படத்தின் கதையை பற்றி பார்த்தோம் , படத்தை பற்றி , அதில் நடித்தவர்களின் நடிப்பை பற்றி , இன்னும் பிற அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்
இந்த படம் fantasy ,folkfore கதை தான் , இந்த படத்தின் கதை சின்ன அண்ணாமலை மற்றும் லட்சமணன் , சின்ன அண்ணாமலைக்கு அறிமுகம் தேவை இல்லை , சிவாஜி ரசிகர்களுக்கு , அவரை நன்கு பரிச்சியம் உண்டு , ரசிகர் மன்றத்தை நன்றாக ஒருகிணைத்தவர் , பிறகு ஜெனரல் சக்ரவர்த்தி , தர்மராஜா படங்களை தயாரித்தவர் , லட்சமணன் வித்வான் லட்சமணன் என்று நினைக்கிறன் சரியாக நினைவுஇல்லை
அதை போலே ஸ்டுன்ட் மாஸ்டர் பல்ராம் , அந்த காலத்தில் பெரிய fight மாஸ்டர் , ஒரே நேரத்தில் ஸ்டுன்ட் மாஸ்டராகவும் , நடன இயக்குனராகவும் இருந்தார் , துரதிஷ்டவசமாக ஒரு வெறி நாய் கடித்து இறந்து போனார் (MGR ஒரு சகப்தாம் என்ற நூலில் இருந்து )
இந்த மாதிரி படங்களில் action காட்சிகள் ஏராளம் ,சிவாஜி சார் முதல் முதலில் ஒரு taarzan படத்தில் நடிக்கிறார் , அதுவும் முதல் முதலில் தமிழில் வந்த taarzan படம், சண்டை காட்சிகள் படு பிரமாதம்
படம் ஆரம்பித்து 1 மணி நேரம் கழித்து தான் ஹீரோ introduction , 1952 ல் சினிமாவின் போக்கை தன் வசனம் பேசும் தமிழ் புலமையினால் ரசிகர்களை ஈர்த்த நபர் படம் ஆரம்பித்து 1 மணி நேரம் கழித்து தான் வருகிறார் , செம தில் தான் , இயகுனர்க்கும் , தயாரிப்பாளருக்கும் , என்ன டா இவன் சிவாஜி சாரின் பெயரை சொல்ல வில்லை என்று யோசிப்பது தெரிகிறது , நம்மவர் தான் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் தருவாரே , இல்லையென்றால் எதிர்பாராது படத்தில் வில்லன் வேடம் போடுவாரா அதுவும் மிகவும் கொடூர வில்லனாக .