Dear Rangan Sir,Quote:
Originally Posted by rangan_08
Thank You So Much!
Regards,
Pammalar.
Printable View
Dear Rangan Sir,Quote:
Originally Posted by rangan_08
Thank You So Much!
Regards,
Pammalar.
பிப்ரவரி 4ல் பாட்டும் நானே பாவமும் நானே என்று பம்மலார் கொளுத்திப் போட்ட (மன்னிக்கவும் நகைச்சுவைக்காக) துவங்கி வைத்த இந்த திரி, இந்த ஆகஸ்ட் 4ல் 100 பக்கங்கள் நிறைவடையக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளன. சரியாக ஆறு மாதங்களில் ஒரு பாகத்தையே முடித்து வைக்கும் அளவிற்கு வேகமாக இத்திரியை வளரவிட்ட பம்மலாருக்கு நமது வாழ்த்துக்களை அட்வான்ஸ் புக்கிங்காக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எப்படி நடிகர் திலகத்தின் படங்களுக்கு அட்வான்ஸ் புக்கிங செய்து போகிறோமோ (அன்று முதல் இன்று புதிய பறவை வரை ) அதே போல் பம்மலாருக்கு வாழ்த்தும் அட்வான்ஸ் புக்கிங்.
வாழ்க பம்மலார், வளர்க அவர்தம் மொழிபரப்புரை
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் ராகவேந்திரன் சார்,
உற்சவமூர்த்தியாக உலக மெகா நாயகர், அருள்பாலித்துக் கொண்டே அமர்ந்திருக்கும், திருவாரூர் தேர் போன்ற திருத்தேராகிய இத்திரியை, வடம் பிடித்து இழுக்கும் எத்தனையோ அடியார்களில் அடியேனும் ஒருவன். அவ்வளவே!
தங்களது உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் அன்பான புகழுரைக்கு எனது பணிவான, கனிவான நன்றிகள்!
இந்த நேரத்தில், இத்திரியின் இப்பாகத்தை தொடங்கும் படி அடியேனைப் பணித்த மாடரேட்டர் திரு.நௌ அவர்களுக்கும் மற்றும் ஏனைய மாடரேட்டர்களூக்கும் மற்றும் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்!
பணிவுடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 88
கே: 'ராஜ ராஜ சோழ'னில் சிவாஜியும்-லட்சுமியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் எப்படி? (மிஸ்.யாஸ்மின், திருச்சி)
ப: அனுபவம்-ஆர்வம் போட்டி போட்டுக் கொள்வது போல் இருந்தது.
(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1973)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 89
கே: நடிப்பைக் கண்டு ரசிகத்தன்மை வளருகிறதா, ரசிகத்தன்மையைக் கண்டு நடிப்புத்திறன் வளர்கிறதா? (வள்ளிமயில் சுப்பிரமணியம், கூளியூர்)
ப: நடப்பதைக் கூறுகிறேன். சிவாஜியின் நடிப்பை நாம் மெய்மறந்து ரசிக்கிறோம். அங்கே நடிப்பு சிறப்பு பெற நம் ரசிகத்தன்மை வளருகிறது. நாம் ரசிக்கிறோம் என்பதற்காக சிலர் சிவாஜி போல் நடிக்கவும் வசனம் பேசவும் முற்படுகிறார்கள். அப்போது ரசிகத்தன்மை வளர்ந்து அவர்கள் வளர வேண்டியவர்கள் என்று எடுத்துக்காட்டுகிறது.
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி
கேள்வி பிறந்தது நல்ல பதில் கிடைத்தது 89 ஐ தாண்டி விட்டதே? 100 எப்போது வரும்?
பதில்
பம்மலாரின் வேகத்தைப் பார்க்கும் போது இந்தத் திரி 100வது பக்கத்தை நிறைவு செய்யும் போது அதுவும் 100ஐ எட்டி விடும் என்று விரும்புவோமாக!
(இது ஒரு அவா மட்டுமே, நிர்ப்பந்தம் அல்ல )
அன்புடன்
ராகவேந்திரன்
Thanks Kaveri Kannan. Yes, we will meet in October.Quote:
Originally Posted by kaveri kannan
Regards
டியர் ராகவேந்திரன் சார்,
பாசத்தோடு தாங்கள் அளித்து வரும் பற்பல பாராட்டுக்களுக்கு எனது பல கோடி நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 90
கே: "இது வரை யாரும் நடிக்காத வெட்டியான் பாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார்" என்று 'பிதாமகன்' பாலா குறிப்பிட்டிருக்கிறாரே. 'ஹரிச்சந்திரா'வில் சிவாஜி ஏற்கனவே அதை செய்து விட்டாரே?! (வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயல்)
ப: படம் நெடுக வெட்டியானாக வருகிறார் விக்ரம் - என்ற அர்த்தத்தில் பாலா குறிப்பிட்டிருப்பார். சிவாஜி ஏற்காத பாத்திரம் என்று பார்த்தால்..... அதற்கு ஒரு ஆய்வுக் குழுவே அமைக்க வேண்டுமே!
(ஆதாரம் : நியூ பிலிமாலயா, அக்டோபர் 2003)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 91
கே: "சிவந்த மண்"ணில் சிவாஜி, "தர்த்தி"யில் ராஜேந்திரகுமார், யார் நடிப்பு சிறந்தது? (ப.அ.துரைசாமி, பார்வேபாளையம்)
ப: "சிவந்த மண்" ணில் சிவாஜி இமயம்.
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)
அன்புடன்,
பம்மலார்.