https://youtu.be/ChmYVXTATjg
இதுல இருக்கறதும் அ.உ.ஆ ல இருக்கற்வரும் ஒண்ணாத் தான் தெரிகிறது.. 1962 ன்னா ரொம்ப சின்ன வயசுல ஹெல்ப் பண்ணீயிருக்கலாம்..இல்லியோ..
பாண்டியன் நான்..தப்புப் பண்ணிட்டேனா என்ன :sad: :)
Printable View
https://youtu.be/ChmYVXTATjg
இதுல இருக்கறதும் அ.உ.ஆ ல இருக்கற்வரும் ஒண்ணாத் தான் தெரிகிறது.. 1962 ன்னா ரொம்ப சின்ன வயசுல ஹெல்ப் பண்ணீயிருக்கலாம்..இல்லியோ..
பாண்டியன் நான்..தப்புப் பண்ணிட்டேனா என்ன :sad: :)
போனால் போகட்டும் போடான்னு ந.தி. சொல்லிட்டு போயிட்டார்..
சிக்காவுக்கு பிடிச்சமாதிரி சிக்குனு ஸ்ரீதேவி புடவையில் வந்து சூப்பர் ஸ்டாரிடம் சொல்லுவதைக் கேளுங்க
https://www.youtube.com/watch?v=loj1sXUx7Og
ஸ்ரீதேவி பாட்டுக்கு தாங்க்ஸ் மதுண்ணாவ்..பட் அவரோட இன்னொரு பாட் கீழே போடறேன்.. :)
சேலையில வீடு கட்டவா சேர்ந்து ரசிக்க - சிம்ரன்
கட்டபொம்மன் பேரா கட்டிப்பிடி ஜோரா - குளிரடிக்கும் விஜயசாந்தி
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்தப் பூமி பூ பூத்தது...வைரமுத்து..(மதுபாலாவிற்கு நன்னா இருக்காது..பட் வாயை மூடிப் பேசவும்ல புடவைல அழகா இருப்பார்)
தேன் பட்டுக் கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் ... சந்திரகலா..ஸோ ஸோ தான் புடவை..ல்
பட்டுக் கரு நீலப் புடவை பதித்த நல்வயிரம் - கண்டுகொண்டேன் - பாரதியார் பாடல்- ஐஸ்வர்யா ராய் புடவை ஓ.கேயோ..
சொர்ண புஷ்பம் ஓ.கே..பூர்ணிமா ஜெயராம் ரொம்ப ஹோம்லியா தெரிவார்..
https://youtu.be/iETA1aeGKts
ஸ்ரீதேவிக்கு காலில் ஏதோ அடிபட்டிருந்த சமயம்.. எனில் உட்கார்த்தி நடக்க வைத்து ஷூட் பண்ணியதாகப் படித்த நினைவு புகையாய்..
நவம்பர்17 ஜெமினியின் 95 வது பிறந்த நாள் நினைவலைகள்!!
காதல் மன்னரின் குரல் மன்னர் ஏ எம் ராஜா ! Songs/karaoke/instrumental 1
சிறுவயதில் நான் முதல் முதலில் செவி மடுத்த திரைப்பாடல் தேன்மதுரக் குரல் ஏ எம் ராஜா ஜெமினிக்கு வழங்கிய பணிக் குழைவான மிஸ்ஸியம்மா கானம் வாராயோ வெண்ணிலாவே !
அந்த சிறுவயதிலேயே காதல் மன்னரின் டிப்டாப்பான உடையலங்காரம் நெற்றி நிறைய சுருண்டு தவழும் அடர்த்தியான கேசம் அவர் கண்களில் கொப்பளிக்கும்
குறும்பு மனதை வசீகரிக்கும் மேனர்ஸ் நிறைந்த பேச்சு எல்லாமே அவர்பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது! இந்தப் படத்தில் இனிமையான இப்பாடல் காட்சியமைப்பு மனதை இதமாக வருடி ரசனையில் மூழ்கடிக்கும் இந்தக் காலம் வரை ஜெமினி என்றதும் மனதில் தோன்றும் ராஜாவின் குரலும் இப்பாடலும் சாகாவரம் பெற்றவையே ! சாவித்திரிய்ன் கோபதாபங்களும் முறுவலிக்க வைக்கும்!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
https://www.youtube.com/watch?v=Ad5ny2WQr8s
நூறாவது பக்கத்தை நெருங்கிவிட்ட காதல்மன்னரின் திரியில் அவரது 95வது பிறந்தநாள் நினைவஞ்சலியை முன்னிட்டு மது சார், ராஜ்ராஜ் சார், ராகவேந்தர் சார் வாசு சார் கோபால் சார் சின்னக்கண்ணன் சார் கோபு சார் ரவி சார் ராஜேஷ் சார் எஸ்வீ சார் ஆதிராம் சார் யுகேஷ் சார் கலை சார் வரதகுமார் சார் சைலேஷ் சார்முத்தையன் அம்மு சார் அரிமா செந்தில்வேல் சார்..அனைவரும் வருகை தந்து ஜெமினியின் நினைவுகளைப் பெருமைப்படுத்தும் பதிவுகளை அளித்து 100வது பக்கத்தை நிறைவு செய்து சிறப்பித்திட அன்புடன் வணங்கி வரவேற்கிறேன்!
செந்தில்
https://www.youtube.com/watch?v=xwtip74JdXk
யாராவது புடவை தாவணின்னு பாட்டுக் கேப்பீங்க இனிமே...
//யாராவது புடவை தாவணின்னு பாட்டுக் கேப்பீங்க இனிமே...// :) சின்ன வயசு தாங்காதுங்ணா :)
மனிதன் மாறவில்லை..அவன் மயக்கம் தீரவில்லை!
https://youtu.be/xbRl7O37xJA?list=RDg0eDl2aUByE
விக்கியை நம்பினா விக்கி விக்கி சில சமயங்களில் அழ வச்சுடுமே!
கதவு திறந்ததா ரொம்ப அருமையான பாட்டு சின்னா! அதுவும் சுந்தரக் குரலாளின் 'ஹஹாஹஹா' ஹம்மிங் 'ஓஹோஹோஹோ'
//இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா.. ( என்ன தாம்மே சொல்ற நீ)//
அங்கதான் பிராக்கட் போடணுமா?:) சரி! சரி! ஆண் வாடை புடிக்காத அர்ச்சுனரே!
//கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்//
சுளிக்கும்படி அப்படிங்கறதுக்கு பதிலா தெரியாம 'களிக்கும்படி' ன்னு டைப் அடிச்சுட்டீங்க சின்னா!:)
//பாண்டியன் நான்..தப்புப் பண்ணிட்டேனா என்ன//
சிரித்துக் கொண்டே ஸேடா?:)
'புலி' ராணிக்கு புடவை உண்டா?
ஒரு அருமையான பாடல். 'அன்பின் அலைகள்' என்று ஒரு படம்.
நல்லவர் சொல்லை நாம் கேட்போம்
நலமாய் வாழ வழி வகுப்போம்
தலைவர்கள் சொன்ன வழி வகுப்போம்
தாய் நாட்டினையே வாழ வைப்போம்
பாடலைப் பாடியவர் லதாவாம். சூப்பர் ஸ்டாரின் லதாவா? மாதுரி, வசந்தா, சொர்ணா, எம்.ஆர்.விஜயா, சசிரேகா வரிசையில் கிறங்க வைக்கும் குரல். இசை மலையாளத்தின் ஏ.டி.உம்மர்.
https://youtu.be/ZPpGqjJmqzo
அதுதான் வாசு சார், கண்ணா நீ வாழ்க...லதா எ புஷ்பலதா...Quote:
பாடலைப் பாடியவர் லதாவாம். சூ
https://www.youtube.com/watch?v=K4NcTfRPYac
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள் ... இது கூட அவங்க தானே...
இந்தப் பாட்டில் கூட தலைவரும் மெல்லிசை மன்னரும் விளையாடி இருப்பார்கள்..
மெல்லிசை மன்னர் இப்பாட்டிற்கு வித்தியாசமான லயத்தை உபயோகித்திருப்பார். அந்தத் தாளக் கட்டே மிகவும் ரம்மியமாக இருக்கும். இசைக் கருவிகளே வேண்டாம், அதையே கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் எனத் தோன்றும்.
தலைவரோ கேட்கவே வேண்டாம். அந்தத் தாளக்கட்டிற்கேற்ப அந்தக் குழந்தையின் இடுப்பில் தாளம் போடும் காட்சி கண்கொள்ளாக் காட்சி...
அதுவும் அந்தக் குழந்தை மாமாவின் மனசோ வெள்ளை மனசு, மறந்தும் அதிலே களங்கமில்லை என்ற வரிகளின் போது தியேட்டராக இருந்தால் அவ்வளவு தான்...உடனே தாளம் சற்றே மாறி பாடல் சிறிது ஸ்லோவாகி மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும்.
அந்த சரணம்... நினைத்தாலே மெய்சிலிர்க்கும்..
ஊருக்கு அவரோ கோமாளி
இந்த உறவுக்கு அவரோ ஏமாளி
நாளைக்கு அவர் தான் மேதாவி
என் நாக்கினில் சொல்பவள் ஸ்ரீதேவி...
இந்த வரிகளை தலைவர் ஆமோதிப்பது போல் தன் முகத்தில் காட்டும் பாவனை.,..
இனிமேல் இப்படி ஒரு இசையமைப்பாளரும் இப்படி ஒர் மக்கள் தலைவனும் கிடைப்பார்களா..
...
மன்னிக்கவும் நடிகர் திலகம் திரியில் போட வேண்டிய பதிவை லதாவுக்காக இங்கே போட்டு விட்டேன்...
அதனாலென்ன ... அங்கேயும் போட்டால் போச்சு...
சின்னா!
உமக்கு பழைய பாக்கி ஒன்று இருக்கிறது. நான் சொன்ன அருமை அருவிப் பாடல்.
மலைப்பாறைகளுக்கு இடையில் பாலூற்றாய்க் கொட்டிக் கொண்டிருக்கும் தேனூற்று அருவிகள். அங்கு இடை ஒடித்து நடந்து குளிக்கச் செல்லும் குள்ளி குயிலி. கொட்டங்கச்சி வயலின் இசை போல ஆரம்ப இசை அதே அருவி போல நம்மை 'அலேக்'காக அள்ள, 'சின்னக்குயில்' சித்ரா சிதறாமல் ஹம்மிங் எடுக்க, வழுக்குப் பாறையில் சறுக்கிச் செல்லும் குயிலையை அவருக்குத் தெரியாமல் குளிப்பதை ரசிக்கும் 'மலை நாட்டு மச்சான்' 'சத்தத்' தியாகு. அங்கே மாதுரி டீசன்ட் என்றால் இங்கே குயிலி அபாய கட்டம்.:) கிணற்றுக்கடியில் 'ஆத்தாடி பாவாடை கூத்தாட' கட்டிக் குளித்து, முரளி மச்சானுக்கு 'பூவிலங்கு' போட்டவர் இங்கு கொட்டும் அருவியில் தனியே கொண்டாட்டம். தியாகுவின் கனவில் குயில் அவர் அருகில் வந்து ஆட புதுப் பையன் 'முழி முழி' என்று கை வைத்த பனியன் அணிந்து, கை கட்டிக் கொண்டு முழிக்கிறார்.! (உம்ம பாணியில் சொன்னா 'அசமஞ்சமாயா நீ?':)
முதல் சரணம் முடிந்து அந்த அருவி கொட்டும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே படிகளின் அடுக்குகளில் பால் கொட்டுவது போல் 'வெள்ளை வெளேர்' என்று நீர் கொட்டுவது பிரம்மாண்டம். அருவியின் வளைவுகளுக்கும், அன்னத்தின் வளைவுகளுக்கும் இயக்குனர் போட்டி வைத்திருப்பார் போல.:) ஜெயிப்பது எது என்று தீர்மானிப்பது கஷ்டம்.
அதெல்லாம் கிடக்கட்டும்.
சித்ராவின் குரலும், M.S. முராரியின் அறிமுக இசையும் இந்தப் பாடலை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விட்டது. சித்ரா ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடியிருப்பார். ஒவ்வொரு வரி முடிவிலும் அவர் கொடுக்கும் அதிர்வுகள் நெஞ்சாங்கூட்டில் ஆழமாய் இறங்குகின்றன. இந்தப் பாட்டின் டியூனையும், அதன் இனிமையையும் சொல்ல வார்த்தைகளே வரவில்லை. இசைக் கருவிகள் ஒவ்வொன்றும் செய்யும் சாகச வித்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. முராரி பார்த்து பார்த்து பாடலை செதுக்கியிருப்பார். மலைக்காட்டு கிராமப் பின்னணி இசை, குறிப்பாக மூங்கில் குழல்களின் சப்தம் நம்மை அப்படியே ஈர்க்கும். என்ன! கொஞ்சம் ராஜாவின் சாயல் இருக்கும். ஆனால் தனித்தன்மை முத்திரை பதிக்க தவறாது.
கேட்கும் போது மெய் மறந்து போவோம் என்பது உண்மை. உண்மை.
'மலை நாட்டு மச்சானே!'
https://youtu.be/JVsaXKmkHLM
'மாமாவின் மனசு வெள்ளை மனசு
மறந்தும் அதிலே களங்கமில்லை'
அருமை அருமை ராகவேந்திரன் சார்! அத்தனை திரிகளிலும் போட வேண்டிய பாட்டு.
ஜி
சுஜாதாவின் ஜோடி சுதீர் .
நல்லாவே இருப்பார்.
நல்லாவே தெரியும் ஜி. சின்னாவை சீண்டிப் பார்த்தேன்.
'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நடிகர் திலகத்தின் கிராம சிறுவயது தோழனாக, அவருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித் தரும் சிறுவனாக வரும் பிரபாகர்தான் பின்னால் வளர்ந்து சுதீர் ஆகி, கே.ஆர்.விஜயாவின் மகளான, அதாவது நடிகர் திலகத்தின் வளர்ப்பு மகளான எம்.பானுமதியைக் காதலிப்பார். அழகான தோற்றம் கொண்டவர். ஏனோ பின்னால் பல பெண்களின் துகில் உரியும் துச்சாதனன் ஆனார்.
இங்கே பாருங்கள். நடிகர் திலகத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டு நிற்கும் சுதீரை.
http://i62.tinypic.com/23m776e.png
ஜி! உங்களுக்கு நான் தரும் ஒரு அற்புதமான சாங். சுதீர் நடித்ததுதான். கூட இருக்கும் ஹீரோயின் யாரென்று சின்னா சொல்லுவாராக. அருமையான பாடல். அழகான சுதீர். தாஸேட்டன் கலக்கி எடுத்திருப்பார்.
'மாரிவில்லு பந்தலிட்ட' 'தீர்த்தயாத்ரா' படத்தில்.
https://youtu.be/j-kKIcA4ekQ
ஜி
உமக்கு தெரியாதது உண்டோ .. :)
அப்படியெல்லாம் இல்லைஜி! நிறையவே தெரியாது. 'திருவிளையாடல்' நாரதர் யாருன்னு இன்னும் கண்டு பிடிக்க முடியல்லையே ஈஸா.:)
வாஸ்ஸூ.. தாங்க்ஸ்..
//உம்ம பாணியில் சொன்னா 'அசமஞ்சமாயா நீ?// :)'
//முதல் சரணம் முடிந்து அந்த அருவி கொட்டும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். அப்படியே படிகளின் அடுக்குகளில் பால் கொட்டுவது போல் 'வெள்ளை வெளேர்' என்று நீர் கொட்டுவது பிரம்மாண்டம். அருவியின் வளைவுகளுக்கும், அன்னத்தின் வளைவுகளுக்கும் இயக்குனர் போட்டி வைத்திருப்பார் போல. ஜெயிப்பது எது என்று தீர்மானிப்பது கஷ்டம். // முதல்ல கண் செக் அப் செய்யும்.. குட்டியானைக்கும் அன்னத்துக்கும் வித்யாசம் தெரியலை :)
//அதெல்லாம் கிடக்கட்டும்.
சித்ராவின் குரலும், m.s. முராரியின் அறிமுக இசையும் இந்தப் பாடலை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விட்டது. சித்ரா ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடியிருப்பார். // ட்ரூ.. நடுல்ல கொஞ்சம் ஜானகிமாதிரி ஹம்மிங்க் டபக்குன்னுகொடுத்து விட்டிருக்கிறார்.. கேக்க இனிமையான பாடல்..அகெய்ன் தாங்க்ஸ்.
வாசு சார்,
தீர்த்தயாத்ரா திரைப்படத்தில் சுதீருடன் உள்ள ஹீரோயின் படாபட் ஜெயலெட்சுமி
போல உள்ளதே.
கோபு.
//ஜி! உங்களுக்கு நான் தரும் ஒரு அற்புதமான சாங். சுதீர் நடித்ததுதான். கூட இருக்கும் ஹீரோயின் யாரென்று சின்னா சொல்லுவாராக. அருமையான பாடல். அழகான சுதீர். தாஸேட்டன் கலக்கி எடுத்திருப்பார்.// ஓய்.. ஆண்களைத் தான் தெரியாதுன்னு சொன்னேன்..அதுவும் எங்க கால யூத் லேடீஸ்னா ஃபடாபட்னு சொல்ல மாட்டேனா என்ன :) பாட்டு அழகான பாடல் தாங்க்ஸ்..அதுவும் எங்கே அவர் முகத்தைக் காண்பித்தார்.. டபக் டபக்னு லாங்க் ஷாட்..அப்புறம் தரையில் விழுந்துடறார்.. கொஞ்சம் நிறுத்திப் பார்க்க வேண்டியதாப் போய்டுத்து.. கரெக்ட் தானே..
கமல் ஃபடாபட் சக்கபோடு போடு ராஜா நினைவிருக்கா..
நான் தான் நான் தான் முதல்ல சொன்னேன்.. கோபு சார்..வாஸ்ஸூ கிட்ட சொல்லிடுங்க.. :)
theerthayathra had another stunning song by PS
AT ummer's beautiful composition
https://www.youtube.com/watch?v=EZd73Zn43xE
10.28
10.28:)
இதோ பாசமலரே அன்பில் விளைந்த வாச மலரே
மலையாளத்திலும் உண்டு. இசை கங்கை அமரன்
குரல்கள் யேசுதாஸ், இசையரசி, ஷைலஜா
https://www.youtube.com/watch?v=Y74MTkDl1_s
http://www.veeconme.com/files/image_...indra_jain.jpg
இன்றைக்கு இசையுலகிற்கு என்ன கஷ்ட காலமோ தெரியவில்லை. இரு பெரும் ஜாம்பவான்களை இழந்து விட்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறது.
புல்லாங்குழல் ரமணி... சிவாஜி எம்ஜிஆர் போல ரமணி மாலி ரசிகர்கள் சண்டை மிகவும் பிரசித்தம். ரமணி நம்மவர் போலவும் மாலி எம்ஜிஆர் போலவும் மனதுக்குள் ரசிகர்கள் பாவித்துக்கொண்டு போடும் சண்டையைக் காணக் கண் கோடி வேண்டும்.. இசையின் அத்தனை நுணுக்கங்களையும் பிச்சி மேஞ்சிடுவாங்க...
அப்படி ஒரு மாபெரும் இசைக்கலைஞனான ரமணியின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
இன்னொருவர் ரவீந்திர ஜெயின்.
பார்வைக்கோளாறு ஒரு பொருட்டாகவே அவருக்குக் கிடையாது. இசையுலகில் முடிசூடா மன்னனாக, ஏராளமான ஹிந்திப் பாடல்களுக்கு இன்று வரை வாழ்வு கொடுத்து மக்கள் மனதில் தனிப்பெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்திருந்தவர் ரவீந்திர ஜெயின். குறிப்பாக இவருடைய இசைக்காகவே சஷிகபூரின் சோர் மஜாயே ஷோர் மாபெரும் வெற்றி பெற்றது. மூன்று நான்கு முறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். சென்னை சத்யம் தியேட்டர் திறந்த புதிதில் தியேட்டர் பார்ப்பதற்கென்றே போன படம்.
இருவரின் ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்
https://www.youtube.com/watch?v=K0_jpigjv1c
இந்தப் பாட்டில் ஒரு இடத்தில் தனி ஷெனாய் இசை ஒலிக்கும். நம்மூர் நாதஸ்வரம் போல வட இந்தியாவில் மங்கல இசைக்கு வாசிக்கும் வாத்தியம் ஷெனாய். ஆனால் நம்முடைய மக்களோ அதை சோக சூழ்நிலைக்கே பயன்படுத்தி ஒரு வழியாக்கி விட்டார்கள்.
லதா-புஷ்பலதா வின் பாடலுக்கு வாசுவிற்கும் ராகவேந்திரருக்கும் நன்றி.. அம்மாவும் அப்பாவும் வெள்ளைப் பூனைகள்...அந்த டேப்ரெகார்டர் சிக்கிக் கொண்டுவிட ந.தி தவிக்கும் தவிப்பு..நன்றாக இருக்கும்.. சோவின் தலையைத் தொடாதே காமடி.. சிப்பியிலே முத்து அது சிப்பிக்குத் தான் சொந்தம்.. என கலைச்செல்வி கண்கலங்கும் பாட்..ம்ம்..அன்பைத்தேடி.. நல்ல படம்..
முக நூலில் நண்பர் ஒருவர் இட்டிருந்தபாடல்..வீணப் பூவே.. வீணைப் பூன்னு ஒன்று இருக்கிறதா..என்ன.. மோஹன் அண்ட் ஷீலா..பாட் ஜேசுதாஸ்.. ஷீலுவின் புடவை, கனகாம்பரம் நன்னாயிட்டு இருக்கு..!
https://youtu.be/V9BTSRhOb1g
//இன்றைக்கு இசையுலகிற்கு என்ன கஷ்ட காலமோ தெரியவில்லை. இரு பெரும் ஜாம்பவான்களை இழந்து விட்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறது.
புல்லாங்குழல் ரமணி...
இன்னொருவர் ரவீந்திர ஜெயின்//. புல்லாங்குழல் ரமணி, ரவிந்திர ஜெயின் இருவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
Musician Ravindra Jain passed away at Leelavati Hospital, Mumbai on Friday, the 9th of October 2015. He was born blind, but grew up to become a musical genius writing his own lyrics, composing music for them, and turning them into everlasting musical classics in many languages. He was also a singer. Ravindra Jain is one of the reasons for K. J. Yesudas becoming a singing sensation in Hindi movies. It is said that he was so fascinated by the way Yesudas sang his songs that Yesudas' face was the first he wanted to see if he ever received his vision. Here is a romantic melody written and composed by Jain for Rajshri Pictures' Hindi movie GOPAL KRISHNA (1979); sung by Yesudas and Hemlata, and featuring Zarina Wahab and Sachin.
https://www.youtube.com/watch?v=F1-WrzeYA3s
theerthayathra had another stunning song by PS
AT ummer's beautiful composition// ரொம்ப அழகான பாடல் ராஜேஷ். தாங்க்ஸ்.மொதல்லயே போட்டிருக்கலாமில்லை..கொஞ்சம் ஈஸியா கண்டுபிடிச்சுருப்பேன்.. பட் வெகு இளமையா ஃபடாபட் என்ன அழகா இருக்காங்க..பாவம்.. சீக்கிரமா போயிருக்க வேணாம்.. முதல் தமிழ்ப்படம் பட்டிக்காட்டு ராஜான்னு நினைக்கறேன் இல்லியோ..
https://www.youtube.com/watch?v=JzECWv9z47M
மொழியறியா மக்களையும் இசை வயப்படுத்தி விடும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம்.
ஜேசுதாஸை தென்னிந்தியாவைத் தாண்டிச் செல்ல வைத்த பாடல். வட இந்தியர்களை கவனிக்க வைத்த பாடல்.
ராஜ் ராஜ் சார் சொன்னது போல ஸ்க்ரீன் பத்திரிகையில் ஒரு முறை ரவீந்திர ஜெயின் பேட்டியளித்திருந்தார். தன் கண்பார்வை வந்தால் முதலில் தான் பார்க்க விரும்பும் முகம் ஜேசுதாஸாகத் தான் இருக்க வேண்டும் என்று. அதற்கு வித்திட்டது இப்பாடல்.
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏனோ நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. ஏனோ தெரியவில்லை. அதையும் தான் கேட்போமே.
https://www.youtube.com/watch?v=wtd_9LkMxig
//முதல் தமிழ்ப்படம் பட்டிக்காட்டு ராஜான்னு நினைக்கறேன் இல்லியோ.. //
http://i.ytimg.com/vi/TXlp1JF-htg/maxresdefault.jpg
படமிருக்கு.. படம் இல்லையே?! என்ன திரைப்படம்.. தாங்க்ஸ் வாஸ்ஸு..ஆனாலும் நள்ளிரவில் பயங்கர சுறுசுறுப்பு தாங்க.. ..தாங்க்ஸ். அகெய்ன்
வேறு எதையோ தேடப் போய்... வெகு நாட்களாய்.. அதாவது செந்தில்வேல் இந்தப் பாடலைப் போட்டபின் வாசுவும் இதைப் பற்றி எழுதியிருந்தது அப்போது சுத்தமாக நினைவிலில்லை..பின் தான் அவருடன் பேசிய போது நினைவுக்கு வந்தது..இப்போது அந்தலிங்க்..
http://www.mayyam.com/talk/showthrea...%AE%AE/page239
நைஸ் வாசு..தாங்க்ஸ்.. அண்ட் ஸாரி என் ஞாபக மறதிக்கு..
May his soul rest in peace.
http://www.thehindu.com/news/flautis...rue?w=alstates
Here are two video clips of his renditions
Chinnanchirru kiLiye.....
http://www.youtube.com/watch?v=l-0vR_QU3j4
Theeraadha viLaiyaattu piLLai....
http://www.youtube.com/watch?v=NxxgMA4KlsM
The Hindu article reminded me of Tiruvarur Thyagaraja, KeevaLur(keezh vELur) Akshayalingam, Siikkil Singaravelan and Nagapattinam Neelayadhakshi, all temple deities. High school memories. Next time I visit India I should visit all these places ! :)
I attended two of his concerts in the US. Very unassuming person.
//கமல் ஃபடாபட் சக்கபோடு போடு ராஜா நினைவிருக்கா..//
ருக்காவா?....ம்...நேரமய்யா நேரம்.
//இப்ப எதுக்கு இந்தக் குறைங்கறேன்..இதோ சேப்புச் சேப்பா பாட் தர்றேங்கறேன்…
சலசலகா உண்டுடா ஒய் ராமா ஒய் ராமா?//
தமிழ்ல போடறது....:)
கூத்து....நாடகம்...
அந்தக் கால சினிமாக்களில் ஊடால கூத்து, டிராமா, ஓரங்க நாடகம் போன்ற அயிட்டங்கள் பாடல்களுடன் அம்சமாக வந்து போகும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் அது மாதிரி அதிகமாகவே இருக்கும். உடனே நம் நினைவுக்கு வருபவை நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை. இதெல்லாம் அடிக்கடி பார்த்தாயிற்று. இருந்தாலும் சலிக்காது. இது போன்ற வேறு படங்களில் வரும் கூத்து, நாடகம் இவற்றை நண்பர்கள் கொஞ்சம் போட்டா நல்லா இருக்குமே.
முதலில் நடிகர் திலகத்தின் படத்திலிருந்தே தொடங்கி வைக்கிறேன்.
'சபாஷ் மீனா' வில் ஒரு நாடகம்.
http://www.geocities.ws/ganeshkumar_r/bg58saba.jpg
கனவான்களின் கூத்து. கும்மாளம். கன்னி மயில்களுடன் ஆட்டம். அங்கு வருகிறார் கோமாளி வேடத்தில் நடிகர் திலகம். நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கிறார். மிக வித்தியாசமான கெட்-அப்பில் புளோரசென்ட் லிப்ஸ்டிக் அடித்து அவர் ஒரிஜினல் கோமாளி போல் மேடையில் சுற்றி வருவது நம்மை வாய் பிளக்கச் செய்யும். நடன அசைவுகளை ரொம்ப அலட்சியமாக பண்ணுவார். கால்களை கவனித்தீர்களானால் ஒரு இடத்தில் கூட நில்லாது. கடினமான வரிகள். வார்த்தைகள். விறுவிறு என்று வேறு பாடுவார் பாடகர் திலகம்.
'ஓ....சுயநல வெறிமிகு மாந்தர்களே
சுகம்தனில் மிதந்திடும் வேந்தர்களே
ஆட்டத்தை நிறுத்துங்கள்
அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்'
புத்தி சொல்லும் கோமாளியின் முகத்தில் கனவான் ஒருவன் கிரீம் எடுத்து அடித்து அவமானப்படுத்தி 'நிறுத்து' என்று கத்த,
அந்த ஏழைக் கோமாளியோ,
'நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே'
என்று எலும்பும், தோலும் காட்டும் வறுமைக் குழந்தைகளோடு பாடுகிறான்.
படத்தில் தந்தைக்கு நடிகர் திலகம் கூத்தாடுவது பிடிக்காது. அப்படிப்பட்டவர் இந்த ட்ராமாவுக்கு வந்துவிட, மேடையில் ஏழைகளுக்கு ஆதரவாக பாடி ஏய்ப்பவர் கூட்டத்திடம் சவால் விடும் நடிகர் திலகம்,
'கொற்றவனே வந்தாலும்
என்னைப் பெற்றவனே வந்தாலும்'
என்று பாடிக் கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்து தந்தையைப் பார்த்துவிட்டு, பயத்தில் பாடத்தை மறந்துவிட்டு, திரை மறைவில் ஒருவர் வசனத்தை எடுத்துக் கொடுக்க, ('முடியாது' என்று எடுத்துக் கொடுப்பார்) அதையே நடிகர் திலகமும் இனி தந்தை முன்னால் தன்னால் நடிக்க முடியாது என்பதை அதே
'முடியாது'
வார்த்தையை வைத்தே நடுங்கிப் பாடி பயந்து ஓட. இழுத்து மூடு ஸ்க்ரீனை.:)
செம ரகளை. சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும். நடிகர் திலகத்தில் அசாத்திய கோமாளித் திறமை சேட்டைகளை அனுபவித்து பார்த்து ரசிக்கலாம். வழக்கம் போல வியக்கலாம்.
சோ, மனோரமா, நாகேஷ் இது போன்ற சினிமாக்களில் வரும் கூத்து நாடகங்களில் நிறைய நடித்திருப்பார்கள்.
இனி தேடிக் கண்டு பிடித்து குஷிப்படுத்துவது உங்கள் பொறுப்பு. பார்ப்போம். யார் யார் தூள் கிளப்புகிரீகள் என்று.:)
http://www.dailymotion.com/video/x2fjpf0