-
இனி இந்த படத்தின் கதை பற்றி விரிவாக
படத்தின் பெயர் போடும் போதே ஒரு வித ஆர்வம் தொற்றி விடுகிறது , காரணம் , இந்த படத்தின் பிரமாண்டத்தின் அளவு பின்னாடி வரும் காட்சிகளை பார்த்ததும் , எந்த அளவுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு வைக்க வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறது
படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஒரு கணீர் குரலில் சமாதானமே தேவை என்று ஒரு எழுச்சி நாயகன் வெள்ளை குதிரையில் பாடி கொண்டு வருகிறார் (வேறு யார் நம்ம சிவாஜி சார் தான் )
அவர் காணும் காட்சியோ கொடுரம் , ஒரு வயசானவர் தண்ணி குடிக்க முயலும் பொது அரசு சிப்பிகளால் தடுக்க படுகிறார் , பின் அந்த புரட்சி நாயகன் அந்த வயசானவருக்கு உதவி செய்து விட்டு தன் வீட்டுக்கு செளுகிறார் , அங்கே அவர் அன்னை அவருக்கு சாப்பாடு போடும் பொது தான் நமக்கு புரிகிறது , அந்த புரட்சி வீரனின் வீட்டில் ஏழ்மை
குடி இருபது , அந்த புரட்சி வீரன் பட்டாளத்தில் சேர முடிவு செய்கிறார் ,கூடவே அவர் நண்பர் (கருணாநிதி )
அந்த புரட்சி வீரன் நாட்டின் தலைநகருக்கு செல்லுகிறார் , அங்கே அவர் தான் காப்பாத்திய வயசானவர்வை சந்திக்கிறார் , அந்த சமயம் பார்த்து அந்த ஊரின் இளவரசி வரும் பொது , அவர் மேல் பூவை எரிந்து கவனத்தை ஈர்க்கிறார் அவரை கைது செய்து அழைத்து வர உத்தரவு இடுகிறது அரசாங்கம்
இது நடப்பது மருத நாட்டில்
-
அடுத்த காட்சி நடப்பது சொர்ணபுரி என்ற ஊரில் ஒரு முஸ்லிம்
ராஜா வின் மாளிகையில் , அங்கே இருப்பது ராஜா அலாவுதீன் அல்ல ,அவரின் தம்பி மற்றும் அவரின் மந்திரி , இருவரும் தப்பி ஓடிய ராஜா அலாவுதீன் மற்றும் அவரின் மகளின் இருப்பிடம் பற்றி விசாரிகிரர்கள்
அவர்களின் யுகம் ராஜாவும் அவர் மகளும் மருத நாட்டுக்கு தஞ்சம் அடைந்து இருப்பார்கள் என்று நினைத்து , மருத நாட்டில் இருக்கும் அவர்களின் நண்பனும் , ராஜாவின் மைத்துனரும் வீரகேசி (psv ) . வீரகேசி மருத நாட்டின் ராஜாவாக வேண்டும் என்பதே ஆசை , அதற்கு துணையாக சொர்ணபுரி ராஜாவின் தம்பியுடன் கூட்டு சேர்ந்து சதி செய்கிறார்.
சொர்ணபுரி ராஜா அலாவுதீன் மற்றும் அவர் மகள் இருவரும் நாடோடியாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள் , அலாவுதீன் மருத நாட்டின் ராஜாவின் நெருங்கிய நண்பர் , தன் நண்பரை காணவில்லை என்ற கவலையில் அவரை தன் மைத்துனர் வீரகேசியை தேட சொல்லுகிறார் ராஜா .
இந்த நேரத்தில் தான் புரட்சி வீரன் மருத நாட்டுக்கு , அதுவும் ராஜாவின் மாளிகைக்கு வருகிறார் , வந்த இடத்தில அவரின் வீரத்தை கண்டு , ராஜா அவரை பற்றி கேட்கிறார் , ஏனென்றால் அந்த வீரனின் வாள்வீச்சு மன்னருக்கு முத்துசேர்வையை நினைவுபடுத்துகிறது அவரோ தன் தந்தை தான் முத்துசேர்வை என்றும் தன் பெயர் ஜீவகன் என்று தெரிவிக்கிறார்
ஆம் அந்த புரட்சி வீரனின் பெயர் (சிவாஜியின் பெயர் ) ஜீவகன்
ஜீவகன் வீரத்தில் கவரபடுகிறார் இளவரசி ரத்னா , ஜீவகன் தன் தாயை பார்க்க அவர் வீட்டுக்கு செல்லும் பொது இளவரசி ரத்னா அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்கிறார்
அலாவுதீன் மற்றும் அவர் மகள் ஆஷா இருவரும் ஜீவகனின் வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள்
ஆஷா மற்றும் ஜீவகன் இருவரும் பேசி கொண்டு இருப்பதை பார்த்து தப்பாக புரிந்து கொண்டு சென்று விடுகிறார் ரத்னா
அலாவுதீன் தன் நண்பர் மருத நாட்டின் ராஜாவுக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புகிறார் ஜீவகன் மூலமாக
மருத நாட்டின் ராஜா ஜீவனுக்கு கோட்டை தளபதியாக பதவி உயர்வு அளிக்க முடிவு செய்கிறார் , இதற்கு ராஜாவின் இரண்டாம் மனைவி , மற்றும் வீரகேசி இருவரும் எதிர்ப்பு தெரிவிகிறார்கள் .
-
அடுத்த நாள் சபைக்கு அடிபட்டு தாமாதமாக வருகிறார் ஜீவகன் , அவரின் மேல் பொய் குற்றச்சாட்டை, ஜீவகன் ஒரு ஒற்றன் என்று தெரிவிக்கிறார் வீரகேசி (MR சந்தானம் , மற்றும் ராம்சிங் உதவி உடன் )
ஜீவகன் சிறைக்கு அனுப்ப படுகிறார்
ஜீவகன் நண்பரின் (கருணாநிதி ) உதவியால் தப்பிக்கும் பொது , வீர்கேசி தெரியாமல் உதவி விடுகிறார் , தன் திட்டம் இது தான் என்று சொல்லிவிடுகிறார்
ஜீவகன் தப்பி ஓடி அலாவுதீன் மற்றும் அவர் மகள் ஆஷா இருவரையும் காபாத்தி விடுகிறார் , இதில் ஜீவகனின் தாய் தண்ணியில் குதித்து ஒரு கிராமத்து மக்களின் உதவியினால் உயிர் பிழைக்கிறார் (இது ஜீவகன்க்கு தெரியாது)
ஜீவகன் , அலாவுதீன் , ஆஷா பவளநாடுக்கு சென்று விடுகிறார்கள் , அங்கே மாளிகையில் சமையல் வேலை செய்து வாழ்கையை நடத்துகிறார்கள் , அந்த நாட்டின் ராஜா பார்த்திபன் ஆஷாவின் நடவடிக்கையில் ஒரு ராஜகலையை கண்டு விசாரிக்கிறார் , அவரிடம் அணைத்து உண்மையும் சொல்லி விடுகிறார்கள் மூவரும்
வீரகேசி அந்த சமயம் அங்கே வந்து ரத்னாவை பார்த்திபன்க்கு கல்யாணம் செய்து வைக்க மன்னர் பூபதி (மருத நாட்டின் ராஜா) விரும்புவதாக சொல்ல , பார்த்திபன் தந்திரமாக ஜீவகனுக்கு ரத்னாவை திருமணம் செய்து வைத்து விடுகிறார் (கல்யாணத்தில் புகை அதிகமாக வர வைத்து , அதே சமயம் ஜீவகன் குருக்கள் தோற்றத்தில் வேஷம் போட்டு கொண்டு கார்யத்தை சாதிகிரர்கள் )
தன் தந்தை இறந்த செய்தி கேட்டு நாட்டுக்கு திரும்பும் பார்த்திபன் , வீரகேசி சிறைபிடித்து விடுகிறார் , ரத்னாவும் , ஜீவகன் இருவரும் கொஞ்சம் நாட்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்
ஜீவகன் மன்னரிடம் இருந்து செய்தி வரத்தினால் அவரை தேடி செல்லும் பொது , ரத்னாவின் மேல் களங்கம் சுமத்தி அவரை நாட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் வீரகேசி (ரத்னா கர்ப்பமாக இருக்கிறார் )
ரத்னா அவர் மாமியார் உடன் வாழ்கிறார் , (தெரியாமல் )
ஜீவகன் மற்றும் அவர் நண்பர் இருவரும் பார்த்திபன் இருக்கும் சிறைக்கு சென்று அவரை பார்த்து விட்டு செல்லும் பொது , வழி தவறி ஒரு கிராமத்துக்கு சென்று விடுகிறார்கள் , அந்த கிராமத்தில் தன் தாய் , மனைவி , குழந்தை இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறார் ஜீவகன்
பூபதிக்கும் அவர் மனைவிக்கும் , வீரகேசி மேல் சந்தேகம் , அலாவுதீன் பூபதியை பார்த்து ஒரு உண்மையை சொல்லி விடுகிறார் , அதாவது பூபதியின் ஒரு குழந்தை தான் ஆஷா என்று
வீரகேசி மன்னரை கொன்று நாட்டை அடைய திட்டம் தீட்டுகிறார் , அதன்படி , மனனர் இறந்த உடன் தான் தான் ராஜா என்று மன்னர் எழுதியது போல MR சந்தானத்தை வைத்து forgery செய்து விடுகிறார்
திட்டம் நிறைவேறிய உடன் தன் மாமாவை கொன்று , அக்காவை சிறையில் அடைகிறார் , சந்தானம் தன் பிள்ளையை பற்றி கேட்டதும் அவரையும் கொன்று விடுகிறார் வீரகேசி , அடிபட்ட சந்தானம் ராணியை பார்த்து , தன் மகன் தான் இப்போலோது , ராணியின் மகனாக இருபதை சொல்லி விடுகிறார் (அதாவது ஆஷா தான் ரத்னாவின் தங்கை , அவளுக்கு தம்பி கிடையாது )
முடிவில் ஜீவகன் வீரகேசியை வீழ்த்தி நாட்டை காப்பாற்றி வெற்றி அடைந்து விடுகிறார்
முடிவில் நாட்டின் ராணியாக ரத்னாவும் , தளபதியாக ஜீவகன் இருக்க , ஜீவகன் நாட்டின் சமாதானம் தான் உலகத்தின் புதிய மொழி என்று அறிவிக்கிறார்
சுபம்
-
இனி படத்தை பற்றி
இந்த படத்தின் முதல் ஆச்சர்யம் , இந்த படத்தில் மொத்தம் நான்கு ஒளிபதிவாளர்கள் சம்பத்,ராஜாராம் , கிருஷ்ணன் , பார்த்தசாரதி , அடுத்தது settings , சீன் effects , ஓவியம் , இது அனைத்தும் ஒரே வார்த்தையில்
பிரமாண்டம்
அடுத்தது நம்மவரின் performance , எனக்கு ஆச்சர்யம் தான் , அவரின் முந்திய படங்களை பார்க்க பார்க்க தான் தெரிகிறது அவரை எந்த அளவுக்கு நாம் இன்னும் அலசவேண்டும் என்றும் , எப்படி இவரை
under estimate செய்து விட்டோம் என்று, யார் சொன்னது , பாலாஜி சாரின் படங்களில் இருந்து தான் நம்மவர் action ஹீரோ என்று (நானும் அப்படி தான் நினைத்தேன் ) காரணம் அவரின் நடிப்பு அப்படி , அதனால் அவரின் பிற சிறப்புகளை மறந்து விடுகிறோம்
இந்த படத்தில் தான் அவர் என்ன ஒரு அழகு , கம்பீரம் , அதே வருடத்தில் வந்த பாசமலரில் இருந்த செண்டிமெண்ட் நாயகனாக இவர் , நம்ப கஷ்டம் தான் , கூடு விட்ட கூடு பாய்வது என்றால் இது தானோ
முதல் காட்சியில் இருந்து என்ன ஒரு கம்பீரம் , அந்த முதியவரை காப்பதும் காட்சியில் சண்டையில் என்ன ஒரு quickness , aglieness இதை மிகை படுத்தி சொல்ல வில்லை , ஒரு நபர் ஒருத்தரை குளத்தின் படியில் நின்று கொண்டு தூகிவீசுவதும் , மரத்தின் விழுதை பிடித்து கொண்டு , குதித்து see saw போன்ற பலகையில் எதிராளிகளை தள்ளி விடுவதும் சுலபம் இல்லை
அதுக்கு அடுத்த காட்சி தன் வீட்டில் , தன் நண்பனிடம் உரையாடும் காட்சி அவர் ஒரு மொழி அழகன் என்று மீண்டும் ஒரு முறை பறைசாற்றுகிறது , அந்த காட்சியில் அவர் பேசும் வசனம் ரத்தினம் (தன் எதிராளிகள் பற்றி வருடமோ 1961 , பல விஷயங்களை நினைக்க தோண்டுகிறது முரளி சாரின் அரசியல் சூழ்நிலை கட்டுரைகளை எடுத்து படித்தால் இதை இன்னும் ரசிக்க முடியுமோ ?)
அதற்கு அடுத்த காட்சியில் அதாவது , தான் சிறை பிடித்து , அழைத்து வரும் காட்சி :
எல்லோரும் மனோகரவை நினைத்து இதை பார்த்தல் ஒரு வித ஆச்சர்யமும் , அதிர்ச்சியும் தான் மிஞ்சும் , காரணம் , அதில் அவர் எரிமலை என்றால் , இதில் தான் என்ன ஒரு அலட்சியம் , நீ என்னை கைது செய்து இருப்பது என்னை ஒன்னும் செய்து விடாது போலே ஒரு அலட்சிய பார்வை ,குறும்பு பார்வை , அலடல் நடை.
PSV அவரை வாம்புக்கு இழுத்து சண்டை போடா வைக்கும் பொது , என்ன ஒரு வேகம் , ஒரு நபர் கத்தி இல்லாமல் , கத்தி வைத்து இருப்பவர் உடன் சண்டை போட என்ன ஒரு துணிச்சல் வேண்டும் , சண்டை போட்டு விட்டு படையில் சேர்ந்ததும் அவர் அலட்டலாக ஒரு பார்வை பார்த்து நடப்பது இருக்கே ,
இனி எங்கே போவோம் இதை காண ?
என்னும் ஒரு சண்டை காட்சியில் , பகைவர்கள் அனைவரும் சுற்றி நிற்க நடிகர் திலகம் பாஞ்சு ,உருண்டு , மீண்டும் எழுந்து சண்டை போடும் லாவகம் இருகிறதே , ஆர்வமும் ,உடலில் வலுவும் இல்லாமல் ஒருவர் இப்படி செய்ய முடியாது , டுப் போட்டால் தெரிந்து விடும் , இதில் தான் 4 cameraman ஆயிற்றே , நடிகர் திலகத்தின் முகம் நன்றாக தெரிகிறது
சரி வெறும் சண்டை மட்டும் தான performance காட்சிகள் இல்லையா என்றால் அதுவும் உண்டு
-
தான் குற்றவாளியாக நிற்கும் பொது , அவர் முகத்தில் தான் என்ன ஒரு அப்பாவித்தனம் , சோகம் , அதுவும் அவர் தன் காதலி ஜமுனாவை பார்க்கும் பொது நீ கூட சொல்ல மாட்டாயா என்று கேட்பது போல் உள்ளது , இடைவேளை சமயத்தில் தன் தாயையை பிடித்து வைத்து எதிரிகள் மிரட்டும் பொது , அவரின் தேசிய பற்று தெரிகிறது
இடைவேளைக்கு பிறகு அவரின் ஒப்பனைகள் ஏராளம் , நடிப்பில் variety ஏகச்சகம்
சமையல்காரனாக பாண்டியநாட்டில் நுழையும் காட்சியில் அவர் தோற்ற்றம் , குரல் , முடி அனைத்தும் அசல் சமையல்காரன் , ஒரு நாட்டின் போர் வீரன் பணிவு மிக்க நடை நடக்க முடியுமா , எங்கள் நடிகர் திலகத்தினால் முடியும்
அடுத்ததாக சீன தேசத்து ஜோசியகாரனாக அவர் PSV உடன் பேசும் காட்சி , குரலில் மீண்டும் ஒரு மாற்றம் , அதுவும் அந்த chinese பாஷை , அதை மொழி பெயர்க்க கருணாநிதி என்று கொஞ்சம் சிரிக்க உத்தரவாதம்
பார்த்திபனின் யோசனை படி ப்ரோகிதர் வேஷத்தில் மீண்டும் தோன்றி நம்மளை அசர அடிக்கிறார்
தன் காதல் மனைவியை பார்க்க மீண்டும் ஒரு வேஷம் , அடையாளமே தெரியவில்லை
கடைசியாக பார்த்திபனை சந்திக்கும் பொது , ஒரு முஸ்லிம் get up
எழுதவே கஷ்டமாக இருக்கிறது , இவர் எப்படி தான் இப்படி செய்தார் இதை hats off to the legend
இந்த படத்தின் கதைக்கு பொருத்தமான வில்லன் PSV , ஹெரோஇனே ஜமுனா , மோசட் under rated காமெடியன் கருணாநிதி அனைவரும் கலக்கி இருக்கிறார்கள் , கதை அப்படி ,(கதாசிரியரின் பெயர் இல்லை , கட் ஆகி விட்டது ) இயக்கம் TR ரகுநாத் , இசை வெங்கட்ராமன் , பாடல்கள் , கண்ணதாசன் , மருகதாசி
படத்தின் running time கிட்ட தட்ட 2.45 நேரம்
இந்த படம் ஏன் கவனத்தை ஈர்க்கவில்லை என்று தெரியவில்லை
-
Dear Sivaa sir,
hats off to you upload of Collection records of NT, appreciate your hardwork
-
Dear Ravikiran Suriya sir,
Your reply , shot back, razor sharp answers are always needed as we need a strong person like you, congrats sir, keep going & keep on going
-
Dear Murali sir,
Really happy that you mentioned my name since Iam a great fan of your writings
Expecting to make us happy more by your writings
-
Coming soon @ kovai royal
-
Coming soon @ kovai royal