8550/770= 11.10. பத்துக்கு மேலேயே வருது. கணக்கு கொஞ்சம் உதைக்கிறது. குறைந்தது பத்தும் சொல்வான்......
Printable View
8550/770= 11.10. பத்துக்கு மேலேயே வருது. கணக்கு கொஞ்சம் உதைக்கிறது. குறைந்தது பத்தும் சொல்வான்......
1972 ல் வெளியான ராமன் தேடிய சீதைபடத்திற்கு மெல்லிசை மன்னரின் டைட்டில் இசை மிகவும் அருமையாக
இருந்தது .நல்லது கண்ணே பாடலை இசை வடிவில் தந்திருப்பார் .
http://youtu.be/ITPvlborXTU
MELLISAI MANNARIN NAMNADU TITLE MUSIC
[http://youtu.be/Bn5AzC514yU
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் காலை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
(மாறாதையா )
மனிதன் மாறி விட்டான்.(நன்கு கவனியுங்கள்)
புலி வேஷம் போட்டவன்தான் பூனையை போல் மாறி வந்தான்
எலி வேட்டைக்கு நாள் வைத்து போராட வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
கம்பு சண்டை வம்பு சண்டை
கத்தி சண்டை குத்து சண்டை போட்டான் தனியாக
பத்து பேரு மத்தியிலே ஒருத்தனாக
சுத்திவந்து ஜெயிச்சான் முடிவாக
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
THURSDAY SPECIAL
http://i62.tinypic.com/2wejmad.jpg
http://youtu.be/N1NzuUb4Hb4
19/06/2014 காலை வணக்கம்
கோபால் சார்
உங்கள் வாழ்த்து எங்களுக்கு ஒரு பெரிய விருந்து (வாலிப விருந்து )
கொஞ்சம் அரட்டையாக தான் இருக்கிறது
ஆனால் நன்றாக பொழுது பொலர்கிரது பொழுது முடிகிறது
(பொழுது போகாதவர்கள் மட்டும் அல்ல பொழுது போததாவர்களும் என்று சகல கல வல்லவன் படத்திற்கு பார்த்த விளம்பரம் தான் நினைவிற்கு வருகிறது )
உங்கள் ராகா பற்றிய discussion உண்மையில் சூப்பர்
ராகத்தை பற்றிய அலசல் உங்கள் மீது மேலும் ஒரு மகுடம் சூடபடுகிறது
அதை தொடரலாம் என்பது எனுடைய தாழ்மையான எண்ணம்
chinnakannan sir
உங்கள் தமிழ் ஆட்சி மிரள வைகிறது
புரட்சிஆகவும் இருக்கிறது புதுமை ஆகவும் இருக்கிறது
தொடரவும்
அனுபவம் புதுமை ck இடம் கண்டேன்
//உங்கள் ராகா பற்றிய discussion உண்மையில் சூப்பர்
ராகத்தை பற்றிய அலசல் உங்கள் மீது மேலும் ஒரு மகுடம் சூடபடுகிறது
அதை தொடரலாம் என்பது எனுடைய தாழ்மையான எண்ணம் // கோ..பா..ல்.. நான் இதை வழி மொழிகிறேன்..படித்துக் கொண்டு தெரிந்து கொண்டு தான் இருக்கிறேன்..அபெளட் ராகா..ஸோ கண்டின்யூ..அப்புறம் பாராட்டுக்கு நன்றி...:)
//உங்கள் தமிழ் ஆட்சி மிரள வைகிறது
புரட்சிஆகவும் இருக்கிறது புதுமை ஆகவும் இருக்கிறது
தொடரவும் // ஹையோ.. ரொம்ப பயமுறுத்திட்டேனா க்ருஷ்ணா சார்.. நன்றி..
எஸ்வி சார்
திக்கு தெரியாத காட்டில் 1972
நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் சார்
ராம்குமார் films
கலாட்ட கல்யாணம்,வீட்டுக்கு வீடு,,சுமதி என் சுந்தரி என்று காமெடி மொவீஸ் ஆகவே எடுத்த banner
கடைசியாக எடுத்த படம் என்ன தெரியவில்லை
ஸ்ரீதர் டீம்- கேமரா பார்த்தீர்கள் என்றால் பாலச்சந்தரின் ஆஸ்தான லோகநாத் (கருப்பு வெள்ளை யாரை சொல்றது )
டைரக்டர் ன்.சி.சக்கரவர்த்தி - உத்தரவின்றி உள்ளே வா டைரக்டர்
எல்லா பாடல்களும் சூப்பர்
1.பூ பூ வ பறந்து போகும் பட்டு பூச்சி ஆக உனகு பள பள னு போட்டு இருபது யார் கொடுத்த சொக்க -ராஜேஸ்வரி
பட்டு சிவப்பா மூக்கு இருக்குற
பச்சை கிளியே பாரு - இந்த
பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சு போடு
இந்த சரணத்தில் விச்சுவின் ஒரு சோக சோலோ violin மனதை பிழியும்
2. பாலா சுசீல beautiful மெலடி
கேட்டதல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
3.குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
பாலா ஈஸ்வரி chorus
சு எ சு "எங்களுக்கும் காலம் வரும் சம்பாதிக்க நேரம் வரும் " பாடலை நினவு படுத்தும்
இந்த படத்தில் நான் அடிசயத்தது பேபி சுமதி யின் மிருகங்களுடன் கலந்த பயம் இல்லாத நடிப்பு
அதே போல் vkr நாகேஷ் போலீஸ் காமெடி கொஞ்சம் பேசப்பட்டது
NT படம் தவிர (அவர் கால கட்டத்தில் ) வேறு
எந்த படமும் சாந்தி கிரௌன் புவனேஸ்வரி theatres
combination இல் கிடையாது என்ற வாதத்தை உடைத்ததற்கு இந்த படமே ஒரு சாட்சி
திக்கு தெரியாத காட்டில் இன்னொரு பாட்டு கூட உண்டு சார்
"ஆட்ட காரன் ஆடி காட்டுவான் பாட்டுக்காரன் பாடி காட்டுவான்"
என்று வரும்
பாலா ஈஸ்வரி
பாடலின் ஊடே வரும் வரிகள்
"சங்கர கிரிஜா வளைஞ்ச நெளிஞ்ச மயக்கும் வரும் அல்லவோ "
எஸ்வி சார்
ராமன் தேடிய சீதை படமே கொஞ்சம் ரிச் ஆக இருக்கும்
ஈஸ்ட்மன் கலர்
ஜெயந்தி films என்று நினவு
காஷ்மீர் இல் எல்லாம் படம் எடுத்து இருப்பார்கள்
இதில் உள்ள பாடல்கள் எல்லாமே கொஞ்சம் different varieties
டைட்டில் மியூசிக் நீங்கள் சொன்னது போல் நல்லது கண்ணே பாடலை ஓட்டியது
இந்த படத்தில் நான் ரசித்த பாடல்
"என் உள்ளம் உந்தன் தான் அழகு " tms வித் ராட்சசி combination
அதிலும் அந்த
"தங்க கோபுரம் சின்ன தாமரை"
வண்ணம் (ஈஸ்வரியின் குசும்பு தெரியும் ) பாடுது
உன்னை தேடுது "
எல்லோரும் விரும்பும் பாடல் "திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ " -
ஈஸ்வரியின்
"மச்சானா மாமவ யாரு இவரு
என்னை வைச்ச கண்ணு வாங்காமல் பாக்கிறாரு "
அதே போல் அசோகன் "நொண்டின்னு நினைச்சியா " என்று கூறி விட்டு wheel chair இலிருந்து எழுந்து MT உடன் ஜூடோ fight ஒன்று உண்டு
அதற்கு முன்னால் ஒரு பாட்டு வரும்
"படார் படார் " மீண்டும் ஈஸ்வரி TMS
MT இன் டிரஸ் செலேச்டின சூப்பர் ஆக இருக்கும்
டியர் சின்னக்கண்ணன் சார்,
ரொம்ப வித்தியாசமான முயற்சி, ரொம்ப அருமையாக உள்ளது. திரி பல்வேறு சுவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற தங்கள் ஆர்வமும் உழைப்பும் தெரிகிறது. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள். (ஜெயந்திக்கு 'மெகா' என்று அடைமொழி கொடுத்தது அவரது சில 70 எம்.எம்.ஐட்டங்களுக்காக. ஜெயந்தியின் ஸ்பெஷாலிட்டியே அவரது மழலை பேச்சும், அவைக்களும்தானே).
டியர் கோபால் சார்,
உங்களது ராகங்கள் பற்றிய ஆய்வு மிக நன்றாக உள்ளதே, ஏன் பிரேக் பண்ண நினைக்கிறீர்கள்?. தொடருங்கள். நமது திரி பாடல் சம்மந்தமான அனைத்து விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் தங்கள் ராக ஆராய்ச்சியும் அவசியமே. அதோடு நின்றுவிடாமல், அரட்டையிலும் பங்குபெறுங்கள்.
டியர் வினோத் சார்,
திக்குத்தெரியாத காட்டில் விளம்பரமும், 'குளிரடிக்குதே' பாடல் வீடியோவும் அட்டகாசம். பதிவிட்டமைக்கு நன்றி.
வாசு சார்
நேற்று இரவு உங்களுடைய ஜெயந்தி கொட்டம்
பெக்கட்டி சிவராம் (ஜெயந்தியின் ஆத்துகாரர் ) காதில் விழுந்தது என்றால் ரெம்ப சந்தோஷ படுவார்
சத்யா மொவீஸ்
நான் ஆணைஇட்டால் "பிறந்த இடம் தேடி "
காவல் கரன் "நினைத்தேன் வந்தாய் "
ரிக்க்ஷாகரன் "அழகிய தமிழ் மகள் "
மணி பயல் "தங்க சிமிழ் போல் "
இதயக்கனி "புன்னைகையில் கோடி "
ராணுவ வீரன் "சொன்னால்தானே தெரியும்"
முன்றுமுகம் "தேவாமிர்தம் "
ஊர்கவலன் "மாசி மாசம் தான் சொல்லு "
தங்கமகன் "ராத்திரியில் பூத்து இருக்கும் "
கக்கி சட்டை "பட்டு கன்னம் தொட்டு கொள்ள "
காதல் பரிசு "காதல் மகராஜன் கவிதை பூ "
பாட்சா "அழகு நீ நடந்தால் நடை அழகு "
பாடல்கள் நினைவிற்கு வருகின்றன
நடுவில் சிவகுமாரை வைத்து "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது "
என்று ஒரு படம் கூட எடுத்த நினவு
கார்த்திக் சார்
உங்கள் தகவல்கள் மேலும் வலு சேர்கின்றன
1971- SHOOTING SPOT- KASHMIR
RAMAN THEDIYA SEETHAI
http://i58.tinypic.com/29kt0yb.jpg
http://youtu.be/BWsX8Zsq6-o
திக்குத்தெரியாத காட்டில் படத்தில் முத்துராமன் - ஜெயலலிதா ஜோடிக்கு ஒரு டூயட் பாடல் உண்டு. படம் முழுவதும் காட்டிலேயே எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் இந்தக் கனவு பாடல் மட்டும் சென்னை மைலேடீஸ் பூங்காவில் எடுக்கப்பட்டிருக்கும்.
"கேட்டதெல்லாம் நான் தருவேன் எ(ன்)னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எ(ன்)னை நீ தடுக்காதே"
என்று துவங்கும் பாடல்...
கிருஷ்ணாஜி,
நீங்கள் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கணவர் 'பெக்கட்டி' சிவராவுடன் இருக்கும்போதே, தெலுங்கு நடிகர் கிரிபாபுவுடன் ஜெயந்திக்கு தொடர்பு ஏற்பட்டு, அதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்து, ஜெயந்தியின் சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு நள்ளிரவில் மகனோடு சேர்த்து ஜெயந்தியை விரட்டிவிட்டார் சிவராவ். பக்கத்து வீட்டிலிருந்த ஜேம்ஸ் வீட்டில் தஞ்சம் புகுந்து, மறுநாள் மகனையும் அழைத்துக்கொண்டு கிரிபாபுவிடம் போய்விட்டார் ஜெயந்தி.
சிறிது காலம் கிரிபாபுவுடன் வாழ்ந்து பின்னர் அவரையும் விட்டு விலகி பெங்களூருவில் இருந்தபோது, கல்லூரியில் படித்த தன் மகனின் நண்பனோடு காதல் ஏற்பட்டு அந்தப்பையனை மணந்து கொண்டார். (ஜெயந்தியை விட சுமார் 20 வயது சின்னவன், அந்தப்பையன்). பின்னர் அவனும் விலகிப்போக, தன் மகனோடும் மருமகளோடும் பெங்களூருவில் செட்டில் ஆகியிருக்கிறார் ஜெயந்தி. தற்போது வயது சுமார் 73...
உச்சகட்டம் 1980
சூர்யா ஆர்ட் films
ராஜ்பரத் direction
இன்னிசை வேந்தர்கள் இசை
சரத்பாபு சுனித ராஜ்குமார் (ஸ்ரீப்ரிய),ars நடித்து வெளி வந்தது
ராஜ்பரத்க்கு இது முதல் படம்
படத்தில் direction கார்டு விழும்போது "கெட் இன் " என்ற டயலாக் உடன் "ராஜ் பரத் " என்று வரும்
திவாரி கேமரா (கார்த்திக் சார் உங்களுக்கு பிடிக்கும்)
இரண்டே பாட்டு தான்
1.பாலாவின் குரலில் குழுவினர் துணையுடன்
"சித்தர் கூட புத்தி மாறி தத்துவங்கள் சொல்லலாம் "
மெண்டல் hospital location பாடல்
ஷங்கர் கணேஷ் இன் கலந்து கட்டிய இசை அமைப்பு
violin drum தபேல என்று களேபரம் பண்ணி இருப்பார்
பாலாவின் ஒத்துஉழைப்பு நன்றக இருக்கும்
அதிலும் பாடலின் ஊடே
"நிறுத்து நான் ஏந்தும் தேன் கிண்ணம் வாழ்க " என்று பாடும் போது
ஒரு violin பீஸ் வரும்
2. இதழின் தென் பாண்டி முத்துகள் " மலேசிய வித் ஜானகி
(ராஜ்குமார் வித் சுனிதா ப்லஷ்பக்
SG இன் தபலா துண்டா தெரியும்
இது போக "saxophone மற்றும் drum உடன்" ஒரு 2 அல்லது 3 நிமடங்கள் ஒரு பீஸ் வரும்
SG இந்த பீஸ் ஐ பின்னாடி "பணம் பெண் பாசம் " படத்தில்
"கலை மாமணியே சுவை மாங்கனியே செந்தூர செவ்வானமே "
(ஜெயச்சந்திரன் வாணி கம்போவில் ) உபயோகித்து இருப்பார்கள்
படத்தில் ஹீரோக்கு (சரத்பாபு ) பாட்டு கிடையாது
anti ஹீரோ subject
நம்ம ARS க்கு நல்ல ரோல்
படம் செம ஹிட்
ஆனால் இதற்கு பிறகு ராஜ் பரத் எடுத்த எல்லா தமிழ் படங்களும்
"சொல்லாதே யாரும் கேட்டால்,சின்ன முள் பெரிய முள் ,
தொட்டால் சுடும்" எதுவுமே எடுபடவில்லை . ஆனால் தெலுகில் எடுத்த "புலி" சூப்பர் ஹிட் (சிரஞ்சீவி நடித்து வெளி வந்தது )
கார்த்திக் சார்
ஜெயந்தி பற்றிய உங்கள் information அவ்வளுவும் கரெக்ட்
செம updation
நேற்று ck சார் கூட கன்னட சுந்தர் வித் பிரமிள ஜோஷி பற்றி ஒரு அப்டேட் கொடுத்து இருந்தார்
நம்ம டீம் எல்லாமே லேட்டஸ்ட் version
1972-ல் வெளியான பக்திப்படம் 'அன்னை வேளாங்கண்ணி' வண்ணத்தில் எடுக்கப்பட்டு எல்லோரது எண்ணத்தைக் கவர்ந்த படம். தேவரின் தெய்வம், துணைவன் போல கிருஸ்துவ பக்திப்படம். ஆனால் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. தேவராஜன் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்திருந்தன
'நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்' அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. டி.எம்.எஸ். கோரஸுடன் இணைந்து பாடியிருந்தார்.
'கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி' என்ற பாடலும் கோரஸ் பாடல்தான்.
தன் சப்பாணி மகனின் கஷ்டத்தைப்போக்கி அவனுக்கு கால்கள் குணமாக பத்மினி (சுசீலா) பாடும் 'கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ' பாடல் நம் மனதைப் பிசையும். இந்தக்காட்சியில் மாஸ்டர் சேகர் நடிப்பு அபாரம். கால்களை மடக்கியபடி கைகளை ஊன்றி நக்கரித்து நக்கரித்து வரும்போது, ஒரு கட்டத்தில் மேலும் நகர முடியாமல் தூக்கச்சொல்லி அம்மாவிடம் கைநீட்டும் காட்சி கண்களில் நீர் கட்ட வைக்கும்.
ஜெமினிகணேஷ் - ஜெயலலிதா கனவு டூய்ட் 'வானமெனும் வீதியிலே, குளிர்வாடைஎனும் தேரினிலே ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்' பாடல் ஜேசுதாஸ் மாதுரி பாடியது.
நட்சத்திரக் கூட்டம் நிறைந்து மனதை நிறைவாக்கிய படம் 'அன்னை வேளாங்கண்ணி'...
நன்றி கார்த்திக் சார் ஃபார் அப்டேட் அபெளட் அ,வே. இந்த வானமெனும் வீதியிலே எனக்கு ரொம்ப ப் பிடிக்கும்..தியேட்டரில் பார்த்த படம் ..மீனாட்சி என நினைக்கிறேன்..
பாராட்டுக்கும் நன்றி..
அப்புறம் ஜெயந்தி குறித்த தகவல்கள் நான் அறியாதது..அடடே.. இந்தக் கன்னி நதியோரம் இவ்ளோ இருக்கா..
உச்சக்கட்டம் ஸ்ரீதேவியில் நன்றாக ஓடியது..மேபி 50 நாள்..அந்தக் கால விகடனில் கிருஷ்ணா சார்..ஏகத்துக்கு பில்டப் கொடுத்து 13 ரீலில் நல்ல படம் எனச் சொன்னதாலும் கூட.. ரொம்ப ஓஹோ இல்லாவிட்டாலும் ஓகே..ஒய்.ஜி.எம் சரத்பாபு,சுனிதா..என நினைவு..
அடுத்த படம் சொல்லாதே யாரும் கேட்டால் அதே ஸ்ரீதேவி தியேட்டர்..ரொம்ப எதிர்பார்த்துப் போய் ஏமாந்தது..ராஜ்பரத்தின் மற்ற எல்லாமும் சுமார் ரகம் அண்ட் மோர் வயலன்ஸ்.. நன்றிகிருஷ்ணா சார்..
வணக்கம் கிருஷ்ணா சார்,
அனைத்தையும் அனுபவித்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
சும்மா கில்லி.
உங்கள் உச்சக்கட்டம் டாப்போ டாப். அருமயான அலசல்.
அப்போது இப்படத்தின் ரீரிகார்டிங் வேறு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
ராஜ்பரத் தன் தனித்தன்மையை நிரூபணம் செய்து பின் வீணானார்.
'உச்சக்கட்டம்' சுனிதா பரவாயில்லை. அந்த காலகட்டத்தில் ஒருமாதிரியான மலையாளப் படங்கள் வந்து கொண்டிருந்தன. wine and women என்ற ஆங்கிலப் பெயரிலேயே ஒரு மலையாளப் படம் வந்தது படு கவர்ச்சிகரமான காட்சிகளுடன். (ம்ம்.. கிருஷ்ணாஜி என்ன சொல்லப் போறாரோ!)
அதில் சுனிதா பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள காமெடி ஆக்டர் ஜகதீ ஸ்ரீகுமார் சுனிதாவின் கணவராக மனைவியை சந்தேகப்படும் ரோலில் மதுவுக்கு அடிமையானவராக நடித்திருந்தார்.
இதழில் தென்பாண்டி முத்துக்கள் பாடலை வீடியோவாக பார்க்க முடியாவிட்டாலும் ஆடியோவாக கேட்கலாம். நன்றாகவே இருக்கிறது.
https://www.youtube.com/watch?featur...&v=ZOqHeA3S0uY
டியர் கார்த்திக் சார்
"அன்னை வேளாங்கண்ணி " தங்கப்பன் மாஸ்டர் எடுத்த ஒரு நல்ல படம்
கமல் கூட இந்த படத்தில் உதவி டைரக்டர் ஆக பணி புரிந்ததாக நினவு
பாடகி மாதுரி MD தேவராஜன் சார் வேலை செய்த எல்லா படத்திலும் ஒரு பாடல் பாடுவார் (லைக் குமார் வித் ஸ்வர்ணா) .
மாதுரியின் வாய்ஸ் கொஞ்சம் சைலஜா ஜாடையில் இருக்கும் (என்னுடய கணிப்பு may be wrong )
"வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சின் இளமை ராகம்
பாட வந்ததோ பருவ ராகம் "
பருவகாலத்தில் வந்த மிக இனிமையான பாடல்
இந்த பருவகாலம் 1974 ரிலீஸ் என்று நிநேகிறேன்
ஜுபிட்டர் ஆர்ட் films
ஏ.எஸ் பிரகாசம் வசனம்
பெர்னாண்டோ இன்னு ஒருத்தர் டைரக்ட் செய்தார் என்று நினவு
ஸ்ரீகாந்த் ,சுப்பையா,சசிகுமார்,சுதர்சன்,ரோஜாரமணி,பிரமீள,க மல் என்று ஒரு பெருங்கூட்டமே நடித்து இருக்கும் . கமல் தான் வில்லன் ஆக வருவர்
இந்த படத்தில் ஐய்யப்ப பாடல் ஒன்று கூட நினவு உண்டு
அப்ப எல்லாம் சபரி மலை சீசன் க்கு இந்த பாடல் தான் பாடுவார்கள்
பாடல் வரி மறந்து விட்டது
இவர்கள் குரலில் இன்னும் ஒரு பாடல் கேட்டு இருக்கிறேன்
"ப்ராநேசன் எங்கே பதில் சொல் " (வெள்ளி ரதங்கள் போன்றே )
என்ன படம் என்று தெரியவில்லை
கிருஷ்ணா சார்,
'பருவகாலம்' படத்தில் வரும் அந்தப் பாடல் இதுதான்
சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா
சபரிமலைநாதா
சாமி சரணம் ஐயப்பா
சாமி சரணம்
ஐயப்பா சரணம்
பம்பா நதி தீர்த்தமாடி
உள்ளுறங்கும் ஆத்மஜோதி தன்னை உணர்த்தி
இப்படி வரும்.
ஏன்! வீடியோவாகவே கண்டு களியுங்களேன்.
http://www.youtube.com/watch?v=_labMNf5S4k&feature=player_detailpage
'வெள்ளிரதங்கள்' சந்தோஷமாக ஒருமுறையும்
http://i1.ytimg.com/vi/aPE5z_M1r6M/hqdefault.jpg
சோகமாக ஒரு முறையும் வரும்.
http://i1.ytimg.com/vi/wI9JP9tF8oo/hqdefault.jpg
வாசு சார்
நன்றிகள் "பள பள "
சரணம் யாப்பா பாடல் நான் ரொம்ப ரசித்த பாடல்
சார் நான் 1974 இலிருந்து சபரிமலை சென்று கொண்டு இருக்கிறேன்
அப்ப சபரி பஜனையில் இந்த பாட்டு தான் famous
ஜேசுதாஸ் இன் தரங்கனி,வீரமணி எல்லாம் பின்னாடி தான் famous
பருவகாலம் படத்தில் டைட்டில் பார்த்திங்கநா
கமல் பேர் இறுதியில் தான் வரும்
இந்த படத்தில் எல்லோருமே ஸ்ரீகாந்த் தான் வில்லன் என்பார்கள்
இறுதியில் கமல் தான் culprit என்று தெரியும்
நெல்லை பர்வதியில் ரிலீஸ் சார்
நீ ஒரு மகாராணி 1976
சூரியாலய
(விஜய சூரி combines மு சூரிய நாராயணன் என்று நெல்லை நகரசபை தலிவர் ,நெல்லை திரைப்பட விநியோகஸ்தர் தலைவர் ஆக இருந்தவர்
மிசா கால கட்டத்தில் நெல்லை போலிசால் நய்ய புடைக்கபட்டவர்
மறுபிறவி,வைரம்,தங்கத்திலே வைரம் போன்ற படங்களை தயாரித்தவர் .இந்த படைத்தை சூரியாலய என்ற banneril தயாரித்தார் )
ஜெய்ஷங்கர் சுஜாதா ஸ்ரீப்ரிய ,தேங்காய் என்று பெருங்கூட்டம்
இன்னிசை வேந்தர்கள் பின்னிஇருப்பார்கள்
பாலா வித் சுசீலா
ஆரம்ப ஹம்மிங் "ல ல்ல லா "
"அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் பறவை பருவம் 16 (யாரு ஸ்ரீப்ரியா)
அவன் ஒரு ராஜகுமாரன் (ஜெய்) அழகிய மாறன் வழிய பல்லாண்டு
காதல் கீதங்கள் கோயில் தீபங்கள் மேள தாளங்கள் வாழ்த்துது "
செம பாடல் சார்
saxophone பங்கோ drum ஜாலரை என்று பலவித வாத்யங்கள் உருளும்
ஸ்ரீப்ரியா செம cute கன்ன குழி துண்டா தெரியும்
2.நீ ஒரு மகாராணி நான் ஒரு மகாராஜன்
நேரம் சொல்லுது நெருங்க நெருங்க என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
ஒ ராணி ஒ ராணி
ஜேசுதாஸ் வித் சுசீலா beautiful டூயட்
அதிலும் ஒ ராணி என்று ஜேசு சொல்லும்போதும்
ஒ ராஜா என்று சுசில் சொல்லும்போதும் ஒரு சந்தோசம் தெரியும்
அபபறும் சுசீலாவின் சோலோ
"பல்லாண்டு காலம் நீ vazha வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும்"
ஜெய் ஸ்ரீப்ரியவை லவ் பண்ணி விட்டு சுஜாதாவை கல்யாணம் செய்து கொண்டு ஸ்ரீப்ரியாவை மறக்க முடியாமல் (ஸ்ரிப்ரியாக்கு கிட்டத்தட்ட வில்லி கேரக்டர் ) இறுதியில் சுஜாதாவின்
அன்புக்கு அடிமை ஆவர்
ரோஜாரமணி மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'செம்பருத்தி' (நடிகை ரோஜா நடித்தது அல்ல. செம்பருத்திக்கும் ரோஜாவுக்கும் அப்படி என்ன ராசியோ!) தமிழில் பருவகாலமாக நேரிடையாகவே தயாரிக்கப்பட்டது. தெலுங்கிலும் அப்படியே! 'கன்னிவயசு' என்ற பெயரில் வெளியானது.
http://upload.wikimedia.org/wikipedi...rathi_film.jpg
http://3.bp.blogspot.com/-0Ph3I3xVlE...nne-vayasu.png
மூன்றிலுமே ரோஜாரமணிதான் கதாநாயகி. தன்னுடைய 13ஆம் வயதில் இவர் 'செம்பருத்தி' படத்தில் நாயகியாகக் களமிறங்கி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டை இப்படத்திற்காக 1972 ஆம் ஆண்டு பெற்றார்.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக நன்கு அறிமுகமானவர்.
'இருமலர்கள்' படத்தில் நடிகர் திலகம் கல்லூரியில் படிக்கையில் தன்னை மோசம் செய்துவிட்டுப் போன காதலியை!? (பத்மினி) தன் திருமண வாழ்க்கைக்குப் பின் (மனைவி கே.ஆர்.விஜயா) சந்திக்க நேரிடும். (தான் முன்னால் உயிருக்குயிராகக் காதலித்த பத்மினி தன்னை ஏமாற்றி விட்டதாக சூழ்நிலை காரணமாக நடிகர் திலகம் தவறாக எண்ணி விடுவார்) தன் மகள் ரோஜாரமணியின் டீச்சரான பத்மினியை மீண்டும் எதிர்பாராமல் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து, பின் பத்மினி வீட்டுக்கு சென்று, பத்மினி மேல் நெடுநாள் வைத்திருந்த தன் உள்ளக்குமுறலை ஆத்திரம் தொண்டை அடைக்க கொட்டித் தீர்ப்பாரே!
அப்போது தங்களுக்குள் நடக்கும் சம்பாஷணை தன் பிஞ்சு மகளான ரோஜாரமணிக்கு தெரியக்கூடாது என்று அதுவரை அங்கு நின்று கவனித்துக் கொண்டிருந்த ரோஜாரமணியை காரில் இருக்கும் தன்னுடைய சிகரெட் கேஸை எடுத்து வரச் சொல்லி அனுப்புவார்.
நடிகர் திலகம் பத்மினியை கடிந்து, கதறிக்கொண்டு இருக்கும் போதே (ஏன் இப்படிப் பட்ட மரம் மாதிரி நிக்கிறே?'... மறக்க முடியுமா என் தெய்வமே!!) இறுதியில் ரோஜாரமணி சீக்கிரமே அங்கு வந்து நடிகர் திலகத்திற்கும், பத்மினிக்கும் நடந்த உணர்ச்சிகரமான வாதப் பிரதிவாதங்களை எதேச்சையாகக் கேட்டு தன் தந்தையான நடிகர் திலகத்திற்கும், தன் டீச்சருக்கும் முன்னாலேயே ஏதோ தொடர்பிருக்கிறது என்று உணர்ந்து கொள்வார்.
அந்தக் காட்சியில் ரோஜாரமணி பிரதிபலிக்கும் முகபாவங்கள் வெகு அற்புதமாக இருக்கும். (உதட்டை சுழித்துக் காண்பிக்கும் அந்த சந்தேகப் பார்வை இன்னும் சூப்பர்) பின் காரில் நடிகர் திலகத்துடன் பேசாமல் அமர்ந்தபடி 'உம்' மென்று வருவதும் பின் நடிகர் திலகம் 'கீதா! நாம் உங்க டீச்சர் வீட்டுக்கு வந்தத பத்தி சம்பவங்களை அம்மாவிடம் (விஜயாவிடம்) சொல்லாதே" என்று சற்றே கடிந்து சொல்ல, 'என்னை பொய் சொல்ல சொல்றீங்களா?' என்று வெடுக்கென்று குத்துவதும், அதற்கப்புறம் வரும் காட்சிகளில் காட்டும் முறைப்பும், வெறுப்பும் ரோஜாரமணியை எப்போதும் மறக்க முடியாதபடி செய்து விட்டது.
பாடல் திரிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் 'பருவகால' மங்கையை நினைவு படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு இந்தப் பதிவு.
அப்படியே எங்கள் குலதெய்வத்தையும் பூஜை செய்தாகி விட்டது.
அவள் ஒரு பச்சை குழந்தை
வெரி வெரி யூத்புல் மற்றும் useful சாங்
நமபளையும் யூத் ஆ மாத்தும்
முதல் சரணத்தில்
பாலாவின் குரல்
"வாலை பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம் "
உடனே சுசீலா
"போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனகன்னே அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம் "
பின் பாலா
"இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ "
உடனே சுசீலா
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ "
சுசீலாவின் பேஸ் வாய்ஸ்
"அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன் "
இரண்டாவது சரணம்
பாலா
"நீ இருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்று கொள்வாயோ "
பின் சுசீலா
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை அணைத்து கொள்வோயோ
பாலா
அச்சத்தை ஆசை வந்து வெல்ல கூடாதோ
சுசீலா
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ "
சுபெர்ப் lines
வாசு சார்
ரோஜா ரமணி திடீர்னு காணமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றார்
ஏன் என்று தெரியவில்லை
இரு மலர்கள் செம performance
1980 க்கு அபபறும் எதாவது தமிழ் படம் நடித்தார்களா
நாம் அலசிய இரு நிலவுகள் படத்தில் கிராமத்து பொண்ணாக வருவர்
கிருஷ்ணா சார்,
http://i1.ytimg.com/vi/Zdg78yqoaBA/hqdefault.jpg
'அவள் ஒரு பச்சைக் குழந்தை' பாடலைப் பற்றிப் பதிவிட்டு 'அவள் ஒரு பச்சைக் குழந்தை'யை ஞாபகப்படுத்தி விட்டீர்களே!:)
'அவள் ஒரு பச்சைக்குழந்தை' பவானி அழகு.
'மாலை இளமனதில் ஆசைதனை தூண்டியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை'
மொட்டை செம கலக்கல். சுரேந்தர், நம்ம ஷோபா சந்திரசேகர்தானே?
விஜய் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
அப்புறம்
'பொண்ணு பாக்க வந்தாரு மாப்பிள்ளை'
கேட்டிருக்கீகளா.?
'இளையராசாவ நினச்சு
இளச்சுப் போனேங்க தவிச்சு'
vasu sir
நீ ஒரு மஹராணி தொடர்ச்சி என்று போட்டு இருக்க வேண்டும்
அவசரத்தில் டைப் செய்ய மறந்து விட்டேன்
கரெக்ட் சார்
மொட்டை early மெலடி
சிலோன் ரேடியோ உபயம் செம ஹிட் பாடல்
விஜயகுமார் பவானி தானே சார் ஜோடி