இயக்குனரின் லேசான சறுக்கல் என்றும் கொள்ளலாம். ஆனால் இது போன்ற வித்தியாச காவியப்படைப்புகளில் இப்படிப்பட்ட காம்ப்ரமைஸ்கள் தேவையா என்ற கேள்வியையும் எழுப்புகின்றது. நடிகரின் தனிப்பட்ட மேனரிசங்களைக் காட்டத்தான் வழக்கமான வியாபாரப் படங்கள் உள்ளனவே.
Printable View
அன்பு ஆதிராம் சார்!
மதுர கானங்கள் திரிக்கு தங்களின் வருகை மிகுந்த உவகையை அளிக்கிறது. நிறைய அரிய விஷயங்களை அழகாகத் தருவதில் (அதில் மிக முக்கியம் அத்துணை விஷயங்களும் இம்மி பிசகாமல் கரெக்ட்டாக இருக்கும் என்பது இன்னும் விஷேசம்) தங்களுக்கு நிகர் தாங்கள்தான். மதுர கானங்கள் மகுடத்தில் மேலும் ஒரு மரகதக் கல்.
நெஞ்சு நிறைய தங்களை வரவேற்கிறேன். தங்கள் மேலான பதிவுகளைத் தந்து இந்த திரியை மென்மேலும் சிறப்பித்துத் தர வேண்டுகிறேன்.
வருக! வருக!
http://3.bp.blogspot.com/_2KvpC8hIBE...r-Bouquets.jpg
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 20)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
http://i.ytimg.com/vi/bjJNKq1UfL4/0.jpg
அடுத்து இசைஞானி அவர்கள் இசையமைத்த 'பைரவி'. வள்ளி வேலன் மூவீஸ் வழங்கிய இப்படத்திற்குக் கதை எழுதி தயாரித்தவர் கலைஞானம். இயக்கியவர் எம்.பாஸ்கர். இப்படத்தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். ரஜினிக்கு கதாநாயக அந்தஸ்தைக் கொடுத்து அதை அவரைத் தக்க வைத்துக் கொள்ள செய்த படம். ரஜினி திரையுலக சரித்திரத்தில் இடம் பெற்ற படமாயிற்று. தங்கை பாசத்தில் வில்லனை பழி வாங்கும் ஆக்ஷன் கதை இது. கமர்ஷியலாகவும் நல்ல வெற்றி பெற்ற படம் இது.
http://i.ytimg.com/vi/bjJNKq1UfL4/movieposter.jpg
ஸ்ரீகாந்த், சுருளி, சுதிர், வி.கே.ராமசாமி, ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் கீதா ரஜனியின் தங்கையாக அறிமுகமானார். திரைக்கதை வசனத்தை மதுரை திருமாறன் எழுத, பனசை மணியன் துணை வசனம் எழுதியிருந்தார். பாடல்களை கவிஞரும், சிதம்பரநாதனும் எழுதியிருந்தனர். பின்னணி இரண்டே பேர்தான். பாடகர் திலகம், ஜானகி மட்டுமே. இதற்கு முன்னாலே பாலாவை சில பாடல்களுக்கு யூஸ் செய்த ராஜா ரஜினிக்கு பாலாவின் குரல் சூட் ஆகாது என்று நினைத்தாரோ என்னவோ எல்லாப் பாடல்களையும் டி.எம்.சௌந்தரராஜனுக்கே தந்து விட்டார்.
இந்தப் படத்தில் பாடல்களை நன்கு கவனித்தீர்களானால் ஒன்று நன்கு புலப்படும். இதுவரை தனித்தன்மையுடன் பாடல்களுக்கு இசையமைத்திருந்த ராஜா இந்தப் படத்தில் பாடல்களை சங்கர் கணேஷ் பாணியில் இசையமைத்திருந்தார். என்னுடைய தனிப்பட்ட கருத்து இது. இது எந்த அளவிற்கு உண்மை என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
இனி பாடல்கள்.
http://archives.deccanchronicle.com/...22-Bairavi.jpg
1. கட்டபுள்ள குட்ட புள்ளே ...
கருகுமணி போட்ட புள்ளே
கன்னங் குழி விழுந்த செல்லம்மா
நல்ல காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
பாடல் கண்ணதாசன்.
ரஜினி, ஸ்ரீப்ரியா போடும் குத்தாட்ட ஜோடிப் பாடல். ரஜனி கருப்பு கலரில் புள்ளி போட்ட மைனர் ஜிப்பாவெல்லாம் போட்டு இருப்பார். நடனம் வராது. கை, கால்களை விறைப்பாக அப்படி இப்படி ஆட்டியே ஒரு வழியாகச் சமாளித்து விடுவார். ரவிக்கை இல்லாத ஸ்ரீப்ரியா. தூக்கம் இல்லாத ரசிகர்கள்.:) ரஜினி பிரியாவுக்கு 'வாடிப்பட்டி சந்தையிலே வாங்கி வந்த ரவிக்கை'யை மாட்டி விடுவது கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர். சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல் போலவே இருக்கும்.
https://www.youtube.com/watch?v=Cegb...yer_detailpage
2. ஸ்ரீப்ரியா, ஒய்.விஜயா ஏற்றம் இறைத்துக் கொண்டே பாடும் பாடல். ஜானகி குரலில். ஏற்றம் ஏறி இறங்கும்போது உண்டாகும் 'கர்ர்ர்'... என்ற ஏற்றத்தின் உராய்வு சப்தத்தைக் கூட சூப்பராய் கவனித்துத் தந்திருப்பார் ராஜா. அழகான ஒய்.விஜயா ஒருபுறமும், ஸ்ரீப்ரியா ஒரு புறமும் நின்று ஏற்றம் இறைப்பார்கள்.
பாடல் கண்ணதாசன்.
ஏத்தம் எறச்சி காத்துக் கிடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்ல
சந்தனம் வந்தாச்சு குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வராதோ என்னத் தேடி
இந்தப் பாடலின் தொகையறா டாப்.
ஒரு பொடியாய் ஒன்னு
ஓடி வாடா ராமா
காத்தடிக்கும் நேரம்
தூத்துனது லாபம்
லாபமடா சாமி
ஸ்ரீபிரியா ரஜினியை நினைத்துப் பாட, ரஜினி போலீஸிடமிருந்து தப்பித்து ஓடிவர, ரஜினியை இறுதியில் பார்த்து விடும் பிரியா 'என் சாமியும் வந்தாச்சு என்னத் தேடி' என்று ரஜினியைச் சேர ஓடியபடியே பாடலை முடிப்பார். ரஜினி வயல் வரப்பில் ஓடி வரும் போது விசில் பறக்கும். இந்தப் பாடலில் ஒய்.விஜயாவிற்கு ஒரு பின்னணிக் குரல் ஒலிக்கும். ('பையன் பொறந்தா பொங்கலும் உண்டு... மங்களம் உண்டு') ஆனால் அந்தப் பாடகியின் பெயர் டைட்டிலில் வராது. யாரென்று தெரிந்தவர்கள் சொல்லலாம். காத்துக் கிடக்கேன்:)
இந்தப் படத்திலேயே எனக்கு பிடித்த முதல் பாடல். அழகான நாட்டுப்புற மெட்டில் கோஷ்டியினரின் 'தந்தனத்தானா தந்தனத்தானா தந்தனத்தானா' கோரஸில் ஜானகி அனுபவித்துப் பாட, ஸ்ரீப்ரியா அளவான பாவங்கள் தர, ரஜினி தப்பித்து, பரபரப்பாக ஓடி வந்து ப்ரியாவுடன் சேர அருமையான பாடல். காட்சியமைப்பும் நன்றாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=HEt78wgK-1E&feature=player_detailpage
மீதி பாடல்கள் நாளை.
பூச்செண்டுடன் வரவேற்றதற்கு மிக்க நன்றி வாசு சார்.. (ஆனால் என் வீட்டுக்கு வருவதற்கு ஏனிந்த வரவேற்பு?)
அவள் அப்படித்தான் மஞ்சு முரண்பாடுகளும் மூர்க்க குணமும் கொண்ட பாத்திரம் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு அவள் வைத்துக்கொள்ளும் பெயர் பெண்ணிய விடுதலை. உலகம் என்பது நிறைகளும் குறைகளும் கொண்டது என்பதையும், அதற்குள்தான் நம்முடைய சிறிய, மிகச்சிறிய வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற யதார்த்த உண்மையை உணர மறுப்பவள். குப்பையும் கூளமும் நிறைந்த உலகத்தை சுத்தப்படுத்தி விட்டுத்தான் வாழ்க்கையைத் தொடங்குவேன் என்று வீண் முரண்டு பிடிப்பவள். இறுதியில் சரிதா சொல்லும் 'பெண் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது' என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது 'நாமும் இப்படி இருந்திருக்கலாமோ' என்ற எண்ணம் மஞ்சு (ஸ்ரீப்ரியா) முகத்தில் தோன்றுவது தெரியும்.
அந்த ஏமாற்றத்தை மறைக்கத்தான் 'இங்கேயே இறங்கிக்கிறேன்' என்ற அவளது கடைசி வார்த்தை.
காரிலிருந்து இறங்கி நம் மனதில் பாரமாக அமர்ந்து கொள்வாள். அதிலிருந்து என்றைக்கும் இறங்க மாட்டாள்.
To,
Mr Neyveli Vasudevan
நடிகர்திலகத்தின் பித்தனே
மதுர கானத்தின் மன்னனே
உண்மை நண்பனே
உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
ஸ்ரீ வாசுதேவன்
சென்னை
மனதை மயக்கும் மதுர கானங்கள் திரியின் நிறுவன தலைவரும் , இனிய நண்பரும் ,இசைத்துறையின் ஆராய்ச்சியாளரும் ,ஞான ஒளி யின் ஆசீர்வாதங்கள் பெற்றவரும் ,ஒளிவிளக்கின் நண்பர்களின் அன்பை பெற்றவரும்
ம.ம. ம கா . முதல்வர் மாண்பு மிகு வாசுதேவன் அவர்களின் பிறந்த நாளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .
இசையால் பல நண்பர்களை இணைத்து வைத்த வழிகாட்டி
இசை துறையில் நீந்த முடியாதவர்களை கரையேற்றிய படகோட்டி
மதுர கானங்களின் தேரோட்டி
நாள் தோறும் நம் வாசுதேவனை பாராட்டி
புகழ் மாலை சூட்டுவோம் - இந்த இனிய பிறந்த நாளில் .
happy birthday vasu sir
long live vaasu
rgds
Gk