை புண்படுத்துவதையே முதல் நோக்கமாகக் கொண்டு அவளை
வாட்டி வருகிறாள் சுசீலை. அமைதியைத் தேடி இறைவன் சன்னதியில் இருக்கும் நேரம்
செல்வந்தர் ஒருவர் அன்னதானம் செய்கிறார். அவர்களே நிறைமாத கர்பிணியான குணவதிக்கு
தாங்களாக கொண்டு வந்து உணவு கொடுக்கின்றனர். இதை தற்செயலாக அங்கு வந்த சுசீலையின்
அண்ணி பார்த்து விட, அவளுக்கு குணவதியின் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. சுசீலை சரியாக
கவனித்துக் கொள்ளவில்லை, குணவதி உண்ணும் போது பசியின் பரபரப்பு தெரிகிறது என்று
அவள் வாதத்தை, சுசீலையின் அண்ணன் உதாசீனப் படுத்துகிறான்.
இங்கு முதலுக்கு மோசமாய், சுடுசொல்லும், பசியும் வாட்டி எடுக்க, அவள் அண்ணனுக்கோ குணவதிக்கு வளைகாப்பு
செய்துவிட வேண்டும் என்ற ஆவல் துடிக்கிறது. ஊராரின் பேச்சுக்கும், கருத்துக்கும் அவன் கட்டுப்படுபவனாகவோ, பயப்படுபவனாகவோ இல்லை. குணவதியின் மாமியாரிடம் 'வளைகாப்பு' நடத்தப் போகும் நற்செய்தியை கொண்டு சென்று, பதிலுக்கு அவமரியாதையை வாங்கிக்கொண்டு வருகிறான். எதைப் பற்றியும் அவனுக்கு கவலையும் இல்லை. அவன் தங்கையின் மகிழ்ச்சி மட்டுமே குறியாய் இருக்கிறான்.
பரலோகத்தில் இருந்து கொண்டே மூம்மூர்த்திகள் தம்பதி சமேதராய், கைமை அடைந்த பெண்ணுக்கு
வளைகாப்பு நடக்கும் விஷயம் பற்றி அறிந்து, தங்கள் அதிர்ச்சியை, ஒவ்வாமையை பிரதிபலிக்கின்றனர்.
(குறிப்பாக, பெண் அம்சங்களான சரஸ்வதியும், லக்ஷ்மியும் அதிர்ச்சி அடைய, பிரம்மாவும் விஷ்ணுவும்
புன்முறுவல் பூக்கின்றனர்) உமையவள் மட்டும் சிவனுடன் சேர்ந்து புன்முறுவல் பூக்கிறாள்.
சாரதா சொன்னது போல் இறை அம்சங்களில் கூட பெண்ணுக்கு பெண் தான் முதல் தடை விதிப்பார்கள் போலும்!
மும்மூர்த்திகள் யாவரும் குணவதி பற்றிய 'தொலைக்காட்சித் தொடர்' பார்க்கும் முகபாவத்துடன்,
காட்சி அளித்தது எரிச்சலூட்டியது.
குணவதி, செய்வதறியாது குழம்புகிறாள். தனக்கு மகனின் (கவனிக்க, இவளும், தனக்கு பிறக்கப் போகும்
"குழந்தையை"ப் பற்றி யோசிக்கவில்லை, பிறக்கப் போகும்""""மகன்"-னைப் பற்றி பேசுகிறாள் ) வருகைக்காக
அண்ணன் கொண்டாடுவது, சரியில்லையோ என்று குழம்புகிறாள்
(தொடரும்)
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
ஆகவேQuote:
Originally Posted by Shakthiprabha
இன்று நேற்று ஏற்பட்டதல்ல ....
தொடருங்கள்
//ஆகவே
இன்று நேற்று ஏற்பட்டதல்ல .... //
ஆமாம் ஆனா! தொன்றுதொட்டு வந்த சிறந்த பழக்கம் ! :|
எங்கள் ஜாதியில் பிள்ளைபெறப்போகும் பெண்ணுக்கு வளைகாப்பிடும் போது, சுமங்கலிப் பெண்கள் சுற்றி கும்மியிட்டு
"பையன் பொறக்கணம்"
"பையன் பொறக்கணம்" ன்னு சொல்லிகிட்டே கும்மியடிப்பாங்க
:|