-
-
http://i60.tinypic.com/vpu49f.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia & Singapore.
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
-
http://i62.tinypic.com/6qur9l.jpg
" கரிகாலன் வைத்த குறி தவறாது ; தவறுமானால் குறி வைக்க மாட்டான் கரிகாலன் ! "
## தமிழ்த் திரையில் முதல் ' பன்ச் டையலாக் ' !
Thanks to Mr. Chandran Veerasamy, FB.
-
" இராமர் காலத்தில் இரயில் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிட முடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள், இருக்க முடியும் ? இராமர் காலத்தில் இல்லாத இரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப் போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய விமானம் இல்லையென்று ஆகாய விமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராசா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா தள்ளிவிடுகிறார்கள், கிடையாதே!
எனவே அந்தக் காலம், அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்காலப் பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பிடிவாதம் செய்வதும், பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.
எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தேவையானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப பின்பற்றவேண்டுமே தவிர, அந்தக் காலப்பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும் பொருத்தமில்லாமலும்
பின்பற்றக் கூடாது. "
- அறிஞர் அண்ணா .
-
http://i57.tinypic.com/2itm1hi.jpg
http://i60.tinypic.com/wa0k85.jpg
http://i59.tinypic.com/2ik6x46.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Malaysia & Singapore.
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
-
நமது திரி நண்பர்களின் கவனத்திற்கு
அனைத்துலக எம்.ஜி. ஆர்.பொதுநல சங்க நிர்வாகிகள் திருவாளர்கள்:பேராசிரியர் செல்வகுமார், ஹயாத் ,ஆர். லோகநாதன்,சி.எஸ்.குமார் (பெங்களுரு ), நாகராஜ் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு.எஸ். ராஜ்குமார் ஆகியோர் சில நாட்கள்
குற்றாலம், பாபநாசம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்று பின்னர்
மதுரை மாநகருக்கு விஜயம் செய்தனர்.
மதுரை மாநகரில் , "வேட்டைக்காரன் " -சிறப்பு பார்வை
----------------------------------------------------------------------------------------------
கடந்த ஞாயிறு அன்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்த் அரங்கில்
மாலை காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "வேட்டைக்காரன் "
திரைபடத்தை மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் திருவாளர்கள் எஸ். குமார், எஸ். கே. போஸ் , அசோக் குமார் , மாரியப்பன் ,பாலு , குருசாமி,
சரவணன், எம்.எஸ். ஆர். மணி, தமிழ் நேசன் , மர்மயோகி மனோகர் மற்றும் எண்ணற்ற பக்தர்களின் கரகோஷத்துடனும் , பலத்த கைதட்டல்கள், ஆரவாரத்துடனும் மகிழ்ச்சி பெருக்கோடு , ரசிக பெருமக்களின் உற்சாக வெள்ளத்தில் மிதந்து பார்த்து மகிழ்ந்தோம் .
அனைவரையும் அரங்க உரிமையாளர் திரு. கணேசன் அவர்களும் ,
அவரது சகோதரர் திரு. மகேந்திரன் அவர்களும் வரவேற்று தேனீர்
விருந்தளித்தனர்.
திரு. கணேசன் அவர்கள் (உரிமையாளர் ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
படங்களுக்கு மட்டுமே அதிக வசூல் கிடைப்பதாகவும் , மற்ற படங்களை
பெயரளவில் மட்டுமே திரையிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களுக்கு மாலைகள் அணிவித்து , ஆரத்தி எடுத்து, மதுரை மாநகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வாழ்த்தொலிகள் , கோஷங்கள் எழுப்பி பரவசப்படுத்தினர்.
சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர்கள் பலர் அரங்கிற்கு , தமது சைக்கிள் ரிக்ஷாக்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் ஒட்டியும், அலங்கரித்தும் வந்திருந்தனர்.
திரைபடத்தின் முடிவில் அனைவரிடமும் விடை பெற்று புறப்பட்டோம்.
-
-
-
-