கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
262 வது வெற்றிச்சித்திரம்
லட்சுமி வந்தாச்சு வெளியான நாள் இன்று
லட்சுமி வந்தாச்சு 1 நவம்பர் 1986
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8b&oe=5A6B2DA8
https://goodtamilfilms.files.wordpre...12/1_laxmi.jpg
Printable View
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
262 வது வெற்றிச்சித்திரம்
லட்சுமி வந்தாச்சு வெளியான நாள் இன்று
லட்சுமி வந்தாச்சு 1 நவம்பர் 1986
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8b&oe=5A6B2DA8
https://goodtamilfilms.files.wordpre...12/1_laxmi.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
178 வது வெற்றிச்சித்திரம்
வைர நெஞ்சம் வெளியான நாள் இன்று
வைர நெஞ்சம் 2 நவம்பர் 1975
https://i.ytimg.com/vi/grkq2BEHx0s/hqdefault.jpg
https://i.ytimg.com/vi/CwuoMhLXcFg/hqdefault.jpghttps://upload.wikimedia.org/wikiped...ira_Nenjam.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
179 வது வெற்றிச்சித்திரம்
டாக்டர் சிவா வெளியான நாள் இன்று
டாக்டர் சிவா 2 நவம்பர் 1975
http://1.bp.blogspot.com/-7yke03DVy1...0/download.jpg
https://upload.wikimedia.org/wikiped...x-Dr._Siva.jpg
Vanamamalai Kallapiran
தாத்தா சாகேப் பால்கே விருது அண்ணலுக்கு கிடைத்தபிறகு திருவனந்தபுரத்தில் ஆயிரங்கள்கூடிய பல்கலைக்கழகம் செனட் அரங்கில் கேரளியர் ஒருப்பிரம்மாண்ட வரவேற்பு விழா நடத்தினர்.நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அரங்குநிறைந்து வழிந்து. கவிந்தது. முதலில் விழாவின் தொடக்கத்தில் சிவாஜிக்கு வரவேற்பு..அரங்கத்தில் நுழையும் போது இருபக்கமும் அழகிய மங்கையர் மலர்தூவி வரவேற்க ஆயிரம் கரங்கள் கூப்பி இசைக்க ஆர்வலர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய மேடைக்கு அழைத்துச்சென்றனர்.ஒவ்வொருவரின் மனதிலும் ஆச்ச...ரியக்குறி!உள்ளார்ந்த நேசமுடன் கேரளியர் அந்த மகாக்கலைஞனை ஆதரித்து நடத்தியது வியப்பை அளித்தது.தொடர்ந்து ந.தி.யின் திரைப்பட கிளிப்பிங்ஸ் அருமையான மலையாள வர்ணனைகளுடன். காண்பித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க ச்செய்தது.மேடையில் அனைத்து திரை உலக ஜாம்பவான்கள் மோகன்லால் மம்மூட்டி பிரபு உள்பட சிம்மக்குரலோனுக்கு மரியாதை செய்தது கண்டால் தமிழர்களான நம்மை ஏளனம் செய்தது போல் இருந்தது.ஆம் நாம் எந்தக் காலத்திலும் அந்த மாமேதைக்கு இப்படி ஒரு வரவேற்பை கொடுத்ததில்லை.காட்சிகள் இன்றும் நெஞ்சில் பசுமை.இதுவரை இது போன்று ஒரு நிகழ்ச்சி தமிழகத்திலும் சரி கேரளத்திலும் சரி எந்தக் கலைஞனுக்கும் எடுக்கப்பட்டதில்லை.அந்நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் செய்தி இதழில் கலைக்குரிசிலை பற்றி நான் வாழ்த்தி எழுதிய கட்டுரை கலைவேந்தன் ந.தி.யின் மைந்தன் பிரபுவிடம் கைகளில் கொடுக்கப்பட்டது. சரித்திர நிகழ்வின் சாட்சியாக நான்.மலையாளம் அந்த மகாக்கலைஞனை மரியாதை செய்தது.இப்போதும் பிரம்மிப்பூட்டும் நிகழ்வு.நாம் 17.12.17 ல் சந்திக்கும் போது அண்ணல் சிவாஜியைப்பற்றி இன்னும் நிறையப் பேசுவோம். காவிரிக்கரையில் திருச்சி யில் கூடப் போகும் நாளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன்.அனைவரும் வாரீர்.நமது தோழர்கள் அப்துல் ரசாக், பழக்கடை மற்றும் திருச்சி புதுக்கோட்டை தோழர்களுக்கு நன்றி.
ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்
மிருதங்க சக்கரவர்த்தி படம் பார்த்த எம். ஜீ . இராமச்சந்திரன் .......தமிழருவி மணியன் அருமையான பேச்சு
https://www.facebook.com/sixface.aru...1818402512949/
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c7&oe=5A739EF3
https://static.xx.fbcdn.net/rsrc.php...PAXP-deijE.gif
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...61&oe=5A66EB3D
Murali Srinivas
இரு மலர்கள் - ஒரு மீள் பார்வை - பார்ட் I இடைவேளை வரை
01.11.1967 அன்று வெளியாகி இன்றைக்கு 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் பொன் விழா காவியம் பற்றிய ஒரு மீள் பார்வை.
இந்தப் படத்தை எதனை முறை பார்த்திருப்பேன் என சரியாக தெரியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.
இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.
முதலில் பத்மினி. கல்லூரி மாணவியாக கற்பனை செய்வது சற்று கடினமான நெருடலான விஷயம் என்றபோதும் திரைக்கதையமைப்பு அதை மறக்கடித்து விடும். நடிகர் திலகம் நாட்டிய பேரொளி கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்த விஷயம். குறிப்பாக ரசிகர்களை விட பொது மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக பிரபலம். அதை உறுதி செய்யும் வண்ணம் அமைந்திருக்கும் பத்மினியின் முதல் பகுதி நடிப்பு. மாதவி பொன் மயிலாள் பாடலும் சரி மன்னிக்க வேண்டுகிறேன் பாடலிலும் சரி பத்மினி முதிர்ச்சி தோற்றத்தையும் மீறி நடிகர் திலகத்தின் இளமை துள்ளலுக்கு ஈடு கொடுத்திருப்பார். குறிப்பாக கடற்கரையில் குளிக்க போய்விடும் நடிகர் திலகத்திடம் நாம் சந்திக்க கிடைப்பதே கொஞ்ச நேரம்தான் அதிலேயும் நீங்க என்னை காக்க வைச்சுட்டு போலாமா என செல்ல கோபம் காட்டுவது, நமது காதல் நிறைவேறமா போய்டுமா என நடிகர் திலகம் சந்தேகப்பட, என் ராஜாயில்லே என் கண்ணில்லெ என்று அவரை அணைத்துக் கொண்டு ஆறுதலை சொல்லும் இடமெல்லாம் நன்றாக செய்திருப்பார். அது போல ஸ்டேஷனில் வைத்து உன் கூடவே நான் வந்துரட்டுமா என நடிகர் திலகம் கேட்க அதுக்கு இப்படியே என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போடுங்க என உணர்ச்சிவசப்படுவது என convincing ஆக செய்திருப்பார்.
நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. அவரின் அறிமுக காட்சி. தூங்கி எழும் நடிகர் திலகம் அலாரம் அடிப்பதை கேட்டு சாந்தி என்று சத்தம் போட கதவை திறந்துகொண்டு காப்பியுடன் விஜயா நிற்பார். யார் அலாரம் வைத்தது என்று நடிகர் திலகம் கோபத்துடன் கேட்க நான்தான் என்பார். எதுக்கு வச்சே என்ன அவசரம் என்று கேட்க அய்யர் வந்துட்டாரு என்பார். அய்யர் எதுக்கு என்று அடுத்த கேள்விக்கு இன்னிக்கு அத்தைக்கு திவசம் அத்தான் என்பார். என்கிட்டே ராத்திரியே ஏன் சொல்லலே என்பார். சரி காபியை குடு என வாங்கி குடிக்க போகும்போது அத்தான் என விஜயா இடைமறிக்க என்ன என்பார். திவசம் கொடுத்து முடிக்கிற வரைக்கும் ஒன்னும் சாப்பிடக் கூடாதுனு சொல்லுவாங்க. என்னை சாப்பிடக் கூடாதுனு சொல்றியா அப்போ ஏன் கொண்டு வந்தே என்று கேட்க இல்லை காப்பி கொண்டு வராம உங்களை எழுப்பினா கோபப்படுவீங்க அதுதான் என்பார் விஜயா. எழுந்து போகும் நடிகர் திலகத்திடம் பேஸ்ட் பிரஷ் சோப்பு துண்டு வெந்நீர் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன் என்று சொல்லுவார் விஜயா. இந்த முதல் காட்சியில் அவர்களின் உறவு முறை அவர்களுக்கிடையே இருக்கும் புரிதல், அத்தான் மேல் விஜயாவிற்கு இருக்கும் அளப்பரிய காதல் அனைத்தையும் அழகாக establish பண்ணி விடுவார்கள்.
தாய் மாமன் மேல் உள்ள பற்று அவருக்கு செய்யும் பணிவிடை, தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சின்ன சின்ன வாக்குவாதம் போன்றவற்றில் ஒரு ஷாக் observer ஆக செயல்படுவது என பயணம் செய்யும் விஜயா தற்செயலாக அத்தானின் டைரியை படித்துவிட்டு நடிகர் திலகம் வேறொரு பெண்ணை விரும்புகிறார் என தெரிந்தவுடன் உள்ளுக்குள் நொறுங்கி போவதை எவ்வித மிகையுமின்றி செய்திருப்பார். வீட்டில் நடிகர் திலகம் காதலிக்கும் விஷயம் தெரிந்தவுடன் மறுநாள் மாலை மாடியில் துணி மடித்துக் கொண்டிருக்கும் விஜயாவிடம் நடிகர் திலகம் ஒரு apologetic tone-ல் பேச ஆரம்பிக்க அவரை நார்மலாக்க, விஜயா பேசும் விதம் நன்றாக இருக்கும். தான் அப்போதும் அவரை முழுமையாக நேசிப்பதை அவரிடமே சொல்லிவிட்டு பிறகு அதற்காக கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா என்ன என்று மீண்டும் அவரை திருப்திப் படுத்துவதை வெகு இயல்பாக செய்திருப்பார். பத்மினிக்கு வாங்கின பூவை நடிகர் திலகம் விஜயாவிற்கு கொடுக்க முதலில் மறுக்கும் அவர் மங்கல பொருட்களை பெண்கள் வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது என நடிகர் திலகம் சொல்ல ஆமாம் அதுவும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் உங்க கையாலே கொடுக்குறீங்க, கொடுங்க என்று அப்போதும் அவர் மேல் அன்பை அவர் வெளிப்படுத்தும் விதம் அழகு.
லெட்டர் வருவது பற்றி நடிகர் திலகம் இவரிடம் நினைவுபடுத்த அக்டோபர் 10ந் தேதிதானே என்று இவர் பதில் சொல்ல பரவாயில்லையே ஞாபகம் வச்சிருக்கியே உனக்குத்தான் என் மேலே எவ்வளவு அக்கறை என்று நடிகர் திலகம் சொல்ல அது கூட உங்களுக்கு தெரியுதா அத்தான் என கேட்பாரே அனுதாபத்தை அள்ளிக் கொண்டு போவார்.
இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? முதல் காட்சியில் unlike poles attract each other என்று பத்மினியை டீஸ் பண்ணுவதிலே அவரது சாம்ராஜ்ஜியம் ஆரம்பித்து விடும். மாதவி பொன் மயிலாள் பாடலில் அவரின் ஸ்டைல், கம்பீரம், நடை மற்றும் ஸ்வரஸ்தானங்களை உச்சரிக்கும் அழகு என்று பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்து விடுவார். கொடைக்கானலில் suicide pointற்கு போக முடியுமா என்று கேட்க தனக்கு இருக்கும் Acrophobia (சிலருக்கு உயரமான இடங்களுக்கு செல்லும்போது ஏற்படும் பயம்) காரணமாக நடிகர் திலகம் தயங்க (மீண்டும் இமேஜ் பார்க்காமல் நடிக்கும் ஒரே நாயகன்) தான் விரும்பும் பெண்ணின் மனம் கவர அவளின் காதலை பெற இது ஒரு வாய்ப்பு என்றவுடன் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டு ஆனால் மேலே செல்ல செல்ல அந்த பயம் அவரை ஆக்ரமிப்பதை அந்த முகபாவத்திலேயே காட்டும் அழகு, எதனால் தனக்கு உயரமான இடங்களை பார்த்தால் பயம் என்பதற்கு சின்ன வயதில் தன் கர்ப்பிணி தாயார் தான் கேட்டதற்காக பரணில் இருக்கும் முறுக்கை எடுக்க ஏணிப்படிகளில் ஏறும்போது கால் நழுவி கீழே விழுந்து இறந்ததை சொல்லும் போதும் மெலோடிராமாவாக ஆக்காமல் வெளிப்படுத்தும் முறை, காதல் கனிந்தவுடன் இரவில் பத்மினி தங்கியிருக்கும் விடுதிக்கு போய் அந்த தவிப்பை வெளிப்படுத்தும் விதம், மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் இளமை கொப்புளிக்கும் துள்ளல், சென்னையில் கடற்கரையில் பத்மினியுடன் காட்டும் அந்த நெருக்கம், அந்த சந்தோஷத்தின் உச்சியில் நிற்கும்போதும் இது நடக்காமல் போய் விட்டால் என்ற சராசரி மனிதனுக்கே உரித்தான ஒரு பயம், ஊருக்கு கிளம்பும் பத்மினியை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் செல்ல அங்கே பத்மினியிடம் இப்படியே உன்கூட வந்துருட்டுமா என்று கேட்கும் அந்த தாபம் உண்மையிலே காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் மனதை அவர் வார்த்தைகளில் உடல் மொழியில் வெளிப்படுத்துவார்.
அதே நேரத்தில் விஜயாவுடனான அவரது சீன்ஸ் அனைத்திலும் ஒரு வித்தியாசம் காட்டியிருப்பார். பொதுவான குடும்பங்களில் மாமா பையன் அத்தை பெண் இவர்களுக்கிடையே இருக்கும் அந்த உரிமை கலந்த டீஸிங், தன்னைப் பார்த்து பயப்படும் விஜயாவை விளையாட்டாக மிரட்டுவது, சில நேரங்களில் தனது அப்பாவின் முன்னிலையில் அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும்போது சில நேரங்களில் விஜயா மீது கோபத்தையும் சில நேரங்களில் அவரிடமிருந்து தப்பிக்க விஜயாவின் உதவியையும் நாடும் இடங்களெல்லாம் இயல்பாக இருக்கும். தந்தை நாகையாவிடம் வேறு வழியில்லாமல் தன் காதலை சொல்ல அவர் பத்மினியைப் பற்றி கோவத்தில் பேசும்போது உங்களுக்கு யாருன்னே தெரியாத ஒரு பெண்ணைப் பத்தி இவ்வளவு கேவலமாக பேசுறீங்களே என ஒரு புண்பட்ட மனதோடு அவர் கேட்கும் விதம், மறுநாள் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு வந்ததும் மாடியில் துணி மடிக்கும் விஜயாவிடம் ஒரு சின்ன குற்ற உணர்வு இல்லை ஒரு தயக்கத்துடன் முதல் நாள் நடந்த நிகழ்வை பற்றி பேச ஆரம்பிக்க விஜயா அதை இயல்புடன் எதிர்கொள்ளும் விதம் பார்த்து என் மேலே உனக்கு விருப்பமா என்று கேட்க ஆமாம் என்று விஜயா சொல்ல அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் திலகம் வார்த்தை வராமல் தடுமாறுவது அருமை என்றால் அவர் தவிப்பை பார்த்துவிட்டு விஜயா பக்கத்தில் வந்து நீங்க என் தாய் மாமன் பையன். அதுக்காக நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு ஏதாவது கட்டாயமா என்ன? என்றவுடன் முகம் மாறி spontaneousஆக வாய்விட்டு சிரிப்பாரே அது அற்புதம்.
லெட்டர் வருவதற்காக காத்திருக்கும் அந்த தவிப்பு, மாடியில் நின்றுகொண்டே கீழே நிற்கும் விஜயாவிடம் போஸ்ட்மான் வந்துவிட்டாரா என்று கண்ணாலே கேட்பதும், கதவு தட்டப்பட்டவுடன் வரும் அந்த பரபரப்பும், முதலில் சிவக்கொழுந்துவிற்கு (படத்தில் நாகய்யாவின் பெயர்) மட்டும் ஒரு தபால் என்றவுடன் முகம் போக்கும் போக்கும் போஸ்ட்மான் திரும்பி வந்து சுந்தருக்கு ஒரு லெட்டர் என்றவுடன் வரும் பூரிப்பு, லெட்டரை அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்து கடித வரிகள் மனதுக்குள் பதிவாகாமல் தன் கண்ணே தன்னை ஏமாற்றுகிறதோ என்ற ஐயத்தில் விஜயாவிடம் கொடுத்து படிக்க சொல்ல கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் விஷயம் அவரை பலமாக தாக்க தலை சுற்றி விழும் இடமெல்லாம் பார்த்து ரசிக்க வேண்டும்.
இடைவேளை வரை மட்டுமே நாகையா. ஆனால் அவர் திரைப்படங்களில் இது ஒரு முக்கியமான படம். மகன் மற்றும் மருமகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துவார். மத்தியானத்திற்கு மேலே வெளியே போறீங்க. ராத்திரி லேட்டா களைச்சு போய் வரீங்க என விஜயா கேட்க ஏம்மா இதை சுந்தர் கேட்க சொன்னானா என ஆவலுடன் கேட்பார் இல்லை நானாத்தான் கேக்கிறேன் என்று விஜயா சொன்னவுடன் வரும் அந்த ஏமாற்றத்தை அசலாக பிரதிபலித்திருப்பார். மகன் வேறொரு பொண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் வரும் கோபத்தையும் நன்றாக செய்திருப்பார்.
இது இடைவேளை வரை. இடைவேளைக்கு பிறகு? நாளை
(தொடரும்).
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d6&oe=5A6FB0FF