என் உளமார்ந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. மெல்லிசை மன்னர் குணமாகி விட்டார். இவருடன் கழித்த மாலை பொழுதுகள்,மனதில் நிழலாடுகின்றது.
Printable View
என் உளமார்ந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. மெல்லிசை மன்னர் குணமாகி விட்டார். இவருடன் கழித்த மாலை பொழுதுகள்,மனதில் நிழலாடுகின்றது.
வாசு சார்
எனக்கும் ஜோதி லக்ஷ்மியை பிடிக்கும் . என்னமா டான்ஸ் பாருங்கள் .இந்த பாட்டில் .
https://youtu.be/TXkUdYztEt8
வாசு - வீட்டுக்கு வீடு உங்களைப்போல ஒருவர் இருந்தால் தமிழின் சுவையும் , பழைய நினைவுகளுக்கு ஒரு அஞ்சலியும் தினமும் கிடைக்கும் - படம் பார்க்கத்தூண்டும் அலசல் -- வாசுவின் கையிலிருந்து வந்தால் அதன் மனமே தனி தான்
கருவின் கரு - 120:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
உண்மை சம்பவம் 17
எல்லோருக்கும் என் வணக்கங்கள் .என் பெயர் விஜி - இந்த திரி " அம்மாவையும் அப்பாவை"ப்பற்றி எழுத ஒரு அருமையான வாய்ப்பை தருகிறது என்று என் நண்பர்களால் கேள்விப்பட்டேன் . மறந்து போகும் ஜீவன்களை மறக்காமல் பூஜிக்கும் இந்த திரிக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள் . என் அப்பாவைப்பற்றி நான் புரிந்துகொண்ட அளவிற்கு எழுதலாம் என்று நினைக்கிறேன் - இந்த பந்தம் ஒரு தெய்வீகம் -- அந்த இறைவனின் உறவைக்கூட அழகாக விவரித்துவிடலாம் - ஆனால் இந்த உறவை விவரிக்க முடியவே முடியாது - எவ்வளவோ கவிகள் பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளி உள்ளார்கள் . உண்மைதான் - ஆனால் அவர்கள் விவரித்தது 50% அளவிற்குக் கூடத்தேறாது ..
எனக்கு கிடைத்த அப்பா மாதிரி உலகத்தில் யாருக்குமே கிடைத்திருக்க முடியாது - இதை மிகுந்த கர்வத்துடனும் , பெருமையுடனும் சொல்கிறேன் - போட்டிக்கு வருபவர்கள் வரலாம் .
நாங்கள் இரட்டையர்கள் - நாங்கள் பிறந்தவுடன் அப்பா சொர்க்கத்தில் ஒரு பெரிய வீட்டையே கட்டிக்கொண்டு விட்டதாக அம்மா சொல்லி கேள்வி -- அவ்வளவு சந்தோஷம் ... இத்தனைக்கும் AG ஆபீஸ் வேலைதான் - பெரிதாக பணத்தைப் பார்க்காத குடும்பம் - வீட்டில் கட்டில் , sofa இல்லாவிட்டாலும் , போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அப்பாவிற்கு கடன் இருந்தது ... ஆனாலும் அவர் முகத்தில் வேதனை ரேகைகள் என்றுமே படர்ந்தது இல்லை -- எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் சொல்லாமலேயே உணர்ந்தவர் -
பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்லும் இந்த காலத்தில் , குப்பைத்தொட்டிகள் அம்மாவாகும் இந்த காலத்தில் இரண்டும் பெண்கள்காக பிறந்தோம் - ஐயோ பெண்ணா - அவ்வளவு தான் என்று சொல்பவர்கள் நிறைந்து இருக்கும் இந்த உலகத்தில் இரு பெண்களைப்பெற்று தலை நிமிர்ந்து நடப்பவர் என் தந்தை - கண்களில் பாசம் என்றுமே வாடாது - மனதில் என்றுமே எங்கள் நினைவுகள் தான் -- எதிலும் எங்களுக்கு வேற்றுமையை காண்பித்ததில்லை - ஒரே கலரில் துணிமணிகள் , அலங்காரங்கள் - பொம்மைகள் ......
அம்மாவிற்கும் பெருமைதான் என்றாலும் மனதில் எப்படி இவர்கள் இருவரையும் ஆளாக்கப்போகிறோம் என்ற ஒரே கவலை -- அப்பாவும் அதிகமாக சேமிக்காமல் எங்கள் இருவருக்கும் வாரி வாரி செலவழிப்பதை அம்மா விரும்பவில்லை -- அதனால் எங்கள் உரிமை அப்பாவிடம் அதிகமாக வளர்ந்தது ....
எங்களுக்கு 3 வயது ஆகும் வரை வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான் -- கவலை எங்கள் வீட்டில் வேலை செய்ய மறுத்தது .. பிரச்சனை எனக்கு மூன்றாம் பிறையைப்போல , மூன்றாம் வயதில் ஆரம்பித்தது - ஆம் பேச்சு தடைப்பட்டு வர ஆரம்பித்தது . அ --- ம் --- மா ஒரு வார்த்தையைச் சொல்ல 10 நிமிடங்கள் தேவைப்பட்டது
{ Stuttering — also called stammering or childhood-onset fluency disorder — is a speech disorder that involves frequent and significant problems with the normal fluency and flow of speech. People who stutter know what they want to say, but have difficulty saying it. For example, they may repeat or prolong a word, syllable or phrase, or stop during speech and make no sound for certain syllables.
Stuttering is common among young children as a normal part of learning to speak. Young children may stutter when their speech and language abilities aren't developed enough to keep up with what they want to say. Most children outgrow this developmental stuttering.
Sometimes, however, stuttering is a chronic condition that persists into adulthood. This type of stuttering can have an impact on self-esteem and interactions with other people.}
அப்பா உடைந்தே விட்டார் - என்னைக் கூட்டிக்கொண்டு , காண்பிக்காத தெய்வங்கள் இல்லை , போகாத மருத்துவர்கள் இல்லை - பணத்தை முதன் முதல் எங்கள் வீட்டில் தண்ணீரை விட அதிகமாக உபயோகிப்பதைப் பார்த்தோம் . என்னுடைய பிரச்சைனகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகவும் வளர்ந்தது - என் தங்கைக்கு கடவுள் அருளால் எந்த பிரச்சைனைகளும் இல்லை ... ஒரே கிளாஸ் , ஒரே வகுப்பு -- நண்பர்களின் கேலிப்பேச்சுக்கள் - இதற்க்கு தலைவியே என் தங்கை தான் - ஸ்கூலில் " அம்மா " என்று சொல்லு என்று எல்லோரும் கேட்க்க என்னை அழ விடுவாள் - என் அப்பாவிற்கும் எனக்கும் கண்ணீர் வற்றிப்போய் அம்மாவிடம் தான் கடன் வாங்கி அழுதோம் . அப்பாவிற்கு வேறு வேலை கிடைத்தது - நாசிக்கில் வேலை - வந்து சேர்ந்ததும் , சேராததுமாக ஷ்ரிடி சாய் யை தரிசிக்க சென்றோம் - நடை சாத்தி விட்டபின்பும் அப்பா எழுந்தக்கவே இல்லை -- அவனிடம் முறையிட்டு முறையிட்டு கண்கள் வீங்கி போயிருந்தன - மெதுவாக அப்பாவின் மடிக்குத்தாவினேன் --- என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டு விழும் கண்ணீருடன் அதை நிறுத்த சண்டை போட்டுக்கொண்டிருந்தார் .
ஒரு மருத்துவர் இரட்டையர்களில் உங்கள் கவனம் என் மீது அதிகமாக இல்லை அதனால் தான் நான் திக்குகிறேன் என்று வேறுசொல்லி என் தந்தையை என்னிடம் இருந்து பிரிக்கப்பார்த்தார் .. நானும் அழுதேன் - புரிந்தது பாதி - புரியாதது பாதி .
நாட்கள் நகர்ந்தன - இப்பொழுது நான் 6வது வகுப்பு - திக்குவதில் அதிகமான முன்னேற்றம் இல்லை - ஒரேஒரு முன்னேற்றம் - என் தங்கை என்னை இப்பொழுது முன்னே மாதிரி களாய்ப்பதில்லை .. நெருக்கமாய் பழக ஆரம்பித்தாள் .
ஸ்கூலில் அன்று பேச்சுப்போட்டி - தயிரியமாக என் பெயரைக்கொடுத்து விட்டேன் - அப்பாவிடம் கூட சொல்லவில்லை - என் தங்கை என்னைப்பார்த்து சிரித்தாள் - அதில் கேலி இல்லை - அக்கரை இருந்தது . தமிழ் டீச்சர் என்னிடம் " விஜி எதற்கு இந்த விஷப்பரிட்ச்சை - பல ஸ்கூல்கள் கலந்துகொள்ளக்கூடிய போட்டி - வேணுமென்றால் உன் தங்கை கலந்துகொள்ளட்டும் !" - முடியவே முடியாது விட்டுக்கொடுக்க மாட்டேன் --- அப்பாவை நினைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன் -- எப்படி முடித்தேன் என்றே தெரியவில்லை - ஒரே கரகோஷம் -- பேச்சில் எங்குமே தடை வரவில்லை --- அப்பாவிடம் மெடலை காட்ட ஓடினேன் --- அப்பா -- அப்பா உன்ன மகள் இனி திக்க மாட்டாள் ------
அப்பாவும் நானும் எவ்வளவு தடவைகள் அந்த கோல்ட் மெடலுக்கு முத்தம் கொடுத்திருப்போம் என்று கணக்கு வைக்கவில்லை - அப்பாவின் நம்பிக்கை - அவர் என் மீது வைத்த பாசம் , அன்பு , அக்கரை என் கறையை முழுவதும் போக்கியது - இப்பொழுதெல்லாம் ஷ்ரிடிக்குச்செல்வது எங்கள் வாழ்க்கையில் ஸ்கூல் /ஆபீஸ்க்கு தினமும் செல்வதைப்போல ஆகிவிட்டது - தெய்வ நம்பிக்கை ஜெயித்தது - அதை விட என் அப்பாவின் பாசம் வெற்றி பெற்றது என்று சொன்னால் அது மிகை யாகாது .... இப்பொழுது சொல்லுங்கள் நான் எவ்வளவு அதிர்ஷ்ட்ட சாலி என்பதை - இப்படி ஒரு அப்பா எனக்கு கிடைத்ததற்கு நான் என்ன தவம் செய்தேன் ! என் பதிவை பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் ----
வணக்கம்
விஜி
https://youtu.be/AlwB7poNlok
கருவின் கரு - 121
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
காற்றடிச்சா மகளுக்கு காவலாக நிற்ப்பாரு
காற்றடிச்சா சூரியனை கைது செய்ய பார்ப்பாரு - அதுதான் என் அப்பா
ராஜேஷ் இந்த கன்னட பாடல் உங்களுக்காக --
https://youtu.be/NEoxMB77cws
கருவின் கரு - 122
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
தாயில்லை எனக்கு என்றிருந்தேன் - தாயாக வந்தாள் -
மகன் இல்லை என் சிதைக்கு நெருப்பூட்ட என்றிருந்தேன் -
மகளாக வந்தாள் - எனக்கும் மரணமே இல்லை என்று சொன்னாள் .
காத்திருந்தேன் அவளுக்கு மணம் முடிக்க --- வாழ்ந்த பந்தம்
உடைந்து விடுமோ என்றே பயந்தேன் - ஒரு மகாராஜனை
கொண்டுவந்தாள் , எனக்கு மகனாக்கினாள் -----
மகளை விட்டு வெகு தூரம் செல்ல நினைத்தேன் - கால்கள் கிளம்பின
மனம் தொடரவில்லை
நீ தானம்மா எனக்கெல்லாம் என்று சொன்னேன் - அப்பா நீ என் வரம்
என்றாள் ..
https://youtu.be/T1zD-Taq9hQ