Saradha Mdm
Thanks for the listing but my comment was about NT's acting prowess in SM . Nothing extrordinary . The movie glitters due to other factors . This is my point. Tks.
Printable View
Saradha Mdm
Thanks for the listing but my comment was about NT's acting prowess in SM . Nothing extrordinary . The movie glitters due to other factors . This is my point. Tks.
Dictionary of Nadigar Thilagam's acting from critics:
" nothing extraordinary" - if the story needs subdued subtle performance which NT provides.
"over-o-over acting" - if the story needs dramatisation and extra efforts for the portrayal of characters in true colours which NT provides.
I think a separate dictionary of acting of Nadigar Thilagam be prepared so that the critics may use of it at their wish and will and to their satisfaction.
Raghavendran
நன்றி ராகவேந்தர் அண்ணா, முரளியண்ணா மற்றும் பம்மலார்....
Sorry Irene-ji........Quote:
Originally Posted by Irene Hastings
இப்போதும் கூட தங்களின் கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த படத்துக்கு, அந்த திரைக்கதையமைப்புக்கு என்ன அதிகப்படியான நடிப்பைத் தர முடியுமோ அதைக் குறைவில்லாமல் தந்திருந்தார்.
1) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.
2) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).
3) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.
4) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".
5) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).
6) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.
7) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச்செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!). (இதுபோக நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட, நாட்டிய மேடை ஒத்திகையின்போது காட்டும் யதார்த்தம்).
ஸாரி.... 'சிவந்த மண்' படத்தைப்பற்றியும் அதில் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றியும் எழுதத்துவங்கிவிட்டால் நிறுத்தாமல் எழுதிக்கொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு காட்சியமைப்புக்களில் மட்டுமல்ல, நவரசமும் கலந்த நடிப்புப் புதையலிலும் அபாரமான படம்.
சாரதா மேடம்
உங்களின் குறிப்பிட்ட காட்சிகள் அப்படி ஒன்றும் வியத்தகு வண்ணம் அவர் செய்யவில்லை. என்னுடைய நடிகர் திலகம் வேறு !
உதாரணத்திற்கு முதல் மரியாதை. :notworthy:
முற்றிலும் உண்மை. திரு. Irene Hastings அவர்களது புதிய பதிவு உங்களது கருத்தை உறுதி செய்கிறது.Quote:
Originally Posted by RAGHAVENDRA
அதாவது வெறுமனே வருவது, உட்காருவது, நிற்பது, போவது.... மொத்தத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது. (Is it Extraordinary...?. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இதைப்பண்ணியிருந்தாரானால் பத்தோடு பதினொன்றாக ஆகியிருப்பார்)Quote:
Originally Posted by Irene Hastings
உங்கள் டேஸ்ட் உங்களுக்கு. அதைக்குற்றம் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை....
எல்லோருக்கும் ஒரே மாதிரி டேஸ்ட் அமைந்துவிட்டால் நாடு முழுக்க ஒன்று 'ஆரியபவன்'களாகவோ அல்லது 'முனியாண்டி விலாஸ்'களாகவோ தான் இருக்கும்.
தனிப்பட்ட முறையில் என்னைப்பொறுத்தவரை முதல் மரியாதை, தேவர்மகன், படிக்காதவன், படையப்பா போன்ற்வற்றை நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் அவை அவருடைய படங்கள் அல்ல. வேறு யாரோ எடுத்த/நடித்த படங்களில் அவ'ரும்' இருந்தார். அவ்வளவே. முதல் மரியாதையையும் இதில் சேர்த்திருப்பது பலருக்கு புருவத்தை உயர வைக்கலாம். ஸாரி, என்னைப்பொறுத்தவரை அது பாரதிராஜா படம். அதில் இவர் வந்து போனார்.
சாரதா மேடம்
எனக்கு பிடித்த ஒரு பாத்திரம் எங்க ஊரு ராஜா வில் வரும் ஜமீந்தார் வேடம் ! அதுவும் வயதான பின்பு அவர் காட்டும் நடிப்பு !
படம் முழுவதும் அவர் ஆக்ரமிப்பார் ( இரட்டை வேடமாக இருந்தாலும் )
படம் பார்த்த பின் நமக்கு நடிகர் திலகம் தான் மனதில் ஓடும்
அப்படி ஒரு தாக்கம் சிவந்தமண் ணில் எனக்கு ஏற்படவில்லை.
மன்னிக்கவும்.
Irene...ji,Quote:
Originally Posted by Irene Hastings
இந்த வார்த்தை தேவையில்லை...
'முதல் மரியாதை' எனக்குப்பிடிக்கவில்லை என்பதற்காக உங்களிடம் மன்னிப்பா கேட்டேன்?. இல்லையே. அதுபோல 'சிவந்தமண்'ணில் அவர் நடிப்பு உங்களுக்கு பிடித்தேயாக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
'முதல் மரியாதை' படத்தை முதலில் பார்த்தபோது அவ்வளவு நிறைவைத்தரவில்லை என்ற அளவில் மட்டும்தான் இருந்தது. ஆனால், தனது ஏழு வயதில் நடிக்க ஆரம்பித்து, நவரச நடிப்பால் உலகப்புகழ் அடைந்துவிட்ட ஒரு கலைஞனுக்கு, 1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே அந்தப்படம் எனக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. இதற்காக என் ரசனையை யாரும் குறை சொன்னாலும் அதுபற்றிக் கவலையில்லை
மேடம்,Quote:
1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே
இதை நான் கேள்விபடவில்லை. எனக்கு முதல்மரியாதை ஏன் பிடித்ததென்றால் அவரால் வசனம் பேசாமலும் தன் திறமையை காண்பிப்பார் என்று நிரூபித்ததற்கு !
ஒரு இமயத்துடன் இணைவதில் பெருமைபடுகிறோம் என்று தான் படத்தின் ஆரம்பத்தில் வரும் :D
முதல் மரியாதை பொறுத்த வரையில் யானை பசிக்கு சோள பொறி தான்