மியூசிக் ஞானமுத்துவா?
Printable View
பகடை பன்னிரண்டு 1982
ச்வர்ணம்பிகா production
தாமோதரன் இயக்கம்
தெலுகு இசை அமைப்பாளர் சக்ரவர்த்தி இசை
கமல் ஸ்ரீப்ரியா சுதர்சன் சத்யப்ரிய சத்யராஜ் நடித்து வெளிவந்தது
சத்யராஜ் ஒன்று இரண்டு காட்சிகளில் சுதர்சனின் அல்லக்கை ஆக வருவார். இந்த படம் அடிக்கடி மெகா டிவி யில் ஒளிபரப்பாகிறது
ஒரு நல்ல பாடல் "வர வேண்டும் மகாராஜன் "
http://www.youtube.com/watch?v=cl3ToU7HZfU
ஜஸ்ட் ரிலாக்ஸ்
http://3752ph102dgl405f3e3yvdrpili.w...ust-Relax..jpg
இயக்குனர்கள் வரிசை
http://www.nadigarthilagam.com/image10/CVRspeaks.jpg
இயக்குனர் சி.வி.ராஜேந்திரன்
தொடர்கிறது.......
'வீட்டுக்கு வீடு' (1970) மறக்க முடியாத ஒரு காமெடி. வீட்டுக்கு வீடு அனைவரும் பார்த்து ரசித்த ஒரு படம். வசூலில் பின்னலும் கூட.
ஒரு சீரியஸ் கதைக்கருவை இலவம் பஞ்சு ரேஞ்சுக்குக் கையாண்டு அதில் தலையணை தைத்து. நம்மை சுகமாய்த் தூங்க வைத்த சி.வி.ஆர்.
கரணம் தப்பினால் மரணம் நேரக்கூடிய புயல் சமாச்சாரம். ஆனால் கண நேரமும் குறையாத நகைச்சுவைத் தென்றலானது.
ப்ப்பூ... என்று ஊத்தி தள்ளும் தைரிய 'லஷ்மி'.
'தென்னக ஜேம்ஸ்பாண்ட்' அப்பாவி ஹஸ்பண்ட் ஆகி ரசித்து சிரிக்க வைத்த கதை.
துப்பாக்கியை மட்டுமே கையில் பிடித்தவருக்கு கரண்டியைக் கொடுத்து நம்மை ர(ரு)சிக்க வைத்த ருசிகரம்.
போ..போ..போ..போ.. என்று ஜெய்யை (பொண்டாட்டி தாசனாம்) எரிச்சலுடன் போடு போடென்று போட்ட முத்தான ராமன் சத்தாக வலம் வந்த அதிசயம்
'ம்ம்ம்... மாட்டிகிட்டான்' என்று கிடாரும் கையுமாக கள்ளத் தம்பதிகள் என்று நினைத்து நிஜத் தம்பதிகளை அப்பா வி.கே.ராமசாமியிடம் மாட்டி வைக்கத் துடிக்கும் நாகரீக ஜிப்பா கண்ணாடி நாகேஷ்.
சிண்டுமுடியும் நாகேஷை சிண்டை வைத்துக் கொண்டு கேஷுவலாக சமாளிக்கும் வி.கே.ஆர்.
பக்கத்து வீட்டுப் பெண் போல தன் மேல் நம்மை கரிசனம் காட்ட வைக்கும் 'வெண்ணிற ஆடை' நளின அழகி
இவர்கள் அத்தனை பேரையும் தூக்கி தம் பாக்கெட்டுக்குள் போட்டு
நான்தான் டாப் என்று நச் பாடல்கள் கொடுத்த எம்.எஸ்.வி.
'அங்கம் புதுவிதம்' எழுதி 'அந்தப் பக்கம் வாழ்ந்த ரோமியோ'வை மைக்குள் அடக்கி நம்மை ஓடிவரச் செய்த கண்ணதாசன்
விலா எலும்பை நொறுக்கும் கோபுவின் (அன்றைய கிரேஸி) கோலாகல கோல்மால் வசனங்கள்.(கதையும் அவரே) அப்படி இப்படி திரும்பி விட்டால் நல்ல காமெடி வசனங்களை இழந்து விடுவோம்.
அப்படி இப்படி குழப்பாமல் மக்(கு)களுக்கும் புரியும்படியான சி.வி.ஆரின் கட்டிப் போடும் இயக்கம்.
என்று இந்த வீட்டில் பல 'ஜம்'மென்ற சங்கதிகள் நிறைய உண்டு.
இதிலிருந்து செம ரிலாக்ஸான ஒரு பாடல்.
லஷ்மிக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்து ஏமாந்து தன் காதலை கிடார் பாடல் மூலம் ரூமில் கதவடைத்திருக்கும் லஷ்மிக்கு சொல்லத் துடிக்கும் நாகேஷின் மெய்மறந்த காதல் மயக்க நிலை.
அசத்தும் நாகேஷுக்கு ஈடாக, ஏ.எல்.ராகவனுக்கு மாற்றாக அட்டகாச பின்னணி கொடுத்து அசத்தும் சாய்பாபா. (நடிகர் டி.எஸ்.பாலைய்யாவின் மகன்) கண்டசாலா, பாலமுரளிகிருஷ்ணா,பாலா மூன்று குரல்களையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் எப்படி ஒரு குரல் கிடைக்குமோ அப்படி ஒரு காந்தர்வக் குரல். அதிகமாக நமக்குக் கிடைக்காமல் போனது வழக்கம் போல. ஏமாறவே பிறந்தவன்தானே தமிழன். ஏமாற்றப் பட்டவனும் அவன்தானே!
http://img.youtube.com/vi/VybvUzOAnRw/0.jpg
பாடலின் துவக்கமே படுஜோர்.
மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனைக் கெடுத்தவள் மாலதி இந்நாளில்
சலோமி சலோமி சலோமி
ஐ.லவ் யூ
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
(இடையில் கிடாருடன் சேர்ந்த விசில் விளையாட்டு மெல்லிசை மன்னரிடம்)
(கிடாரும் சாய்பாபா தானாமே)
ஜூலையில் பிறந்தது ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் (வி.கே.ஆர் தொல்லையாம்)
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
(வெளியே இந்த லூஸ் அடிக்கும் லூட்டிகளைத் தாங்க மாட்டாமல் ரூமின் உள்ளே இருக்கும் லஷ்மி, ஜெய் தலையில் அடித்துக் கொள்வார்கள்)
இனி உன்னை யாரும் நெருங் (கிடார்)
உன் நிலைமையைப் பார்த்தவர் உறங் (கிடார்)
(சும்மா கிடார் புகுந்து புறப்படும். நாகேஷோ உயிரைக் கொடுத்து கிடாரைக் கிண்ட( கிடார் தந்திகளை கடுமையாக முடுக்கி திருகி வேறு விட்டு வாசிப்பார் படித்தால் மட்டும் போதுமா 'படிக்காத மேதை' போல.) நம் வயிறு வலியால் கிண்டப்படும்)
ஊர்வசி வந்தாலும் மயங் (கிடார்)
உன்மேல் ஆணை மை கிடார்
மை கிடார்
(சூபரப்பு! கிடாரை வைத்தே கிளுகிளுக்க வைத்த கவிஞனே! உன் வார்த்தை விளையாட்டுக்கு அளவேது!)
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப் பக்கம் நான் என்ன சாமியோ
ஓ மை ஸ்வீட்டி
ஓ மை ஸ்வீட்டி
ஓடிவா
ஓஓஓஓ.......ஓ
என்னமாய் ஒரு ஜாலி பாடல்! ரிலாக்ஸுக்கு பொருத்தம்தானே! என்ஜாய்.
https://www.youtube.com/watch?v=otMjPibfioI
ஸ்ரீதேவி னு ஒரு படம் சார்
சரிதா நடித்து வெளி வந்த படம் ஜோடி விஜய்பபுவா அல்லது ராஜகுமாரா (லதாவின் தம்பி ) நினவு இல்லை
ஷ்யாம் இசை
சிலோன் ரேடியோ ஹிட் இந்த பாடல்
பாலா சுசீலாவின் குரல்களில்
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா : மை வச்ச கண்ணம்மா
வெட்கத்தைத் தள்ளம்மா
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா :மார்கழிக் குளிரம்மா
மணி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது
துடியா துடிக்குது
சுசீலா : வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
மஞ்சை குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
பாலா : என்னம்மா சின்னப் பொண்ணு
நாணமென்ன நீயூம் சொல்லு
தேனே உன்னை பூவா அள்ளிக் கவிதை சொல்லவா
என்னம்மா சின்னப் பொண்ணு
நாணமென்ன நீயும் சொல்லு
தேனே உன்னை பூவா அள்ளிக் கவிதை சொல்லவா
தென்ன மரத் தோப்போரம் கன்னி இள மானே வா
தென்ன மரத் தோப்போரம் கன்னி இள மானே வா
நெஞ்சக அணையில் அள்ளி வச்சி தாலாட்டவா
வண்ணப் பூவே கன்னித் தேனே
நெஞ்சைத் தானே அள்ளித் தாயேன்
சுசீலா : வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வைக்க உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
சுசீலா : நீராடும் நேரத்திலே நீ வந்து பார்க்கையிலே
மச்சான் உன்னைக் கண்ணில் கண்டு தயங்கி நின்னேனே
நீராடும் நேரத்திலே நீ வந்து பார்க்கையிலே
மச்சான் உன்னைக் கண்ணில் கண்டு தயங்கி நின்னேனே
தாலி கட்டும் முன்னாலே தாண்டி வரலாமோ நான்
தாலி கட்டும் முன்னாலே தாண்டி வரலாமோ நான்
நாளும் வச்சு மேளம் கொட்டி நாமும் சேர்வோம்
மஞ்சை குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வச்ச உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
மஞ்ச்சைக் குளிச்சு அள்ளி முடிச்சு
உன்னை நினைச்சே நானும் இருந்தேன்
வாசமுள்ள சந்தனமே
வச்சிருக்கேன் குங்குமமே
மனசை வைக்க உன் மேலெ தான் மயங்கி நின்னேனே
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
பாலா : மை வச்ச கண்ணம்மா
வெட்கத்தைத் தள்ளம்மா
சுசீலா : ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹுஹும் ம்ஹும்ஹும்
மார்கழிக் குளிரம்மா
மணி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது
துடியா துடிக்குது
இந்த பாட்டுடோட விடியோ லிங்க் எதுவும் கிடைக்கலை
ஆனால் நல்ல பாட்டு சார்
அதுவும் சுசீலா திருப்பி திருப்பி 'வாசமுள்ள சந்தனமே ' சொல்லும் போது ஒரு சுகம் இருக்கும்
http://www.mediafire.com/?06rxc8m3fasxki2
வாசு சார்
மன்னிக்கவும் . உங்கள் போஸ்டை கவனிக்காமல் ஸ்ரீதேவி பாடல் போஸ்ட் செய்து விட்டேன்
உங்கள் அருமையான வீட்டுக்கு வீடு பாடல் மனம் கவர்ந்த பாடல்
ஜலகண்டேஸ்வர vkr
ஜமதக்னி நாகேஷ்
ம்ம்ம் மாட்டிகிட்டான்
இதே கதையை கோல்மால் செய்து விஸ்வநாதன் ராமமூர்த்தி னு ஒரு படம் ராம்கி ரோஜா விவேக் விந்திய கோவை சரளா வெண்ணிறாடை ராமமூர்த்தி combination ராமநாராயணன் படம்
நாகேஷ் ரோல் அப்படியே கோவை சரளா
அந்த ரூம் மாத்தறது ஒரிஜினல் கலக்கல்
ஜெய் லக்ஷ்மி முத்துராமன் வெண்ணிற ஆடை நால்வரும் இணைந்து கலக்கும் காட்சி
நாகேஷ் இசை புயல் பாட்டு பாகவதர் பட்டு
ஒரு ஹிந்தி பாடல் சொல்லி கொடுப்பார்
"க்யா கரோ சஜனி"
வீட்டுக்கு வீடு
ராம்குமார் films தானே சார்
கலாட்ட கல்யாணம்,வீட்டுக்கு வீடு,சுமதி என் சுந்தரி ,திக்கு தெரியதா காட்டில்
எல்லாமே காமெடி கலாட்ட
இந்த வரிசையில் வேறு ஏதாவது உண்டா சார்
கிருஷ்ணா சார்!
நெஞ்சை அப்படியே அள்ளிட்டீங்க வாசமுள்ள சந்தானம் தடவி.
கண்ணியப் பாடகியின் கண்ணியப் பாடலை அதுவும் மிக அபூர்வ பாடலைத் தந்ததற்கு நன்றி.
பாடல் வரிகள் முழுதும் சிரமப்பட்டு டைப் செய்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
வீ.வீ ,பாபு மூவிஸ் .பின்னாடி கமலை வைத்து சி.வீ.ஆர் இயக்கத்தில் மாலை சூடவா எடுத்தார்களே?(யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா. கன்னட மஞ்சுளா)