Guys,
Just curious, is PP running for second week?
Mr. Swamy, what about collection? Hope our god's PP collection should have broken any other Tamil films actors...
Long live our god NT fame
Cheers,
Sathish
Printable View
Guys,
Just curious, is PP running for second week?
Mr. Swamy, what about collection? Hope our god's PP collection should have broken any other Tamil films actors...
Long live our god NT fame
Cheers,
Sathish
Dear kumaresan sir,
I'm doing fine,thankyou.Please visit this site regularly and contribute as much as possible.
When are you going to repeat the chennai scene in bangalore?
நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி இந்த இணைப்பில் கண்டு மகிழுங்கள் :D
http://www.24x7mediaclips.com/koondu...49ee2d9e5.html
நடிகர்திலகத்தின் 9வது நினைவுநாளை முன்னிட்டு ராணி வார இதழின் 25-7-10 தேதியிட்ட பதிப்பில் வெளிவந்த கவிதை:
கலை மண்டபத்தின்
'கல்தூண்' சரிந்த நாள்!
திரை உலகத்தின்
'இமயம்' சாய்ந்த நாள்!
நடிப்பின் -
இலக்கணப் புத்தகம்
கிழிக்கப்பட்ட நாள்!
நடிக்கத் தெரிந்த
திலகம்
மறைந்த நாள் !
கண்களையும்,
இமைகளையும்
நடிக்கவிட்டு
கலங்கவிட்டவனே !
கண்களை மூடிக்கொண்டு
த்மிழ்க் கண்களை
ஏன் அழவிட்டாய்?
சிரித்துக்கொண்டே அழவும்:
அழுதுகொண்டே
சிரிக்கவும் தெரிந்தவனே !
இப்பொழுது - உனக்காக
அழ மட்டுமே தெரிகிறது
எங்களுக்கு !
நடந்தாலும்
அசைந்தாலும்
நடிப்புக்கு
ஆதாரம் - நீ !
அச்சரப்பிழை இல்லா
தமிழ் உச்சரிப்பிக்கு
உதாரணம் - நீ !
அடைமொழிக்குள்
அடக்கிட முடியா
அற்புத கலைஞன் - நீ !
மரணம் -
நீ ஒன்றும் நடிக்காத
பாத்திரமில்லை !
இயக்குநர்களுக்கு இசைந்து
எத்தனையோ முறை
மரணித்தவன் தானே !
மருத்துவருக்கு
இசைய மறுத்து
மறைந்துவிட்டாயே ஏன் !
மரித்திருக்கமாட்டாய் - நீ
மரணத்தைத் தத்ரூபமாக்கிட
நடித்திருக்கக்கூடும் -நீ !
- க.முத்துநாயகம்
லாலாக்குடியிருப்பு
திரு.காவேரிக்கண்ணன்,
தங்களது மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்! தாங்கள் விடுமுறையில் வரும் சமயம் நாம் அனைவரும் அவசியம் சந்திப்போம்!! தாங்கள் அளித்த இரு பதிவுகளுமே அழகே உருவான இரு மலர்கள்!!!
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி! தங்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதே எனக்கு பாக்கியம்!
டியர் செந்தில் சார்,
முத்தமிழின் நாயகன் பற்றி முத்துநாயகம் எழுதிய முத்தாய்ப்பான கவிதையை பதிவிட்டமைக்கு நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
டியர் செந்தில்
முத்து நாயகம் கவிதையை முத்தாரமாக வழங்கிய தங்களுக்கு நன்றிகள் பலப்பல.
டியர் பம்மலார்
தங்களைப் போன்ற இளைய தலைமுறை ரசிகர்களுடன் படம் பார்ப்பதே எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கக் கூடிய பெரும்பேறு.
ஊர்ஜிதமாகாத தகவல்களின் அடிப்படையில் வந்துள்ள செய்தி.
புதிய பறவை சென்னை சாந்தி திரையரங்கில் வசூல் சாதனை .. கிட்டத் தட்ட மூன்றே கால் இலட்சங்களுக்கு மேல் வசூலாகியுள்ளதாக செய்தி. ஒரே வாரத்தில் இந்த வசூல் பழைய பட மறு வெளியீட்டு வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும். அதுவும் இருக்கை கட்டணங்கள் ரூ. 80.00 மற்றும் 60.00 என்ற அளவில்.
அடுத்த வாரம் அதாவது வருகின்ற 06.08.2010 வெள்ளியன்று வடசென்னை பாரத் திரையரங்கில் புதிய பறவை திரையிடப்பட இருப்பதாக தகவல். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணவேணி, பின்னர் உட்லண்ட்ஸ் சிம்போனி, மற்றும் மினி மோட்சம் திரையரங்குகளிலும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல். தகவல்கள் உறுதியாகும் வரை பொறுத்திருப்போம்.
அன்புடன்
ராகவேந்திரன்
:happydance:Quote:
Originally Posted by RAGHAVENDRA
waiting, waiting....eagerly waiting.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 86
கே: நடிகர் திலகத்தால் மட்டும் எந்த கேரக்டர் என்றாலும் எப்படி அவ்வளவு சிறப்பாக நடிக்க முடிந்தது? (ஈ.சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர்)
ப: மற்ற நட்சத்திரங்களை விட நிலவு ஏன் அதிகக் கம்பீரத்தோடு நிற்கின்றது...?! அது போலத் தான் இதுவும்.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 மார்ச் 2006)
அன்புடன்,
பம்மலார்.
pammalr sir, your'e writings on Pudhiya Paravai...sema kalakkal.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 87
கே: நடிகர் திலகமும், மக்கள் திலகமும் சேர்ந்து ஒரு படத்தில் ஏன் நடிக்கக் கூடாது? (கே.எஸ்.ஸ்ரீநிவாஸபிரசாத், மைசூர்-1)
ப: கேட்பது சுலபம், செய்வது கடினம்.
(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1970)
அன்புடன்,
பம்மலார்.