Originally Posted by
vasudevan31355
//அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்//
'போலி தன்மை வராமலிருக்க' என்பது சரியா pretentious என்றாலும் கூட. இயல்பு தானே முழு நோக்கமும் அல்லது இயல்பு கெடாமல். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாமே. சுவாரஸ்யம் இருந்தால் கூட அல்லது தேவையில்லையே. ஒருவேளை அதுவும் இயல்பாக இருந்தால் அதுபற்றி குற்றமில்லை. பார்வையாளனை ஈர்க்க வைக்கும் அல்லது இருக்கையில் இருக்க வைக்கும் உத்தி இப்படிப்பட்ட படங்களுக்குத் தேவைதானா என்று கூறுங்கள். விதண்டாவாதம் புரிவதற்கு அல்ல. நிஜமாகவே தெரியாமல் கேட்கிறேன். அங்கு கேரகடர் போய் ரஜனி மேனரிசங்கள் தலை தூக்க வில்லையா. ரஜினி என்ற நடிகன் தானே அங்கு முன்னிலைப் படுகிறான். புகழவும் படுகிறான். நீங்களே கூட கூறியுள்ளீர்கள். பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறதே. அது நடிகனின் சாமர்த்தியமா அல்லது பாத்திரப் படைப்பின் பின் பின்வாங்கலா?