I think grouch knew it and deliberately framed the statement that way, as a sort of playful dig!Quote:
Originally Posted by RAGHAVENDRA
Printable View
I think grouch knew it and deliberately framed the statement that way, as a sort of playful dig!Quote:
Originally Posted by RAGHAVENDRA
தப்பா சொல்றீங்க...Quote:
Originally Posted by Irene Hastings
வெளிநாட்டில் எடுத்த படம் என்ற எதிர்பார்ப்புதான் காலை வாரிவிடப்பார்த்தது. உள்நாட்டில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட காட்சிகள்தான், படத்தைன் தரத்தை உயர்த்தின...
உதாரணத்துக்கு சில:
1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.
2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.
3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.
4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.
5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.
6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.
7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.
8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.
9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.
10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')
அருமையான விரிவான பதிலைத் தந்த சகோதரி சாரதா அவர்களுக்குப் பாராட்டுக்கள். தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. 305 படங்களில் ஒரு சில படங்களை மட்டும் பார்த்துவிட்டுப் பேசுபவர்களுக்கு நீங்கள் சொன்ன மாதிரி வானம் பொழிவது மட்டும் தான் தெரியும் பூமி விளைவது மட்டும் தான் தெரியும். இடையில் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞன் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் தமிழ்த் தாயின் பெருமையையும் கலாச்சாரத்தையும் உலகெங்கும் பரப்பியதும் அதற்காக அவர் பட்ட கஷ்டங்களும், அவர் படைத்த சாதனைகளும் தெரியாது.Quote:
Originally Posted by saradhaa_sn
நான் பல முறை சொன்ன மாதிரி இது வரை எந்த வி.ஐ.பி.யும் அல்லது சினிமா பிரபலமும் அன்னை இல்லம் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னர் வசனமே இல்லாமல் தன் நடிப்புத் திறமையைக் கண்களாலேயே வெளிப்படுத்திய காட்சியை சொன்னதாகத் தெரியவில்லை. அது சரி, அவர்களுக்கு அன்னை இல்லம் என்றால் அவருடைய வீடு மட்டும் தான் தெரியுமோ என்னவோ.
அன்புடன்
ராகவேந்திரன்
கோபால்,
அழகான தமிழில் எழுதியிருகிறீர்கள், வாழ்த்துகள். உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.
திரியின் 6 -ம் பாகமும் சுவாமியின் கேள்வி பதிலும் ஒரே நேரத்தில் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்.
சாரதா,
சிறிது காலமாகவே நானும் சுவாமியும் தியேட்டரில் நடிகர் திலகத்தின் எந்தெந்த படங்கள் திரையிடப்பட்டால் எப்படி இருக்கும் என்று பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் தவறாமல் இடம் பெறக்கூடிய படம் சிவந்த மண். உங்கள் காட்சி விளக்கங்களை படிக்கும் போது [முன்பே நீங்கள் எழுதியதுதான் என்ற போதிலும்] சாந்தியில் சிவந்த மண் பார்க்கும் ஆசை அதிகரிக்கிறது. கூடிய விரைவில் அது நிறைவேறட்டும்.
அன்புடன்
சகோதரி சாரதா,
"சிவந்த மண்" படக்காட்சிகள் பற்றிய அலசல் அபாரம். தங்கள் பதிவில் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரின் பார்வையையும், ஒரு சிறந்த இயக்குனரின் நேர்த்தியையும் காண்கிறேன். தங்கள் பதிவுகளைப் பற்றி சில தினங்களுக்கு முன் மொழிந்ததையே மீண்டும் மொழிகிறேன். தங்கள் பதிவு இல்லா எத்திரியும் பாயசம் இல்லா விருந்து போல், பருப்பு இல்லா சாம்பார் போல்!
அன்புடன்,
பம்மலார்.
டியர் கோபால்,
தங்களது அருமையான பதிவுக்கு நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்!! தங்களின் அனுபவங்களை அறிய மிகுந்த ஆவலாயுள்ளோம்!!!
டியர் பாலா சார்,
சூப்பர் லிங்க்குகளுக்கு சுப்ரீம் நன்றிகள்!
டியர் முரளி சார்,
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 92
கே: நடிகர் திலகம் இலங்கைக்குச் சென்றிருக்கிறாரா? (எம்.சுகுமாரன், இலந்தப்பட்டு)
ப: இரண்டு தடவைகளுக்கு மேல் சென்றிருக்கிறார்.
(ஆதாரம் : பொம்மை, ஏப்ரல் 1968)
அன்புடன்,
பம்மலார்.
புதிய பறவையின் பெரும் வெற்றி, திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையின் மையப் பகுதியில் உள்ள பெரிய திரையரங்கான ஆல்பர்ட் திரையரங்கில், விரைவில் எம்.ஜி.ஆர். அவர்களின் ரிக்ஷாகாரன் திரையிடப் படுவதாக தகவல் வந்துள்ளது.
இப்படமும் பெரும் வெற்றியடைய நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நடிகர் திலகம் சிவாஜியும் எம்.ஜி.ஆர். அவர்களும் தமிழ்த்திரையுலகத்தின் வளர்ச்சியைத் தம் வளர்ச்சிபோல் பாவித்து வளர்த்தார்கள். அவர்கள் இருவரிடமிருந்து தற்போதைய தலைமுறை திரை உலகத்தினர் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இருவருமே மறைந்து பல ஆண்டுகள் ஆகியும் மக்கள் இவர்களின் படங்களுக்கு படையெடுத்து வந்து திரையரங்குகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்க்ள். இதற்கு அடிப்படைக் காரணம் இருவருமே சமூக அக்கறையுடன் படங்களைத் தந்தது தான்.
வெறுமனே மீடியா விளம்பரங்கள் மட்டும் திரைப்படங்களுக்கு வெற்றியைத் தந்து விடாது என்பதை சம்பந்தப் பட்டவர்கள் உணர்ந்து குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் அளவிற்கு திரைப்படங்களை உருவாக்கினால், மக்கள் விளம்பரங்களின் தேவையே இல்லாமல் வெற்றியைத் தருவார்கள்.
தமிழ்த்திரையுலகம் தழைக்க வேண்டும், மக்கள் புதுப் படங்களைப் பார்க்க்வும் திரையரங்குகளுக்கு வரவேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும் இக் கருத்து எழுதப் படுகிறது.
ரிக்க்ஷாகாரன் திரைப்படம் மீண்டும் வெற்றி பெற நமது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்
புதிய பறவை பல பழைய சிவாஜி ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. நமது பழைய நண்பர் ஒருவர், அப்படம் முதன் முதலில் பாரகன் திரையரங்கில் வெளியான போது அந்த திரையரங்கில் பார்த்தவர், Youtubeல் நமது ஒளிக்காட்சியைப் பார்த்து விட்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்
http://www.youtube.com/watch?v=sNGCa...&feature=emailQuote:
Aha Enna Arpudhamana Katchi, Nanum Oru Nadigar Thilagathin Theevira Rasigandhan, Idhai Parkum Podhu "PARTHA GYABAGAM iLLAIYA'" Endru Pazhaya Gyabagam Varugiradhu,
Indha Rasigargalin Kondattathai Parkkum Pozhudhu Andru Adaindha Magizhchi Yai Vida Indru Adhiga Magizhchi Adaindhen , Post Saidha Nanbarukku Enadh Nandri
புதிய பறவை முதலில் வெளியான போது அடைந்த மகிழ்ச்சியை வி
தற்போது அதிகம் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ளார். அவருக்கு நமது நன்றி
அன்புடன்
ராகவேந்திரன்
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 6
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
நாகேஷ்-கருணாநிதி நகைச்சுவை கலகலப்புடன் நிறைய, Brilliant BGMமுடன் Beautiful இயற்கைக் காட்சிகள் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. கோபால், லதா, ராமதுரை மூவரும் 3000 ஏக்கர் பரப்புள்ள எஸ்டேட்டின் அழகை ரசித்த படியே நடந்து வருகின்றனர். இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் அழகான ஆரஞ்சு தோட்டத்தை காணலாம் என கோபால் அழைக்க, கால்கள் கெஞ்சுவதால் நீங்கள் இருவரும் செல்லுங்கள், நான் பங்களாவுக்கு போகிறேன் என ராமதுரை பயணிக்க, மேலே நடக்கிறார்கள் லதா-கோபால். திடீரென்று லதா வேகத்துடன் ஒரு உயரமான பகுதியை நோக்கிச் செல்ல, உடன் விரையும் கோபால் அங்கே செல்ல வேண்டாம் என அன்புக் கட்டளையிட்டு லதாவை காப்பாற்ற அவர் கைக்கு வசப்பட்ட லதாவின் முந்தானையை முன்னெச்சரிக்கையோடு இழுக்க, திகைப்புறும் லதா "கோபால், என்ன இது, விடுங்க" எனக் கடிந்து கொள்ள, அங்கே பார் என கோபால் லதாவுக்கு அதல பாதாளத்தைப் போன்ற அகன்ற பள்ளத்தாக்கைக் காண்பிக்க, அச்சமுறும் அபிநயசரஸ்வதி அண்ணலின் அன்புத் தோளில் சாய்கிறார். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, படித்திருக்கிறோம். இப்பெண் முல்லைக்கு தோள் கொடுத்தார் கோபால், பார்த்து ரசிக்கிறோம். இருவர் உள்ளமும், "இருவர் உள்ளம்" போல் இறுதியில் நெருங்காமல் இக்கணமே நெருங்க, இக்காட்சிக்கு விசில்கள் பறப்பதைக் கூறவும் வேண்டுமோ!
வீடு திரும்பும் விகேஆர்-விளையாடும் நாகேஷ்-கொசுறு மனோரமா காமெடி நிறைவடைய, கால்ஃப் களைகட்டுகிறது. நாடகமேடையில் கால்ஃப் ஆடவும் கற்றுக் கொண்டிருப்பாரோ?! மனிதர் தனது structureஐ எவ்வளவு அழகாக position செய்து கொண்டு என்னமாய் ஆடுகிறார். இதற்காகவே காத்துக் கிடந்தது போல் பக்தர்கள் கற்பூர ஆரத்தியை திரைக்கு அருகில் சென்று காட்டுகின்றனர். கோபால் லதாவுக்கு கால்ஃப் கற்றுத்தர முயல, லதாவுக்கு கால்ஃப் ஆடுவது பிடிக்காமல் போய் வீடு திரும்பலாம் எனக் கூற, கால்ஃப் ஸ்டிக்கால் கோபால் பந்தை அடித்து விட்டுத் திரும்ப, தூரத்தில் அப்பந்தைப் பிடித்து பந்தாடுகிறார் நடிகவேள். பிற்பகுதியில் கோபாலைப் பந்தாடப் போவதற்கு ஒத்திகை பார்க்கிறார் போலும்!
அரண்மனையை அடையக் காரில் விரைகின்றனர் ஓட்டுநர் லதா-பயணி கோபால். வழியில்,
ரயில்வே கேட் மூடப்படுகிறது; வண்டி நிற்கிறது; ரயில் வருகிறது,
"குப்குப்" எனக் கரும்புகையுடன் ரயில் தடம் புரளாமல் போய்க் கொண்டிருக்க, இங்கே காரில் கோபாலின் உள்ளம் "பக்பக்" எனப் பயம் கலந்த அதிர்வுப்புகையுடன் தடம் புரண்டு சென்று கொண்டிருக்க, கோபாலின் அகத்தை முகம் காட்டுகிறது. மனித மனத்தின் திடீர் அதிர்வால், கோபால் கொதிப்படைய அவரது கைகள் கார் கண்ணாடியை பயத்தோடு பற்றிக் கொள்ள, அருகிலிருக்கும் லதா இந்த அதிர்வு கண்டு அஞ்ச, Blood Pressure-இரத்தக்கொதிப்பு எனக் கைக்குட்டையால் முகத்தை ஒற்றிக் கொண்டே கோபால் சமாளிக்க, கேட் திறக்கப்படுகிறது; கார் கிளம்புகிறது.
"தல நடிப்ப பாத்தியா இந்த சீன்ல, தல தல தான்!" , குரல் கேட்கிறது, குஷி மேலிடுகிறது!
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.