http://i501.photobucket.com/albums/e...psd4a9a371.jpg
Printable View
அன்பு ராகுல்ராம்,
மருத நாட்டு வீரன் படத்தை பற்றிய பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அவ்வளவாக யாரும் எழுதாத படங்களை தேடி [தங்கமலை ரகசியம், மறுத்த நாடு வீரன்] பிடித்து எழுதுவது அதை அனைவரும் ரசிக்க வேண்டுமே என்பதற்காக விஸ்தாரமாக எழுதுவது என்பது பாராட்டுக்குரியது. உங்கள் எழுத்து மேலும் சிறக்க ஒரு சின்ன suggestion. கதை சுருக்கம் எழுதி முடித்தவுடன் சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் படித்துப் பார்த்தால் அதில் உள்ள பழுதுகளை நீக்கி இன்னும் சற்றே கோர்வையாக சொல்ல முடியும். சற்றே முயற்சி செய்தால் அந்த லாவகம் பிடிபடும். வாழ்த்துகள்.
இந்தப் படத்தை நான் முதன் முறை பார்ப்பது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம். மதுரை கல்பனா திரையரங்கில் நண்பகல் 11.30 மணிக் காட்சி. அந்த நேரம் தமிழகத்திலே சட்டமன்ற தேர்தல் முடிவுற்ற நேரம். முடிவுகள் வெளி வந்து விட்ட நேரம். ரத்த பாசம் ஜூன் 14ந் தேதி வெளியாவதாக இருக்கிறது. அதற்கு முன்பாக இந்தப் படம் நண்பகல் காட்சியாக திரையிடப்படுகிறது. ஒரு விதமான சோர்வு நிலை ரசிகர்கள் மத்தியில் இருக்குமோ என்ற எண்ணம் என் மனதிலே அலையடித்துக் கொண்டிருந்த நேரம். நானும் நண்பர் ஒருவரும் செல்கிறோம்.
மதுரை தெரிந்தவர்களுக்கு கல்பனா திரையரங்கம் பற்றி தெரிந்திருக்கும். அது சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள ஒரு அரங்கம். மதுரை தலைமை தபால் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஆரம்பித்து யானைக்கல் வரை செல்லும் வடக்கு வெளி வீதி என்ற பெயரில் அமைந்த நீண்ட சாலை. அந்த மெயின் சாலையிலிருந்து சிம்மக்கல் பகுதியில் இடது புறம் திரும்பி சற்றே சென்றால் கல்பனா திரையரங்கை அடையலாம். வீட்டிலிருந்து மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதிகளை சுற்றி தளவாய் அக்ரஹாரம் வழியாக சொக்கநாதர் கோவிலை தாண்டி சென்று வடக்கு வெளி வீதியை அடைந்தோம் நாங்கள். முதல் ஷாக் [அல்லது pleasant surprise] அரங்கத்தின் வாசலில் நின்றிருந்த கூட்டம். சாதாரண கூட்டம் இருக்கும் என நினைத்து சென்ற எங்களுக்கு கூட்டத்தை பார்த்தவுடன் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகமே வந்து விட்டது. ஒரு வழியாக டிக்கெட் வாங்கி உள்ளே செல்கிறோம்.
எடுத்தவுடன் படம் [noon show-வில் இது ஒரு வசதி]. டைட்டில் கார்டில் நடிகர் திலகம் பெயர் வந்தவுடன் பெரிய வரவேற்பு என்றால் முதலில் அவர் பாடல் காட்சியில் அறிமுகமாகும் போது அரங்கமே அதிர்ந்தது. ஏற்கனவே பலமுறை உணர்ந்திருந்தாலும் மீண்டும் அன்று நிரூபணமான உண்மை என்னவென்றால் வெளியில் என்னவெல்லாம் நடந்தாலும் திரையுலகில் நடிகர் திலகத்தை அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்பதும் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் நடிகர் திலகத்தின் படங்களை விட்டு விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என்பதற்கான அத்தாட்சியாகவும் அமைந்தது.
பிறகு படம் எனக்கு பல surprise-களை அளித்தது. விழி அலை மேலே பாடலும் பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா போன்ற பாடல் காட்சிகளிளெல்லாம் ஒரே அலப்பரை. ராகுல் குறிப்பிட்டது போல சண்டை காட்சிகளிளெல்லாம் அரங்கில் ஒரே ஆரவாரம். அவரின் ஒவ்வொரு get up change-ற்கும் தியேட்டரில் கைதட்டல் பிறக்கிறது. சுருக்கமாக சொன்னால் எந்த எதிர்பார்புமின்றி படம் காண சென்ற எங்களுக்கு நல்ல திருப்தி.
வெளியான சமயத்தில் ஏன் பெரிய வெற்றியை பெற முடியவில்லை என்றால் ரிலீஸ் வருடமும் சுற்றி நின்ற நமது படங்களுமே காரணமானது. 1961-ம் வருடம் மார்ச் 16 அன்று வெளியான பாவ மன்னிப்பு [மருத நாட்டு வீரன் வெளியானது 1961 ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி] மருத நாட்டு வீரன் வெளியாகும் போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. 1964 மே 27-ந் தேதி வெளியான பாசமலர் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. அதன் பிறகு வெளியான எல்லாம் உனக்காக மற்றும் ஸ்ரீவள்ளியின் போட்டி. அதுவும் தவிர வெளியான இரண்டே வாரங்களில் அதாவது செப் 9 அன்று முமூர்த்திகளில் ஒருவராய் மூன்று தமிழ்களில் ஒன்றாய் என்றும் விளங்கும் பாலும் பழமும் வெளியானது.
இப்படிப்பட்ட சூழலில் மருத நாட்டு வீரன் ஜீவகனுக்கு வரவேற்பு சற்றே குறைந்ததில் வியப்பொன்றுமில்லை. அதே நேரத்தில் நமது அண்டை மாநிலமான கேரளத்தில் படம் அமோக வெற்றி அடைந்தது. அதைதான் நடிகர் திலகமே தனது ஒரு வரி comment ல் "கேரள மக்கள் அமோக வரவேற்பளித்தனர்" என்று குறிப்பிட்டிருப்பார்.
அன்புடன்
சிவா சார்,
வசூல் நோட்டீஸ் மற்றும் சாதனை நோட்டீஸ் பதிவேற்றதிற்கு நன்றி.
RKS,
Dr.ராஜா ஒரு பக்கம் பட்டாக்கத்தி பைரவன் ஒரு பக்கம் என்று எல்லா போஸ்டர் டிசைன்களும் பின்னி பெடலெடுக்கிறது. வாழ்த்துகள்.
ரவி,
உங்கள் பதிவின் தொடர்ச்சியாக நான் எழுதுவதாக சொன்ன பதிவை விரைவில் பதிய முயற்சிக்கிறேன்.
அன்புடன்
Dear Murali sir,
Your experience in 1980 on watching this Marudha naatu veeran was too good , thank you sir
Regarding your suggestion , I will definitely take care to reduce the mistakes and read once again the story before I post
Rahul,
I am proud of your perseverance and Dedication. I want to thank specially your parent for nurturing the old values with good aesthetics to youngster like you. Keep it up. My blessings.
டியர் சிவா சார் / கோல்டு ஸ்டார் சதீஷ் சார்,
நடிகர்திலகத்தின் சாதனைப் பட்டியல் பதிவுகளுக்கு நன்றி.
From the bottom of my heart I thank Gopal sir and KC Sekar sir
Dear Ravi Kiran suriya Sir,
Thanks for posting ENgal thanga raja pictures
இந்தத்திரிக்கு என்ன நடந்ததுவிட்டது?
கண் திருஷ்ட்டியா?
சதியா?
ஜெகபதி ஆர்ட்ஸ் பட நிறுவனத்தினரது
தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து
எங்கள் தங்க ராஜா
உத்தமன்
பட்டாக்கத்தி பைரவன்
ஆகிய 3 படங்கள் வெளிவந்திருந்தன
இவை 3 படங்களும் இலங்கையில் மாபெரும் சாதனை படைத்திருந்தன
எங்கள் தங்க ராஜா யாழ்நகரில் நள்ளிரவுகாட்சியுடன் ஆரம்பித்து
ஒரே நாளில் 7 காட்சிகள் நடைபெற்று சாதனை நிலை நாட்டியதுடன்
கொழும்பு யாழ்நகர் இரண்டு இடங்களிலும் 100 நாட்களை கடந்தது
உத்தமன் இலங்கையில் மாபெரும் சாதனையை ஏற்படுத்தயது
இரண்டு இடங்களில் வெள்ளிவிழா கண்டதுடன் கொழுப்பில்
200 நாட்களை கண்டது வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது
பட்டாக்கத்தி பைரவன் கொழும்பு யாழ்நகர் இரண்டு இடங்களிலும்
100 நாட்களை கண்டதடன் வசூலிலும் சாதனை படைத்தது
யாழ்நகரில்
எங்கள் தங்க ராஜா 4 லட்சத்தை தாண்டியது
உத்தமன் பட்டாக்கத்தி பைரவன்
இரண்டும் 7 லட்சத்துக்கு மேல் வசூல் பெற்றன
எங்கள் தங்க ராஜா கொழும்பு .....சென்ரல்....100..நாட்கள்
........................................யாழ்நகர்.. ......ராஜா...........126..நாட்கள்
உத்தமன்...................கொழும்பு.......சென்ரல்.. .......203..நாட்கள்
..............................ஃ.....யாழ்நகர்...... ..ராணி.............179..நாட்கள்
பட்டாக்கத்தி பைரவன்.....கொழும்பு..ஜெஸிமா..103..நாட்கள்
...............................................யாழ ்நகர்....சிறிதர்.......100..நாட்கள்