பிடிச்சாரு பாரு கோபால் சார்
வாணி குரலில் ஒரு பாட்டு ஒன்னு உண்டு சார்
"பட்டு பூச்சிகள் வட்டம் அடித்தால் கட்டி அணைக்கும் பூச்செண்டு "
நம்ம nt இன் தாய் கூட பாபு மொவீஸ் தான நினைவு
Printable View
பிடிச்சாரு பாரு கோபால் சார்
வாணி குரலில் ஒரு பாட்டு ஒன்னு உண்டு சார்
"பட்டு பூச்சிகள் வட்டம் அடித்தால் கட்டி அணைக்கும் பூச்செண்டு "
நம்ம nt இன் தாய் கூட பாபு மொவீஸ் தான நினைவு
இன்றைய பொழுது பல பாடல்களுடன் களை கட்டியுள்ளது .இது வரை கேட்காத புதிய பாடல்கள்
பற்றிய பதிவுகள் அருமை . ம.ம.ம.கானங்கள் 5 நட்சத்திரம் கிடைத்துள்ளது அறிந்து மிக்க
மகிழ்ச்சி . இத்திரியில் பதிவிடும் எல்லோருக்கும் பெருமையே.
இவையெல்லாவற்றுக்கும் மூலம், புதுமை இயக்குனரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'.
இது இன்னொரு அநியாய ரிப்போர்ட். பணத்தையும் நடிப்பையும் கொட்டிய சௌகாரை குறிப்பிடவில்லை. அருமையாக இயக்கிய கே.பி.யை குறிப்பிடவில்லை. படத்தின் வெற்றியில் இரண்டு சதவீதம் மட்டுமே காரணமான ரவிக்கு மகுடம். பிடித்தவர் என்பதற்காக இப்படிப்பட்ட ஸ்டேட்மென்ட் எல்லாம் ஓவர். ரவிச்சந்திரன் எனக்கும் பிடித்தவர்தான். இருந்தாலும் இப்படியா கண்மூடித்தனமாக....?
இது ஆச்சரியமில்லை. உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னால்தான் அதிர்ச்சியடைய வேண்டும்.
இந்த சபதம் நிச்சயம் உடைந்து சிதறும். ""அங்கே"" எப்படியும் உங்களை திட்டவைத்து விடுவார்கள்.
பாலசந்தர் ஈயடிச்சான் காபி இந்த படம். ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை.சௌகார் ,மூலத்தின் 30% கூட தொடவில்லை.பணம் போட்டதினால்தான்,ரவி அருகே அம்மாவாக நிற்க கூட தகுதியில்லாத இவர் ,அவருடன் டூயட் பாடினார்.அந்த பெருமை ஒன்று போதாதா இவருக்கு?
விஜயம்பிகா பிளம்ஸ்
அன்னபூரணி 1978
கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்
முத்துராமன் கே ஆர் விஜயா ஸ்ரீகாந்த் சோ நடித்து வெளி வந்த
கருப்பு வெள்ளை
குமார் இசை னு நினவு
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹேர் ஸ்டைல் கொஞ்சம் different நிறைய முடி வைத்து கொண்டு நாட் ஹிப்பி ஸ்டைல் பட் some திங் different
ஒரு சீன் சோ ஸ்ரீகாந்த் கிட்ட ரகசியம் சொல்ல காதை தேடுவார் .அப்பறும் தலை முடியை விலக்கி காதை தேடி கண்டு பிடுச்சுட்டு "அப்பாடி கண்டு பிடுசுட்டேன் " என்று சொல்லி விட்டு சொல்ல வந்த ரகசியத்தை மறந்து விடுவார்
நல்ல பாடல்கள் உண்டு
ஜேசுதாஸ் குரலில் கொஞ்சம் மலையாள ஸ்லாங்ல பாடுவார்
"உன்னை பார்க்க வேண்டும் பழக வேண்டும் எத்தனையோ ஆசை உண்டு மனசிலே அது என்ன வென்று எடுத்து சொல்ல தெரியலே
I don 't know I லவ் யு '
சுசீலா குரலில்
"ஐயிரண்டு திங்களிலே கை இரண்டில் வந்தவனே "
சுசீலா ஜேசுதாஸ் குரல்களில்
"கண்ணனுக்கு கோபமென்ன கண்ணில் ஓர் தாபமென்ன "
இதோ போக சோவோட ஒரு கதாகாலட்சேபம் ரொம்ப பேச பட்டது
படம் உட்கார முடியாது
http://tamilsongs-mp3.blogspot.in/20...song-list.html
சிரித்தாள் அந்த சிரிப்பில் ஒரு மோகம். என்று ஒரு பாடல்-ராமானுஜம் போட்டது.
உன்னை பார்க்க வேண்டும்- peppy nice song
அம்மா 1982
ராஜசேகர் இயக்கம்
சங்கர் கணேஷ் இசை
பிரதாப் சரிதா இணை
வைரமுத்துவின் வைர வரிகளில்
பாலா ஜானகி குரல்களில்
மழை காலத்து இரவு வேளையில் இளமையின் இளமயில்கள்
இளமை பசியினை வெளிபடுத்தும் தாபம்
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது
ஒரு சோதனை
பா ப பா ப்ப ப்ப ……………………..
மார்கழி மாதத்து வேதனை
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும் போது
ஒரு சோதனை
பா ப பா ப்ப ப்ப……………………..
மார்கழி மாதத்து வேதனை
மடி மீது சாயும் இன்னேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இன்னேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்
தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
லாலாலாலா (அஹ அஹ அஹ …) ………………
http://www.youtube.com/watch?v=nYWcpYtCJlQ
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக 'நிலவே நீ சாட்சி'யிலிருந்து ஒரு அதி அற்புதமான பாடல். அதை பேலன்ஸ் செய்ய (யாருக்காக) புகுந்த வீட்டிலிருந்து ரவியின் பாடல் ஒன்று. கூடவே ஒரு இணைப்பாக 72-ன் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான 'செந்தாமரையே செந்தேனிதழே' பாடல். அத்துடன் நிற்காமல் ஜஸ்ட் ரிலாக்ஸ் பாடலாக 'அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ'
அப்பப்பா ஒரே கலக்கல் விருந்துதான் போங்க. அயராத உழைப்பு.
எங்கள் ஏரியாவிலிருந்த ஓட்டலில் ஜுக்-பாக்ஸில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் 'செந்தாமரையே'. அதிகம் வசூலித்துக்கொடுத்த பாடல். (ஒருமுறை கேட்பதற்கு 25 பைசா). 'முத்தாரமே' மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த ஏ.எம்.ராஜா இன்னொரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்தோம். அதற்கேற்றாற்போல 'சின்ன கண்ணனே', 'ராசி நல்ல ராசி' என்று நல்ல பாடல்கள் கிடைத்தன. இருந்தாலும் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் மத்தியில் மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை.
நிலவே நீ சாட்சி படப்பாடலில் பாடகரைக் கண்டுபிடிக்க முடியாமல் நானும் ஏமாந்திருக்கிறேன். (அப்போது எம்.எஸ்.வி பாடுவது அபூர்வம் வேறு)
ரிலாக்ஸ் பாடல் நிஜமாகவே நல்ல ரிலாக்ஸ் தந்தது. சாய்பாபா இசையமைப்பாளர்களோடு ஒத்துப்போகாததும் அவர் நிற்க முடியாததற்கு ஒரு காரணம். அக்கார்டியன் பிளேயர் ராஜாமணியுடன் ஓயாத சச்சரவு. சங்கர் கணேஷுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு நல்ல பாடல் கோவை சௌந்தர்ராஜனுக்கு போனது. சண்டைக்காரர் என்று பெயரெடுத்து ஒதுக்கப்பட்டார்.
டியர் கிருஷ்ணாஜி,
ஒரு பாடலின் வரிகள் அனைத்தையும் பதிவிடும் உங்கள் திறமை அபாரம். ரொம்ப பொறுமை வேண்டும். அதுவும் ஹம்மிங் எல்லாம் சேர்த்து.
அட்டகாசம்..., கலக்குங்கள்....
உயர்ந்தவர்கள் 1977 பொங்கல் ரிலீஸ்
நெல்லை நியூ ராயல்
TN பாலுவின் இயக்கம்
ஷங்கர் கணேஷ் இசை
கமல் சுஜாதா தேங்காய் ஸ்ரீகாந்த் நடித்து வெளிவந்த கருப்பு வெள்ளை
சஞ்சீவ் குமார் ஜெயபாதுரி நடித்து ஹிந்தியில் வெளிவந்த கோஷிஷ் திரை படத்தின் தமிழ் ஆக்கம் .யதார்த்தமான நடிப்பு,குல்சாரின் கதை
இரண்டும் இருந்தும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய படம்
கமல் சுஜாதா இருவருமே காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள் .அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஸ்ரீகாந்த் செய்யும் தவறால் விபத்தில் இறக்க நேருடுகிறது.
அவர்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தை (இந்த குழந்தையின்
பாதுகாவலர் கண் தெரியாத தேங்காய்) எந்த குறையும் இல்லாமல் பிறந்து நன்றாக படித்து இறுதியில் தன பெற்றோரின் முதலாளியின் காது கேளாத வாய் பேசாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கபடுகிறான். முடிவு என்ன
கௌரவ வேடத்தில் சஞ்சீவ்குமார்,ஜெய்ஷங்கர்,பிரேம் நசிர்,மனோரமா
ஜேசுதாஸ் வாணி குரல்களில் மிக அருமையான பாடல்
flute வீணை தபேலா மூன்றும் இணைந்து பாடல் வரிகளோடு
அணைத்து வெளிப்படும்
"இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்துஒரு பொம்மையை செய்தன தான் விளையாட அதன் வாய் மொழி முல்லை எனில் தாய மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
தென்றல் காற்றும் ஊமைக்காற்று
தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு
அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
உள்ளத்தில் நல்லோர்தானே உயர்ந்தவர் இல்லையா
என் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
http://www.youtube.com/watch?v=jVorjjMaLPA