விஜய் தொலைக்காட்சியில்
புதிய தொடர் ‘ரெட்டை வால் குருவி’
https://www.youtube.com/watch?v=SRrGd_AA6Bw
https://www.youtube.com/watch?v=iAWJdfz4j5k
Printable View
விஜய் தொலைக்காட்சியில்
புதிய தொடர் ‘ரெட்டை வால் குருவி’
https://www.youtube.com/watch?v=SRrGd_AA6Bw
https://www.youtube.com/watch?v=iAWJdfz4j5k
Quote:
குட்டி பத்மினி இயக்கும் ராமானுஜர் - கருணாநிதி வசனம் எழுதுகிறார்
நடிகை குட்டிபத்மினி தற்போது 63 நாயன்மார்கள் தொடரை தயாரித்து ஒளிபரப்பி வருகிறார். அது நிறைவு பகுதியை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அடுத்து ராமானுஜர் என்ற ஆன்மீக தொடரை இயக்க இருக்கிறார். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தி.மு.கழக தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதுகிறார். குட்டி பத்மினியின் வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சீரியல் இயக்குனராக குட்டி பத்மினி பணியாற்றுகிறார். ஆர்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுபற்றி குட்டி பத்மினி கூறியதாவது: வைணவ தர்மத்தை பாமர மக்களுக்கு எடுத்துரைத்த மகத்தான மகான் ராமானுஜர், திராவிட தமிழ் வேதமான திவ்யபிரபந்தத்தை மக்களின் மனதில் ஆழப் பதியச் செய்து மதத்தில் பல புரட்சிகளை செய்த மாசற்ற மகான் ராமானுஜர், அவர் பிறந்து ஆயிரமாண்டுகளாகும் இந்த நேரத்தில் இந்த தொடரை ஒளிபரப்புவதில் பெருமை கொள்கிறோம். ராமானுஜர் மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற தலைப்பில் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை தத்ரூபமாக படம் பிடித்து நெடுந் தொடராக நேயர்களுக்கு வழங்க இருக்கிறோம். கருணாநிதியின் கைவண்ணத்தில் இது உருவாவது இன்னும் சிறப்பு என்கிறார் குட்டி பத்மினி
நன்றி: தினமலர்
சன் தொலைக் காட்சியில் 30 -03 - 2015 முதல்
ஆதிரா
https://www.youtube.com/watch?v=ZnoEEbtS9pY
சன் தொலைக் காட்சியில் 30 -03 - 2015 முதல்
கேளடி கண்மணி
https://www.youtube.com/watch?v=NjWB3nmMjnEQuote:
சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிக்கு கேளடி கண்மணி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சினி டைம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில் சாதனா, அர்னவ், ராமச்சந்திரன், சுஜாதா, கிருத்திகா, பிரியங்கா, புவி, கீதா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, முத்துச்செல்வன். வசனம், எழில்வரதன்.
ஒளிப்பதிவு, மீனாட்சிபட்டி பி.காசிநாதன். இசை, கிரண். பாடல், யுகபாரதி. கிரியேட்டிவ் டைரக்டர், மதுமோகன். இயக்கம், ஓ.என்.ரத்தினம். கிரியேட்டிவ் ஹெட், தயாரிப்பு, ‘மெட்டிஒலி’ சித்திக். ‘தாயின் பாசம் தாகம் தீர்க்கும் தண்ணீர் போன்றது. குழந்தையின் சிரிப்பு, வெயில் நேர காற்று போன்றது. காற்றுக்கு காற்றாகவும் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும், மாயாவுக்கு அன்னையாகவும் இருப்பவள் பவானி. அவளின் ஆசைகளை, மாயா நிறைவேற்றுகிறாளா என்பது கதை’ என்றார் இயக்குனர்.
Manoj (Night) Shyamalan's 10-episode psychological thriller “Wayward Pines”
premieres on FOX tv (USA and Canada) on May 14, 2015.
http://screenrant.com/wayward-pines-tv-show-trailer/
https://www.youtube.com/watch?v=RsQ9Fl0VCkk
https://www.youtube.com/watch?v=2WHLpPvo3ZE#t=11
Quote:
சின்னத்திரையில், பாண்டியராஜன் நடிக்கும் என் தங்கை
மங்கை தொடரை இயக்கிய அரிராஜன் அதன் பிறகு சினிமா இயக்கச் சென்று விட்டார். சில படங்களை இயக்கி விட்டு தற்போது மீண்டும் தொடரை இயக்க வந்துவிட்டார். அவர் இயக்கும் புதிய தொடர் என் தங்கை. இதில் பாண்டியராஜன் கதையின் நாயகனாக நடிக்கிறார்
ஒக்கேனக்கல் பரிசல் துறையில் பரிசல் காண்டிராக்டராக இருக்கும் பாண்டியராஜன் தன் தங்கைகள் 4 பேருக்கும் அரசு உத்யோகம் பார்க்கும் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொடுக்க போராடுகிறார். திருமண வயதை தாண்டிய அண்ணனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கட்டிவைக்க தங்கைகள் போராடுகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலான உணர்ச்சி போராட்டமாக உருவாகிறது என் தங்கை. பெரும்பாலான படப்பிடிப்புகள் ஒக்கேனக்கலை சுற்றி நடந்து வருகிறது. பாண்டியராஜன் தங்கைகளுக்காக மாப்பிள்ளை தேடி பல ஊர்களுக்கு செல்லும்போது அந்தந்த ஊர்களுக்கு கதை செல்லும் விதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
காமெடியும், செண்டிமெண்டும் கலந்த உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகிறது.
http://img1.dinamalar.com/cini//CNew...2452000000.jpg
நன்றி: தினமலர்
Quote:
விஜய் அவார்ட்ஸ் விழாவில், பிரபுதேவா-ஸ்ருதிஹாசன் நடனம்
ஆண்டுதோறும் நடந்து வரும் மிகப்பெரிய திரைப்பட விருது வழங்கும் விழாவான விஜய் அவார்ட்ஸ் விழா நாளை (ஏப் 25) மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பிரபுதேவா பல வருடங்களுக்கு பிறகு மேடையில் நடனம் ஆடுகிறார். அவர் "மை லைஃப் மை வே" (என் வாழ்க்கை என் வழி) என்ற தீம் பாடலுக்கு நடனம் அமைத்து ஆடுகிறார். அதனுடன் "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே" பாடலுக்கும், "போக்கிரி பொங்கல்" பாடலுக்கும் நடனம் ஆடுகிறார்.
ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமலஹாசனின் புகழ்பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார். லட்சுமி மேனன் திகில், காதல் மற்றும் பேய் பாடல்களுக்கு ஆடுகிறார். இவர்கள் தவிர பிந்து மாதவி, ராய் லட்சுமி, இனியா, நந்திதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடனமாட இருக்கிறார்கள். பிரபுதேவா நடனங்கள் தவிர மற்ற நடனங்களுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த ஆண்டு சிறுபட்ஜெட் படங்கள்தான் அதிகமான விருதுகளை பெற இருப்பதாக ஜூரி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
நன்றி: தினமலர்
Quote:
திருச்செல்வத்தின் புதிய தொடர் கைராசி குடும்பம்: நாளை முதல் ஒளிபரப்பு
கோலங்கள் தொடர் மூலம் புகழ்பெற்ற திருச்செல்வம் தற்போது இயக்கும் தொடர் கைராசி குடும்பம். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஊர் உலகத்தில் கைராசி குடும்பம் என்று பெயர் எடுத்த ஓரு கூட்டுக் குடும்பம். ஒரே ஒரு பெண்ணின் வருகையால் கைராசி என்ற எடுத்த பெயரை இழந்து விடுகிறது. பின்பு பெரும் போராட்டத்துக்கு பிறகு மீண்டும் தன் கைராசி குடும்ப பெயரை எப்படி தக்க வைத்துக் கொள்கிறது என்கிற கதை
ஜெயா தொலைக்காட்சியில் நாளை (ஏப் 22) தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் கோலங்கள் போன்றே பெரும் வரவேற்பை பெறும் என்ற சேனல் தரப்பும், திருச்செல்வமும நம்புகிறார்கள். முதல் கட்டமாக 200 எபிசோட்களுக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். வரவேற்பை பொறுத்து எபிசோட்கள் அதிகரிக்கப்படும். ப்ரைம் டைமில் தொடங்கும் தொடர் அதனை தக்க வைக்குமா என்பது போக போகத் தெரியும்.
நன்றி: தினமலர்
Quote:
ராஜ் டி.வியில் புதிய டப்பிங் தொடர்
தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது, அது இங்குள்ள கலைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் ராஜ் டி.வி. வருகிற மே 4ந் தேதி முதல் அழகிய லைலா என்ற புதிய டப்பிங் சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
பார்வதியும், ருத்ராவும் பால்ய பருவத்திலிருந்தே நண்பர்கள், இருவரும் வளர்ந்து பெரியவர்களானதும் ருத்ரா ராணுவ தளபதியாகிறான். பார்வதி, ருத்ராவை காதலிக்கிறாள். ஆனால் ருத்ரா நாடுதான் முக்கியம் என்று சொல்லி காதல், பாசம், சென்டிமென்ட்டுக்கு அப்பாற்பட்டு வாழ்கிறான். ருத்ராவின் காதலை பெற பார்வதி தொடர்ந்து போராடுவதுதான் சீரியலின் கதை.
சீரியல் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டுள்ளது.- பிரமாண்ட ராஜஸ்தான் அரண்மனைகள், கொடுமையான பாலைவனம் ஆகியவற்றில் கதை நடக்கிறது. இந்தியில் பிரமாண்டமான முறையில் தயாரான தொடர் இது. இதில் பார்வதியாக பிரபல இந்தி நடிகை சனியா இரானி நடித்துள்ளார். ருத்ராவாக ஆஷிஷ் சர்மா நடித்துள்ளார்.
நன்றி: தினமலர்
Quote:
விஜய் டி.வி விருது விழா: சிறந்த படம் வேலையில்லா பட்டதாரி, நடிகர் தனுஷ்
விஜய் டி.வி. ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (ஏப் 25) நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. இதில் வேலையில்லா பட்டதாரிக்கு சிறந்த படம், நடிகர், நடிகை என மூன்று விருதுகள் கிடைத்தது. விருது பட்டியல் வருமாறு:
சிறந்த படம்: வேலையில்லா பட்டதாரி
சிறந்த நடிகர்: தனுஷ் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த நடிகை: அமலா பால் (வேலையில்லா பட்டதாரி)
சிறந்த இயக்குனர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)
சிறந்த இசை அமைப்பாளர்: அனிருத் (பல படங்கள்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: கெவ்மிக் (ஜிகர்தண்டா)
சிறந்த பாடகர்: பிரதீப் குமார் (ஆகாயம் தீப்பிடிச்சா)
சிறந்த கலை இயக்குனர்: சாபுசிரில் (லிங்கா)
சிறந்த நடன இயக்குனர்: ஷோபி (ஜீவா)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பெருமாள், நிரஞ்சனா (காவியத் தலைவன்)
சிறந்த பின்னணி இசை: சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா)
சிறப்பு விருது: சதுரங்க வேட்டை
சிறந்த சண்டை இயக்குனர்: சுந்தர் (கோலிசோடா)
சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)
சிறந்த துணை நடிகை: சீதா (கோலிசோடா)
சிறந்த புதுமுக நடிகை: மாளவிகா நாயர் (குக்கூ)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: விஜய் மில்டன் (கோலி சோடா)
சிறந்த பாடலாசிரியர்: கபிலன் (யான்)
சிறந்த வசனகர்த்தா: பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்
)சிறந்த காமெடியன்: தம்பி ராமையா (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)
ரசிகர்களின் விருப்ப படம்: கத்தி
ரசிகர்களின் விருப்ப நடிகை: ஹன்சிகா மோத்வானி
ரசிகர்களின் விருப்ப இயக்குனர்: ஏ.ஆர்.முருகதாஸ்
சிறப்பு இயக்குனர் விருது: கே.எஸ்.ரவிகுமார்
சிறப்பு ஜூரி விருது: மெட்ராஸ்
சிறந்த அறிமுக இயக்குனர்: ராஜூ முருகன் (குக்கூ)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாரா (சைவம்)
விழாவில் ஏவிஎம் சரவணனுக்கு சினிமாவுக்கான சிறந்த பங்களிப்பு விருது வழங்கப்பட்டது.
இதனை கமலஹாசன் வழங்கினார்.
பிரபு தேவா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நன்றி: தினமலர்