Thanks a lot for restarting the series Mr Vendhar Sir.
Pazhani consisting of wonderful songs which suits even for modern life and also a wonderful movie.
Regards
Thanks a lot for restarting the series Mr Vendhar Sir.
Pazhani consisting of wonderful songs which suits even for modern life and also a wonderful movie.
Regards
டியர் ராகவேந்தர் சார்,
'பழனி'யில் பல்வேறு சிறப்புக்களோடு நடிகர்திலகத்தின் பெருந்தன்மையும் பலவாறாக வெளிப்பட்ட படம்...
** தான் உச்சத்தில் இருந்த கால கட்டத்திலும் கூட தனக்கு ஜோடியில்லாமல், அதனால் டூயட் இல்லாமல் நடித்ததோடு,
** அந்த காலகட்டத்தில் தனக்கு பொருத்தமான ஜோடியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகையை, இதே படத்தில் தன் சக நடிகருக்கு ஜோடியாக விட்டுக்கொடுத்து, (அதுவும் யாருக்கு? தன்னோடு பினங்கிக்கொண்டு சிலகாலம் பேசாமல் இருந்த ஒருத்தருக்கு)
** அந்த ஜோடிக்கும் கூட ஒன்றுக்கு இரண்டாக அருமையான டூயட் கொடுத்து (வட்டவட்ட பாறையிலே, உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது)
அன்றைய நாளில் இதையெல்லாம் எவன் செய்தான்?. எவனுக்கு தைரியம் இருந்தது?. தனக்கு மட்டுமே குறைந்தது நாலு டூயட் வைத்துக்கொண்டு, மற்றவர்களை வெறும் டம்மியாக மட்டுமே வைத்திருந்தவர்கள் மத்தியில்.
தலைவா, உன் பெருந்தன்மைக்கு அளவே இல்லையா?...
என்ன ராகவேந்தர்,
நம்ம பிரிய திரியை தொங்கலில் விட்டுட்டீங்க?தொடருங்க.கூட வருவேன்.
டியர் கார்த்திக்
பழநி பற்றிய தங்கள் கருத்துக்கள் நம் ஒவ்வொருவரின் மனதையும் மிக அழகாக பிரதிபலித்தன.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை இத்திரியில் வழங்கவும் என வேண்டுகிறேன்.
Sivaji Ganesan Filmography Series
102. Anbukkarangal அன்புக்கரங்கள்
http://i1146.photobucket.com/albums/...ps2c1db86b.jpg
தணிக்கை 11.02.1965
வெளியீடு 19.02.1965
நடிகர் நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, பாலாஜி, நாகேஷ், வி.கே.ராமசாமி, ஓ.ஏ.கே.தேவர், பி.டி.சம்பந்தம், சுப்பையா, மணிமாலா, மனோரமா, சீதாலட்சுமி, ஜி.சகுந்தலா, லட்சுமி பிரபா, எஸ்.டி.சுப்புலட்சுமி, காமாட்சி, மல்லிகா மற்றும் பேபி ஷகீலா மற்றும் பலர்
கதை வசனம் பாலமுருகன்
பாடல்கள் வாலி
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
ஒலிப்பதிவு
பாடல்கள் மற்றும் ரீரிக்கார்டிங் – ஜே.ஜே.மாணிக்கம் – ஏவி.எம், உதவி கே.சம்பத், ஜி.வி.ராமமூர்த்தி
வசனம் – கே.முகுந்தன் – மூவி சர்வீஸ், வி.பி.சி.மேன்ன் – விஜயா-வாஹினி, கே.என்.ஷண்முகம் – அருணாசலம்
கலை – ஏ.பாலு
கலை உதவி – பி.ராம்குமார், எம்.ஆர்.ராமானுஜம்,
அவுட்டோர் யூனிட் – மூவி சர்வீஸ்
செட் பிராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
ஒப்பனை – ஆர்.ரங்கசாமி, பத்ரைய்யா, எம்.ராமசாமி, உதவி – ஆர்.பத்மனாபன், பி.வேணு
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், உதவி- கே.சாமிநாதன், கே.பி.குப்புசாமி
ப்ராஸ்ஸிங் – விஜயா லேபரட்டரி – எஸ்.ரங்கனாதன்
ஸ்டூடியோ – விஜயா-வாஹினி, அருணாசலம்
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்
விளம்பர டிசைன்ஸ் – கே.நாகேஸ்வர ராவ், சீநி சோமு
ஸ்டில்ஸ் – சாரதி
புரொடக்ஷன் மேனேஜர் – ஓ.என்.நாராயணசாமி,
ஆபரேடிவ் காமிராமேன் – கே.எஸ்.பாஸ்கர் ராவ்,
உதவி டைரக்ஷன் – ரா.சங்கரன், நாமக்கல் பாலு, இ.தாமோதரன்
எடிட்டிங் – கே.நாராயணன், உதவி – எஸ்.முத்து, எஸ்.நீலகண்டன், கே.மோகன்
ஒளிப்பதிவு டைரக்டர் – தம்பு
இசை – ஆர்.சுதர்ஸனம்
தயாரிப்பு – என். பெரியண்ணா
டைரக்ஷன் – கே.சங்கர்
அன்புக் கரங்கள் - சிறப்புச் செய்திகள்
கதாசிரியர் வசனகர்த்தா பாலமுருகன் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம்
பாடலாசிரியர் வாலி அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம்
சாந்தி பிலிம்ஸ் பெரியண்ணா நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம் பந்தபாசம்... இரண்டாவது அன்புக்கரங்கள் ..தொடர்ந்தவை.. தெய்வ மகன் மற்றும் தர்மம் எங்கே
பாடல்கள்
1. உங்கள் அழகென்ன அறிவென்ன - பி.சுசீலா
2. இரவு முடிந்து விடும் - பி.பி.ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
3. ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் - டி.எம்.சௌந்தர்ராஜன்
4. காகிதத்தில் கப்பல் கட்டி - டி.எம்.சௌந்தர்ராஜன்
5. ராமனுக்கே சீதை என்று - பி.சுசீலா
காணொளிகள்
Kagidhathil kappal
http://www.youtube.com/watch?v=3ZOAMaT3ZnE
onna irukka kathukkanum
http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk
ungal azhagenna
http://www.youtube.com/watch?v=Owqb3x3KuNw
iravu mudindhu vidum
http://youtu.be/bn7Xv5-J4Xk
முரளி சார் / கோபால்,
திருவிளையாடல் வெற்றி விழாவுக்கு நாகேஷ் அழைக்கப்படவில்லை என்பது உண்மையா ? உண்மையென்றால் என்ன காரணம் ?
(முன்பே சொல்லியிருந்தால் தவற விட்டதற்கு மன்னிக்க)
உண்மைதான் ஜோ. அப்போதைய விழா அமைப்பாளர்கள் முக்கியமான நாயகி,நாயகரை மட்டுமே கவுரவிப்பார்கள்.,விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,டி.எம்.எஸ் கூட நிறைய விழாக்களில் புறக்கணிக்க பட்டுள்ளனர்.
இது அப்போதைய நிதர்சன நிலை. எல்லோரும் நாகேஷின் பகுதிகளை வெட்டி விட துடித்த போது ,நிலையாக நின்று கை வைக்க விடாமல் செய்தவர் நடிகர்திலகம்.அவரால் செய்ய முடிந்தது அது மட்டுமே. இதை விடவா பெரிய கவுரவம் நாகேஷுக்கு வேண்டும்?நேரில் ,விமான நிலைய காத்திருப்பில் என்னுடன் இதை பகிர்ந்து,நான் சிவாஜியை புகழ்வதே உண்மை,மற்றதெல்லாம் சோத்துக்குப்பா என்று கண்ணீருடன் சிரித்தார்.(1996 சென்னை விமான நிலையம் )
பெரும்பாலும் விழாக்களை வெறுத்தவர் சிவாஜி. விழாக்களில்,அவர் முகத்தை கவனித்ததுண்டா?பாவம் ,அவர் இயல்புக்கு மாறானது பொது விழாக்கள்.