மனதுள் மணக்குது
மதுரை மருக்கொழுந்து
மல்லிகை பூச்செண்டு
மருதாணி மனோரஞ்சிதம்
பவளமல்லி பாரிஜாதம்
ஜாதிமல்லி செண்பகம்
முகரத் திகட்டா கதம்பம்
பொத்தி வைத்த பொக்கிஷம்
மலரும் நினைவுகள் தரும்
பள்ளி மாணவர் சந்திப்பு
Printable View
மனதுள் மணக்குது
மதுரை மருக்கொழுந்து
மல்லிகை பூச்செண்டு
மருதாணி மனோரஞ்சிதம்
பவளமல்லி பாரிஜாதம்
ஜாதிமல்லி செண்பகம்
முகரத் திகட்டா கதம்பம்
பொத்தி வைத்த பொக்கிஷம்
மலரும் நினைவுகள் தரும்
பள்ளி மாணவர் சந்திப்பு
சந்திப்பு ஏற்படுமென்று
நான் நினைக்கவேயில்லை
அவனும்
எவ்வளவு வருஷாச்சுடி
எங்க இருக்க மஸ்கட்டா
நான் இந்தக் கம்பெனி
உன்னவர்?
எத்தனை குழந்தைகள்
எனக்கு இவ்வளவு
எவ்ளோ நாள் இருப்ப
வேலை பார்க்கறியா
அவளும் வேலை பார்க்கறா..
அப்புறம்…
தொடர்ந்த உரையாடல்களில்
அவன் கண்கள்
பசும்புல்லைக் கண்ட மாடாய்
மேய்ந்தவண்ணம் இருக்க.
ஒண்ணும் டிஃபரன்ஸே இல்லடி உன்கிட்ட
ஜிம் போறியா என்ன..
ம்ம் யோகா ப்ளஸ் டயட்
,என்று மட்டும் சொன்னேன்..
நீ மட்டும் என்ன வாழுதாம்.
அப்படியே இருக்கடா
காலேஜ்ல படிச்சாமாரி….
ஆளைத் துளைக்கும் பார்வை..
சொல்ல நினைத்து விட்டுவிட்டேன்..
வயதானால் என்ன
வண்டு வண்டு தான்..
வண்டு தான் காட்டும் சமத்துவம்
உண்டோ அதற்கு நிற பேதம்
தேடித் தேடி தேனை உண்ணும்
பரப்பும் பூமி எங்கும் மகரந்தம்
ஓயாத உழைப்பதன் ரீங்காரம்
சேவைகெடுத்த ஒரு அவதாரம்
அவதாரம் எனக்கேட்டால் நீயே தோழி
..அழகான் அனுக்கிரகம் என்றே சொல்வேன்
புவனத்தில் கண்டிப்பாய் அப்பா போலே
...பூர்த்தியான அன்பினிலே அம்மா போலே
உவகைகளை உணர்த்துவதில் அக்கா தங்கை
..உள்ளத்தை வழிநடத்த அண்ணன் போலே
கவலைகளைக் கனவுகளைப் பகிரத் தானே
..கடவுளர்கள் அனுப்பிவைத்தார் எனக்கா கத்தான்
எனக்காகத்தான் இங்கு எதுவும் மாறுமோ
கிழக்கன்றி மேற்கில் சூரியன் உதிக்குமோ
அலைகளும் கடலில் ஓய்ந்து நிற்குமோ
ஆற்றலேயில்லா அப்பாவியும் நானோ
மாறாத நியதிகளை இயற்கை விதிகளை
மதித்து ஒதுங்கி முரண்படாதிருப்பேனே
மாற்ற முடிந்த என் சூழலை அழகாக்கி
மாந்தர் தம் வாழ்வில் மேம்பட உதவி
மானிடப்பிறவியின் பலனை துய்ப்பதே
மகத்தான மதமும் மார்க்கமுமென்பேனே
மார்க்கமுமென்பேனே..
எனில் இறைவன்
எல்லாப் பொருள்களிலும்
எல்லா உயிர்களிலும்
இருக்கிறான்
என மேடையில்
காலட்சேபக் காரர் சொல்லிக் கொண்டிருக்க
காலில் ஏதோகடிக்க..
பார்த்தால் எறும்பு
ஒரே நசுக் என ஒரு ஷணம் நினைப்பை
மாற்றி
கொஞ்சம் தள்ளிவிட்டேன் காலால்..
மனதுள் நிம்மதி
உண்மை தான்.
காதில் எப்போதும் கேட்கவேண்டும்
நற்செய்தி..
நற்செய்தி மாறும் வயதிற்கேற்ப
பள்ளிக்கு விடுமுறை பால்யத்தில்
காதலும் கல்யாணமும் வாலிபத்தில்
பதவி உயர்வும் பணமும் நாற்பதுகளில்
சுப காரியங்கள் ஒய்வு பெறுமுன்
மூன்றாம் தலைமுறை அறுபதுகளில்
படுத்தாத தேக நிலை எழுபதுகளில்
மன நிறைவாய் உறங்கிய முடிவுரை
முடிவுரை எழுதிச் சென்றாய்
.முகத்தினை மறைத்து வேகம்
கடிதெனக் காற்றைப் போல
.காலடி கூட்டி வைத்தே
படிகளில் தாவித் தாவி
…பாய்ந்துநீ சென்ற காட்சி
துடித்தவென் நெஞ்சத் துள்ளே
…சுத்தமாய் பதிந்தி ருக்கு
காதலினை மறுத்துவிட்டுச் சென்றிருந்தால் நியாயமே
…கன்னியுனை மறந்துவிட்டு நின்றிருப்பேன் நானுமே
வாதமிட்டுப் புரியவைத்துப் பின்சென்றால் நியாயமே
..வழக்குவென்ன சொல்லிடாமல் சென்றதுவும் தவறுதான்
பேதமுண்டு இதயத்தில் அந்தஸ்தில் என்றுதான்
..பெண்நீயும் சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் நியாயமே
சேதமிலாக் காதலுமே உனக்குண்டு தெரியுமே
…சேதியென்ன சொல்லிடாமல் சென்றதுவும் நியாயமோ..
பார்க்காதே என்றாய்நீ சரியென்றே நானும்
….பார்க்கவில்லை நிலவின்கண் பார்ப்பதையே விட்டேன்
ஓர்மையினை நெஞ்சுள்ளே வைக்காதே என்றாய்
…உணர்வுகளை அடக்கிடவும் பாடங்கள் கற்றேன்
வேர்வையது நெற்றியிலே பொங்கிவிட வந்து
….வெண்ணிலவுக் கண்ணீராய் கன்னத்தில் ஓட
போர்க்களம்தான் நம்காதல் போய்விடுங்கள் என்றாய்
..போனதுவோ நீதானே நம்காதல் அல்ல.
அல்ல அல்ல அது கோபமல்ல
யாரை நினைத்து தும்மினாய்
வெடுக் வெடுக் பச்சைமிளகாய்
கொடுக்கால் கொட்டும் தேள்
எரிக்கும் அனல் பார்வைகள்
பேரன்பின் அடையாளங்கள்
அடையாளங்கள் தெரியத் தான்
செய்கின்றன..
வழக்கம் போல
பத்திரிகை தொலைக்காட்சிப் பேட்டிகள்
நல்லது செய்திருக்கிறோம் என்று
பிரகடனங்கள்
செய்வோம் என வாக்குறுதிகள்
மற்றவர்களைப் பற்றிக் கேள்விகள்.
ஓ
வந்து விட்டது மற்றொரு தேர்தல்..
பாமர மக்களோ மோன நிலைதான்.
இதுவும் கடந்து போகுமென்று..