http://s9.postimg.org/9v5f6ly4f/cccc.jpg
Printable View
சென்னை: பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையி்ல் அவரது உடல் வீ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது
மக்கள் திலகத்தோடு பல திரைப்படங்களில்
நடித்த நடிகை திரு மனோரமா அவர்களின் மறைவு
தமிழ் திரைத்துறைக்கு மிகபெரும் இழப்பாகும்.
அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்வோம்.
எஸ். ரவிச்சந்திரன்
சமீபத்தில் 2.10.2015 அன்று சென்னையில் நடைபெற்ற சினிமா பத்திரிக்கையாளர் சங்க
விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் நடிகை மனோரமாவை வரவேற்கும் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவகுமார். நான் அருகில் இருந்து எடுத்த படம். இவ்விழாவில் மனோரமா பேசிய இரு வசனங்கள் வந்திருந்த அனைவரையும் வியக்க வைத்தது.
எஸ். ரவிச்சந்திரன்
http://s7.postimg.org/50213zfjf/DSC01187.jpg
Thaai Magalukku Kattiya Thaali..Stills
http://i59.tinypic.com/30rl7ya.jpg