Originally Posted by Mrs.Mano
Dear Suvai!
Thanks a lot for the feedback on stickjaw recipe.
சுவை! பதநீர் ஒரு சுவை மிக்க சத்தான பானம். பனையேறும் தொழிலாளிகள் பாளைகளை சீவி கட்டி வைத்து வந்து விடுவார்கள்.
பனம் பாளைகளிருந்து வெளியேறும் திரவம் அதன் நுனியில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் பதநீராக சேமிக்கப்படுகிறது. அந்தப் பானைகளின் உட்புறம் தடவப்பட்டிருக்கும் சுண்ணாம்பு இந்த பதநீரானது கள்ளாக மாறுவதைத் தடுக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை ஒரு குடுவையுடன் ஏறிச்சென்று சேமிக்கப்பட்டிருக்கும் பதநீரை எடுத்துக்கொட்டிக்கொண்டு பானையை மறுபடியும் பதநீர் சேமிக்க அப்படியே வைத்து விட்டு வருவார்கள்.
தென்னைமர பதநீரை விட பனைமர பதநீரே நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். பதநீரில் என் மாமியார் சாதம் செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக கிராமங்களில் இது கலப்படமில்லாமல் சுவையான பதநீராகக் கிடைக்கும். இதை வைத்து வெல்லம், தேங்காய் சேர்த்து பதநீர் பொங்கல், பயத்தம்பருப்பு, வெல்லம் சேர்த்து பதநீர் கஞ்சி செய்வார்கள். முன்பெல்லாம் விடியற்காலைப் பொழுதுகளில் பானையில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாய் கூவி விற்று வருவார்கள். பனை ஓலையை கிண்ணம் மாதிரி கட்டி அதில் பதநீரை ஊற்றித் தருவார்கள். இப்போதெல்லாம் பாக்கெட், தம்ளர் என்று வந்து விட்டது. பழைய சுவை இருப்பதில்லை. பொதுவாகக் கோடைக்காலங்களில் இது கிடைக்கும்.