Originally Posted by
vasudevan31355
டியர் கார்த்திக் சார்,
மிக்க நன்றி! 'உலகம் நீயாடும் சோலை' மிக அற்புதமான பாடல் . காட்சியமைப்பும் அமர்க்களம். ஆனால் பாடல் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. 'சிவகாமி ஆட வந்தாலும், 'கற்பனைக்கு மேனி'யும் எல்லாவற்றையும் அழுத்தி விட்டன. வாணியின் 'மழைக்காலம் வருகின்றது' கூட நல்ல பாடல். மனோரமா பாவமாக நடன மாதருடன் சைடில் ஆடிக் கொண்டு இருப்பார் உடல் முழுதும் தங்க வர்ணம் பூசியபடி.
தலைவர் வாட்சில் அடிக்கடி நேரம் பார்த்தபடி 'எப்படா முடியும்? கிளம்பலாம்' என்று இருப்பார். பாடலைப் பார்க்காமல், சுவாரஸ்யமில்லாமல், பக்கவாட்டுகளில் பார்த்துக் கொண்டு கிளப்புவார் நடிப்பில். பின் மேடையில் ஏறிப் பேசும்போது அழகாக அந்தக் காட்சியைக் கன்டின்யூ செய்வார் வார்த்தைகளில். ('ஒரு பொண்ணு மேடையிலே கைய கால தூக்குச்சி... நீங்களும் வந்து ஏதோ கை தட்டுனீங்க' )
ஒரு செகண்ட் காட்சி என்றாலும் நம்ம 'ராஜா'வோட பாணியே தனிதான். எப்பேர்பட்டவராயினும் கிட்ட நெருங்கக் கூட முடியாது. கொள்ளை அழகு வேறே. பாட்டை யார் பார்த்தா? தலைவனின் முகத்தைத்தான் பார்த்து காத்துக் கிடந்தோம். கிடக்கிறோம். கிடப்போம்.
அதற்காகவே இந்தப் பாடலைப் பார்ப்போம்.