இருக்கும் என்றே பார்த்தாலோ
..இல்லை எங்கே போச்சுதுவோ
கருக்கல் வேளை இருந்ததுவே
..காலை கூட இருந்ததுவே
விருப்பப் பட்டு ஏதேனும்
..வேகஞ் செய்ய முடியலையே
துருப்புச் சீட்டாம் வைஃபிநீ
..கடிதாய் வாநான் பாட்டெழுத!
Printable View
இருக்கும் என்றே பார்த்தாலோ
..இல்லை எங்கே போச்சுதுவோ
கருக்கல் வேளை இருந்ததுவே
..காலை கூட இருந்ததுவே
விருப்பப் பட்டு ஏதேனும்
..வேகஞ் செய்ய முடியலையே
துருப்புச் சீட்டாம் வைஃபிநீ
..கடிதாய் வாநான் பாட்டெழுத!
பாட்டெழுத அன்று பனை ஓலை
பரிசளிக்க குளிர்ந்த மன்னர் குலம்
பின்னாளில் காகித உபயோகம்
படித்திட பாதுகாக்க குதூகலம்
தட்டித் தடவி இன்று தகவல் பிறக்கும்
எட்டாத விண்ணிலுலகம் பறக்கும்
பறக்கும் மனத்தை கட்டி வைத்து
சீரான பாதையில் கொண்டு சென்று
நடக்கும் நினைப்பிற்கு ஆசை கொண்டு
வழிகளை கண்டு வாழ்க்கை நடத்து
சிறக்கும் வாழ்க்கை செவ்வனே
காதல் உறுதி :
செவ்வனே நான் சாக இறுதியாய் ஒன்று செய்வாயா பத்மினி
செல்வனே நீ சொல் செய்கிறேன் இது உறுதி என் பத்தினி
என்னுயிர் பிரியும் வரை இருப்பாயா நீ என்னுடன்
என்னவள் கலந்தாள் என் கையை தன்னுடன்
என்னுயிர் பிரியும் வரை இருப்பேன் நான் உன்னுடன்
இன்னுயிரே இது நிச்சயம் இது தானடா என் சத்தியம்
சத்தியம் போற்றும் அரிச்சந்திரன்
பிறன் மனை நோக்கா சீதாராமன்
கொடுத்து கை சிவந்த கர்ணன்
பிரம்மச்சர்யம் தழுவிய பீஷ்மன்
தேடுகிறேன் எங்கே அம்மானுடன்
இருக்கிறானா அது போல் ஒருவன்
ஒருவன் வருவான் உன்னை அடக்க
..ஓயாப் பேச்சு ஒழியா அகந்தை
பருவம் தந்த அழகும் மேலும்
...பக்குவ மாகா நெஞ்சும் கொண்டு
உருவ எழில் தான் உண்மை என்று
..உள்ள்ந்தன்னில் வேகம் கூட்டி
சிறுமி போலே பேசும் பெண்ணே
..சின்ன விஷயம் சொல்வேன் நானே
கண்களில் கனவு தாங்கி
..க்ன்னிமைப் பருவந்தன்னில்
எண்ணமும் பலவும் கொண்டு
..ஏந்திழை நானும் நின்றேன்
வண்ணமாம் கனவுக் கோலம்
..வழியிலே மிதிகள் பட்டு
மின்னலாய் மறைந்து போச்சு
..மேவிநீ உணர்வாய் பெண்ணே..
என்னதமிழ் என்னதமிழ் அம்மாநீ உனக்கு
..என்னவென்று சொல்லிநானும் புரியவைக்க முடியும்
கன்னமதைப் பிடித்திடித்து சொல்லட்டுமா அம்மா
..கனவெல்லாம் கண்டதெல்லாம் அந்தகாலம் தானே
எண்ணத்தில் இப்பொழுது படிப்பிருக்கு அம்மா
..ஏற்றமுடன் நல்வேலை தானெனக்கு வருமே
பின்னென்ன வாழ்க்கையிலே சாதனைகள் செய்வேன்..
..பேதையல்ல நானம்மா பெருமைகொளு நீயும்
நீயும் நானும் குறை உள்ளன் நிறை அல்லன் மானுடனே அன்றோ
தீயிலிட்டு கரியாகி உள்ளன் என்பது அல்லனாவோம் அது என்றோ
நோயிலிட்டு அடங்குமுன் அடக்கம் பண்பு அத்துடன் அன்பு
அதிலிட்டு வினைத்தூய்மை கொண்டால் வியக்குமே விசும்பு
விசும்பு நீரினை கண்டு காதல் கொண்டு
ஆதவன் உதவியால் அதனை மொண்டு
கருவினள் ஆகி மழையை பிரசவித்தனள்
உலகுவாழ் உயிர்கட்கு உணவை ஊட்டினள்.
ஊட்டினள் சாதத்தை கணவனுக்கு
கால்கட்டு போட்ட அவனொரு நாள்
கைகட்டு போட்டு வந்த சமயத்திலே
முதல் குழந்தையானவனின் தாயோ
தன் பதவி பறிக்க வந்தாளேயென்று
தவிக்கிறாள் பழைய யுகத்து மாமியார்
மாமியார்னு நினைச்சுக்காதேள்
நீங்க தான் இவ அம்மா
எனக் கண்கலங்கச் சொன்ன
புவனாவின் அம்மா
புவனாவின் அண்ணியிடம்
சொன்னாள்
“ஏய் சும்மா
மசமசன்னு நிக்காம
பெரியவாளக் கவனிடி..”