-
-
மிக்க நன்றி சகோதரி வனஜா அவர்களே! தங்களுடைய அற்புதமான வரைபடங்களுக்கு நன்றி!
-
டியர் வாசுதேவன் சார் / ராகவேந்திரன் சார்,
இந்தியக் குடியரசின் 64 ஆம் ஆண்டுவிழாவினைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் "குழந்தைகள் கண்ட குடியரசு" திரைப்படத்தின் Coverage ஐ முழுமையாக அளித்து அசத்தியதற்கு நன்றி.
-
வாசு,
ஆஹா! ஆஹா! பின்னி விட்டீர்கள். உங்கள் பக்த துக்காராமிற்கு நேரில் பாராட்டி நன்றி தெரிவித்தேன். குழந்தைகள் கண்ட குடியரசு ,மிக மிக அபூர்வமானது. எங்கேயிருந்தையா இவைகளையெல்லாம் தேடி தேடி கொண்டு வருகிறீர்கள்? உங்கள் நடையில், உங்கள் involvement கொப்பளிக்கும் அழகை பல முறை வியந்திருக்கிறேன். மிக மிக நன்றி.
ராகவேந்தர் சார்,
தகவல்கள்,ஆவணங்கள் ,புகை படங்கள் அருமை. வாசுவிற்கு அருமையான support .
-
திருவாளர்கள்..பார்த்தசாரதி,வாசுதேவன் மற்றும் ராகவேந்திரா: என் வணக்கம்.
உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி.கரும்பு தின்ன கூலியா? அந்த மகாகலைஞனைப்பற்றி எழுதுவது நமக்கே ஒரு கெளரவம் அல்லவா?உங்கள் ஆதரவுடன்,தொடர்ந்து எழுத ஆசை.
இன்று குடியரசு தின விசேஷ பரிசாக வாசு அவர்கள் ஒரு பெரிய விருந்தே வைத்து விட்டார்கள்.இப்படி ஒரு ஆழ்ந்த பக்தியா? வாழ்க.தலைவர் புகைப்படமா அது?பார்க்க பார்க்க வியப்பாக உள்ளது.தமிழ் சினிமாவிற்கே முதன்மையான நடிகர்.வெற்றி நடிகர்.அப்பொழுதே தன் கட்டபொம்மன் நடிப்பால் உலகப்புகழ் பெற்றவர்,ஒரு கெளரவ வேடத்தில் நடிப்பதே அபூர்வ விஷயம்.சரி அதை விடுங்கள்..அந்த ஒப்பனை!! எவ்வளவு சௌந்தர்யமான தன் முகத்தை எவ்வளவு குரூபமாக ஆக்கி கொண்டுள்ளார்!!அவர் எப்படி நடிப்பை நேசித்திருக்கவேண்டும்! பூஜித்து இருக்க வேண்டும்!!இப்படி ஒரு பாத்திரத்தை ஏற்க!வாசு ஸார் குறிப்பிட்டதைப்போல அப்பொழுது என்ன வசதியிருந்தது? இருந்த ஒரே YOU tube பௌதிக பரிசோதனை சாலையில் இருந்த U tube தான்!தன் கற்பனை வளத்தை முழுவதும் பயன்படுத்தி அல்லவா அப்படிப்பட்ட பாத்திரங்களில் நடித்திருக்கவேண்டும்.இனி அவர் போல ஒரு மஹாகலைஞனை எப்பொழுது காண்போம்?
-
அம்மணி வனஜாக்ஷி அவர்களே!!
மிக அருமையான ஓவியங்கள்..தத்ரூபமான கண்கள்.நீங்கள் ஒரு கண்கள் specialist.
வெறும் கண்களைப்பார்த்தே அந்த நபர் யார் என சொல்லிவிடலாம்.
கர்ணன்: தலைவர் அற்புதம்..அந்த கன்னங்களில் இன்னும் ஒரு பங்கு செழுமையை சேர்த்தால் புகைப்படம் ஆகிவிடும்.(தலைவரும் பன்முகம் கொண்டவர் என்பது நீங்கள் அறியாதது அல்லவே!)எம் வி ராஜம்மாவும் அருமை..
பத்மினி:Takes the cake..Top class..
சரோதேவிகா:தேவிகாவின் கண்கள்,சரோஜாதேவியின் மூக்கு,..
தொடருங்கள்..இது கட்டளை.
-
வனஜா,
வரை கலை என்பது அதிலும் இயல்பு தன்மையோடு (true to the content) வரைவது என்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. வெகு சிலருக்கு மட்டுமே "கைவரக்கூடிய" இந்த கலை உங்களுக்கு கை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். பத்மினியும் சரி தேவிகாவும் சரி பளிச்சிடுகிறார்கள். ஒரு தோள் மறைத்து ஒரு தோள் பளிச்சிட நிற்கும் "கர்ணன்" கம்பீரம். தொடருங்கள்.
ஜெனரல் சக்கரவர்த்தி என்று நீங்கள் சொன்னாலும் எனக்கு என்னவோ "கோட்டை மதில் மேலே வெள்ளைப் பூனை" நினைவுதான் வந்தது/வருகிறது.
அன்புடன்
-
வாசு,
உங்கள் பதிவிற்கு போவதற்கு முன் என்னுடைய மனப்பூர்வமான நன்றி. காரணம் உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவு இந்த திரியில். என்று வரும் இந்த நாள் என நினைத்திருந்த என் போன்றோருக்கு மன மகிழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு மீண்டும் நன்றி. மகுடிக்கு கட்டுப்படும் நாகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா என்பது தெரியாது. ஆனால் நீங்களும் சரி ராகவேந்தர் சாரும் சரி நடிகர் திலகம் என்ற பெயருக்கு கட்டுப்பட்டவர்கள் என்பது மட்டும் முற்றிலும் உண்மை என்று எனக்கு தெரியும். அதுதான் உங்களை மீண்டும் இங்கே கொண்டு வந்திருக்கிறது. தொடருங்கள்!
குழந்தைகள் கண்ட குடியரசு நான் பார்த்ததில்லை. 10 நிமிடங்கள் மட்டுமே வருவார் என்று சொல்கிறீர்கள்! ஆனால் உங்கள் பதிவை படிக்கும் எவரும் அதை பத்து நிமிட சிறப்பு தோற்றமாக நினைக்கவிடாமல் ஒரு முழு நீள பாத்திரமாக அதை உருவகப்படுதியிருக்கும் உங்கள் எழுத்து வன்மைக்கு பாராட்டுக்கள்!
உங்களின் ஆதங்கம் உண்மை! இது போன்ற சிறப்பு தோற்றங்கள் போதிய அளவில் பேசப்படவில்லை என்பது சரியான கணிப்பே! Contemporary விஷயங்களை கூட பழைய படங்களைப் பற்றிய பதிவில் லாவகமாக நுழைப்பதில் உங்களின் தனி திறமை பளிச்சிடுகிறது! ஹரி - சிங்கம் பற்றிதான் குறிப்பிடுகிறேன்.
மேலும் மேலும் எழுதுங்கள்!
அன்புடன்
-
vanaja madam,
Superb. I couldn't take my eyes off. It looks like R.N.Nagaraja Rao's real photograph and the speciality is Eye.(I will call you Eye specialist. Not "I specialist ??)
A small request. When we meet in Chennai(As discussed),you have to make a portrait for me(my own) to treasure it.
-
அன்புச் சகோதரி வனஜா
தங்களின் ஓவியங்கள் இப்பாடலைத் தான் நினைவூட்டுகின்றன ... அடுத்த வீட்டுப் பெண் படத்தில் வரும் கண்களும் கவி பாடுதே ... என்பது போல் தங்கள் ஓவியங்களின் பலமே கண்கள் தான். உயிரோட்டமாயுள்ளன தங்கள் வரைகலை ஓவியங்கள்.
இது போல் மேலும் மேலும் தாங்கள் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
http://www.mayyam.com/talk/attachmen...1&d=1359126491
http://www.mayyam.com/talk/attachmen...2&d=1359127002
http://www.mayyam.com/talk/attachmen...3&d=1359127311