:rotfl: :rotfl:
Printable View
அட என்னங்க நீங்க...
எல்லாத்துக்கும் சிவாஜி ரசிகர்கள் அமைப்பு முன்மாதிரி...முன்மாதிரின்னு சொல்றீங்க...தமிழ்நாட்ட ஆண்ட முதல்வருங்க சிலைய மொதல்ல நடுரோட்லேர்ந்து தூக்கி அந்த ஆட்சியாளர்கள் முன்மாதிரியா திகழ ஒரு புத்தி சொல்லுங்க தலீவா !
அண்ணாதுரை சிலைக்கு ஒரு ஞாயம் ....தேவர் சிலைக்கு ஒரு ஞ்யாயம் ..
சிவாஜி மட்டும் எப்பவும் போல...இளிச்ச .........அவங்க ரசிகர்களும் அவர்போல இளிச்ச...அப்புடிதானே.....!
போங்க பாஸ்...போங்க...! அறிவுரைய அது இல்லாதவங்களுக்கு சொல்லுங்க !
உள்நோக்கம் என்னவென்று எனக்கு மெய்யாலுமே தெரியாது அண்ணா! அதற்கான யூகங்களையும் நீங்கள் பகிரலாம். எனது சிலைகள் பற்றிய கண்ணோட்டம் சிவாஜி சிலைக்கு மட்டுமே அல்ல. சாலைக்கு நடுவே, அருகே வீற்றிருக்கும் எல்லா சிலைகளுக்குமெ! சாலை அகலப் படுத்துதல், சீரமைப்பு என்ற பெயரில் நிறைய சிலைகள் இதுவரை அகற்றப் பட்டிருக்கின்றன.
வெங்கிராம்,
வேணாம் .அழுதுடுவேன் !!!!
1) 2500 megawatt மின்சாரம் பற்றாக்குறை
2) கட்டுகடங்கா காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருள் விலை வாசி ஏற்றம் தினமும்.
3) கொலை, கொள்ளை, வழிப்பறி இப்படி நாளும் பெருகும் CRIME
இப்படி டெய்லி நடக்கற சமாசாரம் எதையும் உடனடியா முடிக்காம.மக்களுக்கு நல்லது செய்யாம ..அது அந்த கட்சி ஆட்சி பண்ணபோது இருந்துச்சு...நாங்க பொறுப்பு கடயாது..
திமுக ஆட்சில ஒரு நாளிக்கு 19.5 கொலைங்க 12.3 கொள்ளைங்க 13.78 வழிப்பறி நடந்திச்சு. ஆனா எங்க ஆதிமுக ஆட்சில ஒரு நாளிக்கு 19.10 கொலைங்க 11.80 கொள்ளைங்க 13.25 வழிப்பறி நடக்குது..அதனால அவங்க ஆட்சிய விட எங்க ஆட்சி சிறப்பான சாதனை செஞ்சுது அப்புடீன்னு வெளக்கம் குடுக்கறோம் பேர்வழின்னு சொல்ற, நழுவுற கேவலமான அரசு இப்போ இருக்கற அரசு. உடனயே மந்திரிங்க பாதி தூக்கத்துல டம..டம...டம..டம நு டேபிள் தட்டி ஆரவாரத்த வெளிபடுத்துவாங்க...! நாம தான் இந்த கேவலத்த TV ல பாகறோமே.
பல ஆயிரம் கோடி துட்டு போட்டு கூடங்குளம் கொண்டுவந்த... அது CONGRESS கொண்டுவந்தது..அதுல நட்டு சரியில்ல போல்ட்டு சரியில்ல...அதுல ஆபத்து இருக்கு...ஈபத்து இருக்குன்னு புரளி கிளபரவங்கள நாலு சாத்து சாத்தி முழு வீச்சுல உற்பத்தி பண்ண துப்பு இல்ல....!
ஆனா சிவாஜி சில வண்டியோற்றவங்கள மறைக்குதுன்னு அதாதூகரதுக்கு உடன எல்லாம் செய்றாங்க...!
எது முக்கியம்?
சிலையா இல்ல இப்போ மக்களுக்கு இருக்கற விலைவாசி மற்றும் இதர பிரச்சனையா ?
சில எங்க வெக்கனும்னு புத்தி சொல்ற அறிவாளிங்க ..இதுக்கு பதில் சொல்லுங்கப்பா !
இந்த நாசமாபோன நடிகர் சங்கம் தமிழ் வாழ பிற்ந்த தமிழ் நாட்டை உலக அரங்கில் உயர்த்திக்காட்டிய நடிப்பு தெய்வத்திற்கு மணி மணடபம் கட்ட முயற்ச்சி செய்யவில்லை. இப்போது சிலை பிரச்சினைக்கும் குரல் கொடுக்கவில்லை.
தமிழன் விஜய் நடித்த தலைவா படத்தை காரணமே இல்லாமல் தடை செய்யப்பட்ட போதும் ஒரு ஆக்ஷ்ணும் இல்லை.
தமிழன் கமல் நடித்த விஸ்வருபம் படத்தை தடை செய்யப்பட்ட போதும் ஒரு முயற்சியும் இல்லை
இப்படி நடிகர்களுக்கு பயன் படாத இந்த பாழா போன நடிகர் சங்கம் எதுக்கு.
சினிமாவை வாழவைத்த சிவாஜிக்கு இந்த நிலையா - ரத்தம் கொதிக்கிறது - எங்கள் பாவம் சும்மா விடாது.
தமிழ் மொழி காத்த தங்க தலைவன் தமிழ் சமுதாயத்தின் அடயாளச்சின்னம் சிவாஜி சிலையை பாது காக்க குரல் கொடுத்த டாக்டர் கலைஞ்ர், புரட்ச்த்தமிழன் வைக்கோ,புரட்ச்சிக் க்லைஞ்ர் விஜயகந்த், மறத்தமிழன் சீமான், மருத்துவர் ராமதாஸ் அனைவருக்கும் வேதனையில் இருக்கும் சிவாஜி பக்தர்களின் கோடாணு கோடி நன்றிகள்
எத்தனை சக்திகள் வந்தாலும் சிவாஜி புகழை எவராலும் அழிக்கமுடியாது.
PUTHIYA THALAIMURAI DEBATES ! - They asked one good question finally - If a public case was put to lift all the TASMAC SHOPS WILL THEY DO ?
GOOD QUESTION !!
http://www.youtube.com/watch?v=6rxnh...EkBWX1&index=4
Part - 2
http://www.youtube.com/watch?v=OZEGQ2cvPL0
Part - 3
http://www.youtube.com/watch?v=fcoLiPxVUwA
Part - 4
http://www.youtube.com/watch?v=EtOCK5YcKcc
வருகின்ற டிசம்பர் 3 ம் தேதி அன்று திருச்சி மாவட்ட சிவாஜி சமுக நலப்பேரவை சார்பாக சிவாஜி சிலை அகற்றும் நிலை குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவாஜி ரசிகர்களும், அனைத்துக் கட்சியை சார்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
கலைத்தாயின் தலை மகனுக்கு, தமிழக குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு உறுப்பினரை போல் இன்றும் அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலையுலக சக்ரவர்த்திக்கு தமிழகத்திலே இன்றைய தினம் செய்யப்பட்டிருக்கும் அவமரியாதை சகிக்க முடியாத கொடுஞ்செயல் என்றே சொல்ல வேண்டும். இதை செய்வதற்கு எப்படித்தான் மனம் வருகிறதோ?
7 வருட இடைவெளிக்கு பின் அக்டோபர் 23 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அன்றைய தினம் அரசின் சார்பில் ஆஜராகிய advocate general நீதிமன்றத்தில் இந்த சிலையால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார்.
ஒரே மாத இடைவெளியில் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மயிலை காவல்துறை போக்குவரத்து ஆணையர் இந்த சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு என்று சொல்லி இத்தனை விபத்துக்கள் நடந்திருக்கின்றன என்றும் சொல்லியிருக்கிறார். முதலில் சொன்னதற்கும் ஒரு மாதத்திற்கு பின் சொன்னதற்கும் எவ்வளவு வித்தியாசம்?
நல்ல வேளையாக முதல் முறை வழக்கு விசாரணைக்கு வந்து மறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டபோதே சமூகநல பேரவையின் சார்பில் வழக்கறிஞர் பிரபாகர் ஆஜரானார். அதுவும் தவிர நேற்று நடந்த வாதம் கேட்கும் நிகழ்வின் போது அவர் இதற்கு எதிராக வாதிட்டதோடு அல்லாமல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு நீதிபதி வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கும்படியான உத்தரவு பிறப்பிக்கும் சூழலை ஏற்படுத்தினார். ஒருவேளை பேரவையும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் நடிகர் திலகத்திற்காக வாதிடுவதற்கு அங்கே ஆளே இல்லாமல் போயிருக்கும். அப்படி நேர்ந்திருந்தால் இன்றைக்கு கிடைத்திருக்கும் கால அவகாசம் கூட கிடைக்காமல் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே பிரபாகர் அவர்களுக்கும் சந்திரசேகர் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுளோம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் அதாவது வாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய குறிப்புகள் என்று பார்த்தோமென்றால் விபத்துக்கள் நடந்ததாக சொல்லப்படுவது எங்கே நடந்தது? சிலையின் அருகாமையிலா அல்லது அந்த சாலையில் வேறு எங்காவதா? அந்த சாலை ராணி மேரி கல்லூரியில் ஆரம்பித்து போர் நினைவு சின்னம் வரை நீண்ட சாலை. காவல்துறை சொல்வது போல் சிலை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டன என்றால் காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலது புறமாக திரும்பும் இடத்தில்தான் அதாவது சிலையின் பின்புறம் உள்ள சாலை பகுதியில்தான் நடந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கிறதா? அங்கே இல்லாமல் விவேகானந்தர் இல்லத்திற்கு அருகிலோ, மாநில கல்லூரி அருகிலோ திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு திரும்பும் இடத்திலோ அல்லது சென்னை பலகலைகழக வளாகத்திற்கு அருகிலோ நடந்த விபத்துக்களுக்கு சிலை எப்படி பொறுப்பாக முடியும்?
விபத்துக்கள் நடந்த தேதிகள், நாட்கள், நேரங்கள் ஆகியவை இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விபத்துக்களைப் பற்றிய மேலதிக தகவல்கள், அதாவது முதல் தகவல் அறிக்கை, விபத்து நடந்த இடத்தில வழக்கு விசாரணைக்காக காவல்துறையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவையும் முக்கிய ஆவணங்களாகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு என்றால் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரைதான் கணக்கு. நடுராத்திரியிலும் அகால நேரங்களிலும் நிதானத்தில் இல்லாத மனிதர்கள் அதிக வேகத்தில் வாகனங்களை ஒட்டி வந்து விபத்துக்களை ஏற்படுத்துவது இதில் சேர்த்தி ஆகாது. அப்படி நடந்த நிகழ்வுகளை காரணம் காட்டி சிலையை அகற்ற முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
காவல்துறை தாக்கல் செய்திருக்கும் மனுவிலேயே எதை அடிப்படை வாதமாக சொல்கிறார்களோ அதுவேதான் அவர்கள் செய்திருக்கிற பெரிய blunder. எப்படி என்றால் ஒரு நெடுஞ்சாலையில் நடுவே ஒரு சிலை அமைக்கபப்ட்டிருக்கிறது. சிலை இருக்கும் இடத்தில பக்கவாட்டில் சாலைகள் அமைந்திருக்கின்றன என்று வைத்துக் கொள்ளவோம். அந்த சிலைக்கு முன்புறமும் பின்புறமும் வரும் வாகனங்கள் சிலையை சுற்றிக் கொண்டு பக்கவாட்டு சாலைகளுக்கு செல்ல முயலும் பட்சத்தில்தான் காவல்துறை சொல்லும் இந்த பிரச்னை வரும். காரணம் அங்கே போக்குவரத்து சிக்னல் இல்லை. நமது சிலையை எடுத்துக் கொள்வோம்.
நமது சிலைக்கு பின்புறத்திலேயே போக்குவரத்து சிக்னல் அமைந்திருக்கிறது. காமராஜர் சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு எந்த வாகனமும் சட்டென்று திரும்பி விட முடியாது. இன்னமும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அங்கே மூன்று சாலைகள் சந்திக்கின்றன. காமராஜர் சாலையிலிருந்து வருபவர்கள் சிலையை கடந்து கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நெடுஞ்சாலைக்கு செல்லலாம் அல்லது சிலையை தாண்டி வலது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலைக்கு செல்லலாம். அதே போன்று சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து வருபவர்கள் சிலையை கடந்து காமராஜர் சாலையில் செல்லலாம். அலல்து சிலை இருக்கும் இடத்திற்கு வரும் முன்பே இடது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலைக்கு செல்லலாம். அது Free Left. மூன்றாவதாக ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை junction-ல் இடது புறம் திரும்பி செல்லலாம். அதுவும் Free Left. இல்லை வலது புறம் திரும்பி கடற்கரைக்கோ அலல்து சாந்தோம் நெடுஞ்சாலைக்கோ பயணப்படலாம்.
காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் சிலையை தாண்டி வலது புறம் திரும்பும்போது சாந்தோம் சாலையிலிருந்து வரும் வாகனங்களோ அல்லது ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வலது புறம் திரும்பி சாந்தோம் சாலைக்கு செல்லும் வாகனங்களோ சிக்னலில் காத்து நிற்க வேண்டும். காரணம் அவர்களுக்கு அந்த நேரம் சிவப்பு விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும். அதே போன்றே சாந்தோம் சாலையிலிருந்து நேராக செல்லும் வாகனங்கள் சிலையை கடக்கும் போதும் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து வாகனங்கள் வலது புறம் திரும்பும் போதும் மற்ற இரண்டு சாலையில் வரும் வாகனங்கள் குறுக்கிடவே முடியாது. இப்படி ஒரு சிக்னல் காவல்துறையால் அமைக்கப்பட்டிருக்கும் போது அதையும் மீறி அங்கே விபத்துகள் நடந்தன என்று சொன்னால் அது சிக்னல் jumbing என்ற போக்குவரத்து விதியை மீறிய குற்றமாகும். அதற்கு காரணம் வாகன ஓட்டிகளே தவிர சிலை அல்ல.
எதார்த்த நிலைமை இப்படி இருக்க அதை மறைத்து வேறு ஒன்றை சொல்லுவதால் இவர்கள் அடையப்போகும் லாபம் என்ன?
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் ஒரு தனிப்பட்ட மனிதனோ அல்லது ஒரு அமைப்போ தங்களையும் ஒரு கட்சியாக இணைத்துக் கொள்ள மனு செய்துக் கொள்ளலாம். இதற்கு சட்டத்தில் வழி இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் to implead oneself என்று சொல்வார்கள். மனு செய்பவர்கள் தாங்கள் aggrieved party அதாவது பாதிக்கப்பட்ட நபர் என்று நீதிமன்றதில் வாதாடி அது நீதிமன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டால் இணைந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம். அப்படிபட்ட ஒரு சில சட்டபூர்வ நடவடிக்கைகள் ஒரு சில அமைப்புகளால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்று தெரிய வந்திருக்கிறது.
அப்படி நடந்து அதன் மூலம் நீதி கிடைக்குமானால் மகிழ்ச்சியே. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்!
அன்புடன்
murali sir very well written facts and more anlytically and logically explained facts. hope the court will give favorable decision in our favour
sathyame jayathe,
TRUTH WILL ALWAYS WIN FINALLY. WE HOPE.
[QUOTE=Ravi Chandrasekar;1093022]PUTHIYA THALAIMURAI DEBATES ! - They asked one good question finally - If a public case was put to lift all the TASMAC SHOPS WILL THEY DO ?
Dear Ravi
Nice photos from debate on Puthiya Thalaimurai
Good question. abt Tasmac !
The fans of NT are shaken and stirred but their faith on the legacy of NT is ever increasing exponentially with more and more younger generation is getting attracted by his indelible acting calibre as proved by the stupendous success of all his rereleases of classics starting with the trendsetter Karnan. see the fate of a legend who brought to larger than life the images of patriotic VOC. VPKB..Karnan.... even the representative symbolization of Thangapathakkam Chowdry boosting the image of TN Police as a role model for the then Police Officers! Every Tamilian should feel for this insult to the injury that always happens to our NT for the simple 'sin' of having born as a Tamilian! In no other State one can experience such a strange happening.... The Nadigar Sangam...? better they can close it. Why NT should fall a prey to political vendetta when he is a public property in the minds of millions and millions of Tamils?!
Dear All,first of all we Sivaji fans value human life than anybody.But we cant accept the fact that ,only our NT "s statue alone hazardous.If the government is not having any inner motive .let them erect in a better place than this.At the same time,few of our friends have dragged our NT "s family.If the government or individual wants our beloved family to fall at their feet,in this statue issue,for us the family of our NT is more important than other issues.So let us not be emotional and realize that ,anything done to defame NT will result in a action similar to an elephant throwing mud over its own body.And finally,this is the time for each of us to have a miniature statue of NT to keep in each and everyone"s home.
இந்த துயரமான சூழ்நிலையில் இந்த திரியின் ஆய்வுத்திலகங்கள் யாராவது சிம்மக்குரலோன் தமிழ் வேந்தர் சிவாஜியின் மனோகரா காட்சிகள் பற்றியும்
குறிப்பாக வசந்தசேனையின் பாத்திரப்படைப்பு பற்ற்யும் விவரித்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்
பகைவனுக்கும் விருந்தோம்பல் காணும் சிவாஜிக்கு ஏற்படும் அவமானம் தமிழ் இனத்துக்கே ஏற்படும் அவமானம்
முரளி,
தங்கள் வாதங்கள் சரியானவை.தங்களுடன் பேசிய படியே,சரியாக உறங்கவோ,உண்ணவோ முடியாமல் எதன மீதும் கவனம் குவியாமல் எல்லோரையும் எரிந்து விழுகிறேன்.பாவம் வியட்நாம் ஊழியர்கள்,தங்கள் பாஸ் எதனால் இவ்வளவு பாதிக்க பட்டுள்ளார் என்று அறியும் வாய்ப்பும் இல்லை. இறைவனும் ,சமூக பேரவையும்தான் நம்மை காத்தருள வேண்டும்.குரல் கொடுத்த கலைஞர்,ராமதாஸ்,வை.கோ ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
தலைவரே!
நீங்கள் தமிழ் நாட்டில் அவதரித்த குற்றத்திற்காக இருக்கும் போதும் அனுபவித்து விட்டீர்கள்.மறைந்த பிறகும் அனுபவிக்கிறீர்கள்.எங்களை மன்னியுங்கள்.
நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை, உங்கள் உன்னத நடிப்பின் மூலம், தமிழர்கள் நெஞ்சில் நீங்கள் சிலைகளாக செதுக்கியுள்ளீர்கள்.உங்கள் ஒரு சிலைக்கு நாங்கள் வெளியே இடம் தேடுகிறோம்.வெட்கம்!!
பிரான்சிலோ ஆஸ்திரியாவிலோ நீங்கள் தோன்றியிருந்தால்,நீங்கள் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சிலையையும் நிறுவி பெருமிதப்பட்டிருப்பார்கள்...சுயமரியாதை,தேசப்பற்று, கலையுணர்வு இவை அனைத்தும் அறவேயற்ற, "இலவசங்களில்" இன்பம் காணும் சுயநலமிக்க தமிழர்களாகிய எங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
ஒருவேளை,சிலையின் கீழ் "21-7-2006,அன்று அன்றைய முதல்வரால் திறக்கப்பட்டு(இதுவரை font size 4) ,ஏழு வருடங்களுப்பிறகு இது சாலையில் தடங்கலாக உள்ளது என மயிலை போலீஸ் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டு(இதுவரை font size 8) தற்போதைய முதல்வர் "அம்மா"வின் தலையீட்டாலும்,உத்தரவின் பேரிலும்(இதுவரை font size 40) அதே இடத்தில தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டது.” என்று ஒரு கல்வெட்டை பதித்து விட்டால் போதும்,பிரச்சினை தீர்ந்து விடுமோ என்று கூட தோன்றுகிறது.
அறுபது ஆண்டுகளாக ஒவ்வொரு ரசிக,ரசிகையர் மனதிலும் நட்ட நடுவில் அமர்ந்து அவர்கள் வாழ்வையே ஒழுக்கமாக,நேர்மையாக, சீராக நடத்திச்செல்லும் நீங்கள் ,ஏதோ ஓரமாக நிற்பதனால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றனவாம்..சொல்கிறார்கள்!!!
நீங்கள் மதன்பூர் மகாராஜாவிடம் பொறுமும் வசனம்தான் ஞாபகம் வருகிறது..
"சிலை என்ன ராணி, பெரிய சிலை!!மனுஷனுக்கு மனசு சுத்தம்தான் வேண்டும்!"
இப்போ கட்டபொம்மன்..
"சிலை, சாலை, தடங்கல் விபத்து!..என் "அண்ணன்" கேட்டிருக்கவேண்டும் இதை!
அவன் புகழால் வாழும் உன்னை இந்நேரம் நீக்கியிருப்பான்!"
அப்புறம் கெளரவம்..இது நம்மிடம்..
"போங்கடா அபிஷ்டு! சிலைய எடுத்துட்டா என் புகழ் மறஞ்சுடுமா?"
the one and only great Sivaji டா நான்!"
நடிகர்திலகம் சிலை
கடந்த மூன்று நாட்களாக சரியான உறக்கம் இல்லை. வேலையிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. தமிழகம் முழுவதிலுமிருந்து தொலைபேசி அழைப்புகள். பல ரசிகர்களின் அழுகைக் குரல்கள், பல கோபக்குரல்கள்.
இதில் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நடிகர்திலகத்தின் சிலை 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டபோது தொடரப்பட்ட வழக்கிலேயே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தன்னை இணைத்துக்கொண்டு, சிலை அமைய உறுதுணையாக இருந்தது.
அதுபோல தற்போதும், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சிலையை அகற்றவேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தோம்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, முதலில் நவம்பர் 13 ஆம் நாள் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, அரசு வழக்கறிஞர், இந்த சிலையினால் போக்குவரத்து இடைஞ்சல் ஏதும் இல்லை என்று கூறியதை, மனுதாரரின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததால், போக்குவரத்து காவல்துறையிடம் இதுசம்பந்தமாக மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நவம்பர் 26 ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே அரசு வழக்கறிஞர் ஆதரவான கருத்துக்களைக் கூறியிருந்ததால் தற்போதும் அதேமாதிரியான கருத்துக்களே தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 10 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்து, இச்சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம் என்று தெரிவித்ததை அரசு வழக்கறிஞரும் ஆமோதித்தார்.
அதிர்ச்சியடைந்த நான், உடனே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை வழக்கறிஞர் திரு.பிரபாகரன் மூலமாக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வைத்தேன்.
பேரவை தரப்பு வழக்கறிஞர் மட்டும் அன்று இல்லையென்றால், திரு.முரளி அவர்கள் குறிப்பிட்டதைப்போல நடிகர்திலகத்தின் சிலைக்காக கேள்வி கேட்கக்கூட ஆள் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, அன்று இரவே நடிகர்திலகத்தின் சிலையும் அப்புறப்படுத்தப்பட்டு, மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே மணிமண்டபம் கேட்டுப் போராடிவருவது போதாது என்று, நாம் மீண்டும் சிலை வைக்கவேண்டும் என்று போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.
இன்று சிலை அப்புறப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அது விவாதப்பொருளாகவும் ஆக்கப்பட்டிருப்பதில் முதற்கண் நாம் வெற்றியே பெற்றிருக்கிறோம்.
சில விவாதத்திற்குரிய கருத்துக்கள்
1) நடிகர்திலகத்தின் சிலை நடுவிலிருந்து அகற்றப்பட்டு, அவ்வையார், வீரமாமுனிவர், காந்தி என்ற வரிசையில் வைக்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் கருத்தா என்பதை சொல்வதற்கில்லை. சிலையை அகற்றியபிறகு எங்கு வைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
2) நடிகர்திலகத்தின் சிலை சாலை நடுவில் இருக்கிறது என்று கூறுபவர்கள், ஒன்றை நினைத்துப் பார்க்கவேண்டும். இன்று சென்னையில் மிக அகலமான சாலை கடற்கரை காமராஜர் சாலை. எல்லாப் புறங்களிலும் மேலும் அகலப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ள சாலை. போக்குவரத்து அதிகம் உள்ள, சென்னை அண்ணாசாலை என்று அழைக்கப்படுகிற மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், முத்துராமலிங்க தேவர், ராமசாமி படையாச்சி என்று வரிசையாக சிலைகள் சாலையின் நடுவேதான் உள்ளன. (யாருடைய சிலையையும் அகற்றவேண்டும் என்பது நமது நோக்கம் அல்ல) அவைகள் எல்லாம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லை என்கிறபோது, நடிகர்திலகத்தின் சிலை மட்டும் இடைஞ்சல் என்று கூறுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
3) கத்திபாரா நேரு சிலை, கோயம்பேடு அம்பேத்கார் சிலை ஆகியவை இடம் மாற்றி அமைக்கப்படவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அங்கெல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டபோது, சாலை அகலப்படுத்தும் பணிக்கு அத்தியாவசியமானதால் அகற்றி இடம் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், நடிகர்திலகம் சிலை அமைந்துள்ள காமராஜர் சாலையைப் பொருத்தவரையில் அப்படி ஏதும் இல்லை.
4) பல தலைவர்களுக்கு சென்னையிலும், பல நகரங்களிலும், பல இடங்களில் சிலைகள் உள்ளன. அதனால், ஒரு இடத்தில் அகற்றப்பட்டாலும்கூட கவலையில்லை. நம் நடிகர்திலகத்திற்கு தலைநகரில் இருப்பதோ ஒரே சிலை. அதற்கும் பங்கம் எனும்போதுதான் இதயம் வலிக்கிறது.
5) நம் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் நடு ரோட்டில் சிலை அமைந்து, அது பொதுமக்களுக்கும் இடையூறாக அமைவதை விரும்பவில்லைதான். நடிகர்திலகத்தை மட்டும் இந்த அளவுகோலில் கொண்டுவருவதை ஏற்கமுடியாது. வாழும்போதும் விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர், சிலையாக நிற்கும்போதும் அவர்தான் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதை விண்ணுலகிலிருக்கும் நடிகர்திலகம் வேண்டுமானால் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளலாம். கண்டிப்பாக நம்மைப்போன்ற ரசிகர்களால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
6) ஒரு மறைந்த தலைவருக்கு சிலை அமைக்கப்படுகிறது என்றால் அது அவரை கெளரவப்படுத்துவதற்காக. அதனை அகற்றுவது என்பது அவரை அவமரியாதை செய்யும் செயலாகவே அமையும்.
7) அப்படி நடிகர்திலகத்தின் சிலையை அகற்றித்தான் ஆகவேண்டுமென்றால், முதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள அனைத்து சிலைகளையும், உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில், iit போன்ற ஒரு பொதுவான நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்து, எந்தெந்த சிலைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதோ அதனையெல்லாம் அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம். இதில் ஒருவருக்கே அந்த நகரத்தில் எத்தனை சிலைகள் இருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேன்டும். அதன் பரிந்துரையின் அடிப்படையில் இச்சிலையும் அகற்றப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டால் ஏற்கலாம். ஏற்கனவே, மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களில் இருந்த தலைவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது நினைவிருக்கும்.
இன்று பல கட்சி தலைவர்களின் கண்டனக் குரல்கள், பல மாவட்டங்களிலுமிருந்தும், ஆர்ப்பாட்டம், கண்டன சுவரொட்டி என்ற தகவல்கள் வருகின்றன. சென்னையிலும் வரும் 4 டிசம்பர், புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
Implead petition க்காக வழக்கறிஞர் கேட்ட சில தகவல்களையும் திரட்டிக்கொண்டிருக்கிறேன். வரும் டிசம்பர் 13 ஆம் நாள் வழக்கு விசாரணைக்கு வரும்போது, சிலை அகற்றலை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் முழு மூச்சாக எதிர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் - தோழர்களின் ஆதரவோடு.
நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
நன்றி.
சந்திரசேகர்,
உங்கள் களப்பணிக்கும் அயராத உழைப்புக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்
"ஒரு மறைந்த தலைவருக்கு சிலை அமைக்கப்படுகிறது என்றால் அது அவரை கெளரவப்படுத்துவதற்காக. அதனை அகற்றுவது என்பது அவரை அவமரியாதை செய்யும் செயலாகவே அமையும்."
இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
வரும் டிசம்பர் 13 ஆம் நாள் வழக்கு விசாரணைக்கு வரும்போது, சிலை அகற்றலை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் முழு மூச்சாக எதிர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் - தோழர்களின் ஆதரவோடு.
நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
Quote]
தங்களின் இந்த போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.
சந்திரசேகர் சார்..
உங்களின் பல அலுவல்களுக்கிடையே இங்கும் வந்து விளக்கி சொன்னதிற்கு மிக்க நன்றி.உங்கள் மற்றும் பலகோடி தலைவர் ரசிகர்களின் உழைப்பும் தார்மீக கோபமும் வீணாகாது.நம்மை சாதுக்கள் என்றெண்ணி இந்த செயலை செய்தவர்கள்,சாது மிரண்டால் என்ன ஆகும் என்பதையும் உணரத்தான் போகிறார்கள்.
வணக்கம்.
Dear KCS sir,your post has brought the feelings of lakhs and lakhs of ordinary people who have high regards for NT,in addition to the die hard fans like us.I hope all these will reach the deaf ears of people who enjoy power which is always temporary.
ஏதோ ஒரு மனவேதனையில் ஆதங்கத்தில் ஒரு உதாரணம் சொன்னால் அதற்குமா உள்அர்த்தம் கர்ப்பிப்பது ?
திரு சந்திரசேகர் சார்,
நடிகர்திலகம் சிலைக்காக அவர் குடும்பத்தினரை விட அதிக அக்கறையோடு போராடி கொண்டிருக்கும் உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம் .விண்ணிலிருக்கும் நம் இறைவனின் ஆசி தங்களுக்கு எப்பொழுதும் உண்டு .வெற்றி நமதே என்று காத்திருக்கிறோம்
Dear Ramachandran Sir,after you quoted about Nadigar Sangam only,most of the people are reminded about that.Now it is not NADIGAR SANGAM,it has become NADIKKIRAVANGA(SUYANALAM KAAKKA)SANGAM!,long before.
KC sir , உங்கள் பதிவு , உங்கள் முயற்சி மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று -
மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் - யாருமே இந்த சிலை விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தான் தோன்றுகின்றது - "யாருமே" என்பதில் 1. அவரை வைத்து பணம் சம்பாதித்தவர்கள் 2. அவரால் வாழ்கையில் உயர்தவர்கள் 3. அவரால் நடிப்பு என்றால் என்ன என்று கற்றுகொண்டவர்கள் 4. அவரால் political gain அடைந்தவர்கள் - இப்படி பல ரகங்கள் அடக்கம் . தமிழுக்கே நல்ல தமிழை கற்றுகொடுத்தவர்க்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதை மனதை மிகவும் புண் படுத்துகின்றது உங்கள் முயற்சி வெற்றி அடைய எல்லோரும் இறைவனை ப்ராத்தனை செய்கிறோம் - Dec 13 ஒரு நல்ல நாளாக அமைய - எல்லோருக்கும் மன நிம்மதி கிடைக்க !!
அன்புடன் ரவி
திரு. சந்திரசேகர் உங்கள் முயற்சி வெற்றி பெறவும் வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரவும் இறைவனை பிரார்த்திப்போம்.
நடிகர்திலகம் சிலை விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.
இந்த விவகாரத்தில் திரு.ஜோ குறிப்பிட்டதைப்போல, நடிகர்திலகத்தின் புதல்வர்கள் தங்களது தந்தையின் சிலைக்காகப் போராடுவது சரியான நிலைப்பாடாக இருக்காது என்பது எனது கருத்து.
இதில் நம்மைத் (நடிகர்திலகம் ரசிகர்கள்) தவிர முழு மூச்சாக, முன்னின்று செயல்படவேண்டியது நடிகர்சங்கமும், தமிழ் நடிகர்களும்தான்.
ஆனால், என்று நடிகர்திலகம் முயற்சியால் கட்டிய கலையரங்குடன் கூடிய அலுவலகத்தை இடித்தார்களோ, அன்றே நடிகர்சங்கமும் கலைக்கப்பட்டுவிட்டதுபோல்தான் தெரிகிறது.
Dear KC Shekar sir,
தங்களின் இந்த போராட்டத்திற்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரவும் இறைவனை பிரார்த்திப்போம். waiting for Dec 13 with fingers crossed
Truth will triumph always
திரு. சந்திரசேகர் அவர்களே
நடிகர் திலகத்தின் சிலை காக்க தாங்களின் பங்களிப்பும் இடைவிடா முயற்சியும் ஈடு இணையில்லாதது. தாங்கள் இதுவரை ஈடுபட்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி தான் அடைந்துள்ளிர்கள். இந்த முயற்சியிலும் வெற்றி அடைந்து நல்ல தீர்ப்பு கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை
ப்ரார்திப்போம். உங்கள் சேவை என்றெனறும் சிவாஜி ரசிகர்களுக்கு தேவை.
Ramachandran.C
சந்திர சேகர் சார்,
எனக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். நீங்கள் ஒருவர்தான் எங்களுக்கு கிடைத்த ஒரே கொழுகொம்பு. உங்களை பற்றி கொண்டிருக்கிறோம்.நீங்கள் தனியரல்ல.உங்களுக்கு பின் அத்தனை நல்லிதயங்களும்,அவர்களின் உண்மையான சத்தியமான பிரார்த்தனைகளும். அவை என்றுமே விலை போனதில்லை.வீண் போனதில்லை. அவற்றுக்கு உள்ள சக்தி சொல்லில் வாரா அக்கினி.
நம் உணர்வுகளைத் தெரிவிக்க ஒன்றுகூடுவோம் - வாரீர்.
http://i1234.photobucket.com/albums/...ps005a014b.jpg
December 5 andru covailium kandana arpattam nadatha muyatchikal metkollapattu varukindrana.cennai porattam vetri pera covai nanbarkalin valthukkal.Thanks to kc sir
வாழ்த்துக்கள் சந்திரசேகர் சார்.நிறைய பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். அவர் குடும்பம் என நினைத்து,பிள்ளைகள் என அழைத்தது நம்மைத்தானே?