-
திலக சங்கமம்
http://www.kalyanamalaimagazine.com/..._Mahadevan.jpg
எல்லாம் உனக்காக
பாவை விளக்கு காவியமாய் நெஞ்சில் ஓவியமாய்த் தங்கி நம்மைக் கொள்ளை கொண்ட அதே கால கட்டத்தில் விஸ்வநாதன்-ராம மூர்த்தியின் இசை பட்டி தொட்டி எங்கும் பரவி புதிய ரசிகர் பட்டாளத்தையே அவர்களுக்கு உருவாக்கியது. தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளர்களுக்கென்று ஒரு தலைமுறையே ரசிகர்களாய் உருவானதற்குக் காரணமாய் இவர்களின் புதிய வகை இசை அமைந்தது. என்றாலும் சற்றும் அசராத விக்ரமன் போல, கே.வி.எம். அவர்கள் தன்னுடைய பாணியிலும் புதுமையைப் புகுத்தத் தொடங்கினார். தேவர் படங்கள் அதற்கு சரியான மேடையை அமைத்துத் தந்தன. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் புதுமையான இசைக் கருவிகளின் பயன்பாட்டு உத்தி ஒரு புறம் என்றால் அதே நவீன இசைக் கருவிகள் கே.வி.எம். அவர்களின் இசையமைப்பிலும் பல புதிய பாணியில் இசையை வெளிப்படுத்தின.
நடிகர் திலகத்தின் எல்லாம் உனக்காக படத்தில் கே.வி.எம். அவர்களின் இசையில் பாடல்கள் காலத்தால் அழியாத சிரஞ்சீவித்துவத்துடன் மிளிர்ந்தன. குறிப்பாக மலரும் கொடியும் பெண்ணென்றால் பாடல் மெலோடி என்கின்ற வார்த்தைக்கு சரியான பொருளைத் தந்தது. கொஞ்சி வரும் நெஞ்சில் பாடலாகட்டும் அத்தனையுமே இனிமையான பாடல்கள். நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடலும் அருமையாக அமைந்தது.
முன்பே நம் நடிகர் திலகம் திரியில் கூறியது போல், அசைந்து குலுங்கும் சதங்கை ஒலியில் ஆயிரம் கதைகள் சொல்லிடுமே ... இந்தப் பாடல் காட்சி, தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத பாடல் காட்சிகளில் ஒன்றாகும். நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த காட்சியமைப்பு, என்றும் நம் நெஞ்சை விட்டகலாத ஒன்றாகும்.
https://www.youtube.com/watch?v=cVaCY6kb-4s
-
-
-
-
-
-
-
திரு முத்தையன் அம்மு
உள்ளுக்குள் நடிகர் திலகத்தின் தாக்கம் இல்லையென்றால் இந்த அளவிற்கு மிகவும் ஆழமான கருத்துள்ள நிழற்படங்கள் வெளிவருவது கடினம். இதன் மூலம் தங்களுக்குள் நடிகர் திலகத்தின் மேல் உள்ள மதிப்பு புலப்படுகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. ஒவ்வொரு நிழற்படத்திலும் தங்களுடைய ரசனை மிகவும் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
-
-
இருபெரும் திலகங்களின் பக்தர்களே..என்னை பற்றி ராகவேந்தர் குறிப்பிட்டதை வரவேற்கிறேன். அடிப்படையில் நான் சினிமா ஆபரேட்டர். கடந்த முப்பது வருடங்களாக அரசு பணியில் பணிபுரிந்து வருகிறேன் என் துறையை சார்ந்த பணிதான் அதுவும். எம்ஜியாரின் பக்தனான நான் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் பாராட்ட தயங்கமாட்டேன். இன்றும் ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்ற பாடலை பார்க்கும்போது அழுவேன். சிவாஜி அவர்கள் அந்த பாடலில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். கௌரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜனிகாந்த் நான்தான். அவர் கேரக்ட்டர் என்னுடையது.இதை எம்ஜியார் பக்தனாக நான் சொல்லுவதில் பெருமைகொள்கிறேன்.குடும்ப வாழ்க்கைக்கு சிவாஜி. வெளியுலக வாழ்க்கைக்கு எங்கள் தங்கம் எம்ஜியார். இதை வருங்கால சந்ததியர் உணர்ந்து கொண்டால் வாழ்கை நம் வசப்படும். பொதுவாக நான் இந்த மாதிரி கருத்துக்களை சொல்வதில்லை. படங்கள் போடுவதோடு சரி. இன்று உங்களது திரியில் சொல்லவேண்டும் போல் இருந்தது. சொல்லிவிட்டேன். வாழ்க இருபெரும் திலகங்கள்..உங்களது ஆதரவுக்கு என் நன்றி..
http://i62.tinypic.com/x0sfhf.jpg