சமயங்களில் பூசப்பட்ட வண்ண சாயங்கள்
விதைத்து வளர்ந்த ஏராள சம்பிரதாயங்கள்
மதியை மயக்கி இயந்திரமாக்கும் சக்திகள்
வரிசையாய் வருடம் முழுக்க விழாக்கள்
வரண்ட வாழ்வில் மாயக் கவர்ச்சிகள்
மேன்மை பெற உதவாத மார்க்கங்கள்
Printable View
சமயங்களில் பூசப்பட்ட வண்ண சாயங்கள்
விதைத்து வளர்ந்த ஏராள சம்பிரதாயங்கள்
மதியை மயக்கி இயந்திரமாக்கும் சக்திகள்
வரிசையாய் வருடம் முழுக்க விழாக்கள்
வரண்ட வாழ்வில் மாயக் கவர்ச்சிகள்
மேன்மை பெற உதவாத மார்க்கங்கள்
மார்க்கங்கள் எத்தனையோ;
வழிகள் எத்தனையோ;
புத்தகங்கள் எத்தனையோ;
ஆசிரியர்களும் நிறைய;
இருப்பினும்
வெற்றிக்கனிக்கு வேண்டுமுழைப்பு
மனப்பூர்வத்துடன்
மனப்பூர்வத்துடன் இருவர் இணைவர்
அக்னி சாட்சியாய் நிறைந்த நன்னாளில்
மங்கல நாண் சூட்டி மஞ்சள் திலகமிட்டு
அவை நிறைந்த சுற்றம் உறவின் முன்
மாலை மாற்றி பூரண சம்மதம் சொல்லி
ஆசீர்வாதமுள்ள தேவன் திருச்சபையில்
மோதிரம் அணிவித்து இணைந்திடும் உறவு
முற்றாய் முடிவது பதிவாளர் அலுவலகத்தில்
அலுவலகத்தில்
சிற்றுந்து நிறுத்துமிடம்
மிகப் பெரிது..
தரைக்குக் கீழே என்பதால்
மிக விசாலம்..
நான்,
என் அலுவலக நண்பர்களான
இந்தியர்கள்,
ஸ்பானிஷ், டேனிஷ்
பாகிஸ்தானியர்கள்,
கொழும்பு நகரக்க் காரர்கள்
ஓமானியர்கள்
அனைவரும்
நிறுத்துவோம் ஒற்றுமையாய்...
எங்கிருந்து வந்தது எனத்
தெரியவில்லை
அந்தக் கறுப்புப் பூனை...
சிகப்பு ரோஜாக்களில் நடித்த
பூனையின் எள்ளுப் பேத்தியோ என்னவோ..
ரோஜா மொட்டைப் போன்ற
சின்னஞ் சிறு குட்டி
நிறம் மட்டும் வேறு..
வந்தது முதல்
அதன் மொழியில்
யாரைப் பார்த்தாலும்
அழைக்கும்
ச்ற்றே பரிதாபம் கொண்டு
ஒரு நாள்
கொஞ்சம் பால்
காகிதக் கிண்ணத்தில் வைத்ததில்
கொஞ்சமே கொஞ்சம் குடித்துவிட்டு
மறு படி மியாவ்...
உடன் வேலைபார்த்த லங்காபுரியர் ஒருவர்
கவலைப்படாதீர்கள் சார் என
ஆங்கிலத்தில் சொல்லி
தினமும்
தான் சாப்பிடும் மீன் ம்ற்றும் கோழி உணவை
சிறிச்சிறிதே கொடுக்க
அதுவும் வ்ள்ர்ந்தது
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
கறுப்பு நிலவாய்....
உலகம் அழியுமோ என்ன்வோ
தெரியாது
இந்த ம்ஸ்க்ட்டில் ஜ்னவ்ரியில்
க்டும் குளிர்..
வெட்டவெளியில் குட்டி
நாங்கள்
வேலைமுடித்து வீடு செல்லும் பொழுதில்
கொஞ்சம் ப்ரிதாப மியாவ்
காலை
வேலைபார்க்க வ்ந்து சேரும்பொழுதில்
உற்சாக மியாவ்..
கடந்த் சில தின்ங்க்ளில்
மியாவ்வின்
ஒலிமட்டும் கம்மியாய் இருக்க்
அது இருக்கிறதே என்
ஒருவகை நிம்மதி..
அதுவும்
]கலைந்து போனது
சில தினங்க்ளாய்...
குளிரிலேயே இறந்திருக்குமோ
யாரும் எடுத்துச் செல்ல்வில்லை
எனச் சொல்லின்ர்..
கஷ்டமாய்தான் இருந்தது
இருக்கிறது..
என்ன ஆயிற்றோ..
ஆனால்
இப்பொழுதும்
சிற்றுந்தைக் காலையில்
நிறுத்தும் பொழுதெல்லாம்
கேட்கிற்து
மியாவ் என்ற ஒலி...
ஒலியின் மொழிக்கு உண்டோ அகராதி
உணர்த்தும் பொருள் உண்டே பல நூறு
உம் என்று பெண் உதிர்க்கும் ஒரு சத்தம்
எச்சரிக்கை மணியடிக்கும் ஆண் மனதில்
ஆ என்றால் அர்த்தங்கள் ஓர் ஆயிரம்
ஏற்றி இறக்கினால் பல உணர்வை சொல்லும்
ஓ என்னும் ஒலிக்குள் ஒளிந்திருக்கும்
வார்த்தையில்லா வலுவான பல சேதி
வக்கணையாய் வரி வரியாய் பேசாமல்
இணைக்கும் பாலம் ஒலிகள் ஆதி முதலாய்
ஆதி முதல் அந்தம் வரை
எப்படி ஆரம்பம்
எப்போது முடிவு
என்பது தெரியாவிட்டாலும்
தேடல்களில்
தொடர்ந்துகொண்டிருக்கிறது
மனித வாழ்க்கை..
கொஞ்சம் சுவாரஸ்யமாய்
சுவாரஸ்யமாய் இருந்தது ஒரு கதை
வலை மனையில் உலா வந்த கவிதை
பாராட்டத்தெரியாத புருஷன் ஒருவன்
பொழுதுக்கும் புகழ்ந்தான் பெத்தவளை
மட்டம் தட்டியதில் நொந்த பெண்டாட்டி
அவன் அம்மா செய்யாத ஒன்றை சிறப்பாக
செய்திட வீறு கொண்டு எழுந்தாள் ஒரு நாள்
ஓங்கி அவனை அறைந்துவிட்டாள் கன்னத்தில்
கன்னத்தில் முத்தமிட்ட கணத்தைத்தானெண்ணி
..கன்னியவள் நிற்கின்றாள் கற்சிலையாய் ஆங்கே
வண்ணமய நினைவுகளும் வார்த்தைகளும் நெஞ்சில்
..வழுக்காமல் விகசித்தே சிரித்திருக்கும் நன்றாய்
ப்ண்ணிசையை ரசித்தபடி தானிருந்த அன்பன்
..பட்படத்துப் பறந்த்விடம் தெரியவில்லை தானும்
மன்னனவன் திரும்புவதைக் கேளாமல் விட்டே..
..ம்யங்குகிறாள் தயங்குகிறாள் தவிக்கின்றாள் மாது..
மாது அணிகிறாள் கவசம்
கமழுது அவள் தனி வாசம்
வாய் கூசாமல் ஆண் வீசும்
அதே பழைய அசிங்க வசனம்
இன்னுமா அவளுக்கு காது கூசும்
அமைதியும் அறிவும் அவள் வசம்
அவள் வசம் சிக்கிய பார்வை
மீண்ட் போது
நடையில் துள்ளல்..
என்னப்பா எனக் கேட்டால்
நிறையக் கிடைத்ததாம் க்ளூக்கோஸ்...
க்ளூக்கோஸ் பெண்ணே
ஸ்டீராய்ட் கண்ணே
பந்தயக் குதிரையாய்
பல்ஸ் எகிறுதே
அவசர சிகிச்சை
அளிக்காவிட்டால்
உயிர் பிரியும் உடனே
பாடியாய் மாறிடுவேன்
மாறிடுவேன் என
நினைக்காதிருந்த
வீரபாண்டியனாகிய நான்
மாறியதற்குக் காரணம் அவர்..
நாடகத்தில்
அன்னையாக நடித்தவரிடம்
எவ்வளவு மரியாதை காட்டியிருப்பேன்..
என்னை
குடவோலை த் திட்ட்த்தில்
வெற்றி பெற வைத்து
அவையில் எதிராக அமர வைத்தவர் அவர்..
மறுப்பதற்கில்லை..
மக்கள்
என் மீது நம்பிக்கை வைக்கவில்லை..
கொஞ்ச்ம் கவர்ச்சி தான்...
ஊரெல்லாம் அவரை
அன்னை என்றாலும்
என்னிடம் மட்டும் அவர் காட்டுவ்து
சித்தி மனப்பான்மை..
நாடகத்தில்
எதிரிகளை முழு நீள
ஆடை புனைந்து
அடித்துதைத்த நான்
எவ்வளவு காலம் தான்
புவனமகாதேவியின்
அவையில் மெளனம் சாதிக்க முடியும்..
அதுவும் எனது
வாரிசுக்காக்
நாடகம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில்...
எவ்வளவு குட்டுகள் தான்
என்னால் வாங்க முடியும்..
அது தான்
இன்று பொங்கி எழுந்தேன்
உள்ளூர பயமிருந்தாலும்...
வெளியேற்றப்பட்டாலும்
நான் பனித்துளி போல் மறைபவன் அல்ல..
எர்ர்ரிமலை...
பொங்கிக் கொண்டே இருப்பேன்..
கேள்விகேட்பவரிடம்
சித்தியைப் பற்றிக் குற்றம் சொல்வேன்..
படை திரட்டி
மறுபடியும் அரியாசனத்தை அடைவேன்
என்றெல்லாம் சொல்ல நினைத்தாலும்
சொல்ல மாட்டேன்..
ஏனெனில் நான் ஒரு
அரசியல்வாதி..
குருபார்வை சீக்கிரம் வருமென்று
ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார்
கண்டிப்பாக
வெற்றி அடைவேன்....
மனசு மட்டும் புலம்புகிறது
இந்த வீரபாண்டியன்
வெற்றி அடைவானா..
அடைவானா இலக்கை
சுவைப்பானா தேனை
உச்சிக் கொம்பில் இருக்கு
கூட கொட்டும் கொடுக்கு
கெஞ்சலும் கொஞ்சலும்
கொஞ்சம் கரிசனமும்
கோடிகள் கொடுக்காத
கனிந்த பக்குவத்தை
கொடுக்காதோ காய்த்த
காரிகையின் மனதிற்கு
காரிகையின் மனதிற்கு
என்ன ஆகும் என
காளைக்கு என்றும் குழப்ப்ம் தான்..
அழகாய் இருக்கிறாள்
அணைக்கலாம் என
அருகில் போனால்
வெடிக்குது எரிமலை..
சரி கொஞ்சம் விலகி இருக்கலாம்
என இருந்தால்
குளிர் ம்தியாய் முகத்தில் சிரிப்பு...
ம்ம்
எந்தக் காலத்திலும்
இப்படி இருக்க் யார் செய்தனர் விதி
விதி ஒன்று உருவானால்
விலக்கு ஒன்றும் பிறக்கும்
ஒளியோடு இருளும்
ஆணியோடு சுத்தியலும்
சேர்ந்தே இருக்கும்
நீ கழுவுற நீரில்
நழுவும் மீனாயிரு
மீனாயிருக்கத் தான் ஆசை
சமர்த்தாய்
நீந்திக் கொண்டே
அழகுக் காட்சிகளை ரசித்தபடி
அழுக்குகளை உடலில் மட்டும்
வாங்கியபடி
பதிலேதும் பேசாமல்
மெளனமே மொழியாக வைத்து
இருப்பதற்கு..
நிலத்திலும்...
நிலத்திலும் நீளும் எல்லை வெறுக்கும் கடலரசன் கைகள்
அபகரிக்கும் ஆசை கொண்ட தொடர் தொடு ஆசைகள்
கெஞ்சிக் கொஞ்சி வருடிச் செல்லும் செல்ல அலைகள்
என் அடுக்களை ஆட்சி போனதே டைபாயிட் காய்ச்சலால்
காய்ச்சலால் கொஞ்சம் நன்றாக
வெடவெடவென்று
இருந்தது..
பொரித்தால் பூவாய் மலர்ந்து
பரப்பிய வாசத்தால்
குழந்தைகள் வந்து
படக் படக் கென எடுத்து
உண்டதில்
எனக்கு எதுவுமில்லாமல்
தீர்ந்து போனது வடகம்..
ஆனால் நிறைந்திருக்கிறது
வயிறு...
வயிறு மேடிட்டது
ரகசியம் உடைந்தது
கூடலின் கூட்டலிது
பெண்மை மெருகேறியது
பேரின்பம் உணர்வானது
வரமான பெரும் பேறிது
'பெரும் பேறிது..”
சொன்னதற்குச்
சலனமேதுமில்லாமல் இருந்தது
பக்கத்துவீட்டுக்காரன் முகம்..
‘ஆமாமாம்..
இரண்டு தடவை
பாதியிலேயே வந்துவிட்டது..
பின்னர்
சிற்ப்பு வைத்தியரிடம் சென்று
மருந்து,முயற்சி, பிரார்த்தனை,
பின்
உடல் நிலையில் கவனம் என
இருந்தும்
ஆறரை மாதத்திலேயே
நீர் குறைவாம்.. சிசேரியனாம்
செய்ததில்
இரட்டைப் பெண் குழந்தைகள்..
வெகுகவனமாக
இன்குபேட்டரில் தான் வைக்கவேண்டுமாம்
ஒரு மாதம்..
மருத்துவச் செலவு பத்து லட்சம் தாண்டும்...
ஏற்பாடெல்லாம் செய்துவிட்டேன்..
இருந்தும்...”
படபடவெனப் பொறிந்தவனை
நெற்றிச் சுருக்கி நான் பார்க்க..
’இரண்டு மாதம் கழித்து தான்
ஊர் போய் பார்க்க முடியும்...
எனக்கு விடுமுறை கிடைக்காது இப்போது...”
கொஞ்சம் கொஞ்சமாய்
உள்சென்ற குரலில்
தெளிவானது அவன் ஏக்கம்...
ஏக்கத்தின் இலக்கு எட்டும் உயரத்திலா
ஏணி வைத்து ஏறி எட்டி விடலாமா
விடாது முயன்று கனியைப் பறித்துவிடு
கரணம் போட்டாலும் ஆகாத காரியமா
கடுகளவும் சாத்தியமில்லா கனவதுவா
மறந்துவிட்டு மாற்றி யோசிக்கலாம் வா
எட்டுவதா ஆகாததா என கண்டறிவாய்
நல்விவேகமுடன் தேர்ந்தெடு நலமாய்
நலமாய் இருக்கிறாயா..இருக்கிறீர்களா..
செளக்கியம் நீ..நீங்கள்..
இங்கு மஸ்கட்டில் ஒரு சின்ன வேலை..
வந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள்..
ஆமாம் நீ நீங்கள்..
அதே மதுரை தான்..
உனக்கு..உங்களுக்குத் தான் தெரியாதா..
ஓ ஐ நோ... கான்ஸ்டபிளாய் த் தானே சேர்ந்தாய்..
இப்போ என்ன எஸ்.பியா..
ஜோக் அடிக்காதடா அடிக்காதீர்கள்..
இப்போ எஸ் ஐ தான்..
அதே புதூர் தான்..
வீடு தான் மாறி விட்டேன்..
எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள்
உனக்கு..உங்களுக்கு
எனக்கு ஒரு பெண்..
துபாயில் படிக்கிறாள் காலேஜில்..
உன்.. உங்க பசங்க..
ஒருத்தன் பிபிஓவில் வேலை..
போனவருடம் தான் கல்யாணம் நடந்தது..
சின்னவன் காலேஜ் போகிறான் பி பி ஏ..
ஓ..
நீ நீங்கள் எப்போ வருவீர்கள்..
அனேகமாக ஜூன்..
கண்டிப்பாக மதுரை வாடா..வாங்க..
ச்ச்.. வாடான்னே கூப்பிடுங்க..
நீங்க நீ மட்டும்..
சரி வர்றேண்டா...
அதுக்கு முன்னால் அடிக்கடி ஃபோன் பண்ணுடா..
கண்டிப்பா..
பலவருடங்களுக்கு முன்
பழகிய கல்லூரி சினேகத்துடன்
தொலைபேசியது சந்தோஷமாய்த் தான்
இருந்தது..
அதன் பிறகு
இன்று வரை
ஏனோ அவனும் , நானும்
பேசிக்கொள்ளவேயில்லை..
விடுமுறையில் சென்ற போதும்...
அவன் தொலைபேசி எண்ணை
மறந்துவிட்டேன்...
காரணம்
நிச்சயமாகப் பயமில்லை..
ஏதோ ஏதோ ஏதோ ஒரு.....
ஒரு கணம் ஒரு யுகம் ஆவதேன்
ஒரு பார்வையில் பைத்தியமாவதேன்
எல்லாம் பருவத்தின் கோளாறு
இனம் விருத்தியான வரலாறு
வரலாறு நம்மை
என்னவென்று சொல்லும் குழந்தைகளே
சண்டை போடாதீர்கள்...
குலசேகர பாண்டியர் புலம்பினார்
வீரபாண்டியனையும் சுந்தர பாண்டியனையும்
பார்த்து...
வேண்டுமானால்
வீரா பாண்டிய நாட்டை வைத்துக் கொள்ளட்டும்
சுந்தராவிற்கு பல்லவ நாட்டை
படையெடுத்து சுருட்டித் தருகிறேன்
சண்டையில்லாமல் இருங்கள்
இருமியபடியே குலசேகரர் சொல்ல
இரக்கமில்லாமல் சண்டை தொடர..
மறுபடியும் புலம்பினார் அவர்..
சேர்த்ததெல்லாம் உங்களுக்குத்தானே..
சரி..ஈ...மற்ற ஊரில் இருக்கும் உங்கள் தங்கைக்கும் தான்..
ஏன் சண்டை
சமாதானமாக இருந்து
மக்களை ஏமாற்றுங்களேன்..
தெய்வமே..
நீ இல்லாதிருப்பது உண்மையென்றால்
இவர்க்ள் மாறட்டுமே சீக்கிரம்...
உருக்கமான புலம்பல் கேட்டு
வானத்தில் மேகங்க்ள் சூழ்
இடியுடன் கூடிய மழை
பொழிந்து நனைத்தது மண்ணை..
மண்ணைத் தின்றான் மாயக்கண்ணன்
அன்னை கொண்டாள் கடுங்கோபம்
வாயைத் திறக்கச் சொன்னாள்
உண்மைதானா என சோதித்திட
மகன் காட்டிய அதிசய காட்சி
கதைகளின் ஈர்ப்பின் ஒரு சாட்சி
சாட்சியாய்..இல்லை சாட்சிகளாய்
மேலே நிலா
உடல் மேலே குளிர் தென்றல்...
அந்த அழகிய ஆல மரத்தின்
இலைகள் சலனித்ததால் வந்த சத்தம்..
சற்றே சிறிய தூரத்தில்..
சரி..ஒரு நான்கு தப்படி தொலைவில்..
சல்லென்று ஓடிய ஆற்று நீரின் மெல்லிய ஒலி...
கருவண்டா சில்வண்டா அல்லது ஏதோ ஒரு பூச்சியா..
எது எனத்தெரியவில்லை..
கிக் கிக் கிக் என சத்தம் மட்டும் கேட்டது...
பின்
நான் காற்கட்டை விரலால்
கொஞ்சம் ஆழமாய் ஏற்படுத்திய பள்ளம்
இன்னும் இருக்கலாம்...
அன்று நீ கொடுத்த
ஆழமான உணர்ச்சியான..
ஆசையான
இன்னும் என்ன்வெல்லாமோ ஆன்
முத்தம்
இன்னும் நினைவில்..
இப்போதெல்லாம்
ஏன் ஓடுகிறாய்
கொஞ்சம்
கொஞ்சும் இதழுடன்
அருகில் வந்தாலே...
நான் மூன்று முறை
பல் துலக்குகிறேன்
போதாதென்று
வாய் துவைப்பானை வைத்து
கொப்பளிக்கிறேன்..ம்ம்
ஒரு வேளை
கல்யாணமாகி
இருபது வருடம் ஆனது தான்
காரணமா..
அட் ப்ட்வா...
அட படவா...
செல்லமாய் திட்டிக்கொண்டிருந்தாள்
திரையில் கொல்லிப்பாவை ஒருத்தி
கண்டதே காட்சி கொண்டதே கோலமாய்
சினிமா சீரழிக்கும் விதத்தை விந்தையை
கலாசாரம் பயணிக்கும் காட்டுப்பாதையை
சற்றே அவதானிக்கலாமென எண்ணினால்
முன்னிருக்கையில் முட்டிக்கொண்டிருக்கும்
மண்டைகள் இரண்டும் திரையை மறைக்க
அலுவலகம் கல்லூரியிலிருந்து வரும்
அனாமத்து ஜோடிகளால் எம்போன்றோர்க்கு
அடடா எத்தனை எரிச்சல்...
எரிச்சல் தான் வருகிறது..
முகம் வெளுக்கத் தடவும் க்ரீம்
வைத்த இடத்தில் இல்லை..
இருந்த இடத்திலோ
கொஞ்சம் கண்டப்டி நசுங்கி
பரிதாபமாய்...
ஏற்கெனவே இருக்கும் செவ்விதழை
செவ்வ்விதழாக்க
உதட்டுச் சாயம் எடுத்துத் தடவினால்..
ஏதோ ஒரு குறை...
யாரோ உபயோகித்தாரா...
சரி..
பீரோவைத் திறந்து
பிடித்த பிங்க் சுடிதாரைத் தேடினால்..
க்டைசி வ்ரை காணோம்
ம்ம்
இஷ்டமில்லாமல் ஆரஞ்சு சுடிதார்
அணிந்தாயிற்று..
ஒர்ரே வெய்யில்..
வெளிக் கிளம்புவதற்கு ஏற்ற
பார்ஷே குளிர்கண்ணாடி
அப்பா ஆசையாய் வாங்கிக் கொடுத்தது..
தேடினால் அதையும் காணோம்...
கைப்பை...
எப்போதும் நாலைந்து இருக்கும்
சணலில் ப்ளாஸ்டிக்கில் லெதரில் துணியில்..என
விதவித நிறத்தில்..
ரொம்பப் பிடித்த ஆரஞ்சு சணல் கைப்பை
எங்கே போயிற்று..
சரி
ஹை ஹீல்ஸ்
பாண்டிபஜாரில் கொஞ்சம் பேரம் பேசி
மலிவாய் நானூறு ரூபாய்க்கு வாங்கியது..
அதையும் காணோம்..
ஊப்ஸ்
என்ன இன்று எதுவுமே கிடைக்க மாட்டேன் என்கிறது
கிடைத்த செருப்பைப் போட்டு
வெளியில் வந்தால்..
அட யார் இது..
அழகாய்
நம்முடையதைப் போலவே
பிங்க் சுடிதார்...
கறுப்புக் கண்ணாடி..
செருப்பு....
அடர்த்தியாய் உதட்டுச் சாயம்...
எங்கோ பார்த்த மாதிரி..
நொடியில் அடையாளம் புரிந்து
அடிவயிற்றிலிருந்து கத்தினேன்...
பாட்டீஈஈ.....
ஏதோ ஒரு ரகசியம் ரத்த உறவின் பிணைப்பில்
பிள்ளைகளின் ருசி பெத்தவளுக்குத் தெரியும்
பெத்தவளின் பாசம் பிள்ளைகளுக்குத் தெரியும்
காதங்கள் பிரிக்காத பாலமாய் பிணைத்திருக்கும்
பாட்டீஈஈ..
செல்லப்பேத்தியின் அபயக்குரல்
ஈரக்குலை பதறியது
என்னாச்சோ ஏதாச்சோ
சின்டிரல்லாவை சித்தெறும்பு கடிச்சதோ
அரோராவுக்கு ஆராரோ பாடணுமோ
பார்பி கண்ணாடியை தொலைத்துவிட்டாளோ
பெல்லாவுக்கு பேரிக்காய் வேண்டுமோ
கூப்பிட்ட குரலுக்கு போட்டது போட்டபடி
ஓடி வந்து நிற்பது பேரின்பம்
பேரின்பம் டா...
சின்ன வயதில்
பக்கத்து வீட்டுத் தாத்தா
மெல்லிய மரக்கலரில்
இருக்கும் வாழைப்பட்டையைப்
பிரித்து
சின்னதாய்
ஆட்காட்டி விர்ல் கட்டைவிரல் சேர்த்து
ஒரு சிட்டிகை எடுத்து
ச்ர்ர்ரென்று மூக்கில் விட்டு
கண்கள் கலங்க சொல்வார்..
ஆச்சரியமாய்ப் பார்ப்பேன்...
பின் அப்பா..
ரகசியமாய்
ரேழியில் கதவுக்கு
மேலிருக்கும் ஷெல்பில்
ஒரு பாலித்தீன் பேக்கட்
எடுத்து
ஒரு சிட்டிகை வாயில் போட்டுச்
சொல்வார்..
ஹப்பாடா
லூஸ் புகையிலையாம்..
பின்னர் தான் தெரிந்தது..
வளர வளர
பேரின்பங்க்ளும் மாற மாற..
எது நிலையானது எனத்
தேடல் மனதில் வர...
இன்று வரை
கிடைக்கவில்லை..
கிடைக்கவில்லை ஓர் இடம்
கையிலிருக்கும் திரவியத்தை
கண் காணாமல் ஒளித்து வைக்க
களவு போகாமல் பாதுகாக்க
கசிகிறது வட்டு கருப்பட்டியாய்
கரைகிறது உறைந்த பனிக்கட்டியாய்
காப்பாற்றவே முடியாமல் போகுமோ
கடலில் கரைத்த பெருங்காயமோ
கனவித்தனை நிறைவேறிய இன்பத்தை
கரை சேர்க்கும் கலங்கரைவிளக்கத்தை
கசப்பின்றி கடைசி நொடியை கடக்கவென
கை பிடித்து நடத்தும் தன்னம்பிக்கையை
காற்றில் கரையாத கற்பூரமாய் காக்க
கருவூலமாய் கனிந்த மனமது உதவுமா
உதவுமா என நினைக்காமல்
ஏதோ நினைவில்
நிதம் ஊற்றிய தண்ணீரால்
செடி வளர்ந்து
மரமாகிக் கொஞ்சம் நிழல் தருகிறது..
உதவும் என நினைத்த்வை
கொஞ்சம்
எதிர்மறையாகப் போகின்றது..
என்ன செய்ய
வாழ்க்கைப் பாடம்...
பாடத்தை பட்டுத்தான் படிக்கணுமா
தீயை தொட்டுத்தான் சூடறியணுமா
பட்டவர்கள் பட்டதை பார்த்தவர்கள்
மூதுரையும் பழமொழியும் போதாதா
போதாதா என்றால் இல்லை தான்..
சிலசம்யம் பட்டுத்தான்
தெரிந்து கொள்ள் வேண்டியிருகிற்து
பெண்ணிட்மும்..
தொட்டுத் தான் புரிந்து கொள்ள
வேண்டியிருக்கிறது
செல்ஃபோனிடமும்...!
செல்ஃபோனிடமும் டிவி ரிமோட்டிடமும்
தீராத பகையும் வெறுப்பும் தொடர்கிறது
அவற்றை இயக்கும் கம்ப சூத்திரம் மிரட்டுது
கிழட்டுக் குதிரைக்கு புது வித்தை வராது
வேண்டாத, மனம் வேண்டாத அநாவசியங்கள்
கர்ணனின் கவச குண்டலமாய் அனைவர்க்கும் கைபேசி
ஆற்றும் வினைகளோ ஆயிரம் எல்லோர்க்கும் செல்லம்
ஏனோ மயக்கவில்லை என்னை இதுவரைக்கும்
பண்பலை வரிசைகள் பாட்டோடு ஊர் சங்கதியை
பாங்காக வழங்கக் கேட்பதின்பம் எனக்கு
சின்னத்திரை சித்திரங்களோ சித்திரவதைகள்
சீரியல்களில் சிரிப்பாய் சிரிக்கும் கருமங்களில்
சிக்காத சின்ன மீன் மாட்டிக்கொண்டது இணைய வலையில்
இணையில்லா இன்பப் பெருவெளியில் என் ஜன்ம சாபல்யம்
ஜன்ம சாபல்ய்ம் அடைஞ்சுடும்
பெருமாளைப் பாத்தால் போதும்
என்று சொல்லிக் கொண்டிருப்பாள்
எதிர்வீட்டுப் பாட்டி..
அங்கிங்கே வேலை பார்த்து
சிறுகச் சிறுகச்
சேர்த்தும் வைத்திருந்தாள்...
ஒரு தடவை
விட்டுச் சென்ற மக்ன்
எதற்கோ வர
முகமெல்லாம் மலர்ச்சி..
சற்று நேரத்தில்
அவன் சென்றுவிட
என் வீட்டுக்கு வ்ந்தாள்..
என்ன என அம்மா கேட்டதிற்கு
ஏதோ கஷ்டமாம் கொஞ்சம்
துட்டு கேட்டான் கொடுத்தேன்
அடிப்பாவி..
ஒனக்கோ கொஞ்சம் தானே வ்ருமானம்...
இருந்தாலென்ன
பெருமாளுக்கு வச்சுருந்தது
எடுத்துக் கொடுத்துட்டேன்..
எப்படியும்
அங்க என்னை சேர்க்கப் போறவன்
இவன் தானே...
சொன்ன பாட்டியின் முகத்தில்
புன்சிரிப்பாய்
வழிந்து கொண்டிருந்தார் பெருமாள்..
பெருமாள் பெரிய புத்திசாலி பகவான்
பாவிகளும் அப்பாவிகளும் தேடி வர
பெரிய லட்டும் பெரிய உண்டியலுமுண்டு
பெரிய நாமம் கரிய முகத்தை மறைக்க
பொன்னாபரணங்கள் மலைமேனி மூட
பச்சை கற்பூர தீர்த்தம் துளசி கமழ்ந்திட
போதாததற்கு பொங்கல் புளியோதரை
பிரசாதங்கள் மடப்பள்ளியில் மணக்க
பக்தி காணுது புதுப் புது அர்த்தங்கள்
பரவசமாய் சேவிக்கின்ற அடிபொடிகள்
அடிப்பொடிகள்
நீதிமன்றத்துள் சென்ற
புவனமகாதேவியைப் பார்த்து
இவ்வண்ணம் பேசிக் கொண்டார்கள்
‘பெரிய இடம் தான்
என்ன தான் மன்னரின் மகளென்றாலும்
நீதி என்று ஒன்று இருக்கிறது..
மன்னர் மகள்
தவறு செய்திருப்பார் என்றே தோன்றுகிறது’
நீதி வழங்கி
புவனமகாதேவி நிரபராதி என்றதும்
மறுபடி பேசினர் அவர்கள்..
“எனக்கு முன்பே தெரியும்
எப்படியும்
மன்னரின் மகள் இவ்வண்ணம் என்று..
அவரது கையில் இல்லை கறை”
கறை கையில் படிந்துவிட்டதென
கழுவுகிறாள் கழுவுகிறாள்
கழுவிக்கொண்டேயிருக்கிறாள்
கொலை செய்த லேடி மேக்பெத்
அரேபியாவின் அத்தனை வாசனை திரவியமும்
அந்த சின்னக் கையின் கறையை கழுவிட போதாதாம்
குருதியின் வாடை குற்றத்தின் சுமை துயில் தொலைக்கும்
கவிஞரின் மொழியின் அழகும் ஆழமும் அடடா என்னென்பேன்