http://i1146.photobucket.com/albums/...psc84bb331.jpg
Printable View
Welcome Adiram Sir
அன்பிற்கினிய பண்பாளர் , குணத்தில் கோலார், கொள்கையில் கோஹினூர் நெய்வேலி திரு.வாசுதேவன் சார் அவர்கள் இன்றுபோல் என்றும் வாழ்க! பல்லாண்டு வாழ்க!!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நடிகர்திலகத்தின் தீவிர பக்தரும், மதுரகானங்கள் திரியின் பிதாமகரும், எல்லோருக்கும் பிடித்த இனிய பண்பாளரும், அனைத்துக்கும் மேலாக என் பாசத்துக்குரிய இனிய நண்பருமான நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவர் இன்னும் பல்லாண்டுகள் பூரண ஆரோக்கியத்துடனும் என்றும் இளமை மாறா உடல் நலத்துடனும் வாழ்ந்து உலக நட்புக்கு இலக்கணமாக திகழ பிரார்த்திக்கிறேன்.
வாசு சார் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் கோபு.
வாசு ஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புள்ள வாசு தேவன் சார்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
வானத்தைப் பார்த்து வரும்மழை என்றெண்ணி
கானமயில் செய்யும் களிநடனம் – மோனமாய்
மேகங் கலைந்துவிட மண்ணும் நனையாது
வேகமாய் ஆடும் ஒயிலாட்டாம் நிற்காமல்
கூடி யுடனே குயில்கள் பாடுதற்கே
நாடியே தந்தீர் நலம்
பேதமெலாம் பார்க்காத வாசுதேவர் இங்கு
…பெற்றவித்தை கற்றவித்தை அனைத்தையும் தான் கூட்டி
சேதமெதும் செய்யாமல் நற்பாடல் பலவை
..சித்திரமாய் சொற்றொடரில் வரைந்திருப்பார் அன்றோ
நேசநெஞ்சம் நல்லறிவு நகைச்சுவையும் கூட்டி
.. நெடுந்தொடராய் குறுந்தொடராய் பாட்டுவண்ணம் தந்தார்
கேசவனா மாதவனா வாசுதேவர் அன்றோ
..கொண்டிடுவார் நூறாண்டு சிறப்புடனே புவியில்..
நூறாண்டுகாலம் வாழ்க..வாசு சார்.. உங்கள் இனிய நேச நெஞ்சத்திற்கு எல்லா வித நல்லவையும் உங்களை வந்து சேரும்..
தமிழ் நெஞ்சங்கள் எல்லோருக்கும் பிடித்த நடிகர் திலகம் போல் நம் எல்லோருக்கும் பிடித்த வாசு சார்... உங்கள் பிறந்த நாளில் மனமார வாழ்த்துகிறேன்...
அன்புள்ள வாசு
உங்களுக்கு ஒரு வயது குறைந்தது என்று அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - நெய்வேலியில் வாழ்ந்துகொண்டு , ஒரு பெரிய பிரபஞ்ச்சத்தை ஆண்டு கொண்டு இருக்கிண்டீர்கள் - பதினாறும் பெற்று ( குழந்தைகளை சொல்லவில்லை ) அதாவது
1. கலையாத கல்வி
2. என்றும் குறையாத வயதும்
3. ஒரு கபடு வாராத நட்பும்
4. கன்றாத வளமையும்
5. குன்றாத இளமையும்
6 கழு பிணி இல்லாத உடலும்
7. சலியாத மனமும்
8. அன்பு அகலாத மனைவியும்
9. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும் ( கர்ணன் போல் )
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு குற்றம் இல்லாத வாழ்வும்
16. துய்ய nt பாதத்தில் அன்பும்
பெரும் வாழ்வு வாழ வாழ்த்துவதுடன் , வேண்டுகிறோம்
இன்று பிறந்த நாள் காணும் வாசுவிற்கு பல்லாண்டு மேலும் காண வாழ்த்துக்கள். சரக்குடன் உன்னை சந்தித்து இரு வருடங்கள் ஓடி விட்டதை நம்ப கூட முடியவில்லை. இன்று உன் ஞாபகார்த்தமாக வேறொரு நண்பருடன் சரக்கடித்து கொண்டாட இருக்கிறேன்.
நெய்வேலி திரும்ப வரும் எண்ணம் உள்ளது. முயல்கிறேன்.
நட்புடன்
கோபால்.