இக்காலத்தில் சொர்க்கத்தின் சாயல்
கடிகாரமும் நாட்காட்டியும் பாராமல்
உறங்க விழித்திருக்க தோன்றாமல்
அவசரமும் அவதியும் இல்லாமல்
தன சின்ன வட்டத்தை தாண்டாமல்
நீடிக்கட்டும் ஒய்வு காலம் கசக்காமல்
Printable View
இக்காலத்தில் சொர்க்கத்தின் சாயல்
கடிகாரமும் நாட்காட்டியும் பாராமல்
உறங்க விழித்திருக்க தோன்றாமல்
அவசரமும் அவதியும் இல்லாமல்
தன சின்ன வட்டத்தை தாண்டாமல்
நீடிக்கட்டும் ஒய்வு காலம் கசக்காமல்
கசக்காமல் இருப்பதற்குப் பாகற் காயை
..கடகடென்றே உப்புநீரில் ஊறப் போட்டு
பதமாக வெளியெடுத்து பேப்ப ரின்மேல்
..பக்குவாமய்ப் போட்டுவதைக் காய வைத்து
இதமாகச் சாம்பாரில் தானா கத்தான்
…இச்சையுடன் போட்டுவைப்பாள் பாட்டி அன்று
வசம்பாய்த்தான் கசக்குமென்று வாயிலிட்டால்
..வழுக்கிசெலும் சுவையாக வயிற்றுக் குள்ளே
வயிற்றுக்குள்ளே பகாசுரன்
அது வளரும் பிள்ளைகள்
பசியெடுக்கா பருவமொன்று
அதன் பேர்தான் வயோதிகம்
வயோதிகம் மெல்ல நடக்கும்
இளமை வேகமாய் ஓடும்
வயோதிகம் தேம்பி அழ வைக்கும்
இளமை கெக்கலி கொட்டிச் சிரிக்கும்
வயோதிகம் திரும்பிப் பார்க்கும்
இளமை முன்னே பார்க்கும்
வயோதிகம் சேச்சே
இளமை ஆஹா..
ஆனால் இளமையில் இல்லாதது
வயோதிகத்தில் உண்டு
அது
அனுபவம்…
அனுபவம் இருக்காம் பெருசுகளுக்கு
முடி இல்லாதவனுக்கெதுக்கு சீப்பு
பல் போனவனுக்கெதுக்கு பக்கோடா
தான் பிடித்த முயலுக்கு மூணு கால்
அப்படித்தான் செய்வேன் போடா
யதார்த்தம் புரியாத தலைமுறை
அனுசரனையில்லா பிடிவாதம்
அகண்ட உலகமிதில் இக்காலத்தில்
அணுவளவும் உதவாத அனுபவம்
பார்த்து அனுபவிப்பவர்தான் பாவம்
பாவந்தேன் இல்லேங்கல
பின்ன
நெதக்கும் இந்தக் குடிகுடிச்சுட்டு
புச்சு புச்சா
வெஞ்சனம் வேணுமின்னு
துட்டு கொடுக்காம
ஆர்ப்பாட்டம் பண்ணா
நா இன்னா செய்வேன்
அது இன்னா..பொரிமை
அதுக்கும் லிமிட் உண்டுல்ல
இன்னிக்கு வுட்டேன் பாரு ஒரு அடி
தாவாங்கட்டைல
சுருண்டுடுச்சு
கொஞ்சம் முழிச்சுட்டு
சர்த்தான் புள்ள நாளக்கி பாக்கலாம்னு
சொல்லிப்போட்டு
பாயப்போட்டு தூங்கிடுச்சு
குடிச்சுட்டு கொட்டிக்காம தூங்கினா
கொடல் என்னத்துக்காவாங்காட்டியும்
எய்ப்பினா ம்க்கும் எந்திரிக்கலையே
சரி சரி
நாளைக்கு வெரசா எந்திருச்சு
மார்க்கெட் போய் மீனு வாங்கி
இட்லி மாவும் அய்ர்வூட்ல வாங்கி
இட்லியும் மீன்கொயம்பும் கொடுக்கலாம்
பாவி மனுஷனுக்கு…
இன்னாங்கற…..
இன்னாங்கற நா நெதமும் நடக்கணும்
என்னோட மூட்டுவலி மோசமாகாதுங்கற
பொத்தாம் பொதுவா சொல்லுற பத்தியம்
ஆச்சே எனக்கு ஆகாத வைத்தியம்
ஏட்டு சுரக்கா கறிக்கு உதவுமா தம்பி
நான் விழுந்து கெடுக்கவா அதை நம்பி
மூச்சுதான் வாங்குது இரைக்குது
இங்கிட்டும் அங்கிட்டும் தள்ளுது
நிமிர்ந்து நடக்கவே நடுங்குது
நாலு சுவத்துக்குள்ளே இக்கிழவி
புத்திசாலி பூனை நடையழகி
நடையழகி தான்
ரெட்டைத் தெரு நாலாவது வீட்டு சுகந்தி
கொஞ்சம் தேர்
கொஞ்சம் தென்றலில் அடிபடும் ரோஜா
கொஞ்சம் சீறிச் செல்லும் சிறுத்தை
கொஞ்சம் தலைகுனிந்த சிந்தனை
கொஞ்சம் நேர்ப்பார்வை சுருள்முடி நெற்றியில் தவழ
விடலை வயதில்
வக்கீல் வீட்டு ராதாகிஷணுடன்
அந்தத் தெரு போனால்
பார்த்திருக்கிறோம் ரசித்திருக்கிறோம்.
இன்னிக்கு எப்படி நடப்பாடா..
ம்ம் வாத்து மாதிரி இருக்குமா என்றால்
செல்வா முறைப்பான்
அவனுக்கு அவள் மேல் கண்
எங்கள் வர்ணிப்புகள்
அவளுக்குத் தெரியுமாஎன்ன
எங்களுக்குத் தெரியாது
சூழ் நிலையில்
திருமணமாகி
அவள் வீட்டிலிருந்து
கிளம்பும் போதும்
நாங்கள் எதிர்வீட்டிலிருந்தோம்..
ம்ம் எங்கடா போறா
எங்கயோ விஸ்கான்சின்னாம்
எங்க இருக்கு
ஆஸ்த்ரேலியா என்றான்
முகப்ப்ரகாச செல்வா
என்னிடம்கிள்ளு வாங்கினான்
அது அமெரிக்காடா..
வெளியில் வந்தவள்
காரில் ஏறாமல் எங்களைப் பார்த்து
சாலையை க் கடந்து வந்து
“என்னை மறக்காதீங்கடா”
பேசிய முதலும் கடைசியுமான வார்த்தை
திரும்பிப் புள்ளிமான் துள்ளல் நடை
காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.
சென்றுவிட்டாள் வேறகம்
வென்றுவிட்டாள் புது களம்
விம்மி புடைக்கும் தாய் மனம்
சுகமாய் சோகமாய் ஒரு கனம்
கனமாய்த் தான் இருக்கும்
ஒவ்வொரு முறை
அக்கா வரும்போதும்
அவருடைய பெட்டி..
வேணாண்டா எனப் பதறப் பதற
காரிலிருந்து
தூக்கமுடியாமல் தூக்கி
வீட்டினுள் கொண்டு வைப்பது
ஒரு வித சுகம்..
அவரைப் பார்த்த மகிழ்வுடன்
எப்போது பெட்டி திறப்பார்
என்ற ஆவலும் கூடும்..
இந்தா இந்த ப்ளாக்ல டாட் வெச்ச
சட்டை உனக்கு
என
வந்த மாலைப்பொழுதில் நீட்டும் போது
பரம் குஷி..
ஒரு மாதம் ஓடிவிட
கிளம்பும் போது
பார்த்துப் படிடா..என்ன
அடுத்த வருஷம் தான் வருவேன்..
ஓகே என்ன வேணும் எழுது
ஒண்ணும் வேணாம்க்கா
ச் அப்படிச் சொல்லாதே
எழுது கொண்டாரேன்..
வாசிலில் கிளம்பி காரிலேறி
விமான நிலையத்துள் விட்டுத் திரும்ப
கனம் மறுபடியும் சூழும்
மனதுள்..